வாரியம் வாங்கியதால் வீரியம் இழந்தார்களா?

சமூக விரோதிகளின் சமுதாய விரோதச் செயல்களால் தென்காசியில் அடிக்கடி மனித நேயம் பாதிப்புகளுக்குள்ளாகிறது. குறிப்பாக முஸ்லிம்கள் ஒவ்வொரு முறையும் பாதிப்புகளுக்குள்ளாகி வருகிறார்கள். இக்கட்டான இந்த நேரங்களில் தென்காசி என்ற இந்த ஊரை நோக்கி தலை வைத்து கூட படுக்க பயந்த டவுசர் கட்சியினர் பத்திரிக்கையில் மட்டும் பேட்டி கொடுத்து விளம்பரம் தேடிக் கொண்டிருந்ததை அறிவீர்கள்.

அமைதி திரும்பிய பின் தென்காசி ஊருக்குள் நுழைந்த டவுசர் கட்சியினர் வாரியம் வாங்கியதால் வீரியம் இழந்தார்கள் என வசனம் பேசி சீன் போட்டவார்கள். முழுமையாக அமைதி ஏற்பட்டு ஒரு மாதம் ஆன பின் சுற்றுலாவுக்காக தென்காசி வழியாக குற்றாலம் சென்று குளித்து விட்டு வந்தவர்கள் இருக்கிறார்கள். குளித்து விட்டு தென்காசி வழியாக வந்தவர்கள் தாங்கள் மட்டுமே தென்காசி சென்று வந்ததாக டி.வி.க்களில் படம் காட்டியதை பார்த்து இருக்கிறீர்கள்.

பச்சை துரோகிகளான சமுதாய அமைப்பினர்(?) தென்காசியில் உள்ள பழைமை வாய்ந்த பள்ளிவாசலை புதுப்பித்து கட்ட விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் பண்டார பரதேசிகளை இப்தார் நிகழ்ச்சிக்கு அழைத்து கவுரவித்து பத்திரிக்கைச் செய்தியாக்கி பரவசமடைந்ததை ரமாழானில் கண்டீர்கள்.

முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட காலமெல்லாம் காவல் துறைக்கு கைக் கூலியாக இருந்து வருபவர்தான் தென்காசி துராப்சா என்பவர். 1994 இல் அவர்களுக்குள் உள்ள விவகாரத்தில் அவர்களே தேரை எரித்தார்கள். அப்பொழுதும் முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட கைக் கூலியாக இருந்தவர் இந்த தென்காசி துராப்சாதான். அவரை மாவாட்ட தலைவராகக் கொண்ட முஸ்லிம் லீக் 18,19,20,21 ஆகிய தேதிகளில் நெல்லைப் பகுதிகளில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தி வருகிறது.

மேஜிக் நிபுணரான தென்காசி சுலைமான் என்பவரது மகனும் மேஜிக் நிபுணருமான பஸுலுத்தீன் என்பவர் உட்பட பல முஸ்லிம்கள் மீது தென்காசி போலீஸ் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளது. இவர்களது விடுதலைக்காக போராட வேண்டிய நேரத்தில் தென்காசிக்கு அருகில் உள்ள புளியங்குடி, கடையநல்லூர், மேலப்பாளையம், காயல்பட்டிணம் என முஸ்லிம் ஊர்களில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தி வருகிறார் இந்து முன்னணி கூட்டத்தில் கலந்த கொண்டு வந்தே மாதரம் பாடிய காதர் மைதீன்.

ஒவ்வொரு முறையும் தென்காசியில் முஸ்லிம்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகும்பொழுது இக்கட்டான அந்த நேரங்களில் தங்கள் உயிர்களை பணயம் வைத்து தென்காசிகளில் களப் பணி ஆற்றி சமுதாய பாதுகாப்புக்கும் அமைதிக்கும் வழி கண்டவர்கள் த.மு.மு.க.வினர். அந்த த.மு.மு.க.வினர் 19.10.2007 வெள்ளி மாலை அஸர் தொழுகைக்குப் பின் திருநெல்வேலி வாகையடி சந்திப்பு தெற்கு ரத வீதியில் தென்காசி காவல் துறையை கண்டித்து த.மு.மு.க. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்ட கோஷங்கள்.







Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.