பி.ஜே. அவர்களே உங்களது முபாஹலா அழைப்பை ஏற்கிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
டி.என்.டி.ஜே. துணைத் தலைவர் மவுலவி பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கட்கு, இளையான்குடி டி.கே. முஹம்மது மைதீன், மேலப்பாளையம் கே.ஏ. முஹம்மது பழுலுல் இலாஹி ஆகியவர்கள் எழுதும் முபாஹலா ஏற்புக் கடிதம். நீங்கள் விடுத்துள்ள முபாஹலா அழைப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். உங்களுடனும் உங்கள் அமைப்பினருடனும் கீழ் காணும் விஷயங்கள் உட்பட உங்கள் தரப்பு மீது நாங்கள் கூறியுள்ள அந்நஜாத் முதல் இன்று வரையுள்ள அனைத்து விஷயங்களுக்கும் நாங்கள் முபாஹலா பண்ணத் தயாராக உள்ளோம்.

1. நீங்கள் அந்நஜாத்திலிருந்து விலக காரணம் அபுஅப்துல்லாஹ் மேசாசடி செய்து வாங்கிய நிலம் என்று கூறினீர்கள். அது எங்கு உள்ளது என்பதற்குரிய ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அதை நாங்கள் ஏற்க மறுத்தால் அதற்காக நாம் முபாஹலா பண்ண வேண்டும்.
2. கணக்கு கேட்டதற்கு கணக்குகளெல்லாம் என் மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னார் என்று கூறியதை நீங்கள் சொன்ன ஆடியோ சான்றுகளுடன் நிரூபிக்க வேண்டும். அல்லது நீங்கள் சொன்ன சாட்சிகளுடன் வந்து நாம் அனைவரும் முபாஹலா பண்ண வேண்டும்.
3. நீங்கள் ஜாக்கிலிருந்து விலகியதற்கு நீங்களே கூறியுள்ள உண்மைக் காரணத்தை ஆடியோ ஆதாரத்துடன் கூறுவோம். அதை நீங்கள் ஏற்க மறுத்தால் நாம் முபாஹலா பண்ண வேண்டும்.
4. நீங்கள் த.மு.மு.க.வில் சேர்ந்தது அமைப்பாளராக ஆனது பற்றி நீங்களே கூறியுள்ள உண்மைக் காரணத்தை ஆடியோ ஆதாரத்துடன் தருவோம். அந்த உண்மையை நீங்கள் ஏற்க மறுத்தால் நாம் முபாஹலா பண்ண வேண்டும்.
5. பழ்லுல் இலாஹி பெருந்தொகை வாங்கினார் என்று நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டை தந்தாக கூறியவருடன் வந்து முபாஹலா பண்ண வேண்டும்.
6. த.மு.மு.க.வுக்காக உருவாக்கப்பட்டது த.மு.மு.க.வுக்கு சொந்தமானது முஸ்லிம் டிரஸ்ட் என்பதற்கு உங்கள் கையெழுத்துடன் கூடிய ஆதாரத்தைக் காட்டுவோம். நீங்கள் அதை ஒப்புக் கொள்ள மறுத்தால் நாம் முபாஹலா பண்ண வேண்டும்.

மேலே கூறியுள்ளவற்றுக்கும் உங்கள் மீதும் உங்கள் அணியினர் மீதும் நாங்கள் மேலும் கூறியுள்ளவற்றுக்கும் முபாஹலா பண்ண நீங்கள் விடுத்த முபாஹலா அழைப்பை நாங்கள் ஏற்று முபாஹலாவுக்கு தயார் என்ற ஒப்புதலை இதன் மூலம் தருகிறோம். உங்கள் அமைப்பினர் மூலம் தரும் எங்களது ஒப்புதலை ஏற்று உடன் பதில் தர வேண்டுகிறோம்.

இந்த 2005 ஆம் ஆண்டின் ஜுலை, ஆகஸ்டு ஆகிய ஏதாவது ஒரு மாதத்தில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு தேதியை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். முபாஹலா நடைபெறும் ஊர் தொண்டியா, இளையான்குடியா, மேலப்பாளையமா, மண்ணடியா என்பதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 2005 மார்ச் இறுதிக்குள் முடிவை வெளியிடுங்கள். உங்கள் முடிவும் ஒப்புதலும் கிடைத்ததும் நமது சமுதாயத்தின் அனைத்துப் பத்திரிக்கைகளுக்கும் நிகழ்ச்சி பற்றிய செய்தியை ஏப்ரல் முதல் வாரத்திலேயே கொடுத்து விடுவோம். உங்களுடைய அனைத்து மீடியாக்கள் மூலமும் இந்தச் செய்தியை நீங்கள் தெரிவிக்க வேண்டும். வஸ்ஸலாம்.
இப்படிக்கு:
இளையான்குடி டி.கே. முஹம்மது மைதீன்,

மேலப்பாளையம் கே.ஏ. முஹம்மது பழுலுல் இலாஹி

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.