தவறில்லாத ஒன்று அல் குர்ஆன் மட்டுமே.

சுபுஹான மௌலிதில் தவறில்லை! பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது! என்று சகதுல்லாஹ் என்பவரிடமிருந்து மெயில் வந்துள்ளது. நடைப்பெற்ற விவாதத்தில் பங்கேற்ற த.த.ஜ. அணியின் தலைவரான பி.ஜைனுல் ஆபிதீன், மௌலிது பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தைக்கூட மௌலிதைப்பற்றி எடுத்து வைக்காமல் பயந்து நடுங்கி, ஒடுங்கியிருந்தது ஏன்? த.த.ஜ. அணியின் சார்பாக தம்மோடு விவாதத்தில் பங்கேற்ற அரபி தெரியாதவர்களுக்கு துண்டுச்சீட்டு எழுதிக்கொடுத்து, அவர்களால் பேசமுடியாமல் திணறி, கோபப்படுவதைப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தது ஏன்? மௌலிது பற்றிய விவாதத்தில் பேச முடியாமல் த.த.ஜ. அணியின் தலைவரான பி.ஜைனுல் ஆபிதீன் நாக்குக்கு பூட்டு போட்டவன் யார்? இப்படியெல்லாம் கேள்விகளை கேட்டு அவரது கொள்கையை நியாயப்படுத்த முயன்றுள்ளார்.

தூத்துக்குடியில த.த.ஜவினர் .பெருநாள் தொழுகை நடத்தினார்கள்?

பி.ஜெ.யைப் பொறுத்த வரை அவர் ஒரு பொய்யர் ரகசிய கூலி என்பது உலகறிந்த உண்மை. தூத்துக்குடியில் த.த.ஜ. என்பவர்களுக்கு எந்த அட்ரஸும் கிடையாது. அட்ரஸ் இல்லாத விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் உள்ள அவர்கள் பெருநாள் தொழுகையை காயல்பட்டிணத்தில் தொழுதுள்ளார்கள். தூத்துக்குடியில் சுன்னத் வல் ஜமாஅத்தினர் நடத்திய பெருநாள் தொழுகை போட்டோவை பி.ஜெ. வளவாடிய பத்திரிக்கையில் போட்டுள்ளார்கள் எப்படி? தூத்துக்குடியில் த.த.ஜவினர் .பெருநாள் தொழுகை நடத்தினார்கள் என்று. சு.வ.ஜ.வினரும் இதை கண்டு கொள்ளவில்லை. காரணம் வெளியில் எதிர்ப்பு வேஷம் அந்தரங்கத்தில் ரகசிய கூலிக்காக உறவு.

ரகசிய கூலி பதில் சொல்லவில்லை என்பதனால் மவ்லிது ஓதுவது மார்க்கமாக ஆகி விடாது.

இது மாதிரிதான் சேக்அப்துல்லா ஜமாலியிடம் பி.ஜெ. ரகசிய கூலி வாங்கி இருப்பார். அதனால்தான் வாங்கிய ரகசிய காசுக்காக வாய் மூடி இருந்திருப்பார். எங்களிடம் ரகசியமாக சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்த வேலைக்காரர்தான் பி.ஜெ. http://mdfazlulilahi.blogspot.com/1990/01/pj.html எனவே ரகசிய கூலி பி.ஜெ. பதில் சொல்லவில்லை என்பதைப் பற்றி ஆச்சரியப்படவில்லை. ரகசிய கூலி பதில் சொல்லவில்லை என்பதனால் மவ்லிது ஓதுவது மார்க்கமாக ஆகி விடாது.

சுபுஹான மௌலிதில் ஏராளமான தவறு இருக்கிறது.

தவறில்லாத ஒன்று அல் குர்ஆன் மட்டுமே. ஏனென்றால் அதுதான் அல்லாஹ்வால் இறக்கி அருளப்பட்டது. மவ்லிதுகள் யாவும் மனிதர்களால் புனையப்பட்டவையே. மனிதர்கள் தவறுக்கு அப்பால் பட்டவர்கள் அல்ல. எனவே மனிதர்களால் புனையப்பட்டவைகளில் நிச்சயமாக தவறு இருக்கும். தவறுக்கு அப்பால் பட்டவன் அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ்வின் சொல்லான குர்ஆனை ஓதினால் மட்டுமே ஒரு எழுத்துக்கு 10 வீதம் நன்மைகள் கிடைக்கும். இதற்கு இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களும் உத்தரவாதம் அளித்துள்ளார்கள். மனிதனால் எழுதப்பட்ட சுபுஹான மவ்லிது உட்பட எல்லா மவ்லிதுகளிலும் ஏராளமான தவறு இருக்கின்றன. இதற்கு முதல் ஆதாரத்தை தருகிறோம் அஸ்ஸலாமு அலைக்கும்

விவாதத்தில் பேசாமல் மௌனம் சாதித்ததின் மூலம் 'சுபுஹான மௌலிதில் தவறில்லை' என்று த.த.ஜ. அணியின் தலைவரான பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதற்கான அர்த்தமாகத்தான் கொள்ள முடியும் என்று கூறியரே அஸ்ஸலாமு அலைக்கும்,

Shahadullah2006 அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்,

Shahadullah2006 Basirudeen அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்,

shahadullah2006@gmail.com என்ற ஐ.டி. உடையவரே அஸ்ஸலாமு அலைக்கும்,

துபையில் பணி புரிபவரே அஸ்ஸலாமு அலைக்கும்,

யு.ஏ.இ.யில் இருப்பவரே அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்தியாவைச் சார்ந்தவரே அஸ்ஸலாமு அலைக்கும்,

மதராஸியே அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாட்டுக்காரரே அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் எனத் தெரியாதவரே அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாட்டில் எந்த ஊர் எனத் தெரியாதவரே அஸ்ஸலாமு அலைக்கும்,

அட்ரஸ் இல்லாதவரே அஸ்ஸலாமு அலைக்கும்,

சகதுல்லாஹ் என்பவரே அஸ்ஸலாமு அலைக்கும்.

இவ்வாறு யாராவது சகதுல்லாஹ்வை பார்த்து திரும்பத் திரும்ப ஸலாம் சொன்னால் சகதுல்லாஹ் என்பவர் என்ன செய்வார். இப்படி ஒரே நேரத்தில் திரும்பத் திரும்ப ஸலாம் சொன்னவரைப் பார்த்து பதில் ஸலாம் சொல்லிக் கொண்டே இருப்பாரா? பைத்தியமா? என கேட்பாரா? இங்கே 13 ஸலாம் மட்டுமே உள்ளது. இதைப் படிப்பவர்களுக்கு சிரிப்பு வரலாம். நீங்கள் யாரிடமாவது போய் இப்படி திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லிப் பாருங்கள். உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், உடன் பிறப்புக்கள் தாய், தந்தையர் என்ன முடிவுக்கு வருவார்கள். உங்களது மேலதிகாரிகளிடம் திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லிப் பாருங்கள். அவர் இதை கண்ணியம் என கருதுவாரா? உங்கள் அபிமான ஹஜ்ரத்துக்கு திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லிப் பாருங்கள் இதை அவர் மரியாதை என்பாரா அவ மரியாதை என்பாரா? இந்த ஸலாம் பைத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு 33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு. இன்னுமுள்ள தவறுகளை அறிய கீழ் காணும் சைட்களை பாருங்கள்.

இஸ்லாத்தில் நுழைந்து விட்ட கட்டுக்கதைகள். http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=301&Itemid=52

http://masdooka.blogspot.com/2006/09/2_19.html


500 டாலர் நகைச்சுவை http://www.thinnai.com/?module=displaystory&story_id=80607144&format=html

ஈமானைப் பாழாக்கும் செயல்கள்!!! http://www.readislam.net/maulid2.htm

மீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை http://www.islamkalvi.com/general/meelad2.htm

இஸ்லாத்தின் பெயரால் போலிச்சடங்குகள் http://albaqavi.com/home/?p=5

மீலாது விழா கொண்டாடலாமா? http://www.islamkalvi.com/general/islam_and_meelad_celebration.htm

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 4 http://wahhabipage.blogspot.com/2006_07_01_archive.html

சிறப்புச் செய்திகள்-5 அல்லது பூனைக்கு மீன் http://wahhabipage.blogspot.com/2007_01_01_archive.html

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் இஸ்லாத்திற்கு முரணான போக்குகள்.
http://mdfazlulilahi.blogspot.com/2006/10/blog-post_116202074710648002.html

இன்பத் தமிழில் இஸ்லாமியத் தொண்டு!
http://mdfazlulilahi.blogspot.com/2006/10/blog-post_116041347059940676.html

ஓதுவோம் வாருங்கள் (மவுலிது பற்றிய நோட்டீஸ்) 26.1.91.
http://mdfazlulilahi.blogspot.com/2006/11/1991.html

Comments

Unknown said…
எதையும் அரைகுறையாக, தமக்கு சாதகத்தை மட்டும் பதிவு செய்வது இலாஹிக்கு புதிதல்ல. இத்தனை ஸலாம் சொன்ன இலாஹிக்கு அப்படி என்னத்தான் சகதுல்லாஹ் மெயில் அனுப்பினார். அதை அப்படியே தம்முடைய blog கில் பதிவு செய்தால்தான் புரிய முடியும். வெளியிடவில்லையென்றால் எதையும் எதிர்க்க வேண்டும் என்ற கொள்கையை இலாஹி தொடர்வதாகத்தான் அர்த்தமாகும்.
விடாது கருப்பு பிளாக்கரிலும் சகதுல்லாஹ் இதைது பதிந்துள்ளார். அதில் Mohamed Sadiq அவர்களும் தனது கருத்தை பதிந்துள்ளார். எனவே நமது விமர்சனத்துக்கு சகதுல்லாஹ் அவர்களோMohamed Sadiq said அவர்களோ பதில் தரட்டும்.
Unknown said…
வியாழன், டிசம்பர் 13, 2007
வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
வியாழன், அக்டோபர் 25, 2007 அன்று விடாது கருப்பு இணையத்தில் சுபுஹான மௌலிதில் தவறில்லை! பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான (ததஜ) அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது!

களியக்காவிளை விவாதத்தின்போது! என்ற ஒரு கட்டுரையை பதிப்பித்தேன். அட அதற்கு பல சகோதரர்கள் கருத்தும் பதிவு செய்திருக்கிறார்கள். சகோதரர் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி என்பவருக்கும் மெயில் அனுப்பியிருந்தேன். அதற்கு கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி எனக்கு பல ஸலாம்கள் சொல்லி பதில் மெயில் அனுப்பி, அதை அவருடைய பிளாக்கிலும் பதிவு செய்திருக்கிறார். என்னுடைய கட்டூரையை பதிவு செய்தால் உண்மை விளங்கிவிடும் என்று அஞ்சி அவருடைய பதிலை மட்டும் பதிவு செய்திருக்கிறார். ஆனால் நான் திரும்ப மெயில் அனுப்பவில்லை.

பஸ்லுல் இலாஹி எனக்கு அனுப்பிய மெயிலிலிருந்து சில வரிகள்:-


(ரகசிய கூலி பதில் சொல்லவில்லை என்பதனால் மவ்லிது ஓதுவது மார்க்கமாக ஆகி விடாது.


இது மாதிரிதான் சேக்அப்துல்லா ஜமாலியிடம் பி.ஜெ. ரகசிய கூலி வாங்கி இருப்பார். அதனால்தான் வாங்கிய ரகசிய காசுக்காக வாய் மூடி இருந்திருப்பார். எங்களிடம் ரகசியமாக சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்த வேலைக்காரர்தான் பி.ஜெ. எனவே ரகசிய கூலி பி.ஜெ. பதில் சொல்லவில்லை என்பதைப் பற்றி ஆச்சரியப்படவில்லை. ரகசிய கூலி பதில் சொல்லவில்லை என்பதனால் மவ்லிது ஓதுவது மார்க்கமாக ஆகி விடாது.)

இதுபோல அனுப்பியிருந்தார்.


அவர்கள் எனக்கு சொன்ன அனைத்து ஸலாம்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டேன்.

33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று ஃபள்லுல் இலாகி சொல்ல வருகிறார். புரிந்துதான் சொன்னாரா என்பது எனக்கு தெரியவில்லை.

ஆனால்,

யார் ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வார்களோ அவர்கள் மீது 10 முறை அல்லாஹ் ஸலவாத்து சொல்வதாக வருகிறது.

அப்படியானால், அஸ்தஃபிருல்லாஹ், அல்லாஹ் பைத்தியக்காரனா?

இந்த ஸலாம் பைத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு 33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று ஃபள்லுல் இலாகி சொல்ல வருகிறாரே?

அப்படியானால், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவை சொல்கிறோம் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என்று 1 தடவை சொன்னால் போதாது! அதில் என்ன சந்தேகம் நமக்கு வந்தது! திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும். அது போல அல்லாஹூ அக்பர், சுபுஹானல்லாஹ் இன்னும் இது போல உள்ள வாசகங்களை திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும்?

இதையெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்றா சொல்ல முடியும்?

லாயிலாஹா இல்லல்லாஹூ என்று சொன்னால் மட்டும் போதாது, (இதை சொல்லித்தந்தவரையும் ஏற்கிறேன் என்று) முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்பதையும் சேர்த்து சொல்வதுதான் கலிமத்து தவ்ஹீதாகும்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனை தடவை ஸலாம் சொல்கிறோமோ அவைகளெல்லாம் நமக்கு 10 மடங்காக அல்லாஹ்வால் சொல்லப்படுகிறது என்பதை அறிய வேண்டும். இப்போது நம்முடைய செய்தி இதுவல்ல.


இந்த மெயிலில் வெளிச்சத்திற்கு வந்த உண்மைத்தான் இப்போது ஆராய வேண்டியவை.


எங்களிடம் ரகசியமாக சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்த வேலைக்காரர்தான் பி.ஜெ. அட எனவே ரகசிய கூலி பி.ஜெ. பதில் சொல்லவில்லை என்பதைப் பற்றி ஆச்சரியப்படவில்லை என்று ஃபள்லுல் இலாகி சொல்கிறார்.


ஜாக் ஜமாஅத்தும் தவ்ஹீது ஜமாஅத்தும் பித்தலாட்டம், நயவஞ்சகம், போக்கிரித்தனம் மற்றும் பொருக்கித்தனம் மிகுந்த ஜமாஅத் என்பதை அவருடைய மெயிலைப்பார்த்த பின்புதான் தெரிந்துக்கொண்டேன். ஜாக் ஜமாஅத்தில் பீ.ஜே இருக்கும்போதுதான் சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சம்பளம் பேசுகிறார்கள், இஸ்லாமியப்பணி செய்வதற்கு காசு வாங்குகிறார்கள் என்று கூட்டாக பிரச்சாரம் செய்த இந்த கூட்டம், அதைக்கொண்டு யோக்கியவான்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இந்த கூட்டத்தின் மோசடித்தனம் என்ன தெரியுமா? சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சம்பளம் பேசுகிறார்கள் என்று வீர வசனம் பேசிய இந்த கபோதிகளின் அயோக்கியத்தனம் என்ன தெரியுமா? இஸ்லாமியப்பணி செய்வதற்கு காசு வாங்குகிறார்கள் என்று கூட்டாக பிரச்சாரம் செய்த இந்த கூட்டத்தின் பின்பக்க செயல், பொம்பலைத்தனம் என்னவென்று தெரியுமா?


ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தும் சம்பளம் பேசி இஸ்லாமியப்பணி செய்வதுதான். பைசா இல்லையென்றால் இஸ்லாமியப்பணி கிடையாது. எதையும் நேரடியாக பெறமாட்டார்கள். பின்பக்கமாகத்தான். மார்க்கப்பணி செய்வதற்கு காசு வாங்கலாமா? கூலி பேசலாமா? என்று ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தினர்; மேடைகளிலே வீரத்தோடு பயான் செய்வார்கள், மற்றவர்கள் மீது குறைகளை அள்ளிவீசுவார்கள் ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் அனைவரும் அடிமைப்போல வாய் பிளந்து கேட்பார்கள். இதையெல்லாம் பேச இவர்களுக்கு ஏது பணம், இவர்களின் குடும்பம் எப்படி நடக்கிறது சிந்திக்க மாட்டார்கள். மற்றவர்கள் செய்தால் தவறு ஏன் ஷிர்க் என்றுகூட சொல்வார்கள். பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும் இல்லையென்றால் மிருகத்திற்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

சரி விஷயத்திற்கு வருவோம்.

ஜாக் ஜமாஅத்தில் அந்நஜாத் பத்திரிக்கையில் பணி புரிய பி.ஜைனுல் ஆபிதீன் சம்பளம் பேசி பணிபுரிந்தார் என்று ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த பஸ்லுல் இலாஹி சொல்கிறார். என்னங்கடா இது?... ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தும் கூலி பெற்று இஸ்லாமியப்பணி செய்வது மார்க்கமா? மற்றவர்கள் செய்வதுதான் தவறா? திருடாதே என்று சொல்லும் தகுதி திருடனுக்கு கிடையாது. இது தவறு என்று ஜாக்கில் பி.ஜைனுல் ஆபிதீன் இருக்கும்போது பஸ்லுல் இலாஹிக்கு தெரியவில்லையா? இல்லை இஸ்லாமியப்பணி செய்வதற்கு கூலி கொடுக்கும் உயர்ந்த நிலையில் இருப்பதாக நினைத்துக்கொண்டாரா? சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் பற்றி பேச, கூலி பெற்று இஸ்லாமியப்பணி செய்த ததஜ வைச்சேர்ந்த பி.ஜைனுல் ஆபிதீனுக்கும், கூலி கொடுத்த ஜாக் ஜமாஅத்திற்கும் என்ன தகுதி இருக்கிறது? மற்றவர்களை இப்படி பேசி பிழைப்பு நடத்துவதைவிட ததஜ அறிஞர்களும் ஜாக் ஜமாஅத் அறிஞர்களும் திருவோட்டை கையில் எடுத்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தியிருந்தால் அது எவ்வளவோ மேலானதாக இருந்திருக்கும். இஸ்லாமியப்பணிக்கு கூலி கொடுத்தது தவறா? இல்லை கூலியைப்பெற்றது தவறா? ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் இதற்கு பதில் சொல்லட்டும். இல்லையென்றால் அறியாமையில் மூழ்கியிருந்த முட்டாள்களின் வாரிசு என்று சொல்லிக்கொள்ளட்டும். இனிமேலாவது சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் பற்றி பேசும் முன்பு ததஜ அறிஞர்கள் பற்றியும் ஜாக் ஜமாஅத் அறிஞர்கள்பற்றியும் அவர்களின் யோக்கியதைப்பற்றியும் தறுதலைவாதிகள் அறிய முற்பட வேண்டும். சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் ததஜ அறிஞர்களும் ஜாக் ஜமாஅத் அறிஞர்களும் உண்மை முஸ்லிமாக இருப்பார்களானால் மன்னிப்பு கேட்பார்கள்.

வஸ்ஸலாம்

சகதுல்லாஹ்,
துபை.

Posted by விடாதுகருப்பு at at 3 comments Links to this post

Labels: இஸ்லாம் DiggIt! Del.icio.us

Mohamed Sadiq

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.