பி.ஜே. பிரகடனப்படுத்திவிட்ட மகத்தான உண்மை.

கண்ணியத்திற்குரிய முஸ்லிம்களுக்கு கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும். த.மு.மு.க. தலைமையினர் 3 பேர் தவிர அனைவரும் கையெழுத்திட்டுள்ளது போல் செய்தி வெளியிட்டு சமுதாயத்தை ஏமாற்றினார் பி.ஜே. தனக்கு சாதகமான வார்த்தைகளை அமைத்து, அவசர அவசரமாக தான் வெளியிட்ட செய்தி பொய்யானதுதான் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக கையெழுத்து போட மாட்டோம் என்று யாரும் சொல்லவில்லை. யாரும் ஒத்திப் போட சொல்லவில்லை என்று தப்ஸீர் எனும் விரிவுரை வழங்கி சமாளித்து வாத ரீதியாக, தான் வெளியிட்ட பொய்ச் செய்தியை உண்மை படுத்த முயன்றுள்ளார் வாதத்தில் வல்லவரான பி.ஜே.

எல்லாரும் கையெழுத்திடாமல், 3 பேர் தவிர அனைவரும் கையெழுத்திட்டுள்ளது போல் செய்தி வெளியிட்டவர் பி.ஜே.தான் என்ற உண்மையை அவர் மூலமே அல்லாஹ் வெளிப்படுத்தி விட்டான் அல்ஹம்துலில்hஹ். இது அவரது அதிஆதரவாளர்களில் எஞ்சி இருக்கும் சிந்தனையாளர்களை ஒரு கனம் சிந்திக்க வைக்கும்.

மகத்தான பொய்யர் என்று மீண்டும் உறுதிபடுத்தி உள்ளார்

பி.ஜே, தனக்கும் த.மு.மு.க.வுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் முபாஹலாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது இந்த அழைப்பு மூலம், தான் ஒரு மகத்தான பொய்யர் என்று மீண்டும் உறுதிபடுத்தி உள்ளார். பி.ஜே. வகையறாக்கள் மீது நான் வைத்த குற்றச்சாட்டு;க்கள் அத்தனையும் உண்மை என்றும் இதன் மூலம் ஒப்புக் கொண்டுள்ளார். இப்பொழுது பி.ஜே. இருக்கும் அமைப்பின் பெயரை குறிப்பிடாமல் பி.ஜே. வகையறாக்கள் என்று குறிப்பிடுவதற்கு காரணம். இந்த பிரசுரத்தை பிரிண்ட் எடுத்து வெளியிடுவதற்கு முன் அங்கிருந்து வெளியேறி வேறு அமைப்புக்கு ஓடி விட்டால் பிரசுரத்தில் உள்ள இயக்கப் பெயரை திருத்த வேண்டி வரும். எனவே அவர் கண்டு பிடித்துள்ள வார்த்தைப்படி பி.ஜே. வகையறாக்கள் என்று குறிப்பிடுள்ளேன்.

சந்தர்ப்பத்திற்கு தக்கவாறான சால்ஜாப்புகளைக் கூறியவர்

எனக்கும் பி.ஜே. வகையறாக்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் பி.ஜே.ன் சவாலை ஏற்றுக் கொண்டு நான் முபாஹலாவுக்கு அழைத்தபோது பதில் தராமல் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடி ஒழிந்தவர்தான் இந்த பி.ஜே. தான் ஓடி ஒழிந்ததை மறைப்பதற்கு இதில் தாங்கள் ஒரு நிலைப்பாடு வைத்திருப்பதாக சந்தர்ப்பத்திற்கு தக்கவாறான சால்ஜாப்புகளைக் கூறி அவரது ஆதரவாளர்களை தக்க வைத்து மக்களை ஏமாற்றி வந்தார். அவர் இது வரை பொய் சொல்லி சமாளித்து ஏமாற்றி வந்ததற்கு மாற்றமாக அவரே முபாஹலாவுக்கு அழைப்பு விடுத்து விட்டார்.

நூற்றுக் கணக்கான சமுதாய குடும்பங்களின் வாழ்வில் ஒளி பிறக்கும்.

லுஹா நாணயமாவரா? ரிபாஈ நல்லவரா? பி.ஜே. வகையறாக்கள் பொய்யர்களா? அவர்களுக்கு எதிரணியில் உள்ளவர்கள் நியாயவான்களா? என்று முடிவு செய்வதால் சமுதாயத்திற்கு ஏற்படும் நன்மைகளை விட கூடுதல் நன்மைகள் தரக்கூடிய மிக முக்கியமானதுதான் பி.ஜே.ன் சவாலை ஏற்றுக் கொண்டு நான் விடுத்த முபாஹலா அழைப்பு. அதற்கு முடிவு காண்பதன் மூலம் அநியாயமாக சிறையில் கிடக்கும் சமுதாய இளைஞர்களின் வாழ்வில் விடிவு ஏற்படும். நூற்றுக் கணக்கான சமுதாய குடும்பங்களின் வாழ்வில் ஒளி பிறக்கும்.

மானமுள்ளவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டவன்

அதற்குப் பிறகு மதுரை மாநாட்டில் பி.ஜே. நடந்து கொண்ட அந்த ஒழுக்கமான? செயல் பற்றியும் பாக்கர் எம்.ஐ.சுலைமான் மற்றுமுள்ளவர்களைப் பற்றியும் லுஹா கூறியதையும், திருச்சி நிகழ்ச்சி மூலம் பி.ஜே. தன் வகையறாக்களாக அடையாளம் காட்டி உள்ளவர்களில் பணத்திற்காக எதுவும் செய்யும் அயோக்கியன் என்று லுஹாவால் குற்றம்சாட்டப்பட்டவர்; உள்ளது பற்றியும், பணத்திற்காக ஒருத்தன் மனைவியை இன்னொருத்தன் மனைவியாக செட் பண்ணி அந்நிய இருவரை கணவன் மனைவியாக வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கீழ்தரமான தொழில் செய்பவன் என்பதற்காக மானமுள்ளவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டவனை திருச்சி நிகழ்ச்சியில் பி.ஜே. வகையறாவில் சேர்த்துக் கொண்டுள்ளது பற்றியும் முபாஹலா பண்ணுவோம்.

மகத்தான பொய்யர் - மூல காரணமானவர் - வித்தானவர்

ஒவ்வொருவரையும் ஒரே மேடைக்கு வா, ஒப்பந்தம் எழுத வா என்று விரட்டி பிடித்துத் திரியும் பி.ஜே. அவர்விட்ட சவால்படி எம்மை ஒரே மேடையில் சந்திப்பது சம்பந்தமாக 1-12-2002ல் எழுதி உள்ளபடி ஒப்பந்தம் எழுத முன் வராமல் எமது பிரசுரத்தை கண்டு ஓட்டம் பிடிக்கிறாரே இதுவே அவர் மகத்தான பொய்யர் என்பதற்கும்; சமுதாய இளைஞர்கள் சிறையில் தள்ளப்படுவதற்கு மூல காரணமானவர் என்பதற்கும் சமுதாய பெண்கள் சீரழிந்ததற்கும் கோடிக்கணக்கான முஸ்லிம்களுடைய சொத்துக்கள் சூரையாடப்படுவதற்கும் அப்பாவி முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதற்கும் வித்தானவர் என்பதற்கும் மிகப் பெரிய சான்றாகும்.

சுய நலத்திற்காக த.மு.மு.கவுக்கு வந்து பதவி பெற்ற பி.ஜே

இமாம் அலி, ஹைதர் அலி, ராஜா உசேன், பாக்கர் இப்படி கைது படலம் தொடர்ந்ததால் அடுத்து தான்தான் என பயந்து போன பி.ஜே. குணங்குடி ஹனீபாவின் த.மு.மு.கவில் அடைக்கலம் ஆனார். பார்சல் குண்டு வெடிப்பில் தவறுதலாக ரிபாஈ கைது செய்யப்பட்டதால் மூலப்பிதாவான பி.ஜே. தான் கைது செய்யப்படுவதில் இருந்து காத்துக் கொள்ள குணங்குடி ஹனீபாவின் த.மு.மு.கவில் அமைப்பாளர் பதவி பெற்றார். சமுதாயத்திற்காக த.மு.மு.கவை துவக்கியதாக பி.ஜே. கூறுவது பொய். சுய நலத்திற்காகத்தான் த.மு.மு.கவுக்கு பி.ஜே. வந்தார் என்பதையும் ஆதாரத்துடனும் சாட்சிகளுடனும் நிரூபிப்போம். அதையும் வாத ரீதியாக மறுத்தால் அதற்கும் முபாஹலா செய்வோம்.

த.மு.மு.க. நமக்கா அவர்களுக்கா- லுஹா சொன்னது எப்படி?

மார்ச் 21 தஞ்சை பேரணிக்கு முன் த.மு.மு.கவை பி.ஜே. கைப்பற்ற முயற்சித்ததாக உள்ள செய்தி பொய் என்கிறார். 26.01.2004 அன்று தர்பியா என்ற மார்க்க பயிற்சி விளக்கமும் மஸ்ஜிதுர் ரஹ்மான் கமிட்டி பொதுக்குழு கூட்டமும் என்ற பெயரில் அவர்கள் சதித்திட்டத்தை நிறைவேற்றினார்கள். அதற்கு முன்பாகவே லுஹா தன் வகையறாக்களிடம் த.மு.மு.க. நமக்கா அவர்களுக்கா என்று 10 நாளில் தெரிந்து விடும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும் என்று சொல்லித் திரிந்தது எப்படி என்பதுபற்றியும் முபாஹலா பண்ணுவோம்.

பி.ஜே அளித்த ரகசிய வாக்கு மூலம்

எனவே பி.ஜே.ன் சவாலை ஏற்று புதிய சவாலையும் ஏற்கிறேன் என்று 1-12-2002ல் நான் பி.ஜேக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் உள்ள நிபந்தனைப்படி பி.ஜே. வகையறாக்கள் ஒரே மேடைக்கு வரவேண்டும் என்று மீண்டும் அழைக்கிறேன். அதில் 01.05.1997 அன்று திருச்சி அரிஸ்ட்டோ ஓட்டலில் 38 முஸ்லிம் மத குருமார்கள் என்று சொல்லப்படுபவர்கள் மத்தியில் பி.ஜே அளித்த ரகசிய வாக்கு மூலத்தையும் நிரூபிப்பேன். அந்த வாக்கு மூலம் என்ன? சுருக்கத்தைத் தருகிறேன்.

உங்களில் பல பேருக்கு தெரிந்து இருக்காத உண்மைகள்.

"--- சில உண்மை விபரங்களை, உங்களில் பல பேருக்கு தெரிந்து இருக்காத உண்மைகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்..." (இவ்வாறு தொடரும் பி.ஜே. 1992 டிசம்பர் 6 ல் இருந்து நடந்து வரும் சம்பவங்களைக் கூறுகிறார்) ஷஷஇதற்கு ஒரு தீர்வு காணணும் இதற்கு பல வகையிலே முயற்சிகள் பண்ணனும் அப்படிங்க மாதிரி கருத்துகள் இருந்திச்சு... சில காரியஞ் செய்வதற்காக வேண்டி அதுக்காகத்தான் நான் ஜாக் ஷ_ரா விலிருந்து கூட ரிஸைன் பண்ணினேன்-- எனக்கு ஏற்படுகிற சிக்கல் வந்து ஜாக்குங்கிற அமைப்புக்கு வரக்கூடாது. என்ன காரியம்னு இதிலே இருந்தே விளங்கிக்கிடும்...

அது ஒரு ஆபத்தான வேலை

சில காரியங்கள் சமூக பாதுகாப்புக்குள்ள ஏற்பாடுகளையும் இன்னைக்கும் நாளைக்கும் நாம செஞ்சிருக்கிறோம்... என்னது செய்கிறோம்ன்னுட்டு எஸ்.கே.க்கு தெரியாது. ஆனால் அதுக்காகத்தான் விலகுகிறேங்குறது சொல்லிட்டு செஞ்சிருக்கிறோம்... ஏன்னா அது ஒரு ஆபத்தான வேலை நாங்க எடுத்துக் கொண்ட அந்த வேலை இருக்குதே ஆரம்ப கட்டத்துலே ஆபத்தான வேலை. இன்னைக்கு அந்த நிலை விலகிடுச்சு. அன்னைக்கு என்ன மாதிரி வேண்டும்னாலும் கவர்;மெண்ட் செய்யலாம். நான் எடுத்துக் கொண்ட அந்த துறைக்காக வேண்டி. அன்னைக்கு உசுர வெறுத்துதான் இறங்கினோம். இதை வைச்சு அழிக்கலாம்...

இதை வைச்சு சுத்தமா யாரெல்லாம் பாடுபட்டாங்களோ அவ்வளவு பேரையும் புடிச்சி தடாவுலே போடலாம். அந்த மாதிரியான ஒரு இதுதான். ஆனா யாராவது செய்யலேன்னா இதாப் போயிடுங்கறதுக்குத்தான் அன்னைக்கு நாங்க இறங்கினோம்... இப்படி தொடர்கிறது அந்த ரகசிய கூட்ட உரை

குண்டு வெடிப்புகள்.

சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். ஆலுவலக குண்டு வெடிப்பு, நாகூர் பார்சல் குண்டு வெடிப்பு, சிந்தாதிரிப் பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு, பம்பாய் படப் பிரச்சனை மணிரத்னம் வீட்டு குண்டு வெடிப்பு, மதுரை ராஜகோபாலன் கொலை இப்படி தொடராக உள்ள அனைத்து சம்பவங்களுக்குப் பிறகுதான் இந்த வாக்கு மூலத்தை ரகசியமாக பி.ஜே. கொடுத்துள்ளார்

சிறையில் அப்பாவிகளும் அம்புகளும்தான். எய்தவர் பி.ஜே.தான்.

ஆக இப்படி பி.ஜே.வகையறாக்கள் பிழைப்புக்காக தீவிரவாதத்தை தூண்டி விடுவார்கள், தரங்கெட்ட பயிற்சி கொடுப்பார்கள், அதில் ஒருவர் மாட்டிக் கொண்டாலும் வரிசையாக மற்றவர்களையும் காட்டிக் கொடுத்து (இர்பார்மர் வேலை செய்து) இவர்கள் நல்லவர்களாக திறம்பட நடித்து தப்பி விடுவார்கள். ஆக இன்று சிறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் அப்பாவிகளும் அம்புகளும்தான். எய்தவர் பி.ஜே.தான். இதற்குரிய ஆதார கேஸட் பி.ஜே, மேலப்பாளையம் ஷம்சுல்லுஹா, அல் இர்ஷhத் பெண்கள் கல்லூரி முதல்வர் தென்காசி சுலைமான் ஆகியவர்களிடம் உள்ளது. இதை 2001ல் எனது குற்றச் சாட்டுகளுக்குப் பதில் என வெளியிட்ட வீடியோவில் அவர்களே 01.05.1997 தேதிய திருச்சி அரிஸ்ட்டோ ஓட்டல் கேஸட் தங்களிடம் உள்ளதாக கூறி உள்ளனர். எனவே அவர்ளிடமே உள்ள அந்த கேஸட்களைக் கொண்டும் 38 பேர்களை சாட்சியாக வைத்தும் நான் நிரூபிக்கத் தயார். பி.ஜேன் வகையறாக்களை உத்தமர்களாக யோக்கியாகளாக நம்பும் அனைவரையும் எனது இந்த அறைகூவல் உள்ளடக்கும்.

நான் எனது முழு முகவரியை வெளியிட்டிருப்பதுபோல் இது சம்பந்தமாக தொடர்பு கொள்பவர்கள் முழு முகவரியுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
இப்படிக்கு:
கா.அ.முஹம்மது பல்லுல் இலாஹி, த.பெ.எண் 19661,துபை, யு.ஏ.இ.
தாயக முகவரி 22.ஏ. சமாயினா Nஷக் முஹம்மது மூப்பன் தெரு, மேலப்பாளையம். 627005.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.