பி.ஜே.யை பொய்சத்தியம் செய்யும் பொய்யர் என்று நிரூபிக்கும் அவர் வெளியிட்டுள்ள சி.டி.

சத்திய நேசன் என்ற பெயரில் எனக்கு இ-மெயில் அனுப்பிய சகோதரர் அவர்களுக்கு கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

திட்டமிட்டபடி த.மு.மு.கவிலிருந்து விலகிய பி.ஜே. தவ்ஹீது கொள்கை பிரச்சனையால் விலகி விட்டதுபோல் உணர்வில் செய்தி வெளியிட்டிருந்தார். அதைப்படித்ததுமே அதில் மறைக்கப்பட்டுள்ள உண்மையை உணர்ந்தேன். தீமை நடக்கக் கண்டால் கையால் தடு முடியாவிட்டால் வாயால் தடு முடியாவிட்டால் மனதால் வெறுத்து ஒதுக்கு இது ஈமானின் கடைசி நிலை. இது இறைத் தூதர் கட்டளை என்பது அனைவருக்கும் தெரியும்.

எனவே முக்கிய அறிவிப்பில் உள்ள தீமையை தடுக்க முக்கிய வாசகம் என்ற தலைப்பில் பிரசுரம் வெளியிட்டிருந்தேன். அதை படித்த பலர் உண்மையை விளங்கி அல்லாஹ்வை புகழ்ந்து நன்றி செலுத்தியுள்ளனர். நன்றி கூறி எமக்கு கடிதமும் எழுதி இருந்தனர். அல்ஹம்துலில்லாஹ். நீங்களோ கோபப்பட்டு என்னை விமர்சித்து எழுதி அதற்கு உள்நோக்கமும் கற்பித்து, பி.ஜே. வெளியிட்டுள்ள சி.டியை பார்க்கும்படியும் எழுதி இருந்தீர்கள்.

யதார்த்தமும் திட்டமிடுதலும்.

அந்த சி.டியைப் பார்த்தேன். கொள்கையில் சமரசம் செய்யாமல் வெளியேறிதாக கூறிய பி.ஜே. மேல் விளக்கத்திற்காக வெளியிட்ட சி.டியில் 26 நிமிடங்கள் வரை தவ்ஹீது கொள்கை சம்பந்தமாக எதுவும் சொல்லவில்லை. 

தவ்ஹீதுக்கு எதிராக ஷிர்க் செய்யச் சொன்னார்கள் என்றோ, விரல் அசைக்காதே, நெங்சில் கை கட்டாதே என்று மஸாயில் பிரச்சனையில் தலையிட்டார்கள் என்றோ கொள்கை சம்பந்தமாக எந்தப் பிரச்சனையையும் கூறவில்லை. 

த.மு.மு.க.வை கைப்பற்ற செய்த சதி அம்பலமாகி அவரது சுயகவுரவம் பாதிக்கப்பட்டதைத்தான் தவ்ஹீது பிரச்சனையாக ஆக்க 26 நிமிடங்கள் சுற்றுகிறார். திட்டமிடுதலுக்கு முன்னால் யதார்த்தம் தோற்றுவிடும் என்பதில் அணுபவமிக்கவர் பி.ஜே. 

அதனால் எதைச் சொன்னால் எப்படிச் சொன்னால் எந்த வார்த்தையை உபயோகித்து சொன்னால் தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையாக ஆக்க முடியுமோ அப்படி திட்டமிட்டு சொல்லி கொள்கைப் பிரச்சனை போல் காட்டி உள்ளார். இதைப் பார்க்கும் அறிவுடையவர்கள் இது கொள்கை பிரச்சனை இல்லை என்று எளிதில் புரிவார்கள்.

பி.ஜே.வகையறாக்கள் செய்யும் வியாக்கியானம்.

மேலும் அந்த சி.டி. பி.ஜே. அவர்கள் ஒரு பொய்யர் என்பதற்கு ஆதாரமாகத்தான் உள்ளது. அதுவும் எப்படிப்பட்ட பொய்யர் என்றால் பொய்சத்தியம் செய்யும் பொய்யர் என்று நிரூபித்துள்ளது. உங்களுக்கு தூக்கி வாரிப் போடுகிறதா? நிதானமாக மீண்டும் அந்த சி.டியை பாருங்கள். 

த.மு.மு.க. தலைமை பற்றி பி.ஜே தந்த உத்தரவாதத்தை அந்த பிரசுரத்தில் எடுத்தெழுதி இருந்தேன். அது 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த நிலையைத்தான் பி.ஜே. எழுதி இருந்தார். இப்போதைய நிலை வேறு என்று அவரது வகையறாக்கள் வியாக்கியானம் செய்து சமாளித்து வருகிறார்கள். இப்பொழுது வெளிவந்துள்ள சி.டிகளில் பி.ஜே. பேசி உள்ளதுதான் புதிய நிலை என்றும் இதில் கூறப்படுவதுதான் உண்மை என்றும் கூறுகிறார்கள், நீங்களும் அப்படித்தான் நம்புவீர்கள் இல்லையா?

மற்றவர்களை உள்ளே தள்ளிவிட்டு தான் மட்டும் எப்படியும் தப்பித்து விடுவார்.

அந்த சி.டி.யில் வாழ்வுரிமை மாநாட்டுக்கு 2 மாதங்களுக்கு முன் சிறைக்கு பயந்து ராஜினாமா செய்யாத 3 பேர்களில் ஒருவராக தான் இருந்ததாக பி.ஜே. கூறுகிறார். அப்படி மஷுரா நடந்திருந்தால் மாவீரன் பி.ஜே. இப்படி கூறி இருப்பார் என்பதில் மாற்று கருத்து இல்லவே இல்லை. 

அப்படி ஒரு நிலைமை வந்தால் மற்றவர்களை உள்ளே தள்ளிவிட்டு தான் மட்டும் எப்படியும் தப்பித்து விடுவார் என்பது தனி விஷயம். பி.ஜேன் இந்த சி.டி. கூற்றுப்படி 3 பேர் தவிர பெரும்பாலான த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் அனைவரும் சிறைக்கு அஞ்சியவர்கள்தான். இந்த நிகழ்ச்சி அவர் கூற்றுப்படி 1999 மேயில் நடந்திருக்க வேண்டும்.

சிறை மிரட்டல் அடக்கு முறைகளுக்கும் அஞ்சாத தலைமை.

எத்தகையை மிரட்டலுக்கும் அடக்கு முறைகளுக்கும் அஞ்சாத துணிவு, சிறை செல்லும் நிலை ஏற்பட்டால் தங்களை முதலில் முன்னிறுத்திக் கொள்ளக்கூடிய பொறுப்புணர்வு. இப்படி சரியான தலைமைக்கு உரிய எல்லா பண்புகளையும் மாநிலத் தலைமை நிர்வாகிகளிடம் நான் காண்கிறேன். என்று எழுதினாரே அது எப்பொழுது? 

வாழ்வுரிமை மாநாட்டுக்கு முன்பா? பின்பா? பிறகுதானே அல்லாஹ்வின் மீது ஆணை இட்டு எழுதினார். சி.டி.யில் கூறி உள்ளது உண்மை என்றால் மனம் திறந்த மடலில் அல்லாஹ்வின் மீது செய்துள்ள சத்தியம் பொய்யானது என்று நிரூபிக்கும் இந்த சி.டி. பி.ஜே. பொய்சத்தியம் செய்யும் பொய்யர் என்றும் நிரூபித்துள்ளது.

எதிர் தரப்பினர் இப்படி நடந்திருந்தால்.

எதிர் தரப்பினர் இப்படி நடந்திருந்தால் பி.ஜே. எப்படி எழுதி இருப்பார் தெரியுமா? இதன் மூலம் --- என்பவன் அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்த பொய்யன் என்று நிரூபனமாகிவிட்டது. பொய்யன் என்று நிரூபனமான ஒருவன் சொல்வதை நம்ப வேண்டும் என்று சொல்பவர்கள் அந்த பொய்யன் பின்னால் செல்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? என்று ஒருமையில் எழுதி இருப்பார், தான் பண்பட்டுவிட்டதாகக் கூறும் இந்த வயதில் நாய்கள் என்றும் எழுதி இருப்பார். நாம் அப்படி எழுத மாட்டோம்.

இவர்களால் இழிவுபடுத்தப்பட்டவர்கள்.

திருச்சியில் பி.ஜே. அரங்கேற்றிய நாடகத்தில், பாக்கர் என்பவர் ஹைதர் அலியை தேவடியாள் மகன் என்று சொன்னேன் என்கிறார். ஒரு மனிதன் தன்னை விட கீழ்தரமாக யாரைக் கருதுகிறானோ அவர்கள் முன்தான் இப்படி பேசினேன் என்று பேசியதை தெம்பாக சொல்லிக் காட்டுவான். 

தான் கண்ணியமாக கருதுபவர்கள் கூடி இருக்கும் சபையில் அப்படி சொல்ல மாட்டான். திருச்சியில் கூடி இருந்தவர்களை மனிதர்களாக மதித்து இருந்தால், மேடை நாகரீகம் கருதியாவது தடித்த வார்த்தை கூறி விட்டேன் அது தப்புதான் என்று கூறி வருந்தி இருப்பார். 

வந்திருந்தவர்களை மதிக்காமல் கீழ்தரமானவர்களாக கருதியதால்தான் மேடையில் நின்று கொண்டு தேவடியாள் மகன் என்று சொன்னேன் என்று திமிராக ஒன்றுக்கு பல முறை சொல்லிக் காட்டி தன் பங்குக்கு பாக்கர் வந்தவர்களை இழிவுபடுத்தி உள்ளார். 

அதை அப்படியே சி.டிக்களாக ஆக்கி வெளியிட்டதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தை அல்லது இவர்கள் கூறும் தவ்ஹீது ஜமாஅத்தினரை கூட்டுடைப்பு சார்பாக இழிவுபடுத்தி உள்ளார்கள். இந்த போக்கு நீடித்தால் இவர்களால் விமர்சிக்கப்படும் அப்துல்வஹ்ஹாப் ஷஃரானி மாதிரி இவர்களும் ஆகி விடலாம். அந்த மாதிரி ஆளைத்தான்  இவர்கள் தலைவராகவும் ஆக்குவார்கள்.

இவர்களா கொள்கை பிரச்சனையால் விலகி வந்தவர்கள்?

ஆதங்கத்தில் சொல்லி விட்டேன் சொன்னது தப்புதான் என்று முடித்திருந்தால், சரி பொறுக்கித்தனமான வார்த்தையை புத்தி கெட்டு பேசி விட்டார் என்று விட்டு விடலாம். பொறுக்கித்தனமான அவரது பேச்சை குர்ஆன் ஹதீஸுக்கு உட்பட்டது என்கிறார். 

தவ்ஹீது கொள்கை பிரச்சனையால் விலகி விட்டதாக கூறும் பி.ஜே. என்ற பெரிய ஆலிம்சா உட்பட அரங்கத்தில் நின்ற கூட்டுடைப்பு ஆலிம்சாக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்படி தெனாவெட்டாக தங்கள் சுயநலத்திற்கு குர்ஆன் ஹதீஸை வளைப்பவர்களும் அதை கண்டு கொள்ளாமல் இருக்கும் இவர்களா தவ்ஹீது கொள்கை பிரச்சனையால் விலகி வந்தவர்கள்?

இந்த தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால்தான் இவர்கள் விலகினார்களோ?

பாதிக்கப்பட்டவன் சம்பந்தமான ஹதீஸ் ஆயத்துகளில் இதற்கு எங்கே ஆதாரம் இருக்கிறது. போர் களத்தில் நபி(ஸல்) பல் உடைக்கப்பட்ட போது சபித்ததை அல்லாஹ் கண்டிக்கிறான் என்று எத்தனை மேடைகளில் இந்த ஆலிம்சாக்கள் பேசி உள்ளார்கள். வரம்பு மீறுவதற்கு இஸ்லாத்தில் எப்பொழுதும் அனுமதி இல்லை. 

பாக்கர் பாதிக்கப்பட்டதாக கூறுவது உண்மைதான் என்று வைத்துக் கொள்வோம், அப்பொழுதும் யாரால் பாதிக்கப்பட்டதாக கூறுகிறாரோ அவரைக் கூட வரம்புக்கு உட்பட்டுதான் ஏதாவது வார்த்தைகளைக் கூற முடியுமே தவிர, பிரச்சனைக்கு சம்பந்தமில்லாத அந்த நபரது தாயை தேவடியாள் என்று எப்படி கூற முடியும்? இப்படி சொன்னது வரம்பு மீரலா, இல்லையா? தேவடியாள் மகன் என்பது குர்ஆன் ஹதீஸுக்கு உட்பட்டது என்ற இந்த கொள்கைப் பிரச்சனையில்தான் சமரசம் செய்யாமல் விலகினார்களோ? சீசீ வெட்கக் கேடு தூதூ மானக் கேடு.

முதலில் எதைச் சொல்ல வேண்டும்?

நீங்கள் பி.ஜே. சி.டியை பார்க்கச் சொன்னதால் 2 தரப்பு கூற்றுக்களையும் நடுநிலையோடு பார்க்க வேண்டும் என்று ஜவாஹிருல்லாஹ் பேசி உள்ள சி.டியையும் வாங்கி பார்தோம். நிர்வாக குழுவில் பேசிய ஜவாஹிருல்லாஹ் முதலில் பீஸ் நிகழ்ச்சி பற்றி பேசினேன் என்று யதார்த்தமாக நடந்ததைக் இயல்புப்படி கூறுகிறார். 

 பி.ஜே, நிர்வாகக் குழுவில் நடந்ததை அப்படியே சொல்கிறேன் என்ற பீடிகை போட்டு விட்டு முதலில் எதைச் சொல்ல வேண்டும் எப்படிச் சொன்னால் கொள்கை பிரச்சனையாக ஆக்க முடியும் என்று திட்டமிட்டு தவ்ஹீது கொள்கை பிரச்சனையாக சித்தரிக்க ஹஜ்ஜுப் பெருநாள் உரையை முதலில் சொல்கிறார்.

பீஸ் ஜனவரியில் ஹஜ்ஜுப் பெருநாள் பிப்ரவரியில்.

நிர்வாக குழுவில் பேசிய ஜவாஹிருல்லாஹ் முதலில் பீஸ் பற்றிதான் பேசினார். இப்படி நான் குறிப்பிடுவதால் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு ஆதரவாக எழுதுகிறேன் என்று நீங்கள் குற்றம் சாட்டலாம். ஆதாரத்துடன்தான் எழுதுகிறேன். 

நடந்ததை சொல்லும்போது இயல்பாக சொல்பவர்கள் முதலில் நடந்ததை முதலிலும் அதை ஒட்டி வரும் பிரச்சனையை - சந்தேகத்தை - கசப்புணர்வை 2 வதாகவும் சொல்வார்கள். பீஸ் கண்காட்சி ஜனவரியில் நடந்தது. ஹஜ்ஜுப் பெருநாள் பிப்ரவரியில் வந்தது. இது ஆதாரம் இல்லை வாதம் என்று கூறலாம். இது திட்டமிட்ட வாதம் அல்ல இயல்பான வாதம்தான், இருந்தாலும் இந்த வாதத்தை மட்டும் வைத்து ஏற்கும்படி சொல்ல மாட்டோம்.

மலிவு விலை சி.டி.யே ஆதாரம்.

ஜவாஹிருல்லாஹ் முதலில் பீஸ் பற்றி பேசியதாகத்தான் குறிப்பிடுகிறார். இது இயல்பான முதல் ஆதாரம். ஜவாஹிருல்லாஹ்வின் கூற்றை உங்களைப் போன்றவர்கள் ஆதாரமாக ஏற்க மறுக்கலாம். ஜவாஹிருல்லாஹ் சொல்வதுதான் உண்மை என்பதற்கு பி.ஜேயின் மலிவு விலை சி.டி.யே ஆதாரமாக உள்ளது. 

மலிவு விலை சி.டியில் பேசிய பி.ஜே. பிரச்சனைக்கு முதல் காரணம்; பெருநாள் உரை என்று ஆரம்பிக்கும்போதே பின்னால் இருக்கும் பாக்கர் பீஸ் பீஸ் என்கிறார். பி.ஜே. இல்லை என்று சொல்லி பெருநாள் உரை என்று பேச்சை தொடர்கிறார். அதை சற்று விரிவாக விளக்குவது போல் பேசி கொள்கை பிரச்சனையுடன் முடிச்சு போடுகிறார்.

பி.ஜே.வைத்த அதே குற்றச்சாட்டு.

பி.ஜே. வாதப்படி 20 வருஷமாக குறிப்பாக கடந்த 9 வருடங்களாக எதைப் பேசினாரோ அதைத்தான் பேசி உள்ளார் என்றால் 9 வருடமாக வராத சிந்தனை இப்பொழுது எப்படி வந்தது. இதற்கு முன்பே கசப்புணர்வு வந்துவிட்டது என்பதுதானே இதன் பொருள். பி.ஜே.ன் பெருநாள் உரை பற்றி ஜவாஹிருல்லாஹ் எங்களைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று இப்பொழுது குறிப்பிடுவது போல் கமாலுத்தீன் மதனியைப் பார்த்து பி.ஜே. இதே குற்றச்சாட்டை வைத்தார். 9 ஆண்டுகளுக்கு முன் பி.ஜே.வைத்த அதே குற்றச்சாட்டுதான் இது.

பேசும் விதமும் அந்த தொனியும்தான்.

கோட்டாறு ஜும்ஆ உரைகளிலே கொள்கையில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று எங்களை விமர்சித்து சாடுகிறீர்கள் என்றார். அப்பொழுது கமாலுத்தீன் மதனி. இவ்வளவு காலமாக எதைப் பேசினேனோ அதைத்தான் இப்பொழுதும் பேசினேன் என்றார். 

இத்தனை ஆண்டுகளாக பேசியதைத்தான் பேசுகிறீர்கள். காலச் சூழலும் பேசும் விதமும் அந்த தொனியும்தான் எங்களை விமர்சித்து சாடும்விதமாக உள்ளது என்று வாதத்தில் வல்லவரான பி.ஜே. கூறினார். பி.ஜே. அன்று கமாலுத்தீன் மதனி அவர்களுக்கு கூறிய பதிலையே அவருக்குரிய பதிலாக எடுத்துக் கொள்ளலாமே. ஜவாஹிருல்லாஹ்விடம் ஏன் பதிலை எதிர் பார்க்க வேண்டும்.

மறுமைக்கும் பயனுள்ள மறைக்கப்பட்ட பேச்சு.

பேரணியில் பி.ஜே. பேசிய எல்லாவற்றையும் உணர்வில் போட்டு விட்டு மறுமைக்கும் பயனுள்ள விதத்தில் பேசியதை மட்டும் திட்டமிட்டு போடாமல் விட்டுவிட்டார்கள் என்று கூறும் பி.ஜே. சென்னை திருச்சி ஆகிய 2 நிகழ்ச்சிகளிலும் இதை திட்டமிட்ட சதியாக குற்றம் சாட்டி உள்ளார். மற்றவற்றை போடாவிட்டாலும் மறுமைக்கு பயனுள்ள இதைத்தான் போட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பேசி உள்ளார், இதன் மூலம் தங்களை மறுமைக்கு அஞ்சுபவர்களாக காட்டியுள்ளார் பி.ஜே.

இவர்கள் மறுமைக்கு அஞ்சும் கூட்டமாம்.

திருச்சியில் பி.ஜே. வகையறாக்கள் நடத்திய நாடக நிகழ்ச்சியை 2 சி.டி.க்களாக வெளியிட்டுள்ளனர். அதில் சினிமா, டி.வி. நடிகர் நடிகைகளுக்கெல்லாம் சவால் விடும் வண்ணம் பாக்கர் தோன்றிய காட்சிகள், தேவடியாள் மகன் என்று சொன்னதை பலமுறை சொல்லிக் காட்டிய காட்சிகள், பி.ஜே.யின் புகழ் பாடல்கள் இப்படி எல்லாவற்றையும் இடம் பெறச் செய்துள்ளார்கள். மறுமை என்ற தலைப்பில் சுலைமான் பேசியதை மட்டும் எடிட் செய்து விட்டார்கள். இவர்கள் மறுமைக்கு அஞ்சும் கூட்டமாம். அவர்கள் செய்த விமர்சனத்திற்கு அவர்களையே சொந்தக்காரர்களாக ஆக்கி விட்டான் அல்லாஹ்.

திருச்சி நிகழ்ச்சி திட்டமிட்ட நாடகம்.

திருச்சி நிகழ்ச்சி திட்டமிட்ட நாடகம் என்று எழுதுவதால் உங்களைப் போன்றவர்களுக்கு கோபம் வரலாம். பயான் நிகழ்ச்சிகளின் வீடியோ சி.டிக்களை படுத்துக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டும்தான் கேட்பேன் அவ்வளவு நேர நெருக்கடி எனக்கு. விவகார சி.டிகளை சுற்றுச் சூழலுடன் பார்த்தால்தான் உண்மை புரியும் என்பதால் உட்கார்ந்து பார்ப்பேன். அப்படி பார்த்ததால்தான் அதை நாடகம் என்கிறேன்.

அழுதார் புலம்பினார் கண்ணீர் வடித்தார்.

நட்சத்திர கலை நிகழ்ச்சிகள் பற்றி பத்திரிக்கைகளில் எழுதுவார்கள். நடிகை -- அவரது பாய் பிரண்டுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தார். அவரது காட்சி வந்து விட்டது என்றதும் மைக் முன் வந்து, அழுதார் புலம்பினார் கண்ணீர் வடித்தார். பார்வையாளர்களையும் கண்ணீர் சிந்த வைத்தார். அவரது 3 நிமிட காட்சி முடிந்ததும் திரும்பவும் பாய் பிரண்டிடம் போய் சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது நடிப்பை பார்த்த அரங்கத்தில் உள்ளோர் அனைவரும் அந்த சோகத்தில் இருந்து மீளாமல் இருந்தனர் என்று. இதுதான் திருச்சியில் நடந்துள்ளது. மைக் முன் வந்ததும் முகத்தை சோகமாக வைத்துக் கொள்வதும் அழுவதும் ஒப்பாரி வைப்பதும் தங்கள் காட்சி முடிந்ததும் பின்னால் நின்று சிரித்து மகிழ்வதுமான அந்த நிகழ்ச்சி நாடகம்தான் என்பதற்கு தெளிவான ஆதாரமாக உள்ளது.

அறிவுடையவர்களுக்கு இவ்வளவு போதும்.

அறிவுடையவர்களுக்கு இவ்வளவு போதும் என்று நம்புகிறேன். இந்த கோணத்தில் அந்த சி.டிகளை பாருங்கள். சைட்டில் சி.டி. சம்பந்தமாக மற்ற வாசகர்களும் கருத்து எழுதி வருகிறார்கள். மேற்கொண்டும் விபரங்கள் வெப் சைட்டில் வெளியாகிக் கொண்டிருப்பதால் சி.டி. சம்பந்தமாக இத்துடன் இப்போதைக்கு நிறைவு செய்கிறேன். சி.டி.சம்பந்தமாக வாசகர்கள் விமர்சனத்தில் விடுபடும் விமர்சனங்களை தேவைப்பட்டால் எழுதுவேன் இன்ஷா அல்லாஹ். பாக்கர் பாதிக்கப்பட்டால் அவர் ஸ்டைலில் இப்படித்தான் பேசுவார் என்றால் இதை ஒட்டி இன்னொரு கேள்வி இருக்கிறது. அது என்ன கேள்வி என்பதையும் அடுத்த கடிதத்தில் பார்ப்போம்.

உண்மையை உணர்த்திய முக்கிய அறிவிப்பு.

உண்மை இதுதான் என்று தெளிவாக தெரிந்த நிலையில் பொய்யன் என்று நன்கு அறிமுகப்பட்ட ஒருவன் மூலம் ஒரு செய்தி வரும்போது செய்தியின் தாக்கத்தில் அவன் ஒரு பொய்யன் என்பதை மறந்து விடுவது மனித இயல்பு. 

அதுபோல் டிரஸ்ட்கள் கைப்பற்றப்பட்டதும் பி.ஜே. வகையறாக்கள் த.மு.மு.வை விட்டு வெளியேறுவார்கள் என்ற செய்தியை ஏற்கனவே தெரிந்து மற்றவர்களுக்கும் சொன்ன நான், தவ்ஹீது பிரச்சனையால் பி.ஜே. வெளியேற்றப்பட்டார் என்ற செவி வழிச் செய்தி கிடைத்ததும் கொதித்துப் போனேன். 

ஹைதர் அலி, ஜவாஹிருல்லாஹ் ஆகியவர்களுக்கு போன்கள் போட்டு ஒவ்வொருவரும் விலாசித் தள்ள வேண்டும் என்று நண்பர்களுக்கு போன் போட்டு சொல்லிக் கொண்டிருந்தேன். உணர்வில் வந்த முக்கிய அறிவிப்பின் வாசக அமைப்பை படித்துப் பார்த்த பிறகுதான் இது பி.ஜே.ன் கை வண்ணத்தில் வந்த சதித்திட்டம் என்பதை உணர்ந்து பிரசுரம் வெளியிட்டேன்.

சத்திய நேசன்.

சத்திய நேசன் என்ற பெயரில் எனக்கு இ-மெயில் அனுப்பிய கண்ணியத்திற்குரிய சகோதரர் ரசூல் மைதீன் அவர்களே! ரசூல் மைதீன் என்ற பெயரில் நீங்கள் மேலப்பாளையம் தவ்ஹீத் குழு என எனக்கு விமர்சன கடிதம் எழுதி இருந்தீர்கள். 

அதற்கு முறையாக பதில் எழுதி இருந்த நான், இதே அட்ரஸுடன் வெப் சைட்டில் திருவல்லிக்கேணி ரசூல் மைதீன் என எழுதி உள்ளீர்களே என்று உங்கள் இரட்டை நிலையை சுட்டிக் காட்டி திருவல்லிக்கேணியா? மேலப்பாளையமா? என்று கேட்டிருந்தேன். அதற்கு பதில் தராத நீங்கள். சத்திய நேசன் என்ற பெயரில் இ-மெயில் அனுப்பி என்னை விமர்சித்துள்ளீர்கள். 

உங்கள் மெயில் அட்ரஸை மாற்றினாலும் உங்கள் எழுத்து நடையை மாற்றவில்லை. பான்ட்டும் மாற்றப்படவில்லை. உங்கள் ஐ.டியை மாற்றி அனுப்பிய நீங்கள், ஐ.பி. நம்பர் காட்டி கொடுக்கும் என்பதை மறந்து விட்டீர்கள்.
நீங்கள் தான் இளையவனின் நிஜமோ?

03.05.2004 அன்று எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தீர்கள். அதில் சகோ. இளையவன் தப்பாக எழுதிய வார்த்தைகளுக்கு அவரிடம் நான் கேட்ட கேள்விக்கு உங்களிடமிருந்து பதில் வந்திருக்கிறது. அவர் எழுதிவிட்ட வார்த்தைகளை திரும்பப்பெற முடியாது என்பதால் பழமொழி மற்றும் ஹதீஸ் ஆகியவற்றுடன் நீங்கள் அவருக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பதில் எழுதியிருப்பது, நீங்கள் தான் இளையவனின் நிஜமோ? என எண்ணத் தோன்றுகிறது. என்று எழுதி உள்ளீர்கள்.

இதற்குரிய பதிலை தெரியும் முன். 2-5-04 அன்று அந்த வெப்சைட் இளையவன் அவர்கட்கு நீங்கள் அனுப்பிய விமர்சன கடித சுருக்கத்தை முதலில் பார்ப்போம்.

யார் சொல்கிறார் என்று பார்க்காதே என்ன சொல்லப்படுகிறது என்று பார் என ஒருமையில் அழைத்து பதில் சொல்லியுள்ளீர்கள். அவர் கேட்ட கேள்வியில் என்ன தவறு இருக்கிறது? அந்த கடிதத்தில் அவர் உங்களை மரியாதைக் குறைவாக எதும் சொல்லிவிடவில்லையே? 

ஒரு பொது விசயத்தைப் பற்றி விவாதிக்கும்பொழுது அதைக் பார்க்கும் கேட்கும் பலர் பல வித கோணத்தில் தங்கள் கேள்விகளை சந்தேகங்களை கேட்கத் தான் செய்வர். அதற்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லித்தானாக வேண்டும். கோபம் வரக்கூடாது. இனியாவது தங்களுடைய இளையவன் என்ற புனை பெயருக்கேற்றபடி மற்றவர்களை சற்று மரியாதையாக எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கண்டவாறு எழுதிய தாங்கள் காப்பியை எனக்கு அனுப்பி இருந்தீர்கள். நீங்கள் எனக்கு காப்பி அனுப்பியதன் மூலம் உங்களுக்கு பதில் எழுதும் கடமையை எனக்கு ஏற்படுத்தி விட்டீர்கள். எனவே கீழே உள்ளவாறு பதில் எழுதினேன்.

கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்பவனுக்கு புத்தி எங்கே போனது|| என்று நான் எழுதினால் இதை நான் மரியாதை இல்லாமல் எழுதி விட்டதாகவோ இது என் வார்த்தை என்றோ சொல்ல மாட்டீர்கள். பழமொழி என விளங்கிக் கொள்வீர்கள்.

முனாபிக் பேசினால் பொய்யே பேசுவான் என எழுதினால் மரியாதை இல்லாமல் எழுதி விட்டதாகவோ இது என் வார்த்தை என்றோ சொல் மாட்டீர்கள் ஹதீஸில் உள்ள வார்த்தை என விளங்கிக் கொள்வீர்கள். அது மதிரியான வாசகம்தான் இளையவன் எழுதியது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் என்று எழுதினேன் இதில் நிஜம் பொய் என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது.

அல்லாஹ்வுக்கு அஞ்சி நல்ல முடிவு எடுங்கள்.

நீங்கள் எனக்கு காப்பி அனுப்பி உங்களுக்கு பதில் கூறும் கடமையை எனக்கு ஏற்படுத்திய மாதிரி இன்னொருவரும் எனக்கு காப்பி அனுப்பி உள்ளார். ஒழுக்கங்கெட்ட அவருக்கு த.மு.மு.க. ஸோ காஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதற்கு பதில் அனுப்பிய ஒழுக்கக் கேட்டில் விஞ்சிய அணியைச் சார்ந்த அந்த நபர் எனக்கு காப்பி அனுப்பி பதில் கூறும் கடமையை ஏற்படுத்தி விட்டார். அவருக்கு அனுப்பும் பதிலையும் பார்த்து விட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நல்ல முடிவு எடுங்கள். வஸ்ஸலாம்.
அன்புடன்:
கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி,
தாயக முகவரி: 22ஏ.சமாயினா Nஷக் முஹம்மது மூப்பன் தெரு மேலப்பாளையம். 627005

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.