எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது.

பி.ஜே. அவர்கள் துபை வந்திருந்தபோது பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட எந்த நிகழ்ச்சிகளையும் அவரது அமைப்பின் பொறுப்பாளர்களால் நடத்த முடிந்ததில்லை. அந்த நிலையில் உயர் அதிகாரிகளையும் அமைச்சகத்தையும் அணுகியவர் எந்த அமைப்பிலும் சேராத நடுநிலையாளரான ஒருவர். அந்த நடுநிலையாளர்தான் எம்மை அணுகி, பி.ஜே. தரப்புக்கும் எமக்கும் உள்ள விவகாரங்களுக்கும் பி.ஜே. தரப்பினர்களின் பொய்ப் பிரச்சாரங்களுக்கும் பெயர் குறிப்பிட்டு அவர்களது நடையில் பதில் எழுதி வந்ததை நிறுத்தி விடுமாறு கேட்டுக் கொண்டார். பி.ஜே. தரப்பிலிருந்து எமக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை கேட்டுத் தருவேன் என்றும் உறுதி அளித்தார். பி.ஜே. தரப்பிலிருந்து யாராலும் நியாயத்தை பெற்றுத் தர முடியாது. பி.ஜே. தரப்பிலிருந்து என்றைக்கும் நியாயம் கிடைக்காது என்பது அனுபவம். இருந்தாலும் அல்லாஹ்வுக்காக என்று அவர் கேட்டுக் கொண்டதால் அந்த விமர்சனங்களை அப்படியே நிறுத்தினோம். ஆனால் பி.ஜே. தரப்பின் வரம்பு மீறல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இப்பொழுதும் ஷம்சுல்லுஹா என்பவர் ஜும்ஆ குத்பாவில் மன நோயாளி என விமர்சித்துள்ளார்.
இது கொள்கை அடிப்படையிலானது.
பி.ஜே.யை வைத்து கூட்டம் நடத்திட பெரு முயற்சி செய்த அந்த நடுநிலையாளர் ஜகாத் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திட ஜகாத் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்ற கொள்கை உடைய அறிஞர்;களைக் கொண்டு 2 நிகழ்ச்சிகளை துபையில் நடத்தினார். இதை பி.ஜே.க்கு எதிராக நடத்திய நிகழ்ச்சி என்று சொல்ல முடியாது. இது கொள்கை அடிப்படையிலானது. அதுபோல்தான்; கொள்கை அடிப்படையிலான கருத்தை எழுதி வருகிறோம். பிறை விஷயத்தில் ஒரு சாரார் கிராமவாசிகள் மதீனாவில் வந்து சொல்லும் ஹதீஸை ஆதாரமாகச் சொல்கிறார்களே என்று கூறிபோது அந்த ஹதீஸை பலவீனமானதாக ஆக்கி விடுங்கள் என்று ஒரு மவுலவி கூறியுள்ளார் என்பதை முந்தைய வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தோம். இவ்வாறு கூறிய மவுலவி பி.ஜே.தான் என்பதைக் கூட பெயர் குறிப்பிட்டு எழுதவில்லை. தப்லீக்காரன் ஜமாஅத்தில் போறான், அவன் மனைவி விபச்சாரத்தில் போறாள் என்று அசிங்கமாக பேசிய மவுலவி என குறிப்பிட்டிருந்தோம். அவ்வாறு பேசிய மவுலவி லுஹா என்பதை குறிப்பிடவில்லை.
கூட இருந்தே கழுத்தறுக்க வேண்டும்.
கண் முன்னால் நடந்த நிகழ்ச்சியில் நியாயம் பேசாத மவுலவிகள் என்று எழுதிய நாம் அந்த மவுலவிகள் தென்காசி சுலைமான், லுஹா ஆகியவர்கள்தான் என்று பெயர் குறிப்பிட்டு அடையாளம் காட்டவில்லை. இக்கட்டான நிலையிலும் ஸலாம் சொன்னவருக்கு பதில் சொல்லாமல் சென்ற மவுலவி என்று எழுதிய நாம் ஸலாமுக்கு பதில் சொல்லாதவர் லுஹாதான் என குறிப்பிட்டு எழுதவில்லை. தவ்ஹீதுவாதிகள் என்போர் முஸ்லிம்களில் ஒரு சாராரைக் கண்டால் க்கா க்கா என்று சப்தமிட்டு காரி தூ தூ என்று துப்புகிறார்கள். அவர்கள் ஒரு கூட்டமாக சேர்ந்து விட்டால் ஹஹ்ஹா ஹஹ்ஹா என சப்பதமிட்டு சிரிக்கிறார்கள், விசிலடிக்கிறார்கள் (கழுதைபோல்) கனைக்கிறார்கள். என்பதை எழுதிய நாம் இப்படிச் செய்து கொண்டிருப்பவர்கள் மேலப்பாளையம் டி.என்.டி.ஜே.க்காரர்கள்தான் என்பதை குறிப்பிடவில்லை. நமது வெளியீட்டில் குர்ஆன் ஹதீஸுக்கு முரணானவற்றை விமர்சித்த நாம் அவர்களைப் போல் அசிங்கமாக விமர்சிக்கவில்லை. பி.ஜே.யை பலி தீர்க்க அவர் கூட இருந்தே கழுத்தறுக்க வேண்டும் என்று எம்மிடம் சொன்னவர் லுஹா. அந்த பணியை லுஹா சரியாக செய்து வருகிறார்.
டி.என்.டி.ஜே.யினருக்குள் பல கோஷ;டிகள்.
கோட்டூர் ரபீக்கை மாவட்ட தலைவராக ஆக்கியதிலிருந்து நெல்லை மாவட்டத்தில் தனது செல்வாக்கு சரிந்து வருவதாக எண்ணியுள்ளார் தாழ்வு மனப்பான்மை உடைய லுஹா. ஒரு பள்ளியில் குறிப்பிட்ட ஒருவரே ஜும்ஆ உரையாற்றினால் அவரைச் சுற்றி அந்த பகுதியில் ஒரு கூட்டம் உருவாகி விடும் என்பதை உணர்ந்த ராஜ தந்திரி பி.ஜே. எனவே ஒவ்வொருவரையும் வாரம் ஒரு ஊர் என சுற்றலில் விட்டு வருகிறார். மஸ்ஜிதுர்றஹ்மானில் தன்னைத் தவிர வேறு யாரும் ஜும்ஆ நடத்தக் கூடாது. மற்றவர்கள் ஜும்ஆ நடத்தினால்; தனது செல்வாக்கு போய் விடும் என்பதை உணர்ந்தவர் லுஹா. எனவே பிறரை அனுமதிக்காமல் காய்களை நகர்த்தி வந்தார். பி.ஜே.யின் திட்டம் லுஹாவுக்கு மரண அடியாக இருந்தது. எனவே சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்து இருந்தார். இப்பொழுது டி.என்.டி.ஜே.யினருக்குள் பல கோஷ;டிகள் உருவாகி விட்டது. தவ்ஹீதை சொல்ல கொடி எதற்கு என்றுள்ள கோஷ;டிக்கும் கொடி தேவை என்றுள்ள கோஷ;டிக்கும் கடும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. கொடிக்கு எதிரான கருத்தை ஜும்ஆ உரைகளிலும் கூறி விட்டார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் ஜமாஅத்.
இது கொடி தூக்கும் கழகமல்ல கொள்கை காக்கும் காப்பகம் என்று ஏகத்துவத்தில் தலையங்கம் எழுதியவர் லுஹா. இதுதான் சந்தர்ப்பம் என கொடி அறிவித்ததில் தனக்கும் உடன்பாடில்லை என்பது போல் பேசி வருகிறார். பி.ஜே. இலங்கையில் இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரகசிய கூட்டம் நடத்தி உள்ளார். மஸ்ஜிதுர்றஹ்மான் பொதுக்குழு எனும் பெயரில் ரகசிய கூட்டத்தை நடத்திய அவர் மஸ்ஜிதுர்றஹ்மானை பி.ஜே. கொத்திக் கொண்டு போய் விடக் கூடாது என்று கூறியுள்ளார். பள்ளியை தன்னிடம் தக்க வைக்க தேவையான முன் ஏற்பாடுளை செய்து வருகிறார். த.மு.மு.க.விலிருந்து விலகி அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு என்றார். பிறகு அதை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் என்று பெயர் மாற்றினார். இப்பொழுது தமிழ்நாடு முஸ்லிம் ஜமாஅத் என பெயர் மாற்றுகிறார். இவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட நாம் பூம் பூம் மாடுகளா என தனது சகாக்களிடம் பேசி தனது கோஷ;டியை வலுப்படுத்தி வருகிறார். இந்த நேரத்தில் நம்மை கடுமையாக விமர்சித்தால் நாம் பி.ஜே.யை கடுமையாக விமர்சிப்போம் என்ற எதிர் பார்ப்பில் நம்மை விமர்சித்துள்ளார். எனவே பதிலுக்கு அவர்களை மன நோயாளிகள் என்றோ மன நோயாளிகளின் ஜமாஅத் தலைவர் என்றோ மன நோயாளிகளின் மாத இதழ் ஆசிரியர் என்றோ எழுத மாட்டோம். குர்ஆன் ஹதீஸுகளுக்கு முரணானவற்றை மட்டும் விமர்சிப்போம்.
ஒரு பகுதியைத்தான் படித்துக் காட்டுகிறார்கள்.
நாளொன்றும் பொழுதொன்றுமாக தவ்ஹீதின் பெயரால் சமுதாயத்தில் பிளவுகளை ஏற்படுத்தி சுயலாபம் அடைந்து வந்தோர் பற்றி அறிவீர்கள். அவர்கள் சுன்னத் ஜமாஅத்தினரை பின்பற்றித் தொழக் கூடாது என்று கூறி வருவதையும் அவர்களின் கூற்றுக்கு ஆதாரமாக தவறான விளக்கம் கூறி எடுத்து வைத்த ஆயத்துகளையும் அந்த ஆயத்துகளுக்குரிய உண்மை அர்த்தங்களையும் கடந்த வெளியீடுகளில் கண்டோம். அதன் தொடர்களைப் பார்ப்போம். அல் குர்ஆன் 60:4 வது வசனத்தின் ஒரு பகுதியை மட்டும் படித்துக் காட்டி இந்த ஆயத்தின் அடிப்படையில் சுன்னத் ஜமாஅத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் நேற்று வரை ஒன்றாக இருந்தவர்களுடன் பகைத்துக் கொண்டதும் குர்ஆன் ஹதீஸ் ஆதார அடிப்படையில்தான் என்ற மாயையை ஏற்படுத்தவும் அந்த ஒரு பகுதியைத்தான் படித்துக் காட்டுகிறார்கள். 2005 மார்ச் ஏகத்துவம் இதழின் தலையங்கத்திலும் 60:4வது வசனத்தைப் இடம் பெறச் செய்துள்ளனர்.
நேர் வழியில் இருப்பதாக மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வபதா பய்னனா வபய்னகுமுல் அதாவது வல்பஃக்ழாவு அபதன் எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது இதுதான் அவர்கள் படித்துக் காட்டும் ஒரு பகுதி. இப்பொழுது ஜும்ஆ உரைகள் உட்பட எல்லா உரைகளிலும் இதை படித்துக் காட்டுவது அவர்களுக்கு லேட்டஸ்ட் பேஷனாக ஆகிவிட்டது. இதை செவியுறும் அவர்களால் தவ்ஹீதுவாதிகள் என்றழைக்கப்படுவோர், ஆஹா பிரிவினைக்கு என்ன அருமையான ஆதாரத்தை குர்ஆனிலிருந்து காட்டி விட்டார் நமது மூத்த அறிஞர்(?) என்று புல்லரித்துப் பூரித்து தாங்கள் நேர் வழியில் இருப்பதாக மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓ தாயத்து, தட்டு, தகடு எழுதிடும் மந்திரவாதிகளே! தர்கா, தரீகா, கத்தம், பாத்திஹா வியாபாரிகளே என்று சுன்னத் ஜமாஅத்; மவுலவிகளைப் பார்த்து இவர்கள் அன்று முழங்கினார்கள். அந்த மவுலவிகளெல்லாம் இன்று ஓ தவ்ஹீது வியாபாரிகளே, தவ்ஹீதின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களே என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சதி திட்டத்துடன் உள்ளார்கள்.
அந்த அளவுக்கு அவர்கள் தவ்ஹீது பெயரால் நடத்தும் பிரச்சாரம் வியாபாரமாக ஆகிவிட்டது. தவறான வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள செய்யும் எல்லா பித்தலாட்ட வேலைகளையும் இவர்கள் தவ்ஹீதின் பெயரால் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். தனிப்பட்ட விரோத குரோதத்தால் சுயநலத்துக்காக இவர்கள் யாரை பகைத்துக் கொண்டு வெளியேறி விட்டார்களோ அவர்களை நோக்கி சொல்வதற்குத்தான் இந்த 60:4வது வசனம் அருளப்பட்டது போல் பேசி வருகிறார்கள். இந்த ஆயத்து அவர்கள் கூறும் இந்த கருத்துக்களைத்தான் சொல்கிறதா? இதை அறிய அந்த ஆயத்தின் முன் பின் வசனங்களுடன் அருளப்பட்ட காரண காரியங்களை தெரிந்தால் தெளிவு கிடைத்து விடும். இதே மாதிரியான ஆய்வு முறையை மற்ற மற்ற விஷயங்களில் கூறி வந்தவர்கள்தான் இவர்கள். இன்று இவர்களின் இந்த கூற்றில் மக்களுக்கு உண்மை விளங்கி தெளிவு கிடைத்து விடக் கூடாது என்பதால் சதி திட்டத்துடன் உள்ளார்கள். அதனால்தான் சில இடங்களில் அல் குர்ஆன் 60:4 வசனத்தின் முன்பின் ஆயத்துகளை தவிர்த்தும் சில இடங்களில் இந்த ஆயத்தில் உள்ள முன் பின் வார்த்தைகளை துண்டித்தும் கூறி வருகிறார்கள்.
முன் மாதிரியாக கூறப்பட்டுள்ள வார்த்தைகள்.
தக்லீதை – கண்மூடித்தனமாக பின் பற்றுதலை ஒழிக்கப் புறப்பட்டதாக கூறியவர்கள் கடுமையான நவீன தக்லீதுகளை கண்மூடித்தனத்திலும் மகா கண்மூடித்தனமானவர்களை உருவாக்கி தங்கள் பின்னால் அணி வகுக்கச் செய்து விட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் இவர்கள் என்ன சொன்னாலும் அவர்கள் பின்னால் உள்ளவர்கள் தலையாட்டிக் கொண்டிருக்கும் நிலை. உங்களுக்கு இப்றாஹீமி(அலை அவர்களி)டமும் அவருடன் இருந்தோரிடமும் அழகிய முன் மாதிரி இருக்கிறது. அவர்கள் தங்கள் சமூகத்தாரிடம் தெளிவாக கூறி விட்டார்கள்: ஷஷநிச்சயமாக உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதனை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம், அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே நிரந்தர பகைமையும் வெறுப்பும் ஏற்பட்டு விட்டது|| என்றார்கள்... இதுதான் அந்த வசனத்தில் இப்றாஹீம் (அலை) அவர்களிடமும் அவருடன் இருந்தோரிடமும் உள்ள முன் மாதிரியாக கூறப்பட்டுள்ள வார்த்தைகளாகும்.
ஆயத்திலேயே உள்ள விளக்கம்.
எங்களுக்கும் உங்களுக்குமிடையே நிரந்தர பகைமையும் வெறுப்பும் ஏற்பட்டு விட்டது என்று எதனால் சொன்னார்கள். தனிப்பட்ட விரோத குரோதத்தாலா? தலைமையை கைப்பற்ற சதி திட்டமிட்டு அந்த சதி திட்டம் கண்டு பிடிக்கப்பட்டதும் அதை மறைப்பதற்காக அப்படிச் சொன்னார்களா? அமானிதமான இடத்தை, பள்ளிவாசலை, சொத்தை, டிரஸ்ட்டை, பத்திரிக்கையை அபகரித்து விட்டுச் சொன்னார்களா? எதனால் சொன்னார்கள். இந்த காரணத்தை அறிவதற்கு இதன் முன் பின் வசனங்களை பார்க்காமல் இந்த வசனத்தை மட்டும் பார்த்தாலும் பதில் எளிதில் கிடைத்து விடுகிறது. ஷஷநிச்சயமாக உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி (அல்லாஹ்வை வணங்காமல்) எதனை வணங்குகிறீர்களோ அதனை விட்டும் நாங்கள் விலகியவர்கள். (அதனால்) உங்களை மறுக்கிறோம், என்று கூறிவிட்டுத்தான் அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே நிரந்தர பகைமையும் வெறுப்பும் ஏற்பட்டு விட்டது என்று கூறி உள்ளார்கள். அல்லாஹ்வை வணங்காமல் நிராகரித்து விட்டு எதனையெல்லாமோ வணங்கியவர்களைப் பார்த்து கூறினார்கள் என்பது அந்த ஆயத்திலேயே உள்ள விளக்கமாகும். குர்ஆனிலுள்ள எந்த ஒரு ஆயத்தாக இருந்தாலும் அதற்குரிய உண்மையான மிகச் சரியான விளக்கத்தை அறிய அந்த ஆயத்து ஏன் எப்பொழுது அருளப்பட்டது என்ற காரணத்தையும் அறிய வேண்டும். அந்த அடிப்படையில் இந்த ஆயத்து ஏன் எப்பொழுது அருளப்பட்டது என்பதையும் பார்ப்போம்.
இரகசியமான போர் நடவடிக்கை.
இறை நிராகரிப்பாளர்களான மக்கா காபிர்களுக்கும் இறைத்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கும் ஷஷஹுதைபிய்யா உடன்படிக்கை|| எனும் ஒப்பந்தம் ஏற்பட்டதை அனைவரும் அறிந்திருக்கிறோம். இந்த ஒப்பந்தத்தை மக்கா காபிர்கள் மீறிவிட்டனர். எனவே நபி (ஸல்) அவர்களும் இரகசியமாக போர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்கா மீது படையெடுக்கவிருக்கிறார்கள் என்ற இந்த போர் இரகசியத்தை ஹாதிப் பின் அபீபல்தஆ (ரலி) என்ற நபித்தோழர் மக்கா காபிர்களுக்கு கடிதமாக எழுதி ஒரு பெண் மூலம் அனுப்பி விட்டார்கள். இது நபி (ஸல்) அவர்களுக்கு தெரிந்து விட்டது. உடனே அலி (ரலி) ஜுபைர் (ரலி) மிக்தாத் (ரலி) ஆகியவர்களை அனுப்பி அக்கடிதத்தை கைப்பற்றி வர கட்டளை இடுகிறார்கள். ரவ்ளத்து காக் என்னுமிடத்தில் வைத்து அந்த பெண்ணிடமிருந்த அந்த கடிதத்தை கைப்பற்றி வந்தனர்.
தலைமுடிக்குள் ஒளித்து வைத்திருந்த கடிதம்.
அந்த பெண் முன்னாள் அடிமை, பாடகி பெயர் ஸாரா என்றும் இதற்குக் கூலியாக பத்து பொற்காசுகளும் ஒரு போர்வையும் பெற்றுக் கொண்டாள் என்றும். ஷஷரவ்ளத்துல் காக் என்ற இடத்தில் ஒட்டகையின் அம்பாரியில் ஒரு பெண் இருப்பாள் அவளிடம் ரகசிய கடிதம் இருக்கிறது. கடிதத்தை வாங்கிக் கொண்டு அவளை போக விட்டு விடுங்கள். அவள் தர மறுத்தால் கழுத்தை துண்டித்து விடுங்கள்|| என்று நபி(ஸல்) சொல்லி அனுப்பினார்கள் என்றும் அது போல் அப்பெண் கொடுக்க மறுக்கவே நபி(ஸல்) சொன்னதை அவளுக்கு அறிவிக்கப்பட்டதும் தன் தலைமுடிக்குள் ஒளித்து வைத்திருந்த கடிதத்தை கொடுத்து விட்டாள் என்றும் சில நூல்களில் எழுதி வைத்துள்ளனர். ஆக இந்தக் கடிதம் கைப்பற்றப்பட்டு விட்டது.
மன்னித்து விட்டார்கள்.
இது பற்றி ஹாத்திப் (ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அதற்கு ஹாத்திப் (ரலி) அவர்கள், ஷஷநான் குறைஷpக் குலத்தைச் சார்ந்தவன் இல்லை. தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு உறவினர் பலர் மக்காவில் இருக்கிறார்கள். எனக்கு உறவினர்கள் இல்லாததால் மக்காவாசிகளுக்கு ஏதாவது உதவி செய்து அதற்கு பிரதி பலனாக அவர்கள் எனது மனைவி மக்களை காப்பாற்ற வேண்டும் என்று நான் விரும்பினேன்|| என உண்மையைக் கூறி விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹாதிப்(ரலி) அவர்களை மன்னித்து விட்டார்கள். ஆனால் உமர்(ரலி) அவர்கள் ஹாத்திப் துரோகி! அவரைக் கொன்றே தீர வேண்டும் என்று அனுமதி கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஹாத்திப் (ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்தவர் ஹாத்திப்பையும் சேர்த்துதான் அல்லாஹ் முஃமின்களே என்று இந்த ஆயத்தில் அழைக்கிறான் என்று கூறி அனுமதி மறுத்து விட்டார்கள். தீர்ப்பைக் கேட்ட ஹாத்திப்(ரலி) மகிழ்ச்சிப் பெருக்கினால் மயங்கி விழுந்து விட்டார்கள்.
சுய லாபம் தேடிக் கொண்டிருப்போரை அடையாளம் தெரிந்து கொள்வீர்கள்.
இந்த கடித சம்பவத்தை ஒட்டியதுதான் .அல் குர்ஆனின் 60 வது அத்தியாயமான அல் மும்தஹினா – சோதித்து அறிதல் என்ற அத்தியாயாத்தின் முதல் 9 ஆயத்துகளும் அதன் கடைசி ஆயத்தான 13வது ஆயத்தும். எனவே இந்த அத்தியாயத்தை ஆரம்பம் முதல் பாருங்கள். பார்த்தால் வெட்டி ஒட்டி எழுதி முஸ்லிம்களை காபிர்களாக்கி சுய லாபம் தேடிக் கொண்டிருப்போரை அடையாளம் தெரிந்து கொள்வீர்கள்.
நிச்சயமாக நேரான வழியிலிருந்து தவறி விட்டார்.
நம்பிக்கை (ஈமான்) கொண்டோரே! எனது பாதையிலும் எனது திருப்தியை நாடியும் அறப்போருக்காகப் புறப்படுவோராக நீங்கள் இருந்தால், எனது விரோதிகளையும் உங்கள் விரோதிகளையும் நீங்கள் அன்பு செலுத்தும் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களிடம் வந்துள்ள உண்மையை திட்டமாக நிராகரித்து விட்டனர். உங்களை பராமரிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வை நீங்கள் நம்பியதற்காக இத்தூதரையும் உங்களையும் (ஊரை விட்டு) வெளியேற்றினார்கள். அவர்களிடம் இரகசியமாக அன்பை செலுத்துகிறீர்கள். நீங்கள் பகிரங்கப்படுத்தியதையும் மறைத்ததையும் நான் நன்கு அறிபவன், உங்களில் இதைச் செய்பவர் நிச்சயமாக நேரான வழியிலிருந்து தவறி விட்டார். (60:1)
நீங்கள் காபிர்களாக ஆவதை அவர்கள் விரும்புகின்றனர்.
அவர்கள் உங்கள் மீது சக்தி பெற்றால் உங்களுக்கு எதிரிகளாகி விடுவார்கள். உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக தமது கைகளையும் நாவுகளையும் உங்களை நோக்கி நீட்டுவார்கள். நீங்கள் நிராகரிப்பாளர்களாக (காபிர்களாக) ஆவதை அவர்கள் விரும்புகின்றனர். (60:2)
உங்களுக்குப் பயன் தரவே மாட்டார்கள்.
உங்களுடைய உறவினர்களும் உங்களுடைய பிள்ளைகளும் மறுமை நாளில் உங்களுக்குப் பயன் தரவே மாட்டார்கள் உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிப்பான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பாhப்பவன்.(60:3)
அல்லாஹ் நமக்கு காட்டியுள்ள வழியாகும்.
அல்லாஹ் இந்த மூன்று வசனங்களின் மூலம் 1. ஹாதிப் பின் அபீபல்தஆ (ரலி) அனுப்பிய இரகசிய கடித செயல் குறித்து கடுமையாக கண்டித்துள்ளான். 2. இவர் யாருக்கு கடிதம் அனுப்பினாரோ அவர்கள் எவ்வளவு கடுமையான விரோதிகள் என்பதை நினைவூட்டியுள்ளான். 3. அவர்கள் எப்படிப்பட்ட எண்ணமுடையவர்கள் என்பதை அடையாளம் காட்டியுள்ளான். 4. எந்த மனைவி மக்களை காப்பாற்றுவதற்காக இரகசிய கடிதம் அனுப்பும் செயலை செய்தாரோ அந்த மனைவி மக்கள் மறுமையில் பயன் தர மாட்டார்கள் என்பதை சுட்டிக் காட்டியுள்ளான். இதற்குப் பிறகுதான் உங்களுக்கு இப்றாஹீம் (அலை) அவர்களிடமும் அவருடன் இருந்தோரிடமும் அழகிய முன் மாதிரி இருக்கிறது என்ற வசனத்தை இடம் பெறச் செய்துள்ளான். இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன பிறகும் ஏற்க மறுத்து எதிர்த்து முஸ்லிம்களை அழித்து விட வேண்டும் என்ற சதி திட்டத்துடன் செயல்பட்டுக் கொண்டு, அல்லாஹ்iயும் அவனது தூதரையும் நிராகரித்து விட்ட மக்கா காபிர்கள் போன்றவர்களைப் பார்த்துதான் இப்ராஹீம் நபி வழியில் எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று முஸ்லிம்கள் சொல்ல வேண்டும். இதுதான் இந்த ஆயத்துகளின் மூலம் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் காட்டியுள்ள வழியாகும்.
இவர்களுக்கு வழி காட்டியாக உள்ளவன் யார்.
உண்மையான முஸ்லிம்கள் அல்லாஹ்வுடைய வழி காட்டுதலின்படிதான் நடப்பார்கள். இனிமேல் தனது டாமினேட்டெல்லாம் த.மு.மு.க.வில் நடக்காது என்றதும் தனிமனித வழிபாட்டுடையவர்களுடன் வெளியேறி விட்டவரும் அவரது அணியினரும் த.மு.மு.க.வினரை நோக்கி இந்த ஆயத்தை படித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் இவர்களுக்கு வழி காட்டியாக உள்ளவன் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவரும் இவரது அணியினரும் ஜவாஹிருல்லாஹ்வை முஷ;ரிக் என்றும் தவ்ஹீது கொள்கை விரோதி என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் ஏன் ஜவாஹிருல்லாஹ்வை முஷ;ரிக்காக தவ்ஹீது கொள்கை விரோதியாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்? பிறர் மீது பலி சுமத்தியே இலாபம் அடைந்த அனுபவம்தானே தவிர வேறில்லை. இவர்கள் பின்னால் தவ்ஹீதுவாதிகள் என்போர் வர வேண்டும் என்பதற்காக ஜவாஹிருல்லாஹ்வை தவ்ஹீது கொள்கை விரோதி போல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
ஏகத்துவம் இதழே ஆதாரமாகவும் சாட்சியாகவும் உள்ளது.
ஜவாஹிருல்லாஹ் பற்றி அவர்கள் செய்து வரும் பிரச்சாரம் பொய் என்பதற்கு அவர்களே ஆதாரமாக உள்ளார்கள். கடையநல்லூரில் உள்ள மஸ்ஜித் முபாரக் இது தவ்ஹீதின் பெயரால் அமைப்பு நடத்தி வருபவர்களின் நிர்வாகத்தில் உள்ள பள்ளியாகும். இந்தப் பள்ளியில் 06.02.2004 அன்று ஜும்ஆ பேருரை ஆற்றியவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ். இதை 2004 ஏப்ரல் ஏகத்துவம் இதழில் அவர்களே செய்தியாக போட்டுள்ளனர். தவ்ஹீதின் பெயரால் அமைப்பு நடத்தி வருபவர்களின் பள்ளிகளில் முஷ;ரிக்களையோ தவ்ஹீது கொள்கைக்கு எதிரானவர்களையோ பேச அனுமதிப்பார்களா? ஜவாஹிருல்லாஹ் தவ்ஹீது கொள்கை விரோதியாக இருந்தால் இவர்களின் பள்ளியில் ஜும்ஆ பேருரை ஆற்ற விட்டிருப்பார்களா? எனவே ஜவாஹிருல்லாஹ் பற்றி இவர்கள் பரப்பி வரும் செய்தி பொய் என்பதற்கும் அவர்கள் நடத்தும் ஏகத்துவம் இதழே ஆதாரமாகவும் சாட்சியாகவும் உள்ளது அவர்கள் பொய்யர்களாக உள்ள அனைத்திலும் அவர்களே ஆதாரமாகவும் சாட்சிகளாகவும் உள்ளார்கள் அல்லவா அதில் இதுவும் ஒன்று.
கொலைகாரப்பாவிகளாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.
யார் ஒரு முஃமினைப் பார்த்து குஃப்ர் என்ற பண்பு இருப்பதாக அபாண்டமாகச் சொன்னாரோ அவர் அந்த முஃமினைக் கொலை செய்தவரைப் போன்றவராவார். அறிவிப்பவர் அபூகலாபா (ரலி) நூல் புகாரி, முஸ்லிம். இந்த ஹதீஸின் அடிப்படையில் பார்த்தால் அவர்கள் கொலைகாரப்பாவிகளாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் தான் நாடியவர்ககளை மன்னிப்பான். அதுவும் அவனது விஷயத்தில் தவறு இழைத்தவர்களைத்தான் மன்னிப்பான். மனிதர்களுக்கு தீங்கு செய்திருந்தால் அவர் ஷஹீதாக இருந்தாலும் மன்னிக்க மாட்டான். சம்பந்தப்பட்ட மனிதர்களும் மன்னிப்பதாக இருந்தால் அவராலும் இவ்வுலகில்தான் மன்னிக்க முடியும். மறுமையில் மன்னிப்பு என்பதெல்லாம் மனிதர்களுக்கு செய்த துரோகங்களுக்கு கிடையாது. எனவே அவதூறு பரப்பியவர்கள் இவ்வுலகில் சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மறுமையில் நன்மைகளை இழக்க வேண்டும். நன்மைகள் காலியாகி விட்டால் பாவங்களை சுமக்க வேண்டும். இறுதி முடிவு நரகமாகி விடும். நீங்கள் மறுமைக்கு அஞ்சுபவராக இருந்தால் அவதூறுகளை மூலதனமாக்கி செயல்படும் கூட்டத்தை விட்டு விலகி தவ்பாச் செய்யுங்கள். வஸ்ஸலாம்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.