கண்ணால் காண முடியாத சிறைகளிலும் இருட்டறைகளில் வாழும் சிறைவாசிகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

முதல் எச்சரிக்கை;- வெளிநாடுகளில் உள்ளவர்களே யார் வேலை தேடி விஸிட்டில் வந்தாலும் உதவும் நோக்குடன் உங்கள் சிம் கார்டுகளை கொடுக்காதீர்கள். அவனவன் பாஸ்போர்ட் காப்பி மூலமே சிம் கார்டு எடுத்துக் கொள்ளட்டும்.

இருட்டறைகளில் கிடக்கும் உங்களுக்குத் தெரியாத சிறைவாசிகளும் உருவாக காரணமானவர்கள் யார்? காரமாணவர்களுக்கு எதிராக துஆச் செய்யுங்கள் என நான் சொல்லத் தேவை இல்லை. கடல் கடந்த நாடுகளின்  சிறைகளில் உள்ள வாலிபர்களின் இளம் மனைவிகள், பெற்றோர்கள், தந்தை உயிருடன் இருக்கவே யதீம் ஆகி விட்ட சிறு பிள்ளைகள் இந்த ரமழானில் இரு கரம் ஏந்தி இருக்கும். 
எங்களின் பெயர்களைச் சொல்லி துஆச் செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ள தமிழக சிறைகளில் உள்ள 44 ஆயுள் சிறைவாசிகளின் பெயர்களைக் கண்டோம். அவர்கள் பெயர்களைச் சொல்லி துஆச் செய்வோம். நாம் துஆச் செய்துள்ள 44 ஆயுள் சிறைவாசிகள் எங்கு இருக்கிறார்கள்? எந்த சிறையில் இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்? என்ன வழக்கு? என்று எல்லாராலும் தெரிய முடியும்.

குடும்பத்தாரும் நண்பர்களும் போய் பார்க்க முடியும். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, பாளை என பல சிறைகளில் நானே போய் பார்த்து இருக்கிறேன். அப்படிப்பட்டவர்களே எந்த அளவுக்கு மனம் பாதிக்கப்பட்டு இருந்தால் பெயர் சொல்லி துஆச் செய்யுங்கள் என்று பகிரங்க வேண்டுகோள் வைத்திருப்பார்கள்?

சிறைக் கொடுமை என்றால் சிறையில் செய்யப்படும் கொடுமைகள் என்றுதான் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். சிறையே ஒரு கொடுமைதான். சிறையில் சும்மா இருப்பதே ஒரு கொடுமைதான். இதை எத்தனை பேர் அறிந்துள்ளார்கள்.

சிறையில் இருப்பவர்களுக்கே எந்த சிறையில்? இருக்கிறோம்?  எந்த ஊர் சிறையில் இருக்கிறோம்? என்பது தெரியாது. காலையா? மாலையா? தெரியாது. இரவா? பகலா? தெரியாது. ஒரே இருட்டறைதான். அவர்கள் மன நிலை எப்படி இருக்கும்?

அதே மாதிரிதான் இவர்கள் மனைவி மக்கள் நிலையும். அவர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்தாலும் அவர்கள் வாழ்வு இருண்டு விட்ட இருட்டறை வாழ்வுதான்.  

தாய் நாட்டு சிறைகளில் இருப்பவர்களின் குடும்பத்தவர்கள் என்ன வழக்கு என்ன விஷயம் என்று ஊர் உலகில் சொல்லி அழுது பாரத்தை இறக்கி வைக்க முடியும். 

கடல் கடந்த நாடுகளின் சிறைகளிலும் மேற்சொன்ன இருட்டறைகளிலும் கிடப்பவர்கள் பற்றி அவர்களது குடும்பத்தாராலோ நண்பர்களாலோ விக்கவும் முடியாத கக்கவும் முடியாத நிலை. ஈவு இரக்கம் உடையவர்கள் இந்த நிலைய எண்ணிப் பார்ப்பார்கள்.

கடல் கடந்த நாடுகளின் சிறைகளிலும் இருட்டறைகளில் கிடக்கும் இந்த சிறைவாசிகளும் உருவாக காரணமானவர்கள் யார்? தாய்நாட்டு சிறைகளில் வாலிபத்தைக் கழிக்க எந்த மாதிரி பிரச்சாரகர்கள், மைக் மாவீரர்களான தொண்டை தொழிலாளிகள் காரணமோ அவர்களும்  அதே மாதிரி உருவாகி விட்ட பிரச்சாரகர்களும் மைக் மாவீரர்களான தொண்டை தொழிலாளிகளும் தான் காரணம். ஜும்ஆ மேடைகளில் நின்று கொண்டு சம்பந்தமில்லாமல் ஆஷிபா என்று காட்டு கழுதைகள் போல் கத்துவானுக. .
விஷமிகளான இந்தக் கோழைகளின் நோக்கம் தன்னை வீரமிக்க பேச்சாளன் என்று காட்டுவதே. மைக் கிடைத்தவுடன் காக்கா வலிப்பு வந்தவன் மாதிரி வெறி பிடித்து கத்தினால் அவன்கள் மாவீரன்கள் சிறந்த பேச்சாளன்கள். அவன்களை இளம் ரத்தங்கள் விரும்பும். 

இவர்களைக் கொலை செய்தாலும் தப்பில்லை என்று சொல்லத் தோன்றுகிறது. உடலில் குண்டை கட்டி இறங்கி விடலாமா என்ற எண்ணம் ஏற்படுகிறது என்று உணர்வுகளை துாண்டி வார்த்தை விளையாட்டில் தொண்டைத் தொழிலாளிகள் கத்துவார்கள்.

இந்த நாய்களின்  கத்தலால் உணர்ச்சி வசப்பட்டவன்  மாட்டியதும். சொல்லத் தோன்றுகிறது என்றுதான் சொன்னேன். செய்யச் சொல்லவில்லை. எண்ணம் ஏற்படுகிறது என்று தான் பேசினேன் என்று சொல்லி தப்பித்து விடுவார்கள். 

மேற்கொண்டு விடுபட்டவர்களையும் காட்டிக் கொடுப்பார்கள். பிடிபடாதவர்களை பிடித்துக் கொடுத்தும் இந்த தொண்டைத் தொழிலாளிகள் தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

இந்த மாதிரி தொண்டைத் தொழிலாளிகளைத்தான் அழைத்து மீண்டும் மீண்டும் பேச வைக்க இளைய தலைமுறையினர் வலியுறுத்துவார்கள். பிறகு அந்த இளைய சமுதாயத்தின் ஒரு பகுதி சிறைவாசிகளாக ஆகி விடும். 

மைக் மாவீரர்களான எந்தத் தொண்டை தொழிலாளிகளெல்லாம் கடந்த காலங்களில் இளைஞர்கள் சிறை செல்ல காரணமாக இருந்தார்களோ அத்தனை மைக் மாவீரர்களும் இலங்கை சம்பவத்திற்குப் பிறகு மாற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். எதை வீரம் என்று துாண்டி விட்டார்களோ அதை பைத்தியத்தின் செயல் என்று பல்டி அடித்து பேசி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இறை வழியில் பயன்படுத்த பேங் வட்டி வாங்குவது ஹராம் ஆனால் பேங்கையே கொள்ளை அடிக்கலாம் என்று சொன்ன மாதிரி. கடல் கடந்த நாடுகளில் கண்ணால் காண முடியாத சிறைகளிலும் இருட்டறைகளிலும் கிடக்கும் சிறைவாசிகளுக்கு மைக் மாவீரர்களான தொண்டை தொழிலாளிகள் கொடுத்த பத்வா கஞ்சா கடத்தலாம் என்பது.

எந்த மாதிரி நாய்கள் இந்த மாதிரி பத்வாக் கொடுத்தார்கள். மன்னிக்க வேண்டும் இந்த மாதிரி பத்வாக் கொடுத்தவன்களை தாஇகள் என்று நல்லவர்கள் சொல்ல மாட்டார்கள். நன்றி கெட்ட நாய்கள் என்றுதான் சொல்வார்கள்.

கடல் கடந்த நாடுகளின் இருட்டறை சிறைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் கிடக்க எந்த மாதிரி நாய்கள் காரணம் என்று என்னால் பெயர் சொல்லி எழுத முடியும். இயக்க வெறி பிடித்த கூட்டம் ஒட்டு மொத்தமாக குரைக்கும். அதனால் செய்தியை மட்டும் பதிகிறேன்.

கடைசியாக இறை வழியில் பயன்படுத்த கஞ்சா கடத்தலாம் என்ற பத்வா பெற்று கைதானவர்கள் எல்லாம் தெரு நீள தாடி உடையவர்கள். இவனிடம் கேட்டால் அந்த இயக்கத்துக்காரன் காட்டிக் கொடுத்தான் என்கிறான். அவனிடம் கேட்டால் அவன்கள்தான் எங்களை முஸ்லிமாகக் கூட மதிக்காமல் நடந்தார்கள் என்கிறான்.

வேலை தேடி விஸிட்டில் வந்தவனுக்கு உதவும் நோக்குடன் தன் சிம் கார்டு போனைக் கொடுத்ததால் மாட்டியவர்களும் உள்ளார்கள். அது போன்ற அப்பாவிகளை காப்பாற்றலாம் என்றால். தப்பி ஓடிய தெரு நீள தாடிகள் உண்மையை சொல்ல மறுக்கின்றன. பெரிய தாடி வைத்ததால் பிடித்து விட்டார்கள் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சம்பவம் நடந்து மாதங்கள் உருண்டோடி விட்டன. இலங்கை சம்பவத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாட்டினரின் தாயக அளவிலும் விசாரணைக்கு ஏற்பாடாகி விட்டது என்ற நிலை வந்த பிறகே இதை பகிரங்கமாகப் பதிகிறேன்.

துாண்டி விட்டு விட்டு பல்டி அடித்து விட்ட ஒவ்வொருவன் மீதும் துாண்டி விட்ட ஒவ்வொரு இயக்கத்தவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக, யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன் என்று துஆச் செய்யுங்கள் என்று நான் சொல்லத் தேவை இல்லை. 

கடல் கடந்த நாடுகளின்  சிறைகளில் உள்ள வாலிபர்களின் இளம் மனைவிகள், பெற்றோர்கள், தந்தை உயிருடன் இருக்கவே யதீம் ஆகி விட்ட சிறு பிள்ளைகள் என எல்லோரும் ரத்தக் கண்ணீர் சிந்தி இந்த ரமழானில் இரு கரம் ஏந்தி இருப்பார்கள். இவர்களின் பிரார்த்தனை அவர்களை சும்மா விடாது.

இனிமேல் எவனாவது மைக் கிடைத்தவுடன் காக்கா வலிப்பு வந்தவன் மாதிரி வெறி பிடித்துக் கத்தினால் அவன்களை செருப்பால் அடியுங்கள்.  அவன்களை மாவீரன்கள் சிறந்த பேச்சாளன்கள் என எண்ணாதீர்கள். அவன்கள்தான் உங்கள் சகோதரர்களை இருட்டறையில் தள்ளிய ரகசிய கூலிகள், யூதக் கைக் கூலி, அமெரிக்க கூலிப்படை என்று விளங்குங்கள். 

தொண்டைத் தொழிலாளிகள் உங்களிடமும் கூலி வாங்கி விடுவான், காட்டிக் கொடுத்தும் காசு பார்த்து விடுவான். 

இனிமேலும் மைக்கில் உணர்வுகளை துாண்டி விடுபவர்களை வைத்து பேச வைத்தால் பேச வைப்பவர்கள் மீது யா அல்லாஹ் உன பிடியை இறுக்குவாயாக!

மீண்டும் எச்சரிக்கிறோம், வெளிநாடுகளில் உள்ளவர்களே யார் வேலை தேடி விஸிட்டில் வந்தாலும் உதவும் நோக்குடன் உங்கள் சிம் கார்டுகளை கொடுக்காதீர்கள். அவனவன் பாஸ்போர்ட் காப்பி மூலமே சிம் கார்டு எடுத்துக் கொள்ளட்டும்.


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.