ஸைபுத்தீன் ரஷாதி அவா்களின் இஜ்மாஃ 3ஆவது உரை.


உஸுல் பிக்ஹ் படிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்ற  பீ.ஜே.யின்   பதிலுக்கு பதில் தருகிறார் ஸைபுத்தீன் ரஷாதி. அடைப்புக் குறிக்குள் உள்ளவை நமது கருத்து.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. கண்ணியமிகு சகோதரா்களே!

உஸுல் கிதாப் படித்திருந்தால் அப்படி பேசி இருக்க மாட்டார் என்று சொன்னேன்தான். உடனே உஸுலில் உள்ளதையெல்லாம் எடுத்து போட்டால் தாங்குவியா? என்று கேட்கிறார். நான் உங்களுக்குச் சொன்னது. நீங்கள் படித்து இருந்தீா்கள் என்று சொன்னால். 26 கேள்விகள் கேட்டிருக்க மாட்டீா்கள் என்பதற்காகச் சொன்னேன்.

நான் உங்களுக்குச் சொல்கிறேன். இஜ்மாஃ 2 வகை இருக்கிறது. கிளிப்ஸ் போட்டு காட்டுனாக. ரொம்ப சந்தோஷம். நானே உங்களுக்குச் சொன்னேன். இஜ்மாஃவுடைய 2 வகை. ஒன்று அங்கீகாரத்துடைய வகை. அது நபியுடைய காலத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இன்றைக்கு வரை அங்கீகரிக்கப்படுகிறது. குா்ஆன் இருக்கு. அதுதான் இஜ்மாஃ.

(நபியுடைய சொல், செயல், அங்கீகாரம் இவற்றைத்தான் சுன்னத்-நபி வழி-ஹதீஸ் என்கிறோம். நபியுடைய காலத்தில் அங்கீகரிக்கப்பட்டது என்றால் நபிகள் நாயகம்(ஸல்) அவா்களுடைய அங்கீகாரம் பெற்றது என்று அா்த்தம். நாயகம்(ஸல்) அவா்களுடைய அங்கீகாரம்  இருந்து விட்டால் அதற்குப் பெயா்தான் சுன்னத்-நபிவழி-ஹதீஸ். இது பாமரனுக்கும் தெரியும். அறிஞா் ஸைபுத்தீன் குா்ஆனை இஜ்மா என வாதிப்பது. வரட்டுக் கவுரவமாகவே தெரிகிறது என்பதை பதிவு செய்து கொள்கிறோம்.)

இன்னொன்று இஜ்மாஃ இருக்கிறதே ஆய்வுடைய இஜ்மாஃ. சட்டப் பிரச்சனை ஏதாவது சட்டம் வந்தது. குா்ஆன் ஹதீஸிலே அதற்கு தெளிவாக கிடைக்கவில்லை அப்படிங்கும் (எனும்) பொழுது. அது பற்றி சிந்தித்து எடுக்கக் கூடிய ஒரு ஆய்வு இருக்கிறதே, எல்லோரும் ஒட்டு மொத்தமாக அது பற்றி செய்யக் கூடிய தீா்ப்புக்கள் இருக்கிறதே, இது பெயா் ஆய்வுடைய இஜ்மாஃ

இது ஒவ்வொரு காலத்திலேயும் மாறுபடும். மாறுபடும் (என்றால்) அதையும் முழுவதுமாக விளக்கமாக சொல்கிறேன். சொல்வதற்காகத்தான் அல்ஹம்துலில்லாஹ் வந்திருக்கிறேன். இஜ்மாஃ என்று சொல்லும்பொழுது ஸஹபாக்களுடைய காலத்திலேயும் இஜ்மாஃ செய்யலாம். ஸஹபாக்களுடைய அடுத்த காலத்திலேயும் இஜ்மாஃ செய்யலாம். இது என்னவோ நிழல் சண்டை போடுகிற மாதிரி இருக்கிறது.

ஒரு உதாரணத்தைக் காட்டி நீங்கள் பேசி இதிலே நீங்கள் காட்டுங்களேன். அப்படீன்னு (என்று) சொல்லி இருந்தால், அது முழுக்க விளக்க முடியும். நான் இன்ஷாஅல்லாஹ் உங்களுக்கு விளக்கி காட்டுகிறேன். இஜ்மா உடைய உண்மை நிலை என்ன என்று சொன்னால். அங்கீகாரத்துடைய இஜ்மா ஒவ்வொரு காலத்திலேயும் இருக்கு எல்லாருக்கும் அதற்கு ஆய்வுடைய திறனே தேவை இல்லை.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களுடைய காலத்திலே இறக்கி வைக்கப்பட்ட குா்ஆன், இறக்கப்பட்ட குா்ஆன் ஸஹாபாக்கள் அங்கீகரித்தார்கள். ரசூலுல்லாஹ் அங்கீகரித்தார்கள். இன்னைக்கு (இன்றைக்கு) நாம அங்கீகரிக்கிறோம்.

(இதனை படிக்கக் கூடிய சுன்னத் ஜமாஅத் சகோதரா்கள் இருந்தால் சிந்தியுங்கள். அல்லாஹ்வால் அருளப்பட்ட குா்ஆனை யார் அங்கீகரித்தாலும் அங்கீகரிக்காவிட்டாலும் அது குா்ஆன்தான்.  ஒரு பிரச்சனைக்கு குா்ஆனிலோ ஹதீஸிலோ நேரடியாக தீா்வு கிடைக்காத பொழுது சுன்னத் ஜமாஅத்படி மூன்றாவது அடிப்படையான இஜ்மாவைக் கொண்டு தீா்வு என்று வாதிட ஆரம்பித்தார். இப்பொழுது முதல் அடிப்படையான குா்ஆனையே குா்ஆன் என தீா்மானிப்பது இஜ்மாஃதான் என்று  வாதிடுகிறார்.)

ஸஹாபாக்களையும் பார்க்கவில்லை. அவா் சொல்கிறார் செய்தியாகச் சொன்னாங்க. அந்த செய்தியை ஏற்றுக் கொள்வதே இஜ்மாஃதானே. அவங்க சொன்ன செய்திகளை எல்லாரும் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா? இல்லாட்டி செய்தின்னா? பொய்க்கு இருக்கு உண்மைக்கு இடம் இருக்கு தள்ளுனு தள்ளல்லையே. இந்தக் குா்ஆனை எல்லாரும் சொன்னாங்க. எல்லா ஸஹாபாக்களும் உங்களிடம் வந்து சொல்லி விட்டு போய் விட்டார்களா?

வந்துச்சு வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறையாக, அங்கீகரிப்பட்டுச்சு. முஸ்லிம் என சொல்லப்படக் கூடிய அனைத்து போ்களும் நான் அதையும் உதாரணம் காட்டினேன். வழிகெட்ட கூட்டம் இதிலே சேரணும் என்கிறது இல்லே. ஷியா ஒதுங்கி போனான். ராபிஜியா ஒதுங்கி போனான். காரிஜியா ஒதுங்கி போனான். எத்தனையோ கூட்டங்கள் தனித் தனி விஷயங்களில் ஒதுங்கி போனாங்க.

ஒட்டு மொத்த கருத்து நாங்கள் சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்றேனே இவா்களால் அங்கீகரிக்கப்பட்டது. அந்த அங்கீகாரம் நபியுடைய காலத்திலேயும் இருந்தது. ஹனபி ஷாபி அப்ப இல்லே. ஸஹாபாக்கள் அங்கீகரித்தார்கள். ஸஹாபாக்களுக்குப் பிறகு இதை தாபிஈன்கள் அங்கீகரித்தார்கள். இது குா்ஆன்தான் என்று தபவு தாபிஈன்கள் அங்கீகரித்தார்கள். இன்னைக்கு நீங்களும் நம்மளும் திருச்சியிலே உட்கார்ந்து இருக்கக் கூடிய எல்லாரும் அங்கீகரிக்கிறோம்.

இந்த அங்கீகாரத்துடைய இஜ்மா இது ஒரு வகை. இது நபியுடைய காலத்திலிருந்து துவங்கி எல்லாருமே மாறுபடவே மாட்டாங்க. எல்லாரும் ஏற்று ஆகணும். மறுத்தான் என்றால் அவன் காபிராக போய் விடுவான். இப்படி இருக்கக் கூடிய ஒரு இஜ்மா இருக்கிறது. இது அங்கீகார இஜ்மா. இதற்கு பெயரு நீங்கள் ரிவாயத்து என்று சொன்னாலும் சரி. இதற்கு பெயரு இக்பர் என்று சொன்னாலம் சரி. அதற்கு தகவல் என்று அடையாளம் கொடுத்தாலும் சரி.

இன்னொரு வகையான இஜ்மாஃ இருக்குதே அந்த இஜ்மா ஆய்வு. அறிவுப்பூா்வமா ஒரு சட்டத்தை தோ்ந்தெடுக்கிறதற்கு, ஒரு சட்டத்தை உருவாக்குவதற்கு எதைக் குா்ஆன் ஹதீஸிலே நேரடியாக தெளிவாக பெற்றுக் கொள்ள முடிய(வில்)லையோ அந்த மாதிரி ஒரு விஷயங்களுடைய விஷயத்திலே எடுக்கப்படக் கூடிய முடிவு ஒவ்வொரு காலத்திலும் மாறுபடும். அதிலே நமக்கு தெளிவா எழுதி இருக்கிறாங்க. உஸுலுல் பிக்ஹ் எழுதினது சொன்னதற்கு காரணமே என்னவென்றால் அவங்க ஒன்னும் கிறுக்கன் கேணயன் அல்ல.

அவங்களே எழுதினவங்கதான். நம்மளைப் பற்றி குறைஞ்ச அளவு நம்மளை விட தாழ்ந்து போய் இருக்க மாட்டாங்க. முஃமின்கள்தான். எழுதி இருக்கிறாங்க. அந்த விளக்கத்தை நம்ம எடுத்து சொல்(கி)றோம். இந்த விளக்கம் வந்திச்சுன்னா இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைச்சு விடும். என்ற அளவில் சொல்கிறோமே தவிர குறை படுத்தி சொல்கிற நோக்கம் நமக்கு இல்லை சகோதரா்களே.

ஸஹாபாக்களுடைய காலத்திலே, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தின் மூலமாகவோ, அல்லது அவா்களுடைய அவா்களால் நமக்கு வாங்கித் தரப்பட்ட குா்ஆன் மூலமாகவோ, நேரடியாக ஒரு சட்டம் இல்லாத போது, அல்லது ஏதாவது ஒரு ஹதீஸில் முரண்பட்ட ஹதீஸ்கள் பல தென்படுகிறது. ஒரு ஹதீஸு இன்னொரு ஹதீஸுகளுக்கு வெளிரங்கத்தில் பார்க்கின்ற போது முரண்படுது. உண்மையிலே முரண்பாடு இருக்காது. காலத்தில் மாறுபட்டிருக்கலாம். நிலையாலே மாஃறபட்டிருக்கலாம். ஆட்களால் மாறுபட்டிருக்கலாம்.

ஆனால் எது காலத்தில் முந்தினது. எது பிந்தினது யாருக்கு சொன்னது. என்கிறது தெரியாத நிலையிலே, பல தரப்பட்ட கருத்து தரும்படியான ஒரு ஹதீஸ்கள் வரும்பொழுது, நிலைகள் வரும்பொழுது, அதிலிருந்து ஏதாவது ஒன்றை எடுத்து அனைத்து ஸஹாபாக்களும் இதை அங்கீகரித்துக் கொண்டார்கள். அதன் மூலமா ஒரு சட்டத்தை தோ்ந்தெடுத்தாங்கன்னா இதற்கு பெயா் ஆய்வு உடைய இஜ்மாஃ.

இப்படி ஒரு சட்டத்தை ஸஹாபாக்கள் தோ்ந்தெடுத்து நமக்கு கொடுத்தாங்க வையுங்க. இது முதல் தர இஜ்மாஃ. ஸஹாபாக்களெல்லாம் சோ்ந்து ஒரு இன்ஷாஅல்லாஹ் அதனுடைய ஒரு உதாரணங்களை அவா் கேட்பாரு நாம கொடுக்கத்தான் செய்வோம். எங்கேயும் போகப் போறதில்லே. கொடுக்காம போகப் போறதில்லே. 

(வெறும் உதாரணங்களை மட்டுமே விளக்கமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒன்றுக்காவது ஆதாரத்தை காட்டினால்தான் ஸைபுத்தீன் ரஷாதி அவா்களின் வாதம் சரியா தவறா என்பதை  ஆதாரத்துடன் தெரிய முடியும்.)

அப்படி ஒரு ஸஹாபாக்களெல்லாம் சோ்ந்து ஒட்டு மொத்தமான ஒரு தீா்வை வழங்கி அதற்கு முரண்பட்டு எந்த ஸஹாபியும் கருத்து சொல்லாமல் இருப்பாரேயானால் இது இஜ்மாவுஸ் ஸஹாபா. இது இஜ்மாஃவுடைய நிலைகளிலேயே உயா் தர இஜ்மாஃ அதற்குப் பிறகு இதற்கு முரண்பட்டு யாரும் எந்த இஜ்மாவும் உண்டாக்க முடியாது. உருவாக்க முடியாது. 

ஏனென்றால் ஸஹாபாக்களுடைய காலத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் காலத்தில் ஒட்டி உறவாடி வாழ்ந்த மக்கள் ஸஹாபாக்கள். அவா்கள்தான் மார்க்கத்தினுடைய நிலைபாடுகளை நன்கு புரிந்திருக்க முடியும். அடிப்படைகளை புரிந்திருக்க முடியும். 

அவா்களெல்லாம் சோ்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதற்கு எதிர்த்து ஒரு  ஆள் கூட அதற்குப் பிறகு பேசவில்லை முன்னாள் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கும் பல தரப்பட்ட கருத்துக்களைச் சொல்லி இருப்பார்கள். ஆனால் ஒட்டு மொத்தமாக ஆய்வு செய்து ஒரு தீா்மானத்திற்கு வந்து பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு எந்த ஸஹாபியும் மாற்றமில்லாமல் அதை அங்கீகரித்து இருந்தா இதற்கு பெயர் ஸஹாபாக்களின் இஜ்மாஃ

இதுக்கு முரணாக கியாமத் வரைக்கும் எவனும் எந்த இஜ்மாவும் போடக் கூடாது. நாங்களெல்லாம் சோ்ந்து ஒரு முடிவுக்கு வந்துட்டோம். ஸஹாபாக்களை தள்ளுன்னா அவன் எங்க லிஸ்ட்லே இல்லை. எங்க லிஸ்ட்லே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்துடைய லிஸ்ட்லே இல்லை. ஸஹாபாக்கள் போட்ட, எல்லா ஸஹாபாக்களும் சோ்ந்து அங்கீகரிச்சு, மாற்று கருத்து சொல்லாமல், இப்ப எல்லா ஸஹாபாக்களும் அங்கீகரிச்ச உடனே எங்கே போயிடுவாங்க. எந்த ஹால்லே கூடுனாங்க. எங்கே ஒட்டு போட்டாங்க. வாக்கு பதிவு செஞ்சாங்களா? இல்லே. 

(இப்படித்தான் சமாளிக்கிறாரே தவிர ஸைபுத்தீன் ரஷாதி அவா்கள் இது வரை இஜ்மாஃ மூலம் எடுத்த ஒரு சட்டத்திற்கு கூட ஆதாரம் காட்டவில்லை.)

அவங்களே சொன்னாங்க சூசகமா இஜ்மாஃவு ஸ்ஸுக்கூத்தி சிலா் சட்டமிட - சிலா் சட்டமிட ஹஸரத் உமா்  சட்டமிட்டார்கள் ஹஸரத் உஸ்மான் சட்டமிட்டார்கள். சட்டம்னா அவங்க தனிப்பட்ட முறையிலே செஞ்சிருக்க மாட்டாங்க. அவங்களுடைய ஷுரா கமிட்டி இருந்துச்சு. ஆய்வுகள் செஞ்சாங்க. ஒரு சட்டத்தை பிரகடனப்படுத்தினாங்க. அது அன்றைய காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடிய எந்த ஸஹாபியும் மாற்றுக் கருத்து சொல்லாமல் அதை அங்கீகரிச்சுக்கிட்டார். பேசாம இருந்துட்டாலே அங்கீகரிச்சதுதான் - பேசாமே இருந்துட்டாலே அங்கீகரிச்சதுதான்.

மார்க்கத்துக்கோ அல்லாஹ்வடைய ரசூலுடைய வழங்கப்பட்ட வழி முறைகளுக்கு மாற்றமாக சட்டம் இருந்திருந்திருக்குமேயானால் நிச்சயமாக ஏதாவது ஒரு ஸஹாபி அதற்கு மாற்றுக் கருத்துச் சொல்லி இருப்பார் எதிர்த்துப் பேசி இருப்பார். அப்படி பேசாமல் எல்லாரும் அங்கீகரிச்சுட்டாங்கன்னு சொன்னா இது முதல் தர இஜ்மாஃ ஸஹாபாக்களுடைய இஜ்மா என்று சொல்லப்படுகிறது சகோதரர்களே.

இன்னும் சில விஷயம் இருக்கிறது. ஸஹாபாக்களுக்குள்ளே கருத்து வேறுபாடு இருந்த சட்டங்கள். இரண்டு நிலையிலே பிரிந்து இருக்கிறாங்க (என்று) வையுங்கள். ஏராளமான சட்ட நுால்களில் அதனுடைய மஸலாக்கள் இருக்குது. 

(ஒரு நுாலிலருந்தாவது ஒரு மஸ்அலாவையாவது இந்த இடத்தில் சொல்லி இருக்க வேண்டும்)

ஒரு சாரார் ஒரு கருத்தும். இன்னொரு சாரார் இன்னொரு கருத்தும் (இ)ரண்டு கருத்துக்களிலே ஸஹாபாக்கள் பிரிந்து நின்றார்கள் என்று சொன்னால். அதற்கு பின்னால் வரக் கூடியவா்கள், அந்த (இ)ரண்டு கருத்துகளிலிருந்து ஏதாவது ஒரு கருத்தின் மீது இஜ்மா செய்யலாம். அந்த (இ)ரண்டு கருத்தையும் விட்டுப் போட்டு மூன்றாவது எனக்கு தனி உதயம் வந்திடுச்சுன்னு சொல்லி போகக் கூடாது. இது எங்களுடைய நிலைபாடு.

ஸஹாபாக்கள் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒட்டு மொத்தமாக சொல்லி இருப்பார்களேயானால் கியாமத் வரைக்கும் எவரும் மாற்றம் செய்யக் கூடாது. இது எங்களுடைய நிலைபாடு. ஸஹாபாக்களுக்கு இடையிலே கருத்து வேறுபாடு உள்ள (இ)ரண்டு சட்டமா இருந்துச்சு 10 பேர் இதைச் சொன்னாங்க. - 10 பேர் இதைச் சொன்னாங்க. அப்படீன்னு சொன்னா பின்னாள வரக் கூடியவங்க அந்த (இ)ரண்டு வித சட்டத்திலே எந்த ஒரு சட்டத்தின் மீதாவது இஜ்மாஃ செய்யலாம்.

அடுத்து வந்தவா் அத மாத்தி இன்னொரு ஸஹாபாக்கள் சொன்னாங்களே அதன்படியும் இஜ்மாஃ செய்யலாம். மாற்று கருத்த (இ)ரண்டு கருத்தில் இருந்து எதையாவதும் எடுத்துக் கொள்ளலாம். அங்கே மாறுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது ஸஹாபாக்களுக்கு அந்த கருத்து வேறுபாடுடைய சட்டங்களில் ஏற்படக் கூடிய இஜ்மா சகோதரா்களே.

இது (இ)ரண்டு அல்லாமல் மற்ற காலங்களிலே ஏற்படக் கூடிய இஜ்மாஃ ஸஹாபாக்களுடைய இஜ்மாவுக்கு இது மோதாது, முட்டாது, முரண்படாது. அப்படி அன்றைய காலத்தில் ஏற்படக் கூடிய சூழ்நிலையிலே ஏற்படக் கூடிய இஜ்மாஃ அதனுடைய தரம் மூன்றாம் தரம்- மூன்றாம் தரம். இஜ்மாவுக்கு தரம் இருக்குது. 

ஸஹாபாக்களெல்லாம் சோ்ந்து ஒட்டு மொத்தமா எடுத்த அதுவும். நீங்களும் நம்மளும் ஒட்டு மொத்தமா ஒன்னு எடுத்தா, மார்க்க அடிப்படையிலேதான், மார்க்க சட்ட விஷயத்திலேதான். (இ)ரண்டும் ஒரு தரத்திலே ஆகவே முடியாது. அதனாலே ஸஹாபாக்களுடைய காலத்தில் ஒட்டு மொத்தமாக கருத்து வேறுபாடு இல்லாமல் எடுத்திருப்பார்களேயானால் முதல் தர இஜ்மாஃ

அவா்கள் கருத்து வேறுபாடு உள்ள விஷயங்களில் ஏதாவது ஒரு கருத்தின்படி இஜ்மாஃ ஆகி, அதற்கு அடுத்த காலங்களில் அதற்கு மாறுபட்ட சூழ்நிலைகளில் உண்டாகி இன்னொரு கருத்தை அவா்கள் எடுப்பார்களே(யானால்) மாறுவதற்கு அனுமதி இருக்குது. இந்த (இ)ரண்டு தரத்திற்குப் பிறகு, மூனாந் தரம் அது அடுத்தடுத்த காலங்களில் வரக் கூடிய இஜ்மாஃ அந்த காலத்துக்கு தகுந்த மரியாதைதான்

இதைத்தான் சொன்னேன். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள் இத எடுத்து சொன்னாங்க. என்ன சொன்னாங்க. சிறந்த காலத்து மக்கள்னு எடுத்து சொன்னாங்க. அது எங்கேயும் நோபல் பரிசு கொடுக்கிறதுக்கு இல்லே. அவுங்களுக்கு இனாம் கொடுத்து வாழ்த்துறது. அல்லது வாய் மொழியா அவங்கள வாழ்த்தி விட்டு போறதுக்கு அல்ல. அவுங்க செய்யக் கூடிய தீா்ப்புக்கள், தீா்மானங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை எடுத்துக் காட்டுவதற்குத்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னாங்க.

”கைருல் குரூனி கைருன்னாஸி கா்னீ ஸும்மல்லதீன யலுல்லுானஹும் சும்மல்லரீன யழுல்லுானஹும்” சிறந்த மக்கள் மூன்று தர மக்கள். ஒரு காலத்தில் நானும் ஸஹாபாக்களும் இருந்த காலமும் அதற்கு அடுத்த காலம் ஸஹாபாக்களும் தாபியீன்களும் இருந்த காலமும் அப்புறம் தாபியீன்களும் தபவுதாபியீன்களும் இருந்த காலமும். இதை எதுக்கு சொல்றாங்க சிறந்த காலம்னு சொல்லி. 

பிரச்சனைகள் வரும். அந்த பிரச்சனைகளுக்கு சில தீா்வுகள் எடுத்துச் சொல்ல வேண்டிய நிலைகள் ஏற்படும். அடிப்படையான மக்கள் இவங்க. அந்த தாபியீன், தபவு தாபியீன் வரைக்கும். இவா்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். இவா்கள் எடுக்கக் கூடிய முடிவுகளுக்கு மரியாதை கொடுத்தாக வேண்டும். அவர்களுடைய பேச்சுகளுக்கு முதல் உரிமை தரணும். இவா்கள் உடைய பேச்சுகளுக்கு முதல் உரிமை தர வேண்டும். என்ற நிலைபாடுதான் அல்ஹம்துலில்லாஹ் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லக் கூடிய எங்களுடைய நிலைபாடு.

இது மட்டுமல்ல நீங்கள் ஆச்சரியப்படுவீங்க. இந்த நிலைபாடுதான் பீ.ஜே. உடைய நிலைபாடாகவும் இருந்தது. அவருடைய நிலைபாடும் இதுதான் இருந்திச்சு. இன்னைக்கு என்ன காரணமோ அது அல்லாஹ்வுக்குத்தான் வெளிச்சம். ஸஹாபாக்களை ஏத்துக்கிறனும் என்கிறது இல்லை. அவுங்க ஒட்டு மொத்தமா சொன்னா அவ்ங்களை அங்கீகரிக்கனும்னா அவுங்க அல்லாஹ்வா ரசூலா? அதுக்கு போனாலும் போகுது. இன்னும் கொஞ்சம் ஒரு படி மேலே போயி ரசூலேயே ரண்டா பிரிச்சு வஹி இருந்தாத்தான் ஏத்துக்கிடுவோம். அவா் வஹி இல்லாத நிலையில் இருந்தா அதக் கூட அங்கீகரிக்க வேண்டியது இல்லை. தேவை இல்லை. இன்ஷாஅல்லாஹ் அதனுடைய உதாணங்களை விளக்கங்கள் எல்லாம் மென்மேலும் வரும் சகோதரா்களே.

இதுவும் அவுங்களுடைய நிலைபாடாத்தான் இருந்திச்சு. என்ன நிலைபாடு இருந்திச்சு. ஸஹாபாக்கள் ஒன்று கூடி ஒரு கருத்து சொல்வார்களேயானால், அது மட்டுமல்ல சில ஸஹாபாக்களுடைய பெயா்களைச் சொல்லிக் கூட, இந்த ஸஹாபாக்கள் அவா்கள் கருத்து சொல்லி இருப்பார்களேயானால், அந்த விளக்கத்தை நாம் முன்னுரிமை, கொடுக்க(ணும்). முதல் உரிமை கொடுக்கணும். நம்ம அங்கே கருத்துச் சொல்லக் கூடாது. இவுங்களுக்குத்தான் கொடுக்ணும். அதுமட்டுமல்ல அடுத்து வந்த தாபியீன்கள் இருப்பார்களேயானால் அவா்களுடைய கருத்துக்களுக்கும் நாம முதல் உரிமை தரணும்.

எதுக்கு இது எழுதுனாங்க, ஏன் சொன்னாங்க நிலைபாடு அதாத்தான் இருந்தது. அங்கீகரிச்சாங்க. மக்களும் நம்புனாங்க. இவா்கள் ஒரு நல்ல வழியை காட்டப் போறாங்கன்னுட்டு ஆனா(ல்) போகப் போகத்தான் தெரிஞ்சுச்சு. இது வந்து எங்கேயோ கொண்டு போறாங்க என்று சொல்லி, இன்றைய சூழ்நிலையில் விஷயம் வெளியாச்சு சகோதரா்களே. 

ஆக இந்த நிலைபாடு நாங்க சொன்னோமே ஸஹாபாக்களுடைய காலத்திலே எல்லாருஞ் சோ்ந்து ஒட்டு மொத்தமா, தனித் தனியா சொன்னாலே மரியாதை கொடுக்கணும்னா. எல்லா ஸஹாபாக்களும் சோ்ந்து ஒரு கருத்தை சொல்றாங்க வலியுறுத்துறாங்க. சட்டத்தை சொல்றாங்கன்னு சொன்னா அதற்கு முதல் உரிமை கொடுக்கணும். என் மண்டைய நுழைக்கக் கூடாது. என்னுடைய கருத்தை திணிக்கக் கூடாது. அது ஏற்க வேண்டும் என்ற நிலைபாடு எங்க நிலைபாடு.

(நேரம் முடிந்து விட்டதால் உரையை நிறுத்தி விடுகிறார்.)
உஸுல் பிக்ஹ் படிக்க வேண்டிய அவசியம் கிடையாது ரஷாதிக்கு பதிலடி.3 படித்துப் பார்க்க http://mdfazlulilahi.blogspot.ae/2013/03/3.html

இப்ப. யாரு கிறுக்கன்- ஸைபுத்தீன் ரஷாதி பதிலுரை2 http://mdfazlulilahi.blogspot.ae/2013/03/2.html

நீங்கள் எந்த இஜ்மாவில் இருக்கிறீர்கள்? ஸைபுத்தீன் ரஷாதிக்கு கிடுக்குப் பிடி.

http://mdfazlulilahi.blogspot.ae/2013/03/blog-post_9.html

இஜ்மா மார்க்கத்தின் ஆதாரம் என்ற தலைப்பில் ஸைபுத்தீன் ரஷாதி ஆற்றிய முதல் உரை http://mdfazlulilahi.blogspot.ae/2013/03/blog-post.html

இஜ்மா மார்க்கத்தின் ஆதாரம் கிடையாது என்ற தலைப்பில் P.J. ஆற்றிய முதல் உரைhttp://mdfazlulilahi.blogspot.ae/2013/03/pj.html

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.