தன் தவருகளை சுட்டிக்காட்டிய பலரை தன்னுடைய அரசியல் பலத்தை பயன்படுத்தி காவல்துறையிடம் சிக்கவைத்தவர்தான் இந்த பி.ஜே

அன்பாந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ் நம் அனைவரையும் இவ்வுலகிலிருந்து ஏற்படும் அனைத்து குழப்பங்கிளிலிருந்தும் காப்பாற்றுவானாக!

தமிழகத்தில் தவ்ஹீது கொள்கை வளர்வதற்கும் அநாச்சாரங்களை களைவதற்கும் பலர் அரும்பாடுபட்டுள்ளார்கள், இவற்றில் குறிப்பிடத்தக்கவாகளிள்; சகோதரர் P.J யும் ஒருவர் தவ்ஹீது கொள்கையை எடுத்துரைத்தற்காக துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளானவர்கள் பலபேர்கள் இவர்களில் ஒருவர் P.J ஆனால் தவ்ஹீது வாதிகளில் முதன்மையாக மக்களிடம் நினைவுக்கு வருபவர் சகோ.P.J தான் காரணம் தன்னுடைய பேச்சாற்றலால் மக்களைக் கவர்ந்தவர், இறைவன் இவருக்கு கொடுத்திருக்கும் இந்த(பேச்சாற்றல்) பரிசை எப்படி பயன்படுத்திவருகிறார் என்பதுதான் தற்போதைய கேள்வி! ஏனக்குத் தெரிந்து ஆரம்ப காலகட்டத்தில் துவங்கப்பட்ட அந்நஜ்ஜாத் (அபு அப்துல்லாஹ்)பத்திரிக்கையுடன் இனைந்து ஏகத்துவ பிரச்சாரத்தை மேற்n;காண்டார் பின்பு அவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையில் பிரிந்து சென்று .A.Q.H அஹ்லே குர்ஆன் ஹதீஸ் என ஆரம்பித்து பின்பு J.A.Q.H என மாறியது இவற்றில் இருந்து கொண்டே த.மு.மு.க என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து நடத்திவந்தார்கள் பின்பு J.A.Q.H அமீருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையில் பிரிந்து அனைத்து தவ்ஹீது கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கினார்கள் அதற்க்கு துனைநின்றவர்களில் பழ்லுல் இலாஹியும்,ஹாமித் பக்ரியும் இருவர் என நினைக்கிறேன். இவர்(P.J ) இத்தனை அமைப்புகளிலிருந்தும் பிரிந்து சென்றபோதும் ஏன் எதற்க்கு என்ற கேள்விகள் கேட்காமல் அவருடன் பின்தொடர்ந்து சென்றவர்கள் பல்லாயிறக்கணக்கானவர்கள், மேலும் இத்தனை அமைப்பிலிருற்தும் பிரிந்து செல்லும் போதும் அவர் வழக்கமாக சுமத்தும் குற்றச்சாட்டு பொருளாதார மோசடிதான், அபு அப்துல்லாஹ், கமாலுத்தீன் மதனி, பழ்லுல் இலாஹி, மற்றும் பிரபலமில்லாத எத்தனையோ நபர்களின் மேல் பொருளாதார குற்றச்சாட்டை சுமத்தி அவர்களை இயங்க விடாமல் முடக்கியவர் இந்த சகோதரர் P.J தான். இவற்றிற்கிடையில் தமிழகத்தில் தன்னை எதிர்த்த பலர்களை அல்லது தன் தவருகளை சுட்டிக்காட்டிய பலரை தன்னுடைய அரசியல் பலத்தை பயன்படுத்தி காவல்துறையிடம் சிக்கவைத்தவர்தான் இந்த பி.ஜே அவற்றையெல்லாம் தன்னுடைய வாதத்திறமையால் வென்றெடுத்தவர் இவர், இதனை அனைத்தையும் ஆதரித்தவர்கள் த.மு.மு.க வினர்கள். தன்னை கண்மூடித்தனமாக பின்பற்ற ஒரு கூட்டம் தாயராகவுள்ளது என்பதை கண்கூடாக கண்டுகொண்ட அண்ணன் P.J அவர்கள் தனக்;கு பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும் பொது விவாதத்திற்கு அழைப்பார், மார்கத்திற்குள் (சமூக) பிரிவினையை உண்டுபன்ன விரும்பாதவர்கள் இவரை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை, இவற்றையெல்லாம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார் இந்த சமூக சேவகர். ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, கடைசியில் தன்கையையே கடித்த கதையாக தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களையும் (த.மு.மு.க வினரை) சந்திக்கு இழுத்துவிட்டார் சமுதாய வாதி! சகோதரர் P.J இவரை வைத்து பிழைப்பு நடத்தும் (மீடியா வேல்ட்) பாக்கர் இவருக்கு பக்கவாத்தியம், இவருடைய P.J பழைய பேச்சுக்களுக்கும் (ஆடிNயுh) புதிய பேச்சுக்களுக்கும் (வீடியோ, சீ.டி) ஏகப்பட்ட முரண்பாடுகள் என்பதை புரிந்து கொண்டவர்கள் வெகுசிலர்தான், அநேகர்கள் P.J யின் ஆயுட்கால உறுப்பினர்களே, இவருடைய அத்தனை தவருகளுக்கும் இன்றைய த.மு.மு.க தலைவர்கள் துனைபோய்விட்டு இன்று தனக்கு வேட்டு என்று வரும்போது மட்டும் சமுதாயத்திடம் முறையிடுவது எந்த வகையிலும் நியாயம் என்பது தான் நமது கேள்வி?
இவர்கள் இவ்வளவு நாட்களாக சமுதாய சேவை என்ற பெயரிலே மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்றுதான் என்னத் தோன்றுகிறது, இவர்களின் சமுதாய சேவை இறைவனுக்காக என்றிருந்தால் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்க மாட்டாது. மத்ஹபுகளை பின்பற்றக்கூடாது என்று வாயலவில் மேடைதோரும் முழங்கியவர்கள், இன்று தானே மத்ஹபு இமாமாக மாறுவது என்ன கொள்கையோ? அதைபின்பற்றுபவர்கள்(தக்லீது) என்ன தவ்ஹீது வாதிகளோ?
சமுதாயத்தை பிரித்து பிரித்து கூறுபோட்டு சுயநலத்திற்காக தன்னுடைய வாதத்திறமையால் இந்த உலகில் வேண்டுமானால் இவர்கள் கொடிகட்டி பறக்கலாம் ஆனால் முஸ்லிம்களை பலவீனர்களாகவும், ஒற்றுமை குழைந்தவர்களாகவும், கோழைகளாகவும் ஆக்கிய குற்றத்திற்காக நாளை மறுமையில் கண்டிப்பாக பதில் சொல்லியேஆக வேண்டும் என்பதை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யN;வண்டியது ஒவ்வொரு முஃமினின் கடமையாகும் எனவே தன்னுடைய சுய விருப்பு வெறுப்புக்களை களைந்து ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிப்பிடிக்கும்படி அன்புடன் கேட்டுக்காள்கின்றேன்.
இவர்கள் தான் வளரவேண்டும் என்பதற்காக அடுத்தவர்கள் (அமைப்புகளை) குறைகூறுவதையும் அவதூறுகள் கூறுவதையும் நிறுத்த வேண்டும். இவர்களினால் பாதிக்கப்பட்ட இயக்கவாதிகள் எத்தனையோபேர், அவர்கள் சந்தித்த துன்பங்களோ எவ்வளவோ. நாம் இவர்களுக்கு கூறிக்கொள்வதெல்லாம் (இத்தகுல்லாஹ்) இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் என்பதுதான்.

சமுதாய நலம் விரும்பும்

இப்னு அப்துல் வஹாப்
ரியாத்-சவுதி அரேபியா

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.