தொடை நடுங்கும் தொண்டியான் பி.ஜே.

ஹாதமின் பேரன் என்ற புனைப் பெயரில் வந்த மொட்டைக் கடிதத்தை பலர் அனுப்பி இருந்தீர்கள். மொட்டைகளுக்கு பதில் எழுதக் கூடாது. பொய்யை எழுதும் பொய்யர்களால் மொட்டைதான் அனுப்ப முடியும். நான் எழுதுபவை அனைத்தும் உண்மை என்பதால் என் யெர் போட்டு எழுதுகிறேன். எனது தாயக முகவரி போன் நம்பர்கள் உட்பட முந்தைய வெளியீடுகளில் குறிப்பிட்டுள்ளேன். நமக்கு நேரடியாக பதில் தர முடியாமல் மொட்டைக் கடித பேர்வழிவகளாக ஆகி விட்டதே அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்தி விட்ட மிகப் பெரிய இழிவுதான். அவர்கள் எவ்வளவு பெரிய பொய்யர்கள் என்பதை விளக்கிடும் நமது புதிய வெளியீடான "----அல் கத்தாபை" விஞ்சி நிற்கும் அண்ணன் என்ற வெளியீட்டைப் பாருங்கள். அது உங்கள் வெப் சைட்டில் உள்ளது என்று எழுதி இருந்தேன். இருந்தாலும் போன் செய்தவர்களில் பலர் மொட்டைக் கடித பேர் வழிக்குப் பதில் எழுத வேண்டாம். அந்த மொட்டைப் பேர்வழி பற்றி நாங்கள் புரிவதற்காக அவர்களை அடையாளம் காட்டுங்கள் என்றீர்கள். மொட்டைக் கடிதம் எழுதிடும் இந்தத் தொடை நடுங்கிக் கழிசடைகள் யார் என்பதை அந்த மொட்டைக் கடிதமே அடையாளம் காட்டியுள்ளது.
தொண்டியப்பாவின் தம்பி கீழை ஜமீல்.
அபுஅவ்ன், முலஜா போன்ற புனைப் பெயர்களைக் கொண்டவர் தொண்டியப்பாவின் தம்பி கீழை ஜமீல். இவர் பிரச்சனைக்கான கேள்விகளும் உண்மை விளக்கமும் என்ற தலைப்பிலான சி.டி.யில் நம்மைப் பற்றி விமர்சித்து பேசியுள்ளார். இதைப் பார்த்ததும் 25.3.2005 வெள்ளி மாலை கீழை ஜமீலுக்கு போன் போட்டேன். ஏன் போன் போட்டேன் என்றால் இவரது அண்ணன் தொண்டியப்பா விமர்சனத்துக்குள்ளானதும் துடி துடித்துப் போய் அது உடனடியாக நிறுத்தப்பட சமாதான முயற்சிகளை மேற்கொண்டார். அந்த அடிப்படையில்தான் போன் போட்டேன். என்ன அடிப்படையில் என்ன ஆதாரத்தில் என்னை விமர்சித்துள்ளீர்கள் என்று கேட்டேன். எந்த பதிலும் சொல்லவில்லை. பிறகு பேசுகிறேன் என்றார். அதற்குப் பிறகு இந்த நிமிடம் வரை அவரிடமிருந்து பதில் வரவில்லை. ஆதமின்பேரன்; என்ற இந்த மொட்டைக் கடிதம்தான் வந்துள்ளது.
புரிந்து விட்டீர்களா மொட்டைக் கடித கும்பலை.
மொட்டைக் கடித பேர்வழிகள் யார் என்பதை முன்பே அடையாளம் காட்டி இருக்கிறோம். எனவே இப்பொழுது அடையாளம் காட்டுவது ஒன்றும் கஷ;டம் இல்லை. பாடைப்புகழ் என்றாலே அனைவரின் ஞாபகத்திற்கு வந்து விடுபவர் ஷம்சுல் லுஹா. அந்தப் பாடைப்புகழின் இந்த வார ஜும்ஆ மேடையே மொட்டைக் கடித பேர்வழி யார் என்பதை அடையாளம் காட்டி விட்டது. எங்கள் அப்பன் குதிலுக்குள் இல்லை என்ற கதையாக அவர் உரை இருந்ததைப் பாருங்கள். ரிபாஈ பொருளாளராக இருந்தபோது பள்ளி கணக்கை போர்டில் எழுதிப் போட வேண்டும் என்றார். அதனால் அவரை நீக்கினோம். செயலாளராக இருந்த இனாயதுல்லாஹ்வை நீக்கினோம். பழுலுல் இலாஹி மீது பொருளாதார மோசடி குற்றச்சாட்டுக் கூறி நாம் நீக்கவில்லை. அவருக்கு கேஸட் வியாபாரம் நடக்கவில்லை. அதனால் நமது ஜமாஅத்தார் மீதான குற்றச் சாட்டுக்களைப் பரப்பினார். அதனால் அவரை நீக்கினோம். இதுதான் இந்த வார உரையின் சுருக்கம். புரிந்து விட்டீர்களா மொட்டைக் கடிதக் கும்பலை.
லுஹா சும்மா இருந்தாலும் லுஹாவின் வாய் சும்மா இருக்காது.
லுஹாவின் உரையில் அவர் கக்கி விட்டு விழுங்கிய ஒன்று. இந்த ஜமாஅத்தை வழி நடத்தக் கூடியவரின் போக்குகளும் செயல்பாடுகளும் பிடிக்காததால் நான் இந்த ஜமாஅத்தை விட்டே வெளியேற எண்ணினேன். இப்படி பி.ஜே.யைப் பற்றி பேசத் துவங்கிய லுஹா சுதாரித்துக் கொண்டு அப்படியெல்லாம் இல்லை. நோட்டீஸ் போட்டு விடப் போகிறார்கள் என்று கூறி தான் கக்கியதை உடனேயே விழுங்கி விட்டார். கொடி எதிர்ப்பு விஷயத்தில் பி.ஜே. இடமிருந்து கிடைக்க இருக்கும் தீர்ப்பை எதிர் நோக்கி இருந்த லுஹாவுக்கு தன் பிழைப்பு போய் விடுமே என்ற பயம் இருந்தது. எனவே மன்னிப்புக் கேட்டு மண்டியிட இருந்தார். ஆனால் இப்பொழுதுள்ள சூழ்நிலையில் இருப்பவர்களை அனுசரித்துப் போனால்தான் நல்லது என கீழே இறங்கி விட்டார் பி.ஜே. அதன் வெளிப்பாடும்தான் லுஹாவின் ஜும்ஆ உரை. இருந்தாலும் லுஹா சும்மா இருந்தாலும் லுஹாவின் வாய் சும்மா இருக்காது அல்லவா. அந்த மாதிரிதான் பி.ஜே. பற்றிய இந்த உண்மைகளை கக்கி விழுங்கி உள்ளார். பெருந்தொகை வாங்கி விட்டதாக குற்றம் சாட்டி ஒரே மேடைக்கு அழைத்தவர்கள் இப்பொழுது அதிலிருந்து பின் வாங்கி விட்டார்கள். என்பதை லுஹாவின் ஜும்ஆ உரை உறுதிப்படுத்தி உள்ளது.
இப்படித்தான் ஒவ்வொன்றையும் திசை திருப்புவார்கள்.
நமது நாட்டில் குப்பைத் தொட்டிகளிலிருந்து எடுக்கும் குழந்தைகளைத்தான் ஆதமின் பேரன் என்று சொல்வார்கள் என கேள்விப்பட்டிருக்கிறோம். மொட்டைக் கடிதப் பேர்வழிகள் தங்களுக்கு ஆதமின் பேரன் என்ற பெயரை ஏன் வைத்தார்களோ. என்னதான் சவால்கள் விட்டிருந்தாலும் அது எந்த தொடை நடுங்கிகளுக்கும் சம்பந்தமில்லாமல் வெளியிட்டுள்ளதுபோல் எழுதி இருந்தாலும் ஆதமின் இந்தப் பேரனுக்கு ஆண்மை இல்லை என்பதை அவர்களது இந்த மொட்டைக் கடிதமே காட்டுகிறது. சவாலை ஏற்றுக் கொண்டால் பெயரை வெளியிடுவேன் என்று கூறி உள்ளவரின் சவாலை ஏற்றுக் கொண்டேன். பெயரை வெளியிடட்டும் பார்ப்போம்.. முபாஹலா முபாஹலா என நாம் தம்பட்டம் அடிக்கிறோம் என்ற பொய்யையும் புனைந்துள்ளனர். இது ஒன்றும் புதிய பொய் அல்ல. இப்படித்தான் ஒவ்வொன்றையும் திசை திருப்புவார்கள்.
ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
3.5.2004 அன்று கோவை அப்துர் றஹீமுக்கு பி.ஜே. எழுதியுள்ள கடிதத்தின் முதல் பக்கத்தில் ... விவாதத் திறமையில் பி.ஜே. வென்று விடுவார் என்று அவர் கூறுவதாகவும் தெரிவித்தீர்கள். அப்படியானால் திருக்குர்ஆன் (3:61) வழியில் முபாஹலாவுக்கு முன் வரட்டும் என்று நான் உங்களிடம் கூறினேன் என்று எழுதியுள்ளார். உண்மையை மட்டும் பேசுவோம் என்ற தலைப்பில் பி.ஜே. வெளியிட்டுள்ள சி.டி.க்களில் முதல் பாகத்தின் 27 வது நிமிடத்தில், தான்தான் முபாஹலாவுக்கு அழைத்ததாக கூறுகிறார். இத்தனைக்கும் பிறகுதான் மொட்டைக் கடித நாயகர்கள் எழுத்தாளர்களாக வேலை செய்யும் "ஏகத்துவம்" என்ற மாத இதழில் இதற்கு மாற்றமான பொய்யை எழுதினார்கள். 2004 நவம்பர் ஏகத்துவம் பக்கம் 30இல் முதல் பாராவில் ஜவாஹிருல்லாஹ்தான் முபாஹலாவுக்கு அழைத்தார் என்று எழுதி உள்ளார்கள். எனவே இப்பொழுது நாம் தம்பட்டம் அடிப்பதாக எழுதி உள்ளதைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை. "நான் கவனமாக எழுதி கொடுத்தது என்றும் சட சட என எழுதி கொடுத்தேன் என்றும் முன்னுக்குப் பின் முரணாக பொய்களை கட்டவித்து விடுபவர்களின் கதி இதுதான் என்பதை பல வழிகளில் அவர்களின் மூலமே அவர்களை அல்லாஹ் அடையாளம் காட்டி வருகிறான்.
நிரூபித்துக் காட்ட நாம் தயாராகவே உள்ளோம்.
நாம் வைத்த குற்றச் சாட்டுகளுக்கு பதில் கூற முடியாத தொடை நடுங்கி தொண்டியான் பி.ஜே. பெருந் தொகை என்ற புரளியை கிளப்பி விட்டு ஓடி ஒழிந்தார். இப்படித்தான் முதலில் பாராதூரமான ஒரு பொய்யைச் சொல்லுவார். பிறகு மனிதர்களின் மறதியைப் பயன்படுத்தி அவர்களை கவரும் வகையில் பேசி(2:204) திசை திருப்பி விடுவார். இதுதான் திருச்சியில் (அபு அப்துல்லாஹ்விடம்) துவங்கி இலங்கை வரை நடந்துள்ளது. அந்த மாதிரிதான் முபாஹலாவுக்கு அழைத்து விட்டு முபாஹலா மேடையில் நம்மை சந்திக்க திராணி இல்லாத பி.ஜே. இப்பொழுது ஆதமின் பேரன் பின்னால் ஓடி ஒழிந்து திசை திருப்ப முயன்றுள்ளார். இவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்யலாம் என்ற கொள்கை உடையவர்கள். அந்த அடிப்படையில் பொய் சத்தியம் செய்தவர்கள் என்று நிரூபித்தும் இருக்கிறோம். இப்பொழுதும் அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில்தான் உள்ளனர். அதனால்தான் ஆதமின் பேரன் என்ற மொட்டையின் பின்னால் ஒழிந்து சத்தியம் செய்யத் தயாரா என கேட்டுள்ளனர் அதில் முக்கிய கேள்வியே யார் தீவிரவாதி என்பதுதான். பி.ஜே.தான் தீவிரவாதி என்பதையும் இந்த சமுதாயம் சீரழிய காரணமானவர் பி.ஜே.தான் என்பதையும் முபாஹலா மேடையில் நிரூபித்துக் காட்ட எப்பொழுதும் நாம் தயாராகவே உள்ளோம்.
குழாயடி சண்iடெயல்லாம் போட மாட்டோம்.
பி.ஜே.தான் தீவிரவாதி என்பதற்கு அந்நஜாத் அபுஅப்துல்லாஹ், புரட்சிமின்னல் அப்துல்லாஹ், கமாலுத்தீன் மதனி, மைதீன் உலவி, முஸ்லிம்பெண்மணி ஜக்கரிய்யா, ஜவாஹிருல்லாஹ் போன்று பி.ஜே.யின் இயக்கத்துக்கு எதிராக உள்ளவர்கள் சாட்சி சொல்வார்கள். இப்படி அவரது எதிர் தரப்பை சாட்சிகளாக கொண்டு வந்து விவாதம் என்ற பெயரில் குழாயடி சண்iடெயல்லாம் போட மாட்டோம். அவரது உரையையே ஆதாரமாகக் கொண்டு வருவோம். இதற்கு ஸைபுல்லாஹாஜா, ஷம்சுல்லுஹா, சுலைமான்கள் இப்படி அவரது இயக்கத்தில் உள்ளவர்களையே சாட்சிகள் என்பதை நிரூபிப்போம். ஆதமின் பேரன் பட்டியலிட்டுள்ளதையும் ஆதாரமாகக் கொண்டும் பி.ஜே.தான் தீவிரவாதி சுயநலவாதி என்பதை நிரூபிப்போம். இன்ஷhஅல்லாஹ்.
இறையச்சம் உடையவர்களாக இருக்க மாட்டார்கள்.
சமுதாயத்திற்கு வழி காட்டுவதாகக் கூறிக் கொள்பவர்கள், இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் எழுத கூலி வாங்கிக் கொண்டு இல்லை என்று சொல்லக் கூடியவர்கள், தங்களை குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரகர்களாக காட்டிக் கொள்பவர்கள், பள்ளிவாசலின் நிர்வாகிகளாக தங்களை ஆக்கிக் கொண்டவர்கள் டி.என்.டி.ஜே.காரர்கள். இவர்களிடம் மனிதன் என்ற முறையில் சில குறைகள் இருக்கலாம். மட்ட ரகத்திலும் மகா மட்ட ரகச் செயலான மொட்டைக் கடிதம் எழுதும் செயல் இருக்கலாமா. த.த.ஜ.வின் தலைமைப் பொறுப்பாளர்களாகவும் ஏகத்துவம் என்ற பத்திரிக்கையில் எழுத்தாளர்களாகவும் உள்ள பி.ஜைனுல் ஆப்தீன், ஷம்சுல் லுஹா, செய்யது இபுறாஹீம் ஆகியவர்கள் மொட்டைக் கடித பேர்வழிகள் என்பதையும் முபாஹலா மேடையில் நிரூபிப்போம். இவர்கள் மொட்டைக் கடித பேர்வழிகள் என தெரிந்த பின்னரும் இவர்கள் பின்னால் உள்ளவர்கள் இறையச்சம் உடையவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே அல்லாஹ்வின் மீது சாதாரணமாகவே சத்தியம் செய்து விடுவார்கள். எனவே உண்மையா பொய்யா என்பதற்கு பி.ஜே. கோவை அப்துர்றஹீமுக்கு எழுதியள்ள கடிதப்படி முபாஹலாதான் பண்ண வேண்டும்.
உடனே ஏற்பாடுகள் செய்யட்டும்.
இந்நிகழ்ச்சியை தமிழ்நாட்டில்தான் வைக்க வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து துறையின் உயர் மட்ட அதிகாரிகளின் முன்னிலையில் இது நடக்க வேண்டும். அனைத்து ஜமாஅத்தினரும் அழைக்கப்பட்டு பகிரங்கமான நிகழ்ச்சியாக நடக்க வேண்டும். ஆதமின் பேரன் பெயரில் ஒளிந்து கொண்டிருப்பவர்களிடம் உண்மை இருந்தால், தெம்பு இருந்தால், திராணி இருந்தால், மானம், ரோஷம், சூடு. சுரணை அணு அளவாவது இருந்தால் ஒழுங்கான ரத்தம் உடலில் ஓடினால் தொடர்ந்து மொட்டைக் கடிதங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்காமல் உடனே ஏற்பாடுகள் செய்யட்டும். வஸ்ஸலாம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.