பள்ளிவாசலில் ஒலி பெருக்கியை உபயோகிக்கலாமா?

மக்களால் ஆலிம்கள் என நம்பப்பட்டவர்கள் நிலைப்பாடு எப்படி இருந்தது.

தலைப்பைப் பார்த்ததும். பலருக்கு தலை சுற்றலாம். இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு கேள்வியா என்று ஆச்சரியப்படலாம். இது இன்றைய கேள்வி அல்ல. புதிதாக ஒலி பெருக்கிகள் அறிமுகமான நேரத்தில் ஆலீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த கேள்வி இது. 

அதை ஏன் இப்பொழுது நினைவுக்கு கொண்டு வருகிறோம் என்பதை இந்த ஆக்கத்தின் இறுதியில் புரிவீர்கள். அறிவியல் முன்னேற்றத்தால் கண்டு பிடிக்கப்பட்ட ஒவ்வொரு நவீன கண்டு பிடிப்புகளும் மக்கள் பயனுக்கு வரும்போது மக்களால் ஆலிம்கள் என நம்பப்பட்டவர்கள் நிலைப்பாடு எப்படி இருந்தது என்பதை ஓரளவுக்கு தொகுத்து தருவதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.

அறிவுள்ள வீரமுள்ள பள்ளி நிர்வாகிகள்தான்.

புதிதாக ஒலி பெருக்கிகள் அறிமுகமான நேரத்தில் மக்களால் ஆலிம்கள் என நம்பப்பட்ட பி.ஜெ. போன்று மார்க்க அறிஞர்கள் எனப்பட்டோர் இது ஷய்த்தானின் கருவி. அதனால் நாங்கள் மைக்கில் பேச மாட்டோம். அல்லாஹ்வுடைய பள்ளிகளில் ஷய்த்தானின் கருவிகளை நுழைய விட மாட்டோம் என்றார்கள். பி.ஜெ. போன்ற ஆலிம்களின் எதிர்ப்புகளை மீறித்தான் அன்று ஒரு சில பள்ளிகளில் இருந்த அறிவுள்ள வீரமுள்ள பள்ளி நிர்வாகிகள்தான் துணிச்சலுடன் ஒரு சில பள்ளிவாசல்களில் மைக் செட்களை வைத்தார்கள்.

அன்று பள்ளிவாசல்களில் மைக் செட்கள் வைத்தபோது எப்படி இருந்தார்கள்.

ஆலீம்களா? பி.ஜெ. போன்று மார்க்க அறிஞர்கள் எனப்பட்டவர்களா? இப்படிச் சொன்னார்கள். பள்ளிவாசல்களில் மைக் செட்கள் வைப்பதை எதிர்த்தார்கள் என்று இன்று நீங்கள் ஆச்சரியப்படலாம். எனவே மக்களால் ஆலிம்கள் என நம்பப்பட்ட பி.ஜெ. போன்று மார்க்க அறிஞர்கள் எனப்பட்டோர் அன்று பள்ளிவாசல்களில் மைக் செட்கள் வைத்தபோது எப்படி இருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக குர்ஆனின் குரல் என்ற பத்திரிக்கையில் ஒலி பெருக்கிகள் சம்பந்தமாக வந்த கேள்வி பதிலை உங்கள் முன் வைக்கிறோம். ஜே.பி.ஜி. பைலாகவும் இணைத்திருக்கிறோம்.

கேள்வி: நம் நாட்டில் உள்ள மஸ்ஜிதுகளில் பாங்கு, தொழுகை, குத்பா முதலியவைகளுக்கு ஒலி பெருக்கி வைத்திருக்கிறார்களே இது ஆகுமா? இ.எஸ். அப்துல் அஜீஸ். திண்டுக்கல்.

பதில்: மஸ்ஜிதுகளில் நடைnறும் குர்ஆன் தர்ஜுமா, ஹதீது தர்ஜுமா, திஃலீம், திக்ரு மஜ்லிஸ், உபந்நியாசம் போன்றவைகளில் ஒலிபெருக்கியை உபயோகிப்பது ஆகும். பாங்கு, இகாமத், ஜும்ஆ, குத்பா, தொழுகை போன்றவைகளில் ஜனத்திரள் அதிகம் இருப்பினும் ஒலிபெருக்கியை உபயோகிப்பது 'ஜாயிஜ்' ஆக மாட்டாது.

படிப்படியாக இறங்கி வந்தார்கள்.

இதுதான் குர்ஆனின் குரல் பத்திரிக்கையில் வந்த மார்க்க தீர்ப்பு. முதலில் மைக் செட்டே வைக்கக் கூடாது என்றார்கள். பொது மக்களெல்லாம் இது பயனுள்ள கருவிதானே என பயன்படுத்த ஆரம்பித்த பின் படிப்படியாக இறங்கி வந்தார்கள். மைக்கில் குர்ஆனை (அரபியில்) படிக்கக் கூடாது. குர்ஆன் தர்ஜுமாவை தமிழில் படிக்கலாம் ஹதீஸ்களை அரபியில் சொல்லக் கூடாது. ஹதீஸ்களை தமிழில் படிக்கலாம் என்று படிப்படியாக இறங்கி வந்தார்கள்.

தமிழ் காபிர்களின் மொழி ஆயிற்றே எனவே ஹராம் என்றார்கள்.

மைக்கில் குர்ஆன் தர்ஜுமாவை தமிழில் படிக்கலாம் என்று பி.ஜெ. போன்று மார்க்க அறிஞர்கள் எனப்பட்டோர் பத்வா - தீர்ப்பு வழங்கிய கால கட்டத்தில்தான் ஆ.கா.அ. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் திரு குர்ஆனை தமிழில் மொழி பெயர்ப்பு செய்தார்கள். அதற்கும் மக்களால் ஆலிம்கள் என நம்பப்பட்ட அந்த மார்க்க அறிஞர்கள் எனப்பட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். குர்ஆன் தமிழ் மொழியிலா? தமிழ் காபிர்களின் மொழி ஆயிற்றே எனவே ஹராம் என்றார்கள்.

குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை பொது மக்கள் ஏற்றார்கள்.

தமிழ் மொழியில்தானே அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் பயான் -பிரசங்கங்கள் செய்கிறீர்கள். தர்மம் செய்யுமாறு ஜகாத் கொடுக்குமாறு அல்லாஹ் குர்ஆனில் கூறி இருக்கிறான் என்று தமிழில்தானே சொல்கிறீர்கள். வாயால் சொல்வதை எழுத்தால் எழுதினால் எப்படி ஹராமாகும். என்று பொது மக்கள் கேட்டார்கள். குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை பொது மக்கள் ஏற்றார்கள். பொது மக்கள் ஏற்ற பின் எதிர்த்த பி.ஜெ. போன்ற அறிஞர்களெல்லாம் தர்ஜுமதுல் குர்ஆன் விற்பனையாளர்களாக - வியாபாரிகளாக ஆகி விட்டார்கள்.

அதனைக் காட்டி நன்கொடைகள் பெற்றும் வருகிறார்கள்.

கடிகாரம் கண்டு பிடிக்கப்பட்ட பின் கடிகார நேரத்தைப் பார்த்து பாங்கு சொல்வது ஹராம். பள்ளிவாசல்கள் தோறும் குத்தி வைக்கப்பட்டிருக்கும் நிழல் காட்டும் கம்பிகளின் நிழல் சாயல்களை பார்த்தே பாங்கு சொல்ல வேண்டும். இப்படி பத்வா வழங்கியவர்களும் மக்களால் ஆலிம்கள் என நம்பப்பட்ட மார்க்க அறிஞர்கள் எனப்பட்டவர்கள்தான். 

பொது மக்களெல்லாம் கடிகார நேரத்தை பயன்படுத்த துவங்கியதும் ஒத்து வந்த ஆலீம்கள் என்ன செய்தார்கள். வித விதமான, வித்தியாசமான, விலை உயர்ந்த கைக் கடிகாரங்களை தங்கள் கையில் கட்டிக் கொண்டார்கள். இன்னும் ஒரு நிமிடம் இருக்கு இரண்டு நிமிடம் இருக்கு என்று பள்ளிகளிலே கைகளை ஆட்டிக் காட்டினார்கள். உலமா சபைகள் சார்பில் தொழுகை நேரம் ஸஹர், இப்தார் நேரம் என காலண்டர்களையே வெளியிட்டார்கள். இப்பொழுதும் வெளியிட்டு விற்பனை செய்து வருகிறார்கள். அதனைக் காட்டி நன்கொடைகள் பெற்றும் வருகிறார்கள்.

அது ஷய்த்தானின் குரல்தான் எனவே ஹராம் என்றார்கள்.

டெலிபோன்கள் செல்போன்களாக இமாம்களின் முன்னால் மிஃராபுகளில் மின்னுவதை சைலன்ஸ் செய்ய மறந்து விட்டால் மிஃராபுகளில் சிணுங்குவதைக் கூட இன்று பார்க்கிறோம். முதன் முதலாக டெலிபோன்கள் அறிமுகமானபொழுதும் ஹராம் என பத்வா வழங்கியவர்களும் மக்களால் ஆலிம்கள் என நம்பப்பட்ட பி.ஜெ. போன்ற மார்க்க அறிஞர்கள் எனப்பட்டவர்கள்தான். ஒரு முனையில் பேசுவது இன்னொரு முனையில் கேட்கிறதா? அப்படியானால் அது ஷய்த்தானின் வேலைதான், அது ஷய்த்தானின் குரல்தான் எனவே ஹராம் என்றார்கள்.

முஸ்லிம் சமுதாயம் பின் தங்கி இருந்திருக்கும்.

அப்பொழுது சவூதி மன்னர் பைசல் ஒரு தீர்ப்பு வழங்கினார். ஒரு முனையில் ஒருவர் குர்ஆன் ஓதட்டும். மறு முனையில் கேட்டால் அது ஷய்த்தானின் குரல் அல்ல. ஏனெனில் ஷய்த்தான் குர்ஆன் ஓத மாட்டான் என்றார். 

இது மார்க்க அடிப்படையிலான தீர்ப்பு அல்ல. பி.ஜெ. போன்ற ஞான சூன்யங்களின் வாயை அடைக்க அறிவுப்பூர்வமாக சொன்ன தீர்ப்புதான் அது. இல்லாவிட்டால் டெலிபோன்கள் பேக்ஸ்களாக இன்டர் நெட் உலகில் ஈமெயில்களாக தகவல் தொடர்புகள் சுருங்கி விட்ட காலத்திலும் கடிதங்களை மட்டும் நம்பி தபால் ஆபீஸ்களில் மட்டுமே தவம் கிடக்க வேண்டிய நிலையில் முஸ்லிம் சமுதாயம் பின் தங்கி இருந்திருக்கும்.

செல்போன் வியாபாரிகளாக ஆகி இருக்கிறார்கள்.

டெலிபோன்கள், செல்போன்கள், பேக்ஸ்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சியாக ஆகி விட்ட கம்யூட்டர்கள் என அனைத்தையும் மக்கள் ஒட்டு மொத்தமாக ஏற்று பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். பொது மக்கள் ஒட்டு மொத்தமாக ஏற்கும் வரை எதிர்த்த பி.ஜெ. போன்ற அறிஞர்களெல்லாம் அனைத்தின் விற்பனையாளர்களாக வியாபாரிகளாக ஆகி விட்டார்கள். தவ்ஹீது ஜமாஅத் பள்ளி பேஷ் இமாம்களெல்லாம் செகன்டு ஹேண்டு செல்போன் வியாபாரிகளாக ஆகி இருக்கிறார்கள்.

ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல மாட்டார்கள்.

ரேடியோ, ஆடியோ, வீடியோ, டி.வி.க்கள் வந்தபொழுதும் மார்க்கத்தின் பெயரால் எதிர்த்தார்கள். ரேடியோ, ஆடியோவை விட டி.வி. வீடியோவை வீரியத்துடன் நீண்ட காலம் எதிர்த்தார்கள். டி.வி.யில் உருவப்படம் வருகிறது எனவே வீட்டில் டி.வி. வைப்பது ஹராம் என்றார்கள். இவர்கள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து தப்லீக் ஜமாஅத்தினர் இதுவரை விடுபடவே இல்லை. 

எவ்வளவு பெரிய இஜ்திமாவாக இருந்தாலும் தப்லீக் ஜமாஅத்தினர் வீடியோ எடுப்பதே இல்லை. இன்றும் வட நாட்டில் உள்ள பல தப்லீக்வாதிகள் ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல மாட்டார்கள். தொழுகையும் நடத்த மாட்டார்கள்.

இன்று வீடியோ கேமராக்கள் இல்லை என்றால் பேச்சே வருவதில்லை.

ஒவ்வொரு நவீன கண்டு பிடிப்புகள் வரும்பொழுதும் அதனை ஹராம் என்று கூறுவதும். பிறகு அதன் விற்பனையாளர்களாக ஆவதும்தான் ஆலிம்கள் வழக்கம் என்று அனுபவ ரீதியாக உணர்ந்த பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக டி.வி.க்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். 

மக்கள் ஒட்டு மொத்தமாக டி.வி.க்களை பயன்படுத்த ஆரம்பித்தும் இன்று டி.வி.க்கள் தோறும் ஆலிம்கள் ஆதிக்கம்தான் உள்ளது. போட்டிக் போட்டுக் கொண்டு டி.வி.யில் தோன்றுபவர்கள், நிகழ்ச்சி நடத்துபவர்கள் யார் என்று பார்த்தால் ஆலீம்களாகத்தான் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் வீடியோ கேமராக்களை பார்த்ததும் கழுத்தில் சுலுக்கு விழும் வண்ணம் தலையை திருப்பிய ஆலீம்களுக்கு இன்று வீடியோ கேமராக்கள் இல்லை என்றால் பேச்சே வருவதில்லை.

பத்திரிக்கையில் உருவப்படம் வெளியிடுவது ஹராம்

நாகர்கோயில் ஜாமிஅதுல் பிர்தவ்ஸிய்யா அரபி கல்லூரியில் மாணவர்களுக்கு கம்யூட்டர் டைப் ரைட்டிங் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதை அறிவிக்க மாணவர்கள் கம்யூட்டர் டைப் ரைட்டிங் கற்பது போன்ற விளம்பர போட்டோவை அல் ஜன்னத் பத்திரிக்கையில் ஜாக் நிர்வாகிகள் வெளியிட்டார்கள். 

அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது சரியா என்று கேட்டும் சிலரிடமிருந்து கடிதம் வந்தது. அப்பொழுது அல் ஜன்னத்தில் ஆசிரியராக வேலை செய்தவர் பி.ஜெ. அதற்கு அவர் பத்திரிக்கையில் உருவப்படம் வெளியிடுவது ஹராம். அது தனது கவனத்திற்கு வராமல் வந்து விட்டது என்று பத்திரிக்கையிலும் மறுப்பு வெளியிட்டார். 38 மவுலவிகளிடம் கூறிய ரகசிய வாக்கு மூலத்திலும் பத்திரிக்கையில் உருவப்படம் வெளியிடுவது ஹராம் என்று பி.ஜெ. பத்வா வழங்கினார்.

உருவப்படம் பொறிப்பதையும் தவிர்த்தே ஆகவேண்டும்.

"யாரேனும் உருவப்படங்களை வரைந்தால் அதற்கு அவனால் உயிரளிக்க முடியாது என்றிருந்தும் உயிரளிக்கும்வரை அவனை அல்லாஹ் வேதனை செய்வான்" (அதாவது வேதனை செய்து கொண்டே இருப்பான்) என்பது நபிமொழி. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, திர்மிதி, நஸயி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. 

இதே கருத்தில் ஏரானமான ஹதீஸ்கள் உள்ளன. நபி (ஸல்) அவர்கள் இதில் விதிவிலக்கு அளிக்கவே இல்லை. மரம் போன்றவைகளைத்தான் வரையலாம் என்ற அளவிற்கே அனுமதித்தார்கள். நமது தயாரிப்புகளில் உருவப் படங்கள் அச்சிடுவதையும், நமது நூல்களில், இதழ்களில் உருவப்படம் பொறிப்பதையும் தவிர்த்தே ஆகவேண்டும் என்றும் பி.ஜெ. கூறி வந்திருக்கிறார்.

பி.ஜெ. போன்ற ஆலீம்கள் அதில் தங்களை முற்படுத்திக் கொள்வார்கள்.

அந்த பி.ஜெ. இன்று அவர் ஆசிரியராக வேலை செய்யும் பத்திரிக்கையில் அவரது உருவப்படம் வராமல் வெளி வந்தால்தான் அது ஹராம் என்று ஆக்கி விட்டார். அதற்கும் அதே ஹதீஸ்களைத்தான் ஆதாரமாகக் காட்டுகிறார். 

மொத்தத்தில் மக்கள் ஒட்டு மொத்தமாக விஞ்ஞான முன்னேற்றங்களை ஏற்கும் வரை அதை மார்க்கத்தின் பெயரால் பி.ஜெ. போன்ற ஆலீம்கள் எனப்படுவோர் எதிர்ப்பார்கள். ஹராம் என்பார்கள். மக்களில் ஒரு கூட்டத்தார் விஞ்ஞான முன்னேற்றங்களை ஏற்றதும் அதை பி.ஜெ. போன்ற ஆலீம்கள் படிப்படியாக ஆதரிக்க ஆரம்பம் செய்வார்கள். 

மக்கள் ஒட்டு மொத்தமாக விஞ்ஞான முன்னேற்றங்களை ஏற்றதும் பி.ஜெ. போன்ற ஆலீம்கள் அதில் தங்களை முற்படுத்திக் கொள்வார்கள். இதுதான் ஆலீம்களின் கடந்த கால நிலைகள் நமக்கு கற்றுத் தந்துள்ள பாடம்.

அந்த பிரச்சாரத்தில் தன்னை முற்படுத்திக் கொண்டவரும் அதே பி.ஜெ.தான்.

1986இல் அந்நஜாத் மூலம் மத்ஹபுகள் இல்லை என்பதை மக்கள் மத்தியில் வைக்க வேண்டும் என்று அபுஅப்துல்லாஹ் அவர்கள் சொன்னார். அப்பொழுது அதை எதிர்த்தவர் பி.ஜெ. இஸ்லாத்தில் மத்ஹபுகள் இல்லை என்ற கருத்தை மக்களில் ஒரு சாரார் வேகமாக ஏற்கிறார்கள் என்றதும் அந்த பிரச்சாரத்தில் தன்னை முற்படுத்திக் கொண்டவரும் அதே பி.ஜெ.தான்.

தீமைக்குத் துணை நிர்ப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.

இதே மாதிரிதான் அரசியல் நிலைபாடுகளிலும் ஓட்டுப் போடுவது ஹராம் என்று 1986முதல் பிரச்சாரம் செய்து வந்தார். யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! 

அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப் பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிர்ப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது? இதோ அல்லாஹ் சொல்கிறான்.

இரு வசனங்களை ஆதாரமாகக் காட்டினார்.

"யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு; யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு; அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான்" (அல் குர்ஆன் 4:85) "நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணைநிற்க வேண்டாம்." (அல் குர்ஆன்5:2) என்ற இரு வசனங்களை ஆதாரமாகக் காட்டினார்.

அதே இரண்டு வசனங்களையே ஆதாரமாகக் காட்டி.

வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத் தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? 

அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை. எனவே ஓட்டுப் போடுவது ஹராம் என்று பிரச்சாரம் செய்து வந்தார். 

1998 பிப்ரவரி 14க்குப் பிறகு அவருக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டதும் அதே இரண்டு வசனங்களையே ஆதாரமாகக் காட்டி ஓட்டு போடனும் என பிரச்சாரம் செய்தார். ஓட்டு கேட்டும் பிரச்சாரம் செய்து வந்தார். பிறகு தேர்தலில் களப் பணி ஆற்றினால் ஈமான் பறி போய் விடும் என்றார். 

பிறகு அவரே ஜெயலலிதா காலடியில் ஈமானை பறி கொடுத்து விட்டு தேர்தலில் களப் பணி ஆற்றினார். இப்பொழுது தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தேர்தலில் நாங்கள்தான் சிறப்பான களப் பணி ஆற்றுவோம் என்று வாக்குறுதியும் அளித்துள்ளார்.

28 நோன்புகள் மட்டுமே நிறைவேற்றி நடுத் தெருவில் நின்றார்கள்.

அதே போல்தான் பிறை விஷயத்தில் பி.ஜெ. போன்ற ஆலீம்களின் நிலைப்பாடு உள்ளது என்பதை நீங்கள் புரியத்தான் இத்தனை வரலாற்றுச் சான்றுகள். 2003ஆம் ஆண்டு கோத்தகிரியில் பார்த்த பிறையை ஏற்று தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்றார்கள். கோத்தகிரியில் பார்த்த பிறையை ஏற்று நோன்பு நோற்பது ஹராம் என்று பி.ஜெ. அறிவித்தார். 

எனவே சீடர்கள் நோன்பை புறக்கணித்தனர். மேலப்பாளையத்தில் உள்ள அவரது சீடரும் அதை பிரதிபலித்து நோன்பு இல்லை என அறிவித்தார். அந்த 2003ஆம் ஆண்டு கோத்தகிரியில் பார்த்த பிறைப்படி ரமழான் 29 முடிந்ததும் ஏரல் பகுதியில் பிறை தென்பட்டது. எனவே மேலப்பாளையம் முழுவதும் நாளை நோன்புப் பெருநாள் என்று எல்லாப் பள்ளியிலும் அறிவித்து விட்டார்கள். கோத்தகிரியில் பார்த்த பிறையை ஏற்காத சீடர்கள் 28 நோன்புகள் மட்டுமே நிறைவேற்றி நடுத் தெருவில் நின்றார்கள்.

புலியாகப் பாய அடங்கியது பூலி.

பிறையை பார்த்து நோன்பு வைக்க வேண்டும் பிறையை பார்த்ததும் நோன்பை விட வேண்டும் என்ற கொள்கையை கூலிக்காக சொல்லி வந்த பூலி என்ன செய்தார். ஏரலில் பிறை தென்பட்டதால் நாளை பெருநாள் என்று அறிவித்தாரா? என்றால் இல்லை. சிஷ்ய கோடிகளை கூப்பிட்டு மஷுரா என்றார். நீங்களெல்லாம் ஒத்துழைத்தால் நாளை மறுநாள் நாம் தனியாக பெருநாள் வைப்போம். 

பார்த்த பிறையை ஏற்க வட தென்பகுதி என்றால் 50 கிலோ மீட்டர். கிழக்கு மேற்கு என்றால் 10 கி.மீ. ஏரல் 10கி.மீ.க்கு அப்பால் இருக்கிறது என்று ஏமாற்றப் பார்த்தார். செய்யது அலி போன்றவர்கள் புலியாகப் பாய அடங்கியது பூலி. பெரும்பான்மை மக்கள் விருப்பப்படி பெருநாள் என அறிவித்தது. பெரும்பான்மை மக்களுடன் ஒத்து பெருநாள் வைக்கா விட்டால் உயிர் நாடியான வசூல் பாதிக்கப்படுமே என்ற கவலையினாலும் பெருநாள் என அறிவித்தது.

இந்தியாவை விட பரப்பளவில் பெரிய நாடான சவூதியில் உள்ள த.த.ஜ.க்கள்.

இதே மாதிரிதான் 2002இல் நோன்பு பிறையை அறிவிக்கும் போதும் கூலிக்காக தவ்ஹீதை சொல்ல வந்த பூலி இதே பித்தலாட்டத்தையே செய்தது. அப்பொழுதும் செய்யது அலி போன்றவர்கள் சீறிப் பாய்ந்தனர். மேலப்பாளையம் முழுவதும் நாளை நோன்பு என்று மஃரிபிலேயே எல்லாப் பள்ளியிலும் அறிவித்து விட்டார்கள். எனவே நாங்கள் நோன்பு வைக்கப் போகிறோம் என்றார்கள். 

வேறு வழியின்றி பெரும்பான்மை மக்கள் விருப்பத்திற்கு பணிந்த பூலி இரவு 9 மணி வரை இழுத்தடித்து நோன்பு என அறிவித்தது. எனவே சர்வதேச பிறைக் கொள்கைக்கு பெரும்பான்மை மக்கள் வந்து விட்டால் பி.ஜெ. போன்ற ஆலீம்களும் கூலிக்கு தவ்ஹீதை சொல்ல வந்த பூலிகளும் ஒத்து வந்து விடுவார்கள். இதுதான் வரலாற்று உண்மை. 

இந்தியாவை விட பரப்பளவில் பெரிய நாடான சவூதியில் உள்ள த.த.ஜ.க்கள் அவர்கள் தலைமையின் கூற்றுப்படி அந்தந்த பகுதியில் பிறை பார்ப்பதில்லை. அந்தந்த பகுதியில் காணும் பிறையைத்தான் ஏற்போம் என கூறுவதில்லை. சவூதி அரசு அறிவித்து விட்டால் கை கட்டி வாய் பொத்தி அதை அப்படியே ஏற்றுத்தான் செயல்படுகிறார்கள்.

அடையாளம் காட்ட வேண்டியவர்களை அடையாளம் காட்டி உள்ளார்.

உலகில் எந்தப் பகுதியில் பிறை பார்த்தாலும் அதை ஏற்கலாம் என்பதை சென்னை மக்கா பள்ளி இமாம் ஷம்சுத்தீன் காஸிமியும் டி.வி. நிகழ்ச்சியில் கூறியுள்ளார். உலகில் எந்தப் பகுதியில் பிறை பார்த்தாலும் அதை ஏற்கலாம் என்று தமிழக தாய்க்கல்லூரி பாக்கியாத்தும் தேவ் பந்தும் பத்வா வழங்கி விட்டதாகவும் காஸிமி அறிவித்தார். 

அப்படியானால் சவூதியில் கண்ட பிறையை ஏற்று நீங்கள் ஏன் நோன்பு வைக்கவில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு, உண்மையை சொல்ல முடியாமல் செயல்படுத்த முடியாமல் ஆலிம்களின் காலும் கையும் கட்டிப் போடப்பட்டிருக்கிறது. அதனாலேயே ஆலீம்கள் ஊருடன் ஒத்துப் போகிறார்கள். 

டவுண் காஜி எனப்படுவோரும் அண்ணன்களும் தங்கள் வரட்டுக் கவுரவத்திற்காக உலகில் எந்தப் பகுதியில் பிறை பார்த்தாலும் அதை ஏற்கலாம் என்ற இந்த உண்மையை ஏற்க மறுத்து வருகின்றனர் என்று பதில் கூறி அடையாளம் காட்ட வேண்டியவர்களை அடையாளம் காட்டி உள்ளார்.

மக்கள் செயல்படுத்த ஆரம்பித்ததும்.

1986 வரை இரவுத் தொழுகை என்றால் பலர் அறிந்திருக்கவில்லை. கடைசி 10 இல் இரவு 2 மணி முதல் 4 மணி வரை எந்தப் பள்ளியிலும் தொழுகை நடந்ததில்லை. இப்பொழுது மேலப்பாளையம் போன்ற ஊர்களில் பெரும்பாலான பள்ளிகளில் கடைசி பத்தில் இரவு 2 மணி முதல் 4 மணி வரை தொழுகை நடைபெறுகிறது. காரணம் பெரும்பான்மை மக்கள் செயல்படுத்த ஆரம்பித்ததும் ஆலீம்களும் இந்த உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார்கள். 

பெருநாள் தொழுகையின் நேரமே காலை 10 மணிதான் அதுவும் பள்ளியில்தான் தொழனும் என்பது போல் ஆலீம்கள் ஆக்கி வைத்திருந்தார்கள். காலை 7 மணிக்கு பெருநாள் தொழுகை, அதுவும் திறந்த வெளி திடலில் என மக்கள் செயல்படுத்த ஆரம்பித்ததும் பெரும்பாலான ஊர்களில் பெருநாள் தொழுகை காலை 7 மணிக்குத்தான் அதுவும் திறந்த வெளி திடலில்தான் என ஆக்கி விட்டார்கள்.

அந்த ஆயத்துக்கு கண் கண்களால் பார்த்தார்கள் என்று மொழி பெயர்க்கப் போகிறார்களா?

குர்ஆனில் 336 இடங்களில் வரக் கூடிய தர, நர, யர என்பதற்கு ஒரு சில இடத்தில்தான் புறக் கண்ணால் பார்த்தல் என்ற பொருள் வரும். எனவே அந்த இடங்களில் பார்க்கவில்லையா? என்று மொழி பெயர்த்தது தவறு. அறியவில்லையா என மொழி பெயர்ப்பதே சரி என பி.ஜெ.யும் அறியவில்லையா என்றே மொழி பெயர்த்துள்ளார். 

ஆனால் பிறை விஷயத்தில் மட்டும் ருஃவியத் என்றாலே கண்ணாலே பார்ப்பதுதான் என்று வாதம் வைக்கிறார். அப்படியானால் 3:13இல் ரஃயல் அய்ன் என்று ஏன் அல்லாஹ் கூறுகிறான். ருஃவியத் என்றாலே கண்ணாலே பார்ப்பதுதான் என்பது அல்லாஹ்வுக்கு தெரியாது என வாதம் வைக்கப் போகிறார்களா? அந்த ஆயத்துக்கு கண் கண்களால் பார்த்தார்கள் என்று மொழி பெயர்க்கப் போகிறார்களா?

மக்களிடம் எடுத் செல்வோம்.

சந்திரன் எங்கே தோன்றுகிறது என்று கேட்டால் மேற்கே உதித்து கிழக்கே மறைகிறது என்று சொல்லக் கூடிய அளவில்தான் மக்களால் ஆலிம்கள் என நம்பப்படுபவர்கள் இருக்கிறார்கள். சூரியன் கிழக்கே தோன்றுவது போல்தான் சந்திரனும் கிழக்கே தோன்றுகிறது என்பதை இன்றைய 6 ஆம் வகுப்பு மாணவர்கள் படித்து வருகிறார்கள். http://www.textbooksonline.tn.nic.in/Books/06/Science-TM/PCT.pdf http://www.textbooksonline.tn.nic.in/Books/06/SocSci-TM/Geography/Chapter-4.pdf இதைக் கூட தெரியாத ஆலீம்களிடம் போய் வானியல் பற்றி பேசுவது முட்டாள்தனமான செயலே. எனவே மக்களிடம் எடுத் செல்வோம்.

1963இல் பர்மாவுக்கு இஸ்மாயில் ஸாஹிப் அனுப்பிய பெருநாள் வாழ்த்தைக் காண இதை கிழிக் செய்யவும்.

Comments

muslim said…
கடந்த காலத்தில் இந்த ஆலிம்களின் அறியாமையை கட்டுரை நன்கு வெளிப்படுத்துகிறது. சரி அந்தக்காலத்தில் தான் அப்படி இருந்தார்கள் என்றால் இன்றும் அப்படித்தான் இந்த ஆலிம்கள் இருக்கிறார்கள். பிறையை கண்ணால் கண்டுதான் நோன்பு பிடிக்க வேண்டும் என்று வாதிடுவோர் சந்தேகமேயில்லை அவர்கள் அறியாமையில்தான் இருக்கிறார்கள். மார்க்கத்தைக் கொண்டு பிழைப்பு நடத்தும் காரணத்தால் இந்த மவ்லவிகளின் மூலை சுயசிந்தனையற்றவைகளாக இருக்கின்றன. தாங்கள் கட்டுரை ஆரம்பத்தில் பீஜே போன்ற ஆலிம்கள் என்று பல இடங்களில் குறிப்பிட்டிருப்பது பொருத்தம் இல்லை. ஆனால் அதன் பிறகு தேர்தல் சம்பந்தமாக, பிறை சம்பந்தமாக பீஜேயைப் பற்றி குறிப்பிட்டிருப்பது தாங்கள் கூறுவது சரியே.
Unknown said…
அஸ்ஸாலாமு அலைக்கும் வரஹ்

இதனால் திரு பள்லுள் இலாஹி அவர்கள் சொல்ல வருவது என்ன? இந்த காலத்தில் விங்ஞான கண்டுபிடிப்புகள் அனைத்தையும் அந்த கருவிகள் வந்த மறுநாளே இதெல்லாம் கூடும் என்று எந்தவித பின்விளைவுகளையும் ஆராயாமல் ஃபத்வா கொடுக்கச்சொல்கிறாரா? இதுதான் தங்களின் அறிவு முதிர்ச்சியின் வெளிப்பாடா? ஒரு வேளை அந்த கருவிகள் வந்த மறுநாளே இதெல்லாம் கூடும் என்று எந்தவித பின்விளைவுகளையும் ஆராயாமல் ஃபத்வா கொடுத்துயிருந்து, அது தவறாக அமைந்து இருந்தால், இந்த திரு பள்லுள் இலாஹியின் நரம்பில்லாத நாக்கும், இந்த திரு பள்லுள் இலாஹி அவர்களின் அறிவு(மழுங்கிய) சார்ந்த கட்டூரைக்கு கருத்து பதிவு செய்திருக்கும் PJ வை இமாமாக ஏற்றுக்கொண்டவரும் அறியாமையில் மூழ்கியிருந்த முட்டாள்களின் வாரிசுமான அந்த அறிவாளியின் நாக்கும் எப்படி பிரளும் என்று சம்பந்தப்பட்டவர்களும், இந்த கட்டூரையைப்படிப்பவர்களும் புரிந்துக்கொள்ளட்டும்.

வஸ்ஸலாம்
சகதுல்லாஹ்

14-10-2007
சகதுல்லாஹ் அவர்கள் விமர்சனத்தில் ஆதாரங்கள் இல்லை. ஆத்திரமே உள்ளது. பின்விளைவுகளை ஆராயாமல் ஃபத்வா கொடுக்கச் சொல்கிறாரா? என்ற அவரது கேள்வியே அவருக்கு பதிலாகவும் அமைந்துள்ளது. நவீன கண்டுபிடிப்புகள் வந்த மறுநாளே இதெல்லாம் கூடும் என்று எந்தவித பின்விளைவுகளையும் ஆராயாமல் ஃபத்வா கொடுக்க முடியாது என்கிறார் சகதுல்லாஹ். அது போல்தான் ஹராம் - கூடாது என்றும் பத்வா கொடுக்க முடியாது என்பதையும் அவர் புரிய வேண்டும். சரியான உண்மையான அறிஞர்கள் ஆய்வு செய்து சொல்கிறோம் என்றுதான் பதில் சொல்வார்கள். உண்மையான எந்த ஆலீம்களும் எடுத்த எடுப்பிலேயே ஹராம் என்று சொல்ல மாட்டார்கள். இங்கு நாம் ஒட்டு மொத்தமான ஆலீம்களை விமர்சிக்கவே இல்லை. நாம் உண்மையான ஆலீம்களை என்றும் மதித்தே வந்திருக்கிறோம். இனியும் மதிப்போம்.

உண்மையான ஆலீம்கள் பிறர் மீது இட்டுக் கட்டி விமர்சிக்க மாட்டார்கள். பிறர் மீது இட்டுக் கட்டி விமர்சித்தே தங்களை ஆலீம்கள் போல் காட்டிக் கொண்டவர்களும், காட்டிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். இதை விளங்குவதற்காகவே, மக்களால் ஆலிம்கள் என நம்பப்பட்ட பி.ஜெ. போன்று மார்க்க அறிஞர்கள் எனப்பட்டோர் என்று குறிப்பிட்டுத்தான் விமர்சித்துள்ளோம். எனவே மார்க்கத்தைக் கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டே பிறரை நோக்கி பிழைப்பு நடத்துபவர்கள் என்று கூறி வரும் சுய நல ஆலீம்கள். சந்தர்ப்பத்துக்கு தக்கவாறு ஹராம் - கூடாது என்றும் ஹலால் - கூடும் என்று ஃபத்வா- தீர்ப்பு வழங்கி வரும் போலி ஆலீம்கள். இவர்கள் தான் நமது விமர்சனங்களுக்கு உரியவர்கள். இவர்களை என்றும் நாம் மிதிப்போம்.

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.