ஓராண்டுக்குள் ஒரு நூறாயிரங்களையும் தாண்டி விட்ட பொய்கள்.

                             பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                   16-04-2005

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... தான் என்ற சர்வாதிகாரத்தன்மைக்கு எதிரான நிலை த.மு.மு.க.வில் ஏற்பட்டு விடவே தலைமையை கைப்பற்ற சதி திட்டம் தீட்டினார் பி.ஜே. அது அம்பலமாகி விட்டது. வேறு வழி இன்றி இருப்பவர்கள் மீது இல்லாத பழிகளைச் சுமத்தி விட்டு 10.04.2004ல் வெளியேறினார். 

10.04.2005 அன்று அண்ணன் சொன்னதும் பொய்யே பொய்யே! அலாவுதீன் சொன்னதும் பொய்யே பொய்யே!!. என்ற தலைப்பில் இரு பக்க இதழ் வெளியிட்டிருந்தோம். அதைப் பார்த்த பல சகோதரர்கள் ஓராண்டு நிறைவு சிறப்பு இதழா? அப்படியானால் கொஞ்சம் கூடுதலான பக்கங்களுடன் வெளியிட்டிருக்கலாமே ஏன் சுருக்கி விட்டீர்கள்? என கேட்டுள்ளனர். 

10.04.2005துடன் ஓராண்டு முடிந்து விட்டது.  இந்த ஓராண்டுக்குள் பி.ஜே. சொன்ன பொய்கள் எத்தனை என்ற பட்டியல் வெளியிட முடியமா? என்று ஒருவர் கேட்டுள்ளார். ... அன்வர் பாஷா  சொன்னதும் பொய்யே போய்யே!!! என நிறுத்தி விட்டீர்களே மற்றவர்கள் பொய்யர்கள் இல்லையா? எனவும் சிலர் கேட்டுள்ளனர். கேள்விகள் அனுப்பி உள்ள அனைவருக்கும் நன்றிகள்.

அபுதாபியில் கூறியுள்ள பொய்களின் தொகுப்பில் இருக்கிறது.

உங்கள் கடிதங்கள் காணும் வரை ஓராண்டு நிறைவு என்ற சிந்தனை வரவில்லை. அதனால் நாம் வெளியிட்டது சிறப்பு இதழ் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளவும். பொய்யர்கள் என்பதற்குரிய இன்னொரு புதிய தமிழ் வார்த்தைதான் த.த.ஜ. என வரலாறு சொல்ல உள்ளது. 

அப்படி இருக்க மற்றவர்கள் பொய்யர்கள் இல்லை என சொல்ல முடியுமா? எனவே கமா போட்டுக் கொண்டு அதே வார்த்தைகளுடன் மற்றுமுள்ளவர்கள்  பெயர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

சி.டி. நம்பர் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக உள்ளதாக அறிகிறோம். 4 மணி நேரத்திற்கும் அதிகமாக நடந்ததாக உணர்வில் எழுதிய மதுக்கூர் ஜமாஅத் நிகழ்சியின் சி.டி. ஒன்றுதான் வந்துள்ளது. 

மூலத்திலிருந்து வெளியிட்டவர்கள் தங்களுக்குப் பாதகமானவற்றை வெட்டி நீக்குவதில்தான் குறியாக இருந்துள்ளார்கள். அதனால் டைட்டிலில் நம்பர் போடாமல் விட்டு விட்டார்கள். 

அபுதாபி துபை என்ற விபரம் கூட அதில் இல்லை. எனவே 3 ஆம் நம்பர் என நாம் குறிப்பிட்டது பி.ஜே. அபுதாபியில் கூறியுள்ள பொய்களின் தொகுப்பில் இருக்கிறது. சி.டி. நம்பரும்  பைல்கள் நம்பரும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக மாறி இருக்கலாம் யு.ஏ.இ. சி.டி.யின்  ஏதாவது ஒன்றில் நாம் குறிப்பிட்டுள்ள நிமிடத்தில் அந்த மேட்டர் இருக்கிறது. 

அவரது வாய் கூட அந்த இடத்தில் குளறுகிறது.

துபை  ஜட்டி ரூமுக்குள் நடந்த கூட்டத்தில் மதுக்கூர் பஷீர் அவர்கள், அன்வர் பாஷாவின் இரட்டை நிலை பற்றி கேட்கிறார். அதற்கு 4வது நிமிடத்தில் பதில் சொல்லும் பி.ஜே. லாஜிக் பேசுவதாக இருந்தால் அன்வர் பாஷா ஆதரித்தார் என்று சொல்லலாம். அவர் என்ன சொன்னார் என்று கேட்டால்...  

நீங்கதான் உங்களுடைய தவ்ஹீது பிரச்சாரம்தான் இந்த இயக்கத்தினுடைய வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை அப்படீன்னு ஒரு குற்றச்சாட்டை வைத்த பிறகு இவனுகளோட நீங்க இருக்கக் கூடாது. அதை ஆதரித்து அவர் சொல்லவில்லை. அவர் சொன்ன வார்த்தை என்ன என்று கேட்டால்  நீங்க இருக்கக் கூடாது நீங்க வெளியேறனும் என்றுதான் நான் சொல்கிறேன்  என்று அன்வர் பாஷா சொன்ன மாதிரி பி.ஜே. சொல்லிக் காட்டுகிறார். 

இல்லாத ஒன்றை அன்வர் பாஷா தானாக சொல்லாத ஒன்றை சொன்னது போல் பி.ஜே. சொல்கிறார். பி.ஜே. சொல்வது பொய் என்பதால் பொய் சொல்வதில் வல்லவரான அவரது வாய் கூட அந்த இடத்தில் குளறுகிறது. எப்படி குளறுகிறது என்பதை சி.டி.யை கவனமுடன் பாருங்கள் தெரியும். 

பி.ஜே.யின் இந்தக் கூற்று பொய் என்பதற்கும் செட்டப் என்பதற்கும் உரிய ஆதாரம் பி.ஜே. வெளியிட்டுள்ள சி.டி.யில்தான் உள்ளது. இவர்கள் அனைவரும் மேடையில் இருக்க பாக்கர் திருச்சியில் பேசினார். அது திருச்சி சி.டி.யின் 3வது பைலில் 39வது நிமிடத்தில் உள்ளது. 

தலை இன்றி வால் ஆடுமா?

பாக்கரின் இந்தப் பேச்சு துபை ஜேட்டியில் பி.ஜே. சொல்லி உள்ளது பொய் என்று நிரூபிப்பதை பாருங்கள். 10.04.2004க்கு முன்பு களப்பணி ஆற்றுவது எப்படி என்பது பற்றிய தலைமை நிர்வாகக் குழு கூடியது. அனைவரும் சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். 

அன்வர் பாய் வந்தார். யோவ் எல்லாரும் நடிக்கிறீங்கய்யா, எல்லாரும் நடிக்கிறீங்க. இதிலே உட்காரவே என்னால முடியலே. எல்லாரும் உள்ளுக்குள்ளே  ஒன்ன வைச்சிக்கிட்டு எல்லாரும் வேஷம் போடுறீங்கய்யா என்று சொல்லி விட்டு எழுந்து போய் விட்டார். ஏன்? தலைமைப் பதவியை கைப்பற்ற முயற்சித்தார்கள் என்ற பிரச்சனைகாக என்கிற காரணத்தையும் பாக்கர் கூறுகிறார். 

அதிலிருந்து தவ்ஹீது பிரச்சனை இல்லை என்பது தௌ்ளத் தெளிவாகிறது. அதே நேரம் இன்னொரு உண்மையும் இங்கு மறைந்து இருக்கிறது. பி.ஜே.யும் சேர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருக்கும்பொழுது வந்த அன்வர் பாஷா எதுவும் பேசாமல் எல்லாரும் நடிக்கிறீங்க என்று சொல்லி விட்டுப் போனது எப்படி? 

எல்லாரும் நடிக்கிறீங்க என்பதில் சிரித்து பேசிக் கொண்டிருந்த பி.ஜே.யும்  உள்ளடக்கம் அல்லவா. அன்வர் பாஷாவால் சுயமாக இப்படி சொல்லி விட்டுப் போய் விட முடியுமா? தலை இன்றி வால் ஆடுமா? இதிலிருந்து, நாங்கள் சிரித்து பேசிக் கொண்டிருப்போம்.. நீங்கள் வந்து இப்படி பேசி விட்டு போக வேண்டும். இது அன்வர் பாஷாவுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வசனமும் கட்டளையுமாகும் என்பது புரியவில்லையா? 

த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் தெளிவாகச் சொன்னார்கள்.

இது மாதிரிதான் 10.04.2004 தேதிய நிர்வாகக் குழுவிலும் நடந்துள்ளது. விவகாரமே தான் என்பதை நிலை நாட்டுவதற்காக பி.ஜே. த.மு.மு.க. தலைமையை கைப்பற்ற முயன்று தோற்றுப் போனார். இந்த செய்திகள் வெளியாகி விட்டதால் தவ்ஹீது கொள்கையின் பெயரால் திசை திருப்ப திட்டமிட்டார். அந்த திட்டப்படி தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு என்று அவரே அவர் கைப்பட எழுதினார். 

ஒரு வாதத்திற்காக இது உண்மை என்று வைத்துக் கொள்வோம். உண்மையான தவ்ஹீது கொள்கை உடையவன் என்ன சொல்வான். தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு என்பதை நான் ஏற்க மாட்டேன். அதை என் கையால் எழுத மாட்டேன். இந்தக் கருத்தைச் சொல்பவர்கள் கைப்பட எழுதி தாருங்கள் என்றுதான் கேட்பான். 

தவ்ஹீதின்  பெயரால் சுய லாபம் தேட வேண்டும் என்ற எண்ணம் பி.ஜே.க்கு ஏற்பட்டு விட்டதால் தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு என்று பி.ஜே. தன் கையால் எழுதினார். இதற்கு த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு என்பது பொய். நீங்கள் தவ்ஹீது ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டமைப்பு என்ற அமைப்பினால்தான் பிரச்சனை. தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு இல்லை என்று த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் தெளிவாகச் சொன்னார்கள். 

தமிழே சரியாகப் பேசத் தெரியாத அன்வர் பாஷா

தவ்ஹீது பெயரால் சுய நலம் அடையவும் சுய லாபம் தேடவும் பி.ஜே.தான் அவரது கைப்பட தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு என்று எழுதினார். அதை த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் கண்டிப்புடன் திருத்தச் சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் பி.ஜே. அதை திருத்தினார். 

பி.ஜே. திருத்தியப் பிறகும் அன்வர் பாஷா தவ்ஹீது பிரச்சாரம்தான் இந்த இயக்கத்தினுடைய வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை என்று சொல்லி விட்டார்கள் என்று கூறி வெளியேறி இருந்தால் என்ன அர்த்தம். நான் நமது சொந்த விவகாரங்களை தவ்ஹீது பிரச்சனைபோல் ஆக்கி விடுவேன்.  நீங்கள் அதைக் காரணம் காட்டி எனது விலகலை நியாயப்படுத்த வேண்டும். இதுதான் அன்வர் பாஷாவுக்கு முன்னதாகவே இடப்பட்டுள்ள கட்டளையும் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வசனமும் ஆகும். 

தமிழர்களின் நடைமுறைப் பேச்சை சரியாகப் புரியத் தெரியாதவரும் தமிழே சரியாகப் பேசத் தெரியாதவருமான அன்வர் பாஷாவுக்கு சபையில் நடந்தது புரிந்திருக்காது. எனவே திட்டமிட்டபடி அவருக்கு இடப்பட்டுள்ள கட்டளைப்படி கற்றுக் கொடுக்கப்பட்ட வசனத்தை பேசி இருப்பார்.  

நவீன ஷிர்க்கிலிருந்து விடுபடத் துஆச் செய்வோம்.

இதை நாம் யூகித்துக் கூறவில்லை. தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு என்று பி.ஜே. எழுதியதை த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் எதிர்த்தார்கள்  என்பதற்கும் பி.ஜே.யின் வாக்கு மூலமும்; பி.ஜே. வெளியிட்டுள்ள சி.டி.யும்தான் ஆதாரமாக உள்ளது. 

த.மு.மு.க.விலிருந்து பி.ஜே. வெளியேறியதும் அவர் ஆலந்தூர் பள்ளியில்  பேசினார். அதைத்தான் முதலில் மலிவு விலை சி.டி. என வெளியிட்டார். அந்த சி.டி.யின் 2வது பைலில் 7வது நிமிடத்தில் .தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு ஏற்படுகிறது என்கிற வாசகம் இருந்துச்சு என்று பி.ஜே. சொல்லி உள்ளார். 

இதிலும் அவரது தில்லுமுல்லைப் பாருங்கள். அந்த வாசகத்தை எழுதியவரே அவர்தான். இந்த இடத்தில் தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு ஏற்படுகிறது என்று நான் எழுதி இருந்தேன் என்று சொல்லாமல்  என்கிற வாசகம் இருந்துச்சு என்று கூறுகிறார். 

சரி எப்படி கூறி இருந்தாலும் தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு என்று பி.ஜே. எழுதி இருந்ததை த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் நீக்கச் சொன்னார்கள் என்பதை பி.ஜே.யே சொல்லிக் காட்டி விட்டார். 

இதற்குப் பிறகும் தவ்ஹீது கொள்கைப் பிரச்சனை என கூறி கோஷ்டி சேர்த்து பிழைப்பு நடத்துபவர்களின் கதி மறுமையில் என்னவாக இருக்கும்? அல்லாஹ் அவர்களுக்கு நல்ல புத்தி கொடுத்து திருந்திடவும் நவீன ஷிர்க்கிலிருந்து விடுபடவும் துஆச் செய்வோம். மதுக்கூர் பஷீர் அவர்களுக்கு பி.ஜே. கூறும் பதிலின் தொடர்ச்சியில் 8வது நிமிடத்தில் பாக்கர் அலாவுதீன் நிலையைப் பற்றியும் கூறுகிறார். 

ஓராண்டுக்குள் பி.ஜே. சொன்ன பொய்கள் எத்தனை என்பதை எண்ணிவிட முடியாது.

அதாவது நீங்கள் சொன்ன வாதம் தப்பு இதனால் தவ்ஹீது வளர்ச்சிக்கு பின்னடைவு இல்லை...... லட்சக்கணக்கானவருடன் ஆரம்பித்து பின்னாடி வந்து பி.ஜே. வந்து சேர்ந்த பிறகு அது 200 பேராக போனால்தான் இந்த வாசகத்தை சொல்லனும்... இன்னும் என்னென்னவோ பாக்கரும் அலாவுதீனும் சொன்னதுபோல் முதலில் சொல்லிக் காட்டி விடுகிறார் பி.ஜே. 

இந்த கூற்றின் மூலம் மக்கள் மனதில் பாக்கரும் அலாவுதீனும் இப்படியெல்லாம் சொல்லி உள்ளார்களா? என்ற  மாயையை சைக்காலேஜாக பி.ஜே. ஏற்படுத்தி விடுகிறார்.   இது பொய் என்பதை அந்த இடத்திலேயே அல்லாஹ் பி.ஜே.யின் வாயாலேயே ஒப்புக் கொள்ள வைக்கிறான். 

இந்த வார்த்தைகளெல்லாம் அவங்க சொல்லவில்லை அவர்கள் சொன்னதின் சாராம்சம் என்கிறார் பி.ஜே. பாக்கரும் அலாவுதீனும் சொல்லாதவைகளையெல்லாம் அவர்கள் சொன்னது போல் சொல்லி காட்டுவதும்,  இந்த வார்த்தைகளெல்லாம் அவங்க சொல்லவில்லை என்பதும் அந்த சி.டி.யின் 8வது நிமிடத்தில்தான் உள்ளது. 

அந்த ஒரு நிமிடத்திற்குள்தான் இத்தனை பொய் சொல்லி உள்ளார். எனவே எங்கள் நெல்லையில் உள்ள தாமிர பரணி ஆற்றின் மணலை எண்ணிவிட முடிந்தாலும் இந்த ஓராண்டுக்குள் பி.ஜே. சொன்ன பொய்கள் எத்தனை என்பதை எண்ணிவிட முடியாது. பி.ஜே. ஓராண்டுக்குள் சொல்லி உள்ள பொய்கள் ஒரு நூறாயிரங்களையும் தாண்டி இருக்கும். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 
                                        அன்புடன்: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி








Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.