ஷிர்க்கை விட கொடியதும் பெரியதுமான பாவம் எது?

இன்றைய ஜும்ஆ உரைக்கு Fபஸ்லுல் இலாஹி என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏகப்பட்ட போன்கள். இதில் வழிகெட்டவர்களின் போன்களை விட்டு விடுவோம். அதை நாம் கண்டு கொள்ளவில்லை. அதை இப்போதைக்கு விட்டு விடுவோம்.

https://mdfazlulilahi.blogspot.com/2021/01/blog-post_27.html

கட்டுப்படுதலும்  பின்பற்றுதலும் என்பது நமக்கான தலைப்பு. இது அறிவிக்கப்பட்ட பின்   இந்த தலைப்பை விட மவுலிதில்  ஷிர்க் இல்லை என்று சவால் விட்டவர்களுக்கு பதிலடியாகவும்.


இந்த சவாலை சந்திக்க திராணியற்றுப் போன அறிஞர் குழுக்களுக்கு பாடம் புகட்டும் வண்ணமாக  ஷிர்க்கைப் பற்றி பேசுங்கள். 

அறிஞர்கள் குழு பின் வாங்கி விட்ட மவுலிதில் உள்ள ஷிர்க் பற்றி பேசுங்கள் என்று ஏராளமான போன்கள். இதை அலட்சியம் செய்ய முடியாது.


மவுலிதில்  ஷிர்க் இல்லை  என்று சவால் விட்டவர்  ஸலாம் பைத்தில்  இருந்து துவங்குவோம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


அவர்கள் சவால் விட்ட ஸலாம் பைத்தில் நோய் நீக்குபவரே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும் என்று இருக்கிறதே அதுவும் ஷிர்க்தான்.


மவுலிதில் ஷிர்க்தான் இருக்கிறது. -  அறிஞர்கள் குழுக்கள் மீது நம்பிக்கை  வைத்து பின்பற்றுவது இருக்கிறதே அது ஷிர்க்கை விட கொடியது. ஷிர்க்கை விட மாபவாச் செயல். மாபாதகச் செயல்.

 

ஷிர்க்குக்கே  நிரந்தர நரகம் என்றால் அதை விட கொடிய,  மகா மோசமான, பெரும்பாவமான அறிஞர்கள் குழுக்களை  பின்பற்றும் செயலுக்கு என்ன தண்டனை? பிறகு பார்ப்போம்.

 

Fபயிம்மா யஃதியன்னகும் மின்னீ ஹுதன் என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் அதாவது அல்லாஹ்விடமிருந்து வந்ததே அதுதான் நேர்வழி  என்கிறான்.  இது தான் அல்லாஹ்விடம் இருந்து மனித சமுதாயத்துக்கு வந்த முதல் கட்டளை. 


ஒவ்வொரு வசனத்திலும் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு அதன் பலனையும் கூறி இருப்பான். இந்தக் கட்டளையைக் கூறி விட்டு


எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்''  என்கிறான்    இதை 2;38 20; 123 வசனங்களில் காணலாம். 


யார் குர்ஆன் ஹதீஸ் அல்லாத அறிஞர்கள் குழு கூறும் வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்  நிலை இதற்கு மாற்றமாக இருக்கும்.


இத்தபிஊ மா ஊஹிய இலைக்க என்பதற்கு  (நபியே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! இது  பீ.ஜே. செய்துள்ள மொழி பெயர்ப்பு. 


இந்த வசனத்தை மொழி பெயர்த்த அத்தனை பேருமே.  வஹீ என்பதை தமிழ்படுத்தாமல் வஹியை பின்பற்றுவீராக என்றே தர்ஜமாக்களில் எழுதி உள்ளார்கள்.  என்ன அர்த்தம் வஹியை  மட்டுமே பின்பற்ற  என்பதே அதன் விளக்கம்.


இந்த தர்ஜமாக்களை துாக்கிப் பிடிக்கும் அத்தனை அறிஞர் குழுக்களும் வஹீ மட்டுமே மார்க்கம் என்ற நமது கொள்கையை விமர்சிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இங்கே தான் அறிஞர் குழுக்களின் அறிவு, சிந்தனை திறன் வெளிப்படுகிறது. 


உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! என்று சொல்லி விட்டு அடுத்து சொல்லும் வார்த்தை என்ன? 

லா இலாஹ இல்லா ஹுவ

அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்பது . 

இதற்கு என்ன அர்த்தம்? யார் அறிவிப்பதை மார்க்கமாக ஏற்று பின் பற்றுகிறோமோ அவன் தான் இலாஹ கடவுள் என்றாகி விடுகிறது.

அறிஞர்கள் குழு அறிவிப்பதையெல்லாம் மார்க்கம் என பின்பற்றுபவர்கள் அறிஞர்கள் குழுவினரை வணக்கத்திற்குரியவர்களாக கடவுள்களாக ஆக்கிக் கொண்டார்கள் ஷிர்க் செய்து விட்டார்கள் என்று அர்த்தம்..


கல்லை, கபுரை,  மண்ணை, மரத்தை மட்டைகளை,, சிலைகளை, நாய், பன்றி, கழுதை, குதிரைகளை வணங்குபவர்கள் மட்டும் முஷ்ரிக்கள் என்று எண்ணுகிறீர்களா?

அறிஞர்கள் குழு அறிவிப்பதையெல்லாம் மார்க்கம் என பின்பற்றுபவர்களை குறிப்பிட்டு சொல்லும் போதும் அவர்களை முஷ்ரிக் இணை கற்பிப்போர் என்றே பிரகடனப்படுத்துகிறான் அல்லாஹ்.


இப்படி பிரகடனப்படுத்தி விட்டு. அடுத்து இடும் கட்டளை என்ன? அஃரிழ் - புறக்கணிப்பீராக!

அறிஞர்கள் குழுவையும் அவர்கள் அறிவிப்பதையெல்லாம் மார்க்கம் என பின்பற்றுபவர்களையும் புறக்கணிப்பீராக!  என்றும் கட்டளை இட்டுள்ளான். இதை 6:106ல் காணலாம்


மவ்லிதில் ஷிர்க் இல்லை என்பவர்கள் பித்அத்தான் என்று பல்டி அடித்து விட்டவர்கள் போன்ற குர்ஆன் ஹதீஸுக்கு எதிரானவர்களைப் பார்த்து அல்லாஹ் என்ன சொல்கிறான்?


அதைப் பார்க்கும் முன் மவ்லிதின் ஸலாம் பைத்தில் உள்ளது ஷிர்க்குதான் என்பதற்குரிய ஆதாரத்தைப் பார்ப்போம். 


மனிதன் நோயுறும் போது அல்லாஹ்வே  நிவாரணம் தருகிறான்  குணப்படுத்துகிறான். என்பதை நபிமார்களின் தந்தை இப்றாஹீம் (அலை)  அவர்களை சொல்ல வைத்து குர்ஆனிலும் இடம் பெறச் செய்துள்ளான். 26:80ல் காணலாம்.


மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திக்க வைத்து (புகாரீ 5675) 


சுன்னத்தில் இருப்பதாக கூறிக் கொள்பவர்கள் கன்னத்தில் அறைந்து விட்டான். 

இவர்களோ மேற்சொன்ன குர்ஆன் ஹதீஸுக்கு எதிராக அல்லாஹ்வின் துாதரை நோய் நீக்குபவர் என்று கூறி ஷிர்க் வைக்கிறார்கள். அது ஷிர்க் இல்லை பித்அத் என்று கிறுக்கு கூட்டம் கூறி உள்ளது. 

அல்லாஹ்வுக்கும் துாதருக்கும்  மாற்றமாக எதிரான கருத்துக்களை கூறியவர்களை கிறுக்கர்கள் என்று மட்டும்தான் நாம் சொல்லி உள்ளோம்.


அந்த அறிஞர்கள் குழுவைப் பார்த்து அறிவு பூர்வவமாக  கேள்வி கேட்டு அவர்களைப் பற்றி  அல்லாஹ் என்ன சொல்லி உள்ளான்? 


தீன்- மார்க்கம் என்பது அல்லாஹ்வுக்கு சொந்தமானது. வஹீ அல்லாததை மார்க்கம் என்பவர்களைப் பார்த்து  இணை கற்பித்து விட்டவர்கள் ஷிர்க் செய்து விட்டவர்கள் என்று  சொல்லவில்லை. என்ன சொல்லி உள்ளான் என்பதை 

 அதுஅல்லிமூனல்லாஹ பிதீனிகும்? 

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? 49:16.  என்ற கேள்வி மூலம் அறியலாம்.

அல்லாஹ்வுக்கே பாடம் நடத்துபவர்கள். அல்லாஹ்வுக்கு தெரியாத மார்க்கத்தை சொல்லி கொடுப்பவர்கள்  அல்லாஹ்வுக்கும் மேலே வைத்து விட்டவர்கள்  என்கிறான்.


மகா மட்டமான பேராபத்தான ஒட்டு மொத்த தீமைகளுக்கும் கருவான கொள்கை  இதுதான்.  வஹிக்கு மாற்றமாக அறிஞர்கள் குழுவை  பின்பற்றுவதுதான். 


2;38 20; 123 வசனங்களில் உள்ளபடி பயப்படவும் கவலைப்படவும் வேண்டிய நிலை இவர்களுக்கு  ஏற்படும்.


அல்லாஹ்வின் போதனையைப் புறக்கணித்து அறிஞர் குழு போதனைபடி நடந்தவர்களுக்கு  நெருக்கடியான வாழ்க்கை உண்டு.  அவர்கள்  நரகவாசிகள். அதில்  நிரந்தரமாக இருப்பார்கள்.


அவர்களை  கியாமத்  நாளில் குருடனாக அல்லாஹ் எழுப்புவான். குருடனாக எழுப்பப்பட்டவன். 

 

"ரப்பீ - என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?'' என்று கேட்பான்.


அதற்கு அல்லாஹ் பதில்  சொல்வான்.

 

அப்படித்தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தாய். அவ்வாறே இன்று  மறக்கப்படுகிறாய்.


நமது வசனங்களை ஏற்க மறுத்து பொய்யெனக் கருதியோர் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.


எவன் தனது இறைவனின் வசனங்களை நம்பாமல் வரம்பு மீறி நடக்கிறானோ அவனுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம். மறுமையின் வேதனை கடுமையானது; நிலையானது. 
என்றும் அல்லாஹ் கூறுவான்

இவை,  16 ஆயிரத்தை கொடுத்து விட்டு பல லட்சம் கொடுத்ததாக   கதை விட்ட வசனகர்த்தாக்களின் கற்பனை வார்ப்புகள்  அல்ல.  


படைத்த இறைவனே குர்ஆனில் சொல்லிக் காட்டி உள்ளவை. அவற்றையே  நாம் எடுத்து  சொல்லி உள்ளோம். 



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.