முழுப் பூசணியை சோற்றில் மறைத்தவர்கள்.

நிச்சயமாக உமது இறைவனின் பிடி கடுமையானது. (அல்குர்ஆன் 85:12)

தலைப்பைப் பார்த்ததும் முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முடியாது என்பதுதானே பழமொழி. அதற்கு மாற்றமாக முழுப் பூசணியை சோற்றில் மறைத்தவர்கள் என்று தலைப்பு உள்ளதே. யார் மறைத்திருப்பார்கள்! என்று ஆச்சரியப்படுகிறீர்கள் அப்படித்தானே. 

ஆச்சரியப்படுவதால் நீங்கள் நவீன தக்லீதி இல்லை என்பது தெரிகிறது. நவீன தக்லீதியாக இருந்தால் ஆச்சரியப்பட மாட்டீர்கள். இலங்கை சென்ற பி.ஜே. கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட செய்திதான் சோற்றில் மறைத்த பூசணியாக உள்ளது. அது என்ன என்பதை இறுதியில் பார்ப்போம். 

அதன் துணைச் செய்திகளை முதலில் பார்ப்போம். பி.ஜே. கொடி அறிவித்ததும் தவ்ஹீதை சொல்ல கொடி எதற்கு என்று பொங்கி எழுந்த மாவீரர்களில் ஒருவர் எம். எஸ். சுலைமான் என்பவர். விடுவாரா முபாஹலா பூச்சாண்டி ஒரே ஒரு மிரட்டல்தான் விட்டார். 

அப்படியே ஆடிப் போய் விட்டார் சுலைமான்;. பாவம் பிழைப்பு போய் விடுமே. பிறகு என்ன சரண் அடைவதுதான் கதி என சரண் அடைந்து விட்டார். அண்ணன் கொடுத்த விளக்கத்தில் தெளிவு(?) அடைந்து கொடி தேவை என புரிந்து விட்டேன் என்று கூறி விட்டார்.

பி.ஜே. நாடு கடத்தப்படவில்லை.

இருந்தாலும் அண்ணன் நம்ப வேண்டுமே என்பதற்காக அவர் மனங் குளிர ஏதாவது பேச வேண்டுமே என்று காத்து இருந்தார். கிடைத்தது இலங்கையிலிருந்து பி.ஜே. நாடு கடத்தப்பட்ட செய்தி. 25.3.05 ஜும்ஆவில் சுலைமான் ஆற்றிய ஆய்வுரையே நாடு கடத்தல் என்றால் என்ன என்பதுதான்.  

சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டால்தான் நாடு கடத்தினார்கள் என்று சொல்ல முடியும். அந்நிய நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதை நாடு கடத்தினார்கள் என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அவன் மடையன். இதுதான் அவரது ஆய்வுரை(?) இந்த ஆய்வுரையைக் கேட்ட படிக்காதவர்களும், ”பெரிய தமிழ் பண்டிதர் பேராசிரியர் என்ற நினைப்போ” என்று எள்ளி நகைத்துள்ளனர்.

யாரை மடையன் என்று பேசியுள்ளார்.

ஒரு இடத்தை தானாக கடந்து சென்றால் கடந்து சென்றார் என்பதும் இன்னொருவரால் கடத்தி விடப்பட்டால் கடத்தப்பட்டார் என்பதும் அனைத்து மொழிகளிலும் உள்ளதுதான். இந்த அளவுக்கு கூட விபரம் தெரியாத கூ முட்டையா சுலைமான். இங்கே அவர் மடையன் என்று கூறியுள்ளது 

டி.வி.யில் செய்தி வாசித்தவர்களையா? செய்தியை கேட்டு சொன்னவர்களையா? எழுதியவர்களையா? யாரை மடையன் என்று பேசியுள்ளார். இதில்தான் எம். எஸ். சுலைமான் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார். 

பி.ஜே.யைப் பொறுத்தவரை சுலைமான் தனக்காக யாரையோ மடையன் என்று பேசியுள்ளார் என்று எண்ணி சந்தோஷப்படலாம். உள்ளபடியே அவர் யாரை மடையன் என பேசியுள்ளார்? 

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை ஒட்டி அரபு நாடுகளில் கலவரம் செய்த பாகிஸ்தான், பங்களாதேஷ்காரர்கள் அரபு நாடுகளிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்கள். இதை நாடு கடத்தினார்கள் என்றே பி.ஜே. பல கூட்டங்களில் பேசியுள்ளார். கொடியை எதிர்த்ததால் மிரட்டப்பட்ட சுலைமான் யாரை மடையன் என்று கூறுவதற்காக இவ்வாறு பேசியுள்ளார்; புரிந்து விட்டீர்களா.

வெளி நாடு என்றாலே குளிர் காச்சல்தான் வரும்.

இலங்கையில் உள்ள அதிகாரிகள் நீங்கள் சாதாரண விஸாவில் வந்துள்ளீர்கள். அதனால் நாங்கள் பாதுகாப்பு தர முடியாது. வி.ஐ.பி. விஸாவில் வாருங்கள் என்று கூறியதாக சுலைமான் பேசி உள்ளார். பி.ஜே.யோ தனக்கு ராணுவ பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாக கூறி உள்ளார். இதில் இருவரில் ஒருவர் பொய்யராகிறார்கள் என்பதை விட்டு விடுவோம். 

சுலைமான் பேச்சை கேட்டுவிட்ட பி.ஜே.யானிகளோ வி.ஐ.பி. விஸாவில் பி.ஜே. மீண்டும் இலங்கை போவார் என பீற்றிக் கொண்டிருக்கிறார்கள். தெம்பு இருந்தால் திராணி இருந்தால் ஒரு வாரத்திற்குள் வி.ஐ.பி. விஸாவில் வரட்டும் பார்ப்போம் என இலங்கை முஸ்லிம்கள் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

இன்னும் சிலர் ஒரு மாதம் தவணை தருகிறோம் இலங்கைக்கு வரட்டும் பார்ப்போம் என்கிறார்கள். போவாரா சவடால் மன்னர். இனி வெளி நாடு என்றாலே அவருக்கு குளிர் காச்சல்தான் வரும்.

பொய்யர்கள் என்று பறை சாற்றி பறந்து கொண்டிருக்கும் கொடி.

25.3.05 அன்று டி.என்.டி.ஜே. மாநில கூட்டம் கூடுவதாக இருந்தது. கொடி காக்க இருக்கும் குமரர்களுக்கும் கொடி வேண்டாம் என்றுள்ள கிழவர்களுக்கும் மோதலான நிலையில் கூட்டம் நடத்த வேண்டாம் என ஒத்தி வைத்து விட்டார் ராஜ தந்திரி பி.ஜே. 

ஒவ்வொருவரையாக கூப்பிட்டு தனித்தனியாக மிரட்டி எதிர்ப்புகளை குறைத்து விட்டுத்தான் மாநில கூட்டத்தை கூட்டுவார். சுலைமான் மாதிரி மற்ற மான்களும் மண்ணைக் கவ்வப் போகிறார்களா? நாங்கள் கவரி மான்கள் என நிரூபிக்கப் போகிறார்களா? 

பி.ஜே.யும் அவரது அணியினரும் பொய்யர்கள் பொய்யர்கள் பொய்யர்கள் என்று பறை சாற்றி பறந்து கொண்டிருக்கும் டி.என்.டி.ஜே. கொடியை(?) பல ஊர்களில் ஏற்றி விட்டார்கள். மேலப்பாளையத்தில் மட்டும் அந்தக் கொடி இது வரை ஏற்றப்படவில்லை.

கவரி மானா? மண்ணைக் கவ்வி விட்ட சுலைமானா?

தவ்ஹீதை சொல்ல கொடி எதற்கு? அந்நஜாத் ஆரம்பித்த போது கொடியுடன்தான் ஆரம்பித்தோமா? தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா என ஆரம்பித்தோமே அதற்கு கொடி இருந்ததா? ஏ.கியூ.ஹெச். என ஆரம்பித்து அது ஜே.ஏ.கியூ.ஹெச். என மாற்றப்பட்ட போதும் கொடி அறிவிக்கப்பட்டதா? தவ்ஹீது பிரச்சாரக் குழு, இஸ்லாமிய கல்விச் சங்கம், அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு என்றெல்லாம் ஆரம்பித்து செயல்பட்டோமே அப்பொழுதெல்லாம் அறிவிக்கப்படாத கொடி இப்பொழுது எதற்கு? 

இப்படி கர்ஜித்துள்ள லுஹாதான் இந்தக் கொடியை மேலப்பாளையத்தினுள் நுழைய விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார். லுஹாவும் சுலைமானும் நண்பர்கள் போல் வெளியில் காட்டிக் கொண்டாலும் தங்களுக்கென தனித் தனி கோஷ்டிகளை வளர்த்த வண்ணமே உள்ளனர். 

அக்பர் ஞானியார், ஹைதர் என சிலர் உள்ளூர்க்காரர் லுஹாவின் அணியில் இருப்பது போல் நடித்துக் கொண்டு தென்காசி சுலைமானுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கொடி எதிர்ப்பில் லுஹா கடைசி வரை கவரி மானாக இருப்பாரா? மண்ணைக் கவ்வி விட்ட சுலைமானாக| ஆவாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுவெல்லாம் நமக்குத் தேவையா?

துபையில் பி.ஜே.யின் ஒவ்வொரு கூட்டங்களும் தடையான தகவல் உடனுக்குடன் லுஹாவுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. லுஹாவும் உடனுக்குடன் இன்று இந்த கூட்டம் இத்தனை மணிக்கு தடை செய்யப்பட்டது என்று லைவ் செய்து கொண்டிருந்தார். துபையிலிருந்து தாயகம் திரும்பிய பி.ஜே. செய்த முதல் பணி லுஹாவுக்கு டோஸ் விட்டதுதான். 

கொடி விஷயத்திலும் செம டோஸ் விழுந்துள்ளது. எனவே இந்த வாரம் ஜும்ஆ மேடை ஏறினால் லுஹா சும்மா இருந்தாலும் லுஹாவின் வாய் சும்மா இருக்காது. இலங்கையில் நடந்தது என்ன என்பதை போட்டு உடைத்து விடும். எனவே இந்த வாரம் ஜும்ஆ உரை வேண்டாம் என சும்மா இருந்து விட்டார் லுஹா. 

இருந்தாலும் 300 பேராக இருந்து 160 பேராக ஆகிவிட்ட பொதுக்குழுவில் மஸ்ஜிதுர்றஹ்மான் பணம் பேங்கில் போடாமல் 6 பேர்களிடம் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ள ரகசியம். கோட்டூர் ரபீக்கை மாவட்ட தலைவராக ஏற்றுள்ளதில் உள்ள நிர்ப்பந்தம். 

பாளையில் த.மு.மு.க. மாவட்ட தலைவரை கொல்ல நடந்த கொலை முயற்சி வழக்கில் தினமும் போலீஸில் கையெழுத்திட்டு வருவது. அந்த வழக்கு வகைக்கு இது வரை ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளது. இது போன்ற பல உளக் குமுறல்களை போட்டு உடைத்து இதுவெல்லாம் நமக்குத் தேவையா? என பேசியுள்ளார் லுஹா.

மன்னிப்புக் கேட்டு மண்டியிட்டு விடுவார்.

முன்பெல்லாம் மாவட்ட அதிகாரிகளை சந்திக்க ஸைபுல்லாஹ் இன்றி செல்லாத நாம் கோட்டூர் ரபீக்கை தவிர்ப்பதற்காக ஸைபுல்லாஹ்வையும் தவிர்த்து வருகிறோம் என்றும் நெருங்கியவர்களிடம் கூறி குமுறியுள்ளார் லுஹா. 

இவற்றுக்கெல்லாம் சேர்த்து பி.ஜே. இடமிருந்து கிடைக்க இருக்கும் தீர்ப்பை எதிர் நோக்கி உள்ளா லுஹா மன்னிப்புக் கேட்டு மண்டியிட்டு விடுவார் என்பது சுலைமான் அணியினரின் கணிப்பு. 

இப்பொழுது டி.என்.டி.ஜே.யிலிருந்து முதலில் யாரை கழட்டி விடுவது லுஹாவையா பாக்கரையா என்ற கடுமையான ஆலோசனையில் உள்ளார் பி.ஜே. பொருளாதார வசதி இல்லாத காலங்களில் முஸ்லிம் பெண்மணி ஜக்கரிய்யாவின் ஸாஜிதா புக் சென்டருக்கு உரிமை கொடுத்து ராயல்டி பெற்று புத்தகம் எழுதி வந்தார் பி.ஜே. 

தனியாக புத்தக வியாபாரம் செய்ய வழி கிடைத்ததும் மூன் பப்ளிகேஷன் துவங்கினார். ஜக்கரிய்யா மீது ஏதாவது குற்றம் சுமத்தி ஒதுக்கினால்தான் தனது புத்தக கடை வியாபாரம் நடக்கும் என்றெண்ணி ஜக்கரிய்யா மீது குற்றச்சாட்டுகளைக் கூறி ஒதுக்கினார்.

மூன் இட்டுள்ள கட்டளை.

சமீப காலம் வரை பாக்கரின் மீடியா வேல்டு மூலம் தனது பேச்சுக்களை விற்று வந்த பி.ஜே. தனது மைத்துனர் ஷம்சு மூலம் மூன் கிரியேஷன்ஸ் துவங்கி சி.டி.க்களை விற்க ஆரம்பித்து விட்டார். மீடியா வேல்டை ஓய்த்தால்தான் மூன் கிரியேஷன்ஸ் எடுபடும் வியாபாரம் பெருகும் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. எனவே மீடியா வேல்டை எப்படி ஓய்ப்பது என்று அளவுக்கதிமாக யோசித்த வண்ணம் உள்ளார். 

அதுமட்டுமல்ல இப்பொழுதுள்ள சூழ் நிலையில் முதலில் பாக்கர் மீதுதான் ஏதாவது புதிய ஒரு குற்றச்சாட்டுகளைக் கூறி ஒதுக்க வேண்டும் என்பது மூன் இட்டுள்ள கட்டளை என்றும் தெரிகிறது. எனவே இப்போதைக்கு லுஹாவுக்கு மன்னிப்பு கிடைக்கலாம். 

இதற்கிடையில் சுலைமான் அணியைச் சார்ந்த ஞானியார் என்பவர் மஸ்ஜிதுர்றஹ்மானில் தொழச் சென்ற செய்யது அலி என்பரை பார்த்து இவண் பக்கத்தில் நின்று தொழாதீர்கள் என்று லுஹா வழியில் கூறியுள்ளார். ஜமாஅத் நடந்து கொண்டிருக்கும்போது வரும் லுஹா, தான் விரும்பாதவர்கள் ஸப்பில் நின்றால் பக்கத்தில் நிற்க மாட்டார். 

ஜமாஅத் நன்மையை இழந்தாலும் பரவாயில்லை என வேறு யராவது வருகிறார்களா என்று எதிர் பார்த்து காத்து நிற்பார். அந்த வழியை பின் பற்றக் கூறி வாய்த் தகராறு செய்து வம்பிலுத்து அடிதடியில் இறங்கி உள்ளார் ஞானியார்.

போலீஸில் உங்களை காட்டிக் கொடுக்கவில்லை.

இதைப் பார்த்த லுஹாவும் சுலைமானும் ஓடி விட்டனர். வம்பிலுத்து சண்டை செய்த ஞானியார் முந்திக் கொண்டு போலீஸில் போய் புகார் செய்துள்ளார். இவர்கள் ஏற்கனவே த.மு.மு.க.வினரை அடித்து விட்டு முந்திக் கொண்டு பொய்ப் புகார் கொடுத்தவர்கள் என்பதை அறிந்து வைத்துள்ளவர் காவல் துறை அதிகாரி. எனவே செய்யது அலியை கூப்பிட்டு விசாரித்து விட்டு உண்மையை அறிந்து ஞானியார் மீது வழக்கு பதிந்து விட்டார். 

இதற்குப் பிறகும் திருந்தாத ஞானியார் செய்யது அலியை பார்த்து க்கா தூ என துப்பி உள்ளார். உடனே செய்யது அலி லுஹாவிடம் சென்று முறையிட்டுள்ளார். மேலும், உங்களால் தூண்டப்பட்டு பல கேஸ்களில் சிறை சென்றவன் நான். அப்பொழுதும் போலீஸில் உங்களை காட்டிக் கொடுக்கவில்லை என்று பழைய சம்பவங்களையும் நினைவுபடுத்தியுள்ளார் செய்யது அலி. அப்பொழுது தனியாக இருந்த லுஹா தயவாகப் பேசி செய்யது அலியை சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளார்.

வீரம் வந்த வழி தெரியாமல் ஓடி விட்டது.

பிறகு சூரப்புலிகள் லுஹாவும் சுலைமானும் 20 பேரை புடை சூழ வைத்துக் கொண்டு செய்யது அலியை கூப்பிட விட்டுள்ளனர். 10 பேர் தன் பின்னால் இருந்தால் வீரம் கொப்பழிக்க பேசும் மைக் மாவீரர் லுஹா செய்யது அலியைப் பார்த்து உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று மிரட்டி இருக்கிறார். 

20 பேர் கூடி இருந்து கொண்டு கூப்பிட விட்டதும் நான் மட்டும் தனியாக வந்துள்ளதிலிருந்து ஒரு முடிவுடன் வந்திருக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று செய்யது அலி பதில் கூறியுள்ளார். இப்படி பதில் கூறியதும் லுஹாவின் வீரம் வந்த வழி தெரியாமல் ஓடி விட்டது. 

ஏனென்றால் ஜிஹாத் ஜிஹாத் என தூண்டி விட்டு பல சம்பவங்களை நடத்தியவர் லுஹா. போலீஸ், கேஸ், சிறை என கஷ்டப்பட்டவர்கள் செய்யது அலி போன்ற அப்பாவிகள். பிறகுதான் இவர்கள் தூண்டி விட்டு காட்டிக் கொடுக்கும் கூட்டம் என விளங்கி திருந்தி இவர்களை விட்டும் ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் செய்யது அலி. எனவே செய்யது அலியின் பதிலைக் கேட்டதும் 20 பேருடனிருந்தும் லுஹாவின் வீரம் வந்த வழி தெரியாமல் ஓடி விட்டது.

முடிவெடுக்கப்பட்ட கொடி அல்ல களவாடப்பட்ட கொடி.

பி.ஜே.யும் அவரது அணியினரும் பொய்யர்கள் என்பதை உணர்வு, ஏகத்துவம் மற்றும் அவர்களது உரைகளும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. அது போல் அவர்கள் அறிவித்த கொடியும் பொய்யர்கள் பொய்யர்கள் பொய்யர்கள் என்று பறை சாற்றி பறந்து கொண்டிருக்கிறது என குறிப்பிட்டிருந்தோம். 

அதற்கு என்ன ஆதாரம் என்கிறீர்களா? 4 அளவுகோலை வைத்து உறுப்பினர்கள் தயாரித்து அனுப்பிய மாதிரிகளில் கொடி முடிவெடுக்கப்பட்டது என்ற பொய்யை மார்ச் 4-10,2005 உணர்வு 3 ஆம் பக்கம் கட்டம் கட்டி எழுதி இருந்தார்கள். 

இது முடிவெடுக்கப்பட்ட கொடி அல்ல. உணர்வு, முஸ்லிம் டிரஸ்ட், முஸ்லிம் மீடியா டிரஸ்ட்கள் எப்படி த.மு.மு.க.விலிருந்து களவாடப்பட்டதோ, அதுபோல் இந்தக் கொடியும் ஐ.ஜே.பி.யிடமிருந்து களவாடப்பட்டதாகும். 

இதை தலைகீழாக வைத்தால் அருந்ததியினர் கொடி. அறிவித்துள்ளபடி வைத்தால் அக்ரம்கான் உடைய ஐ.ஜே.பி. கொடி. 

பிற கட்சி அல்லது அமைப்புகளின் கொடியிலிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும் என எழுதி விட்டு ஐ.ஜே.பி. கொடியைத்தான் ஆய்வு செய்து முடிவு எடுத்துள்ளது போல் அறிவித்து ஏமாற்றியுள்ளனர். 

டி.என்.டி.ஜே. என்ற பெயரால் பல குழப்பம் வருகிறது என்று கூறி அதை டி.எம்.டி. தமிழ்நாடு முஸ்லிம் ஜமாஅத் என மாற்றலாம் என்று ஆலோசித்து வரும் அண்ணன். இந்த ஐ.ஜே.பி. கொடியால் குழப்பம் வருகிறது என்று கூறி இனி பி.ஜே.பி கொடியைப் பிடிப்போம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பாவம் த.த.ஜ.வினர். சரி முழுப்பூசணியை சோற்றில் மறைத்துள்ள விஷயத்திற்கு வருவோம்.

எம்.எஸ். சுலைமானின் இந்த வாக்கு மூலமே சரியான சான்றாகும்.

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட பி.ஜே. தன் பங்குக்கு அவிழ்க்க வேண்டி புழுகு மூட்டைகளை விண் டி.வி.யில் அவிழ்த்து விட்டுள்ளார். தான் என்பதை நிலை நாட்ட தயாரிக்கப்பட்ட இந்த செட்டப் பேட்டியை ஒன்றுக்கு 2 முறை ஒளி பரப்பி உள்ளார்கள். 

இலங்கையில் தான் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்படதாக செய்தி ஊடகங்கள் பொய்களை பரப்பி விட்டன. விஸாவை கேன்சல் செய்து ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்து விட்டார்கள் என்கிற மாதிரி கதைகளை விட்டுள்ளார். இயல்பாக அனுப்புவதாக இருந்தால் விஸாவை கேன்சல் செய்து என்ற வார்த்தைக்கே இடமில்லை. 

எம்.எஸ். சுலைமான் தனது ஜும்ஆ உரையில் இலங்கை போலீஸ் உங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்று இந்திய அதிகாரி பி.ஜே. இடம் கேட்டார்கள் என்று கூறியுள்ளார். கைது செய்யப்படாத ஒருவரிடம் போய் போலீஸ் உங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்று கேட்பார்களா? 

இலங்கையில் பி.ஜே. கைது செய்யப்பட்டார் என்பதற்கு எம்.எஸ். சுலைமானின் இந்த வாக்கு மூலமே சரியான சான்றாகும். பி.ஜே. இப்படியெல்லாம் பொய் சொல்வார். அவர் பொய் எடுபடக் கூடாது என்பதற்காகவே சுலைமான் இப்படி ஹிக்மத்தாக பி.ஜே.க்கு ஆதரவாகப் பேசுவதுபோல் பேசி பி.ஜே. கைது செய்யப்பட்ட உண்மையை உறுதி படுத்தியுள்ளார்.

மக்கள் மறந்து விட்டார்கள் என்று எண்ணி விட்டார்.

பி.ஜே. தனது ஊடகத்தின் பொய்களை உண்மையாக்க மற்ற செய்தி ஊடகங்கள் பொய்களை பரப்பி விட்டன என்று கூறியுள்ளார். அலாவுதீனுக்கு மர்ம ஸ்தானத்தில் பாதிப்பு ஏற்பட்டு மூத்திரம் வரவில்லை ரத்தம் வருகிறது என்று ஜும்ஆக்களில் உரையாற்றினார்கள். 

பிறகு மர்ம ஸ்தானம் என்று சொன்னது விதைக் கொட்டையைத்தான் என்று வெட்கமின்றி வியாக்கியானம் சொன்னார்கள். 

மூத்திரம் வரவில்லை ரத்தம் வருகிறது என்று ஜும்ஆக்களில் உரையாற்றினீர்களே அலாவுதீனுக்கு விதைக் கொட்டை வழியாகவா மூத்திரம் வருகிறது என்று கேட்டதற்கு இன்று வரை பதில் சொல்லவில்லை. 

பகிரங்கமாக அறிவிக்காமல் அபுதாபியில் நடத்திய கூட்டத்திலும் வெட்கமின்றி அலாவுதீனை நிற்க வைத்துக் காட்டி விதைக் கொட்டை விளக்கம் கூறினார்பி.ஜே. 

தான் கூறிவிட்ட பொய்களை உண்மையாக்க வெட்கமின்றி எதுவும் செய்வார் பேசுவார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு சான்றாகும். 40 பேர் உணர்வு அலுவலகத்துக்குள் புகுந்து தாக்கினார்கள் என்று இதே விண் டி.வி. மூலம்தான் பொய்களைப் பரப்பினார். இதையெல்லாம் மக்கள் மறந்து விட்டார்கள் என்று எண்ணி இலங்கை பயணத்தைப் பற்றி பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார்.

பி.ஜே. அணியினர் கொடும்பாவி எரித்துள்ளார்கள்.

இலங்கை அமைச்சர் அலவி மவுலானாவை ஒரு முஸ்லிமே இல்லை என்று பேசியுள்ளார் பி.ஜே. இவர் இலங்கையினுள் நுழைய முடியாமல் தடை செய்யப்பட்டு ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்டார். 

ஸும்ரி தம்பி இலங்கை அமைச்சர் அலவி மவுலானாவுக்கு போன் போட்டுப் பேசினார். (இவர் யார் என்றால் இலங்கையில் தவ்ஹீது எழுச்சி ஏற்படுத்திய நிஸார் குவ்வத்தி உடைய மகன். 

1985 க்கு முந்தைய வான் சுடர் பத்திரிக்கையை படித்தவர்களுக்கு நிஸார் குவ்வத்தியை தெரியும். இவர் இறந்த பிறகுதான் தமிழகத்தில் அந்நஜாத் பத்திரிக்கை துவங்குவது சம்பந்தமான பணி துவங்கியது.) 

அமைச்சர் அலவி மவுலானா மாற்று கருத்துடையவராக இருந்தாலும் நிஸார் குவ்வத்தி மகன் என்று சொன்னதும் விமான நிலையத்துக்கு போன் போட்டு தடையை நீக்கி பி.ஜே. இலங்கையினுள் நுழைவதற்கு உதவி செய்தார். 

அது மட்டுமல்ல பி.ஜே.யின் பாதுகாப்புக்காக 12 கமாண்டோக்களை – அதிரடிப்படைகளை ஏற்பாடு செய்தார். இந்த அளவுக்கு அமைச்சர் அலவி மவுலானா உதவி செய்தார். இதை நாம் சொல்லவில்லை. இலங்கை பி.ஜே. அணியினர்தான் பெருமையாக கூறிக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவரைத்தான் ஒரு முஸ்லிமே இல்லை என்று பி.ஜே. பேசியுள்ளார் பி.ஜே. அணியினரோ கொடும்பாவி எரித்துள்ளார்கள்.

தான் என்ற பெருமையைத்தான் நிலை நாட்டினார்.

இவ்வளவு உதவி செய்த அமைச்சர் அலவி மவுலானாவை விட்டு விடுவோம். இவரை கைது செய்து இலங்கை போலீஸார் கொண்டு போய் விட்டார்கள். இப்பொழுது ஏதோ பெரிய போராட்டமெல்லாம் நடத்துவதாக பீற்றிக் கொள்ளும் இவரை இலங்கைக்கு அழைத்தவர்களோ இவர் கைது செய்யப்பட்டதும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. 

தாங்கள் தப்பினால் போதும் என ஓடி விட்டார்கள். ஓடி இலங்கையில் உள்ள இந்திய தூரகத்தில் போய் சரண் அடைந்து பி.ஜே.யை காப்பாற்றுமாறு வேண்டி நின்றார்கள்;. அவரை விடுதலை செய்து தர வேண்டாம். வழக்கு எதுவும் பதிந்து விடாமல் உடனடியாக இந்த நாட்டிலிருந்து கடத்தி விட்டால் போதும் என தூதரக அதிகாரிகளிடம் கெஞ்சி இருக்கிறார்கள். அவர்கள் கெஞ்சுவதைப் பார்த்து இறக்கப்பட்ட இந்திய அதிகாரிகள் 

இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஜெயிலில் தள்ளி விடாமல் காப்பாற்றி விட்டார்கள். இமிக்கிரேஷன், கிரிமினல் கோர்ட்டுகளில் கொண்டு போய் ஆஜர்படுத்தும் முன் இந்திய அதிகாரிகள் தலையிட்டிருக்காவிட்டால் இமிக்கிரேஷன் கோர்ட் வழக்கிலும் கிரிமினல் வழக்கிலும் பதிந்து இலங்கை ஜெயிலுக்குள் நீண்ட நெடுங்காலத்திற்கு தள்ளப்பட்டிருப்பார். பி.ஜே. 

நன்றியுள்ள நல்ல மனிதராக இருந்தால் இவர் தண்டிக்கப்பட்டு இலங்கை சிறையில் தள்ளப்பட இருந்த இக்கட்டுகளிலிருந்து காப்பாற்றி விட்ட இந்திய தூதரக அதிகாரிகளுக்கு டி.வி. நிகழ்ச்சி மூலம் நன்றி கூறி இருப்பார். டி.வி. மூலம் தான் என்ற பெருமையைத்தான் நிலை நாட்டினார். நன்றி கூறவே இல்லை.

பி.ஜே. இலங்கைக்கே செல்லவில்லை.

தென்னிந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் அறிஞர் ஜைனுல் ஆபிதீன் குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இது தீபம் போன்ற இலங்கை தொலைக்காட்சிகளிலும் டான் மியூசிக் தொலைக் காட்சியிலும் சொல்லப்பட்ட செய்தியாகும். இந்த தொலைக் காட்சிகளை பார்க்கக் கூடியவர்களில் பலர் இந்த செய்தியை கேட்டுள்ளார்கள். 

இலங்கையில் பி.ஜே. கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்த ஓருவர் துபையிலுள்ள டி.என்.டி.ஜே. கிளை அலுவலகத்திற்கு போன் செய்துள்ளார். அங்கு பொறையாறு ஜக்கரிய்யா என்பவர் இருந்திருக்கிறார். அவரிடம், ”இலங்கையில் பி.ஜே. கைது செய்யப்பட்டதாக சொல்கிறார்களே என்ன விஷயம்? என்ன தப்பு பண்ணினார்? எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்? என்று கேட்டுள்ளார். 

உடனே பி.ஜே.யை பின்பற்றுபவர்களுக்கே உரிய அநாகரீகமான வார்த்தைகளை உதிர்த்து விட்டு பி.ஜே. கைது செய்யப்பட்டதாக எவன் சொன்னான்? அந்த ஆள் பேரைச் சொல்லு. பி.ஜே. இலங்கைக்கெல்லாம் போகவில்லை என்று காட்டு கத்து கத்தி இருக்கிறார்.

பி.ஜே. சிலோனுக்கு போகவே இல்லை

சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் அதே கிளைக்கு போன் செய்துள்ளார். இர்பான் என்பவர் போனை எடுத்து விட்டு கும்பகோணம் அஷ்ரப் பாட்சா என்பவரிடம் கொடுத்துள்ளார். போன் போட்டவர் அவரிடம் இதே கேள்வி கேட்டுள்ளார். அவரும் பி.ஜே.யை பின்பற்றுபவர்களுக்கே உரிய வார்த்தைகளை உதிர்த்து விட்டு பி.ஜே. சிலோனுக்கு போகவே இல்லை என்று கூறி இருக்கிறார். 

இப்பொழுது புரிந்து விட்டீர்களா முழுப் பூசணியை சோற்றில் மறைத்தவர்கள் யார் என்று. ஊரறிய உலகறிய உருவாக்கப்பட்ட டிரஸ்ட்டையே முழுங்கி விட்டவர்களுக்கு முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது என்ன பெரிய கஷ்டமா? எனவே பி.ஜே. இலங்கைக்கே போகவில்லை என்று கூறி விட்டார்கள். இந்த மாதிரி ஆட்கள்தான் இப்பொழுது பி.ஜே. பின்னால் உள்ளார்கள்.

பெரிய கேவலம் வேறு எதுவும் இல்லை.

குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் மார்க்கப் பிரச்சாரம் செய்ய வாருங்கள் என்று 1986லிருந்து வெளிநாடுகளுக்கு அழைக்கப்பட்டவர் பி.ஜே. அப்பொழுதெல்லாம் வர மறுத்தார். பிரச்சாரம் செய்ய வெளிநாடு செல்வது இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டது போன்று சித்தரித்தார். 

இன்று தான் என்பதை நிலை நாட்ட வெளிநாடுகளுக்கு தனது பரிவாரங்களுடன் படையெடுத்து வருகிறார். ஒரு நாட்டின் உள்ளே நுழைய முடியாமல் திரும்பச் சென்றால் கூட அது பெரிய கேவலம் இல்லை. 

ஒரு நாட்டிற்குள் நுழைய விட்டு. அங்கு சென்ற திட்டங்கள்படி எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த முடியாமல் மூலை முடுக்குகளில் கூடிப் பேசுவது, அடி உதைகளுக்குள்ளாகி ஓடுவது, நாடு கடத்தப்படுவது போன்ற நிகழ்வுகளைவிட பெரிய கேவலம் வேறு எதுவும் இல்லை. 

இஸ்லாமிய பிரச்சாரத்திற்காகச் சென்று இது மாதிரியான பாதிப்புகளை அடைந்தால் நிச்சயமாக மறுமையில் பன் மடங்கு நன்மை உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

தவ்ஹீதுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு அல்ல தான் என்ற அகம்பாவத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பு.

தனது தான் தோன்றித்தனமான செயல்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பை தன்னுடைய சாதுர்யமான வார்த்தையைக் கொண்டு தவ்ஹீது கொள்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்பாக சித்தரிப்பது பி.ஜே.யின் வழக்கம். அந்த வழக்கப்படி இலங்கையில் இவருக்கு ஏற்பட்ட எதிர்ப்பையும் தன்னுடைய சாதுர்யமான வார்த்தையைக் கொண்டு தவ்ஹீது கொள்கை எதிர்ப்பாக சித்தரித்துள்ளார். 

1992 முதல் 5 முறை இலங்கை சென்று வந்துள்ளார். அதில் 3 தடவை மாற்று கருத்துடையவர்களுடன் விவாதம் செய்வதற்கென்றே சென்று விவாதம் செய்தும் வந்துள்ளார். 

அதில் ஒரு நிகழ்ச்சி பி.ஜே. காபிராகி விட்டாரா என்ற தலைப்பிலும் விவாதம் நடந்துள்ளது. அப்பொழுதெல்லாம் ஏற்படாத எதிர்ப்பு இப்பொழுது ஏற்பட்டுள்ளது என்றால் இதை தவ்ஹீது கொள்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்பு என்று எப்படிச் சொல்ல முடியும். 

தான் என்ற அகம்பாவத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பு. வெளிநாடுகளுக்கே செல்ல மாட்டேன் என கூறி விட்டு தான் என்பதை நிலை நாட்டவும் தனது அகம்பாவத்துக்கும் வரட்டுக் கவுரவத்திற்கும் எதிராக உள்ளவர்களை அழித்தே தீருவேன் என்ற சபதத்துடனும் சென்றதால் ஏற்பட்ட எதிர்ப்பு.

ஹிதாயத்தற்காக துஆச் செய்வோம்.

இனியும் திருந்தாவிட்டால் இது போன்ற இழிவைத்தான் அடைய நேரிடும் என்பதில் சந்தேகமில்லை. அறிவுள்ள மக்களுக்கு இவர் ஒரு படிப்பினையாகும். 

வரட்டுக் கவுரவம் பிடித்த தனது ஆதாயத்திற்காக சமுதாயத்திற்கும் சன் மார்க்கத்திற்கும் இவர் செய்த துரோகங்களை ஒப்புக் கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்டு திருந்த வேண்டும். இல்லை என்றால் அல்லாஹ்வுடைய பிடி கடுமையாக இருக்கும். 

அது வரும் முன் மனம் வருந்தி திருந்திட வேண்டும். நாமும் அவரது ஹிதாயத்தற்காக துஆச் செய்வோம். வஸ்ஸலாம்.
அன்புடன்: கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி.

பொய் சத்தியம் செய்து அல்லாஹ்வை சாட்சியாக்குபவன்.

(நபியே! உம்மிடம்) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி(ப்பேசும்பொழுது) தன்னுடைய (சாதுர்யமான) வார்த்தையைக் கொண்டு உம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்கக்கூடிய (அக்னஸ் இப்னு ஷரீக் போன்ற) ஒருவன், அம்மனிதர்களில் உண்டு. அவன் (உம்மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறி) தன் மனதிலுள்ளவற்றிற்கு (சத்தியம் செய்து) அல்லாஹ்வை சாட்சியாக்குவான். (உண்மையில்) அவன்தான் (உமக்குக்) கொடிய விரோதி. அவன் (உங்களிலிருந்து) விலகினாலோ, பூமியில் விஷமம் செய்து, (உங்கள்) விவசாயத்தையும் கால் நடைகளையும் அழித்துவிட முயற்சி செய்கின்றான். விஷமத்தை அல்லாஹ் உவப்பதில்லை. தவிர, நீ அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்! (விஷமம் செய்யாதே!) என அவனுக்குக் கூறப்பட்டால், (அவனுடைய ) பெருமை அவனை (விஷமஞ் செய்து) பாபத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக் கொள்கின்றது. ஆகவே, அவனுக்கு நரமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது. (அல்குர்ஆன் 2:204, 205,206) நன்றி: ஆ.கா.அ. அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தர்ஜுமதுல் குர்ஆன்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.