புத்தி இல்லா பொறியாளர்.

கண்ணியத்திற்குரிய அண்ணன் ம.ப. ரசூல் மைதீன் அவர்களுக்கு கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நலம் நலம் பல சூழ்க.

jahaberahmed@hotmail.com கைபேசி 009 665 07863974) என்ற முகவரியிலிருந்து எம்.ஜெஹபர் அஹ்மது, Po Box – 5795 .Riyadh : 11432 .KSA என்ற முகவரியிலிருந்து அதிராம் பட்டிணம் பாரூக். ஆகிய இருவரது மெயில்களும் வரப் பெற்றோம்.

நான் சத்திய நேசன் என்ற பெயரில் எழுதியபோது.

த.மு.மு.க. முன்னால் அமைப்பாளர் விலகலை ஒட்டி ஈ-மெயில்கள் அனுப்பிய ம.ப. ரசூல் மைதீனாகிய தாங்கள். 16-5-04 அன்று சாட்டிங் செய்தீர்கள். அதில் என்ன ஆச்சு? உங்களிடமிருந்து எனக்கு பதிலே இல்லை. முழு முகவரியோடு எழுதச் சொன்னீர்கள் எழுதினேன் பதிலை எதிர்பார்க்கிறேன். நான் சத்திய நேசன் என்ற பெயரில் எழுதியபோது நீங்கள் பதில் சொல்லாமல் பெயரையும் முகவரியையும் கேட்டு மெயில் எழுதினீர்கள். இப்போது அதே பெயரில் யாரோ உங்களைப் பற்றி எழுதிக் கொண்டு உள்ளாரே, அவருக்கு பதில் சொல்லாமல் இருக்கிறீர்களே? என்ன ஆயிற்று? பதில் இல்லையா? என்று கேட்டீர்கள்.

ஒரே பதில்.

த.மு.மு.க.வை குறை சொல்லி எழுதவில்லையா? ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்களை குறை சொல்லி எழுதவில்லையா? என்று கேட்டுள்ளீர்கள். நீங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கும் இனி கேட்க இருக்கும் கேள்விகளுக்கும், நீங்கள் எழுதியவற்றுக்கும் இனி எழுதப் போகின்றவைகளுக்கும் சேர்த்து ஒரே பதில் இதுதான்.

நான் குறை சொல்லி விமர்சித்த த.மு.மு.க. பி.ஜே.யின் டாமினேட்டில் - ஆதிக்கத்தில் இருந்த த.மு.மு.க. நான் குறை சொல்லி விமர்சித்த த.மு.மு.க. பி.ஜே. வகையறாக்கள் என்ற சுயநலக் கும்பல் இருந்த த.மு.மு.க.

அறிவை அடகு வைத்து விட்டவர்களால் புரிய முடியாது.

அப்பொழுது ஜவாஹிருல்லாஹ் அவர்களின் பெயராலோ ஹைதர் அலி அவர்களின் பெயராலோ ஹாமித் பக்ரி பெயராலோ யார் பெயரால் விமர்சித்து குற்றம்சாட்டி இருந்தாலும் அவற்றுக்குச் சொந்தக்காரர் பி.ஜே.தான் என்பதை அன்றைய பிரசுரங்களே சாட்சியாக உள்ளன. அதனால்தான் உங்கள் கேள்விகளுக்குப் புதிதாக பதில் எழுதினால் உங்களுக்கு பொய்யாகக் கூட தோன்றலாம் எனவே பழைய பிரசுரங்களையே உங்களுக்கு பதிலாக அனுப்பினேன். அதற்குப் பிறகும் நீங்கள் புரிந்து கொள்ளாமல் கேள்வி கேட்டுள்ளீர்கள். அதனைப் படிக்கும் அறிவுடையவர்கள் புரிந்து கொள்வார்கள். அறிவை அடகு வைத்து விட்ட நவீன தக்லீதுகளால் புரிய முடியாது.

திருவல்லிக்கேணியா? மேலப்பாளையமா?

உங்கள் கடிதத்தை http://www.pjvstmmk.com என்ற வெப் சைட்டின் வாசகர் மடல்கள் பகுதியில் பார்த்த நான் உங்களுக்கு திருவல்லிக்கேணி என்று நம்பி இருந்தேன். வெப் சைட்டில் திருவல்லிக்கேணி என்று எழுதி இருந்த நீங்கள் எனக்கு கேள்வி கேட்டு எழுதியதில் மேலப்பாளையம் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அதனால்தான் உங்களுக்கு திருவல்லிக்கேணியா? மேலப்பாளையமா? ஏன் முகவரிகளை 2 விதமாக எழுத வேண்டும்? என்று கேட்டிருந்தேன். அத்துடன் பதிலும் அனுப்பி இருந்தேன். பிறகு நீங்கள் சத்திய நேசன் என்ற பெயரில் விமர்சித்து இருந்தீர்கள்.

சத்திய நேசன் என்ற பெயரில் ஈமெயில் அனுப்பி உள்ளது நீங்கள்தான் என்று விளங்கினேன். திருவல்லிக்கேணியா? மேலப்பாளையமா? என்பதற்கு பதில் தராமல் போலிப் பெயரில் வந்ததாலும் முழு முகவரி கேட்டேன். பதில் வராத நிலையில் சத்திய நேசன் என்ற பெயருக்கே பதிலை துவக்கி ரசூல் மைதீன்தான் நீங்கள் என்பதை இறுதியில் சுட்டிக் காட்டி இருந்தேன்.

இது வரை உங்களிடமிருந்து பதிலே இல்லை.

27-4-04 அன்று நீங்கள் அனுப்பிய மெயிலில், எனது வார்தைகளில் நாகரீகம் இல்லை என்று எழுதி இருந்தீர்கள். எது எது நாகரீகமற்ற வார்த்தை என்பதை சுட்டிக் காட்டுவதுடன் அந்த இடத்தில் அமையப் பெற வேண்டிய நாகரீகமான வார்த்தைகள் எது என்பதையும் எழுதி அனுப்புங்கள் பணிவுடன் ஏற்று திருத்திக் கொள்கிறேன் என்று எழுதினேன். இந்தக் கடிதமும் hவவி:ஃஃறறற.pதஎளவஅஅம.உழஅ என்ற அந்த வெப்சைட்டின் வாசகர் மடல்கள் பகுதியில் உள்ளது. அதற்கு இது வரை உங்களிடமிருந்து பதிலே இல்லை.

பி.ஜே. கற்றுத் தந்துள்ள நளினமான நாகரீகமான வார்த்தை.

நேற்று வந்த நாய் என்று பி.ஜே. பேசி உள்ளாரே அதுதான் நளினமான நாகரீகமான வார்த்தையா? அதுதான் நாகரீகமானது நளினமாது என்றால், எனது பிரசுரத்தில் எங்கெல்லாம் கடினமான நாகரீகமற்ற வார்த்தைகள் உள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களோ அங்கெல்லாம் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று அடுத்த பிரசுரத்தில் எழுதினேன். அதன்படி பி.ஜே. கற்றுத் தந்துள்ள நளினமான நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டதால்தான் அது சம்பந்தமாக நீங்கள் பதில் எழுதவில்லை போலும்.

எனது பிரசுரத்தை ஒட்டி கேள்வி கேட்டபவர்களுக்கும் விமர்சனம் செய்பவர்களுக்கும் விளக்கம் கேட்பவர்களுக்கும் அவர் யார்? முகவரி என்ன? என்று கேட்காமல் பதில் அனுப்பி இருக்கிறேன். நீங்கள் குற்றச்சாட்டுக் கூறி எழுதி இருந்தீர்கள். குற்றம் சாட்டுபவர் தன்னை தெளிவாக அடையாளம் காட்ட வேண்டும் இல்லை என்றால் பி.ஜே. மாதிரி பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறும் விபரீத நிலை ஏற்பட்டு விடும்.

பி.ஜே. வழியில் ஒரு குற்றச்சாட்டு.

ம.ப. ரசூல்மைதீன் குவைத்தில் உள்ள செல்வந்நர்; ஒருவரிடம் த.மு.மு.கவுக்கு என்று 5000 குவைத் தீனார் வாங்கினார். எம்.ஜெஹபர் அஹ்மது, அதிராம் பட்டிணம் பாரூக் ஆகிய இருவரும் சவூதியில் 30 ஆயிரம் தீனார்களுக்கு மேல் த.மு.மு.க.வுக்கு என்று வசூலித்து மோசடி செய்து விட்டார்கள். அதை த.மு.மு.க.வுக்கு கொடுக்காமல் அமுக்குவதற்கு பி.ஜே.யின் ஆதரவாளராக ஆகி விட்டார்கள். இந்த தகவலை தந்தவர் தன் பெயரை சொல்லக் கூடாது என்றும், சொன்னால் உங்கள் மூவராலும் அவர் உயிருக்கு ஆபத்து என்பதால் சத்தியம் செய்து வாங்கி விட்டார். எனவே சொன்னவர் பெயரை சொல்ல முடியாது.

தவறான கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியவர்.

ஜுனைது அவர்கள், சொன்னவரை சொல்ல மாட்டேன். சொன்னவர் முக்கியமானவர் என்றதும் ஆவேசப்படும் அண்ணன் பி.ஜே. அவர்கள்தானே, இந்த சொன்னவரை சொல்ல மாட்டேன் என்ற விபரீத கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியவர். இப்பொழுது ஏன் ஆவேசப்பட வேண்டும். அவர் அறிமுகப்படுத்திய கலாச்சாரப்படி குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டு போக வேண்டியதுதானே.

அவருக்கு பங்கு உண்டு.

யார் ஒருவர் ஒரு நல்ல முன் மாதிரியை உண்டு பண்னுகிறாரோ, அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளில் அவருக்கு பங்கு உண்டு. யார் ஒருவர் ஒரு கெட்ட முன் மாதிரியை உண்டு பண்னுகிறாரோ அதன் மூலம் கிடைக்கும் தீமைகளில் அவருக்கு பங்கு உண்டு. இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள இன்னொரு சத்திய நேசன், இலாஹி கள்ளன் என்று ஒரு பைலும் இலாஹி கள்ளன் என்று ஒரு ஈ-மெயில் அட்ரஸும் உருவாக்கி இருந்தார்.

இந்த பாவங்களில் உள்ள பங்கு யாருக்கு?

இலாஹ் என்றால் இறைவன். இலாஹி என்றால் என்னுடைய இறைவன் என்று பொருள் இப்பொழுது நீங்கள் குறிப்பிட்டுள்ள இன்னொரு சத்திய நேசன் யாரை இழிவுபடுத்தி உள்ளார்? அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்கள் யாரும் வேண்டும் என்று இணை வைப்பது இல்லை. அறியாமையில்தான் இணை வைக்கிறார்கள். அறியாமையில்தானே இணை வைத்தார்கள் என்பதால் அவர்களுக்கு நிரந்தர நரகம் இல்லை என்று கூறுவீர்களா? நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த சத்திய நேசனின் இந்த பாவத்தில் உள்ள பங்கு யாருக்குப் போய்ச் சேரும்?

யாருடைய தாயை கொச்சைப்படுத்தி உள்ளார்.

என் தந்தைக்கு நான் பிறந்ததால் என் தந்தை எனக்கு வைத்த பெயரை இனிஷpயலை ஈ-மெயிலிலும் கம்யூட்டர் ஆதரிலும் நான் பயன்படுத்துகிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள சத்திய நேசன் அவரது கம்யூட்டரில் எனது பெயரை செட் செய்ததன் மூலம் அவர் தன்னை யாருக்கு பிறந்தவராக அடையாளம் காட்டுகிறார்? யாருடைய தாயை கொச்சைப்படுத்தி உள்ளார். இந்த பாவத்திற்குரிய பங்கு யாருக்குப் போய்ச் சேரும்? பொய்யர்களை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பவர்களுக்கு அவர்களாலேயே அவர்களுக்கு ஏற்படும் கதியைப் பாருங்கள்.

தன் தாயை திட்டிய பாக்கர்.

பெற்றோரை திட்டுபவனை அல்லாஹ் சபிப்பானாக என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடன் இருந்த ஸஹாபாக்கள், பெற்றோரையும் திட்டுவார்களா? என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், மற்றவர் பெற்றோரை திட்டினால் அவர் பதிலுக்கு திட்டுவார். அதன் மூலம் இவன் தன் பெற்றோரை திட்டியவானாக ஆகிறான் என்றார்கள். ஹைதர் அலி அவர்கள் பெருந்தன்மையுடன் பதிலுக்கு திட்டவில்லை. திட்டி இருந்தால் அதை பி.ஜே. சொல்லிக் காட்டி இருப்பார். இன்னுமுள்ள நபி மொழிகள்படி பார்த்தாலும் தன் தாயைத்தான் பாக்கர் இழிவு படுத்தி திட்டி உள்ளார். பாக்கரின் திட்டுதலை நியாயப்படுத்துவதன் மூலம் இந்த பாவத்தில் பங்குதாரர்களாக ஆவது எந்த வகையறா?

உதாரணங்கள் ஆதாரமாகாது.

நீங்கள் மூவரும் உதாரணங்களை மட்டும் கூறி குற்றம் சாட்டி உள்ளீர்கள். உதாரணங்கள் ஆதாரமாகாது ஆதாரங்களை விளக்க உதாரணங்களைக் கூறலாம். மல்லாந்து கிடந்து உமிழ்ந்துள்ளீர்கள் என்று அதிராம்பட்டிணம் பாரூக் எழுதி உள்ளார். இது உதாரணம். இதைத் தொடர்ந்து நான் எழுதியவை எனக்கே எப்படி திரும்புகிறது என்று ஆதாரத்தை எழுதி இருக்க வேண்டும். மானக் கேடே உந்தன் மறு பெயர்தான் ஷம்சுல்லுஹா என்பதை உணர்த்தி லுஹாவுக்கு கடிதம் எழுதினேன். அதில் அவர் த.மு.மு.க. தலைமையை நோக்கி கூறிய குற்றச்சாட்டுக்கள் எப்படி அதற்கே உரிய லுஹாவுக்கே திரும்புகின்றன என்று காரணங்களை விளக்கி எழுதினேன். அதில் மல்லாந்து கிடந்து உமிழ்ந்துள்ளீர்கள் என்ற உதாரணத்தை எழுத வில்லை. இந்த உதாரணம் லுஹாவுக்குப் பொருந்தும். அதுபோல் உங்கள் மூவருக்கும் பொருந்துகிறதா இல்லையா என்பதை இந்த பதிலை படித்து விட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மொட்டை நோட்டீஸ் பேர்வழிகள்.

நான் மொட்டை நோட்டீஸ்கள் போட்டதாக குற்றம்சாட்டி இருந்தீர்கள். மொட்டை நோட்டீஸ்கள் போட நான் பெட்டை அல்ல பேடி அல்ல. பெட்டைகளும் பேடிகளும்தான் மொட்டை நோட்டீஸ் போடுவார்கள். புதிய சத்திய நேசன் அனுப்பியது மொட்டை நோட்டீஸ்தான். அதற்கு முன் மாதிரியாக இருந்து நீங்கள் சத்திய நேசன் என்ற பெயரில் அனுப்பியதும் மொட்டை நோட்டீஸ்தான். இதன் மூலம் பி.ஜே. வகையறாக்கள்தான் மொட்டை நோட்டீஸ் பேர்வழிகள் என்று நிரூபணமாகி உள்ளது.

அ.த.கூட்டமைப்பு முன்னால் மேலாண்மைக்குழு உறுப்பினர்.

நீங்கள் போட்ட மொட்டை நோட்டீஸை நியாயப்படுத்த, நான் முன்னால் வளைகுடா அமைப்பாளர் என்றும் முன்னால் அ.த.கூட்டமைப்பு மேலாண்மைக்குழு உறுப்பினர் என்றும் மொட்டை நோட்டீஸ் போட்டதாக குற்றம் சாட்டி உள்ளீர்கள். இந்த கடிதத்தின் துவக்கத்தில் த.மு.மு.க. முன்னால் அமைப்பாளர் என்று எழுதி உள்ளேன். அந்த வார்த்தையை படித்ததும் அந்த இடத்தில் பி.ஜே. என்று குறிப்பிடாவிட்டாலும் முன்னால் அமைப்பாளர் என்றதும் பி.ஜே. என்று விளங்கிக் கொண்டீர்கள். அதுபோல்தான் முன்னால் வளைகுடா அமைப்பாளர், முன்னால் அ.த.கூட்டமைப்பு மேலாண்மைக்குழு உறுப்பினர் என்றதும் பழ்லுல் இலாஹி என்று எல்லாரும் விளங்கிக் கொண்டார்கள். நீங்களும் விளங்கிக் கொண்டீர்கள். விளங்கியதால்தான் அதை ஆதாரமாக காட்டுகிறீர்கள். இன்னார் என்று விளங்கும் வண்ணம் வெளியாகும் நோட்டீஸ் மொட்டை ஆகாது.

திருட்டுத்தனமான டூப்லிகேட் ஈ-மெயில் அட்ரஸ்கள் அமைத்தவர்கள்.

சத்திய நேசன்கள் தங்கள் மொட்டை நோட்டீஸ்களுக்கு திருட்டுத்தனமான டூப்லிகேட் ஈ-மெயில் அட்ரஸ்கள் அமைத்த மாதிரி நான் திருட்டுத்தனமான டூப்லிகேட் ஈ-மெயில் அட்ரஸ்கள் அமைக்கவில்லை. எனது பிரசுரங்களாக இருந்தாலும் எனக்கு வரக்கூடிய மெயில்களை பார்வேடு பண்ணுவதாக இருந்தாலும் பைல் இறக்கம் செய்து அனுப்புவதாக இருந்தாலும் எனது முகவரிகளைத்தான் பயன்படுத்தி உள்ளேன்.

1988,89களில் நாகர்கோயிலில் உள்ள தங்க கடை அதிபர் ஒருவர் பி.ஜே. எப்பொழுது வந்தாலும் தங்குவதற்கு என்று நாகர்கோயில் ஹனீபா லாட்ஜில் ரூம் போட்டு நிரந்தரமாக வைத்திருந்தார் அந்த லாட்ஜில்... ... என்று அந்தக் கால வரலாற்றை எழுத வேண்டிய நிலையை பி.ஜே ஏற்படுத்தினாலும் என் பெயரை போட்டுத்தான் எழுதுவேனே தவிர கள்ளத்தன வேலை செய்ய மாட்டேன்.

கருத்துக்கு கருத்துதான் பதிலாகும்.

29.04.2004 தேதி இட்டு சத்திய நேசன் என்ற பெயரில் நீங்கள் அனுப்பிய கடிதத்திலும் அதில் சற்று திருத்தி 09.05.2004 தேதி இட்டு ம.ப. ரசூல் ரமதீன் என்ற பெயரில் எழுதி உள்ள கடிதத்திலும் முக்கிய அறிவிப்பில் உள்ள முக்கிய வாசகம் என்ற தலைப்பில் ஒரு பிதற்றல் கடிதம் கண்டேன். என்று குறிப்பிட்டிருந்தீர்கள். எனது பிரசுரத்தில் எது பிதற்றல் என்று குறிப்பிட்டு எழுதாமல் பொதுவாகப் பிதற்றல் என்று எழுதி உள்ளீர்கள். கருத்துக்கு கருத்துதான் பதிலாகும். காரி உமிழ்வது பதில் ஆகாது. நீங்கள் மல்லாந்து கிடந்து காரி உமிழ்ந்துள்ளீர்கள்.

தொப்பி மாற்றிய ம.ப.ரசூல் மைதீன்.

முதலில் திருவல்லிக்கேணி பிறகு மேலப்பாளையம் பிறகு திருவல்லிக்கேணி என்று மாறி மாறி ஊர்மேலே போன உங்கள் கூற்று பிதற்றலா? முதலில் ம.ப. ரசூல் மைதீன் பிறகு சத்திய நேசன் பிறகு ம.ப.ரசூல் மைதீன் என்று தொப்பி மாற்றியதா? இதைத்தான் சென்னைவாசிகள் ஆங்கிலம் கலந்து சொல்லும் வார்த்தையில் கேப்மாறி என்பார்கள். இப்பொழுது சொல்லுங்கள் தொப்பி மாற்றிய உங்கள் பெயர் பிதற்றலா?; எது பிதற்றல்? இதன் மூலம் பிதற்றல் பேர்வழியாக ஆவது யார்?

ம.ப.ரசூல்மைதீன் 5000 தீனார் வாங்கி மோசடி பண்ணி விட்டார்.

இப்பொழுது ஜுனைது அவர்கள் சொன்னது யார் என்று சொல்லி விட்டார். ஜுனைது அவர்களிடம் சொன்னவரும் நான்தான் சொன்னேன் என்று பகிரங்கமாக கூறிவிட்டார் எனவே ஜுனைது அவர்கள் கூற்று உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. ம.ப.ரசூல்மைதீன் 5000 தீனார் வாங்கி மோசடி பண்ணி விட்டார் எம்.ஜெஹபர் அஹ்மது, அதிராம் பட்டிணம் பாரூக் ஆகிய இருவரும் சவூதியில் 30 ஆயிரம் தீனார்களுக்கு மேல் த.மு.மு.க.வுக்கு என்று வசூலித்து மோசடி செய்து விட்டார்கள். என்கிற மாதிரி அண்ணன் பி.ஜே. வைத்த குற்றச்சாட்டைத்தான் நிரூபிக்காமலும் முபாஹலாவுக்கு வராமலும் ஒடி ஒழிந்து கொண்டிக்கிறார்.

எனது யூகத்தை உண்மை படுத்திய பி.ஜே.

ஜுனைது ஜகரிய்யா ஆகியவர்கள் மார்ச் பேரணியில் மும்முரமாக பணியாற்றியதை ஒட்டி பி.ஜே. யூகம் செய்து கூறிய குற்றச்சாட்டுகள் பொய் என்று அந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மூலம் நிரூபிக்கப்படுவிட்டது. வாக்கு மூலங்கள் சி.டியில் பார்த்திருப்பீர்கள். முக்கிய வாசகம் பற்றிய பிரசுரத்தில் நான் யூகம் செய்து எழுதி உள்ளதை பொய்ப்படுத்த உங்களுக்கு ஒருவாய்ப்பு என்று எழுதினேன். எனது யூகத்தை எப்படி பொய்ப்படுத்த வேண்டும் என்பதற்குரிய வழியையும் நானே சொல்லித் தந்தேன். எனது யூகத்தை உங்களால் பொய்ப்படுத்த முடியவில்லை. காரணம்; பி.ஜே.எனது யூகத்தை உண்மை என்று ஒப்புக் கொண்டு விட்டார்.

சமாதானக் குழுவினரிடம் பி.ஜே. வைத்த 3 கோரிக்கைகள்.

தவ்ஹீது கொள்கையால் பிரிந்ததாகக் கூறி விளம்பரம் தேடித் திரியும் பி.ஜே. சமாதானக் குழுவினரிடம் வைத்த 3 கோரிக்கைகள் என்ன?

1. நான் த.மு.மு.க.வை கைப்பற்ற முயற்சித்தேன் என்பதை அவர்கள் மனதால் நம்புகிறார்களா?
2. ஜுனைது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. நான் த.மு.மு.க.வில் உறுப்பினராக இருக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.

3 கோரிக்கைகளில் தவ்ஹீது கொள்கைப் பிரச்சனை எங்கு இருக்கிறது?

1 வது கோரிக்கையில் பி.ஜே.யின் கவுரவப் பிரச்சனை உள்ளது என்பது தெரிகிறது.
2. வது கோரிக்கையில் ஜுனைது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பி.ஜேயின் நோக்கம் தெரிகிறது.
3. வது கோரிக்கை மூலம் பி.ஜே. தானாக விலகவில்லை அவர்கள்தான் விலகினார் என்ற கருத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற சதி திட்டம் உள்ளது என்பது தெரிகிறது.
இந்த 3 கோரிக்கைகளில் தவ்ஹீது கொள்கைப் பிரச்சனை - தவ்ஹீது ஜமாஅத் பிரச்சனை எங்கு இருக்கிறது? எது பிதற்றல்? பிதற்றல்காரர்கள் யார்?

தவ்ஹீதுப் பெயரால் லாபம் அடையத்தான் - அரசியல் பண்ணத்தான், முக்கிய அறிவிப்பில் உள்ள வாசகங்களையும் தவ்ஹீது கொள்கையில் சமரசம் செய்யாமல்தான் இந்த முடிவு என்ற அடிக்குறிப்பையும் பி.ஜே. அவர்கள்தான் திட்டமிட்டு கவனமாக எழுதி உள்ளார்கள் என்பதும் தெளிவாகி விட்டது. பி.ஜே.தான் கவனமாக எழுதியுள்ளார் என்று நான் சொல்லவில்லை. பி.ஜே. அவர்களே "நான் கவனமாக எழுதி" என்று வாக்கு மூலம் தந்து உண்மைபடுத்தியுள்ளார்கள்.

ஆதாரத்துடன் பொதுமக்கள் முன்னிலையில் நிரூபிக்க வேண்டும்.

'பி.ஜே அவர்கள் மீது உண்மையில் குற்றம் இருக்குமானால் அதை தகுந்த ஆதாரத்துடன் பொதுமக்கள் முன்னிலையில் நிரூபிக்க வேண்டும்' என்று எழுதி உள்ளீர்கள். இப்படி முதலில் எழுதி உள்ள நீங்கள் கடித முடிவில் என்ன எழுதி உள்ளீர்கள்?

'பி.ஜே அவர்களை ஒரே மேடைக்கு அழைத்துள்ளீர்கள். உங்களிடம் உண்மையை கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு மக்களுடைய நிலையும் இல்லை. மேலும் உங்களுடைய கற்பனைகளுக்கெல்லாம் ஒரே மேடையில் பி.ஜே பதில் சொல்லும் அளவுக்கு நீங்கள் பெரிய ஆளுமில்லை| என்று எழுதி உள்ளீர்கள். ஒரு சிறிய கடித்திலேயே முன்னுக்குப் பின் முரணாக எழுதும் உங்களின் இந்தக் கூற்றுக்குப் பெயர் பிதற்றலா? எது பிதற்றல்? இதன் மூலம் பிதற்றல் பேர்வழியாக ஆவது யார்? எந்த வகையறா?

நீங்கள் மனிதர்கள் லிஸ்ட்டில் இல்லையா?

உங்களிடம் உண்மையை கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு மக்களுடைய நிலையும் இல்லை என்று எழுதி உள்ளீர்கள். அப்படி எழுதி உள்ள நீங்கள்தான் பதில் தர முடியுமா என்று கேட்டு 27-4-04ல் ஈ-மெயில் அனுப்பினீர்கள். பிறகு 2 பெயர்களில் கடிதம் அனுப்பிவிட்டு 16.5.04 அன்று சாட்டிங் செய்து எனக்கு பதில் இல்லையா என்று கேட்டீர்கள். அப்படியானால் உங்கள் கூற்றுப்படி நீங்கள் மனிதர்கள் (மக்கள்) லிஸ்ட்டில் இல்லையா? இப்படி முன்னுக்குப் பின் முரணான உங்களின் இந்த செயலுக்குப் பெயர் பிதற்றலா? பொய்யர்களை சரியான நேரத்தில் சரியாக அடையாளம் காட்டிய எனது செயல் பிதற்றலா?

த.மு.மு.கவை விட்டு வெளியேறும் போது சொத்துக்களை அபகரித்து சென்று விட்டார் என்று அவதூறாக, அநாகரீகமாக காழ்ப்புணர்ச்சியினால் எழுதி உள்ளதாகவும், சொத்து சுருட்டலை மறைக்க தவ்ஹீது பிரச்சனை என்ற உங்கள் வார்த்தை உண்மையென்றால் தயவு செய்து எந்த ஊரில் எந்ந எந்த பெயரில் வாங்கி வைத்துள்ளார் என்பதை தகுந்த ஆதாரத்துடன் நீங்கள் நிரூபிக்க வேண்டும். என்றும் எழுதி என் மீது குற்றம்சாட்டி உள்ளீர்கள்.

பதவி ஆசை இல்லாதவர் என்பது உண்மையானால்?

நான் சொத்து சுருட்டல் என்று குறிப்பிட்டது த.மு.மு.க.வுக்கு சொந்தமான முஸ்லிம் டிரஸ்ட்டைத்தான். எந்த ஊரில் எந்ந எந்த பெயரில் வாங்கி வைத்துள்ளார் என்பதை தகுந்த ஆதாரத்துடன் நீங்கள் நிரூபிக்க வேண்டும். என்ற உங்கள் வாதம் திசை திருப்பலாகும். உணர்வு, ஒற்றுமை இதழ்களை ஆக்ரமித்து விட்டு நான்தான் ஆயுட்கால சேர்மன் என்று பி.ஜே. இப்பொழுதுதான் பகிரங்கப்படுத்தி உள்ளார்.

நான் அவரது சுயநல போக்கை பார்த்து விட்டுத்தான், பதவி ஆசை இல்லாதவர் என்பது உண்மையானால் சொத்துத் தலைமை பதவியை விடாமல் இருப்பது ஏன்? என்ற அடிப்படையில் முன்பே அவருக்கு கடிதம் எழுதி உள்ளேன். நான் இவ்வாறு எழுதி ஆண்டுகள் இரண்டு உருண்டோடி விட்டது என்பது உங்களுக்குத் தெரியும். ஏற்கனவே தெரிந்திருந்திருக்கும் உங்களுக்கு அதன் நகலை மீண்டும் உங்கள் பார்வைக்கு அனுப்பி வைத்தேன். அதன் பின்னரும் இப்படி குற்றம்சாட்டும் உங்கள் செயல் பிதற்றலா? பி.ஜே. வழியிலான பீற்றலா?

இறைவன் தந்த அறிவை சரியான வழியில் பயன்படுத்து.

இறைவன் தந்த அறிவை சரியான வழியில் பயன்படுத்து என்று எனக்கு எழுதி இருந்தீர்கள். இறைவன் தந்த அறிவை சரியான வழியில் பயன்படுத்தியதால்தான் நீங்கள் பார்க்கும்படி எழுதி இருந்த சி.டி.க்களைப் பார்த்து அதில் உள்ள பிதற்றல்களான உண்மைக்குப் புறம்பானவறற்றிலிருந்து ஒரு சிலவற்றை எடுத்து எழுதினேன். மீதமுள்ளவற்றை நீங்களே புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் என்று எழுதினேன். என்ன புரிந்தீர்களோ தெரியவி;ல்லை? இறைவன் தந்த அறிவை சரியான வழியில் பயன்படுத்தும்படி எனக்கு அறிவுரை வழங்கிய நீங்கள் சரியாக பயன்படுத்தி உள்ளீர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரலாறு இல்லாதவர்கள் வரலாறு தெரியாதவர்கள்.

திருச்சி கூட்டுடைப்பு கூட்டத்தில் பேசிய பாக்கர் அவரது இயல்புக்கு மாற்றமாக வரலாறு இல்லாதவர்கள், வரலாறு தெரியாதவர்கள் என்று கண்ணியவான்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளார். திருச்சியில் கூடி இருந்தவர்களுக்கும் கூட்டுடைப்பு தலைமையை ஆதரிப்பவர்களுக்கும் வரலாறும் தெரியாது, வரலாறும் கிடையாது என்பதில் பாக்கர் உறுதியாக உள்ளார். இதை பாக்கரின் திருச்சுப் பேச்சு வெளிப்படுத்தியது. அதனால்தான் வரலாற்று புரட்டல்களை கண்னை மூடிக் கொண்டு அந்த மேடையில் அவிழ்த்திட்டுள்ளார். அவரது உறுதியை மேலும் வலுப்படுத்தும் விதமாக உங்கள் மூவர் விமர்சனங்களும் உள்ளன.

பி.ஜே.யின் சி.டி.க்களை பார்த்து விட்டு எழுதுங்கள் என்று மெயில் அனுப்பியுள்ள சகோதரர் சாதிக் அவர்களுக்கு உரிய பதிலில் பாக்கர் உரையில் புழுகல்களும் வரலாற்று புரட்டல்களும் நடிப்பும்தான் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி உள்ளோம்.

வரலாறு இல்லாதவர்கள் என்றால் என்ன?

நேற்று வந்தவர்கள் என்பதைத்தான் கண்ணியவான்கள் நளினப்படுத்தி வரலாறு இல்லாதவர்கள் என்று இலக்கியமாகச் சொல்வார்கள். இதைத்தான் பி.ஜே. அவர்கள் தனது ஸ்டைலில் நேற்று வந்த நாய்கள் என்று சொல்லி உள்ளார். நாம் அப்படிச் சொல்ல மாட்டோம். பி.ஜே. பேசுவதெல்லாம் சரி என்று வாதிடக் கூடியவர்கள், வரலாறு இல்லாதவர்கள் என்று நாம் எழுதி உள்ள இடங்களில் பி.ஜே. ஸ்டைலில் நேற்று வந்த நாய்கள் என்ற வார்த்தையை பயன்படுத்திக் கொண்டால் அதற்கு நாம் பொறுப்பு அல்ல.

பி.ஜே ஜாக்கை விட்டு வெளியேறியதும் தவ்ஹீது உயிர் என்பது உண்மையானால் அரசியல் அமைப்பு கண்டிருப்பாரா? தவ்ஹீது பிரச்சாரத்தை மூச்சாக செய்திருப்பாரா? என்ற கேள்வியை நீங்கள் த.மு.மு.கவின் வளைகுடா அமைப்பாளராய் ஆவதற்கு முன் கேட்டிருந்தால் --- காலங்கடந்து இன்றைக்கு உங்களுக்கு இந்த ஞானம் வந்திருப்பதன் காரணம் என்ன? என்று கேட்டுள்ளீர்கள்.

காலம் கடந்தாலும் ஞானம் வராதவர்கள்.

1994 ல் ஜாக்கிலிருந்து ஒதுங்கிய பி.ஜே. அப்போது தவ்ஹீது பிரச்சனையை காரணமாக கூறவில்லை. ஷஷஇனி நான் தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாட்டேன். தவ்ஹீது பிரச்சார ஷதாஇ|கள் பெருகி விட்டார்கள்|| என்றுதான் கூறினார். மேலும் இனி நான் ஈடுபடப்போகும் பணிகளால் ஜாக் என்ற தவ்ஹீது அமைப்பு பாதிக்கக் கூடாது என்றுதான் விலகல் கடிதம் கொடுத்ததாக கூறினார். இதனை நினைவுபடுத்தி 6.4.02ல் பி.ஜேக்கு எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளேன். அந்த கடிதத்ததைப் படித்த பின்னரும் இப்படி கேள்ளவி கேட்டுள்ளீர்கள். அப்படியானால் எவ்வளவு காலம் கடந்தாலும் ஞானம் வராதவர்கள் யார்? எந்த வகையறா?

முதல் தரமானவரா? இரண்டாந்தரமானவரா?

நீங்கள் சத்திய நேசன், லுக்மான் போன்றவர்களின் மொட்டைக் கடிதங்களை எனது பார்வைக்கு அனுப்பி உள்ளீர்கள். இவ்வாறு அனுப்புபவர்கள் 2 தரத்தில் இருப்பார்கள். முதல் தரமானவர்கள், இப்படி அநியாயமாக மொட்டை நோட்டீஸ் போட்டுள்ளார்களே என்ற ஆதங்கத்தில் அனுப்பி வைப்பார்கள்.

இரண்டாந்தரமானவர்கள், பார் இதைப் பார் இதற்கு பதில் சொல்ல முடியுமா? என்ற நோக்கில் அந்த மொட்டைகளை அனுப்புவார்கள். நீங்கள் முதல் தரமானவரா? இரண்டாந்தரமானவரா? நீங்கள்தான் எழுத வேண்டும். இரண்டாந்தரமானவர் என்றால் பதிலை எதிர் பார்த்து அனுப்பி உள்ளீர்கள், அதில் உள்ளவற்றில் உங்களுக்கு உடன்பாடு உள்ளது என்று அர்த்தம். எனவே உங்களுக்கு உடன்பாடு ஆகிவிட்ட அந்த கருத்துக்களுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டு எழுதுங்கள் நான் பதில் தருவேன் இன்ஷh அல்லாஹ்.

நீங்கள் த.மு.மு.கவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு இதுவரை வெளியிட்டுள்ள அறிக்கைகள் என்று ஜெஹபர் எம். அஹ்மத் அவர்களும் தமுமுகவிலிருந்து (பி.ஜே வகையறா விலகிய)ப் பிறகு மௌலவி பிஜே வைப் பற்றிய அவதூறுகளை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக ஈ-மெயிலில் அனுப்பிக் கொண்டு வருவதை கவனித்து வருகிறோம் என்று அதிரை பாரூக் அவர்களும் அதே கருத்தில் நீங்களும் எழுதி உள்ளீர்கள்.

ஆணவத் தலைவர்.

பி.ஜே.யின் டாமினேட்டில் (ஆதிக்கத்தில்) இருந்த த.மு.மு.க. என்னை நீக்கியதாக அறிவிப்பு செய்தது 26-7-2002 உணர்வில்தான். அதற்கு முன்பாக 2001 லேயே பி.ஜே.யின் சுயநலப் போக்கையும் அகம்பாவத் தன்மையையும் விமர்சித்து கடைசி முயற்சி என்று விமர்சன கடிதங்கள் அனுப்பி உள்ளேன். மக்கள் மத்தியில் பிரபலமான 6-4-02, 10-5-02. ஆகிய கடிதங்களுக்கும் பி.ஜே. வகையறாக்களின் பொய் சத்தியத்தை அம்பலப்படுத்திய 17-7-02 தேதிய (லுஹாவின்)பொய் சத்தியத்திற்குப் பின்னால் என்ற பிரசுரத்திற்குப் பிறகும்தான் ஆணவத் தலைவர் பி.ஜே. என்னை நீக்கியதாக செய்தி வெளியிட்டார் என்பதை மறைத்து எழுதுவது பிதற்றலா? இல்லையா?

த.மு.மு.கவிலிருந்து வெளியேறி விட்ட பி.ஜே.

த.மு.மு.கவுக்கும் உங்களுக்கும் இப்பொழுது சம்பந்தம் இல்லை. த.மு.மு.க. வின் (முஸ்லிடிரஸ்ட்) சொத்து பற்றி பேசக் கூடாது என்று எழுதி உள்ளீர்கள். ஹதீஸ் ஆதாரம் காட்டி மார்க்க ரீதியாக உரிமை உள்ளது என்று எழுதிய பிறகும் இப்படி கேட்டுள்ளீர்கள். இதன் மூலம் மார்க்கம் என்பது உங்களுக்கு இரண்டாம் பட்சம் என்று தெரிகிறது. உங்களின் இந்தக் கூற்றில் நீங்கள் உண்மையாளர் என்றால் த.மு.மு.கவிலிருந்து வெளியேறி விட்ட பி.ஜே.யைப் பார்த்தும் த.மு.மு.க.வுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனவே முஸ்லிம் டிரஸ்ட்டை த.மு.முகவிடம் ஒப்படையுங்கள என்று கூறி இருக்கவேண்டும். பி.ஜே. முஸ்லிம் டிரஸ்ட்டின் சேர்மன் என்று வாதித்தீர்கள் என்றால், முஸ்லிம் டிரஸ்ட்டில் உள்ள டிரஸ்டிகளில் நானும் ஒருவன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.