இளையான்குடி முஹம்மது மைதீன் அவர்களுக்கு

முபாஹலா முபாஹலா என பூச்சாண்டி காட்டித் திரியும் முபாஹலா பூச்சாண்டி பி.ஜே.யும் அவரது கூட்டமும் பழுலுல் இலாஹி என்ற எனது பெயரைக் கேட்டாலே தலை தெரிக்க ஓடி ஒளிந்து விடுவார்கள்.

அன்புள்ள இளையான்குடி முஹம்மது மைதீன் அவர்களுக்கு துபையில் பணிபுரியும் மேலப்பாளையம் காஅ.முஹம்மது பழுலுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும். தொண்டியைச் சார்ந்த பி.ஜே. என்றழைக்கப்படும் பி.ஜைனுல் ஆபிதீன் என்பவருடனும் த.த.ஜ.வினருடனும் முபாஹலா பண்ணத் தயாரா? என்று கேட்டீர்கள். பி.ஜே.யுடனும் அவர் புதிதாக ஆரம்பித்துள்ள த.த.ஜ. என்ற அமைப்பின் தலைமைப் பொறுப்பாளர்கள் மற்றுமுள்ளவர்ளுடனும் முபாஹலா பண்ணத் தயாராக உள்ளவன் நான் எனவே தயார் என்றேன். போனில் தயார் என்று சொல்வதால் மட்டும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படாது. எனவேதான் எனது வாக்கை உறுதிப்படுத்தி உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்காக துபையில் உள்ள உங்கள் ஊர் இளையான்குடியைச் சார்ந்த சகோதரரையும் உங்களுடன் பேச வைத்தேன். அவர் பேசியது உங்களுக்கு என் மீது நம்பிக்கை ஏற்படத்தான். எனவே உங்களுடன் பேசிய உங்களூர் சகோதரரின் பெயரை நீங்கள் வெளியிட வேண்டாம்.

முபாஹலா முபாஹலா என பூச்சாண்டி காட்டித் திரியும் முபாஹலா பூச்சாண்டி பி.ஜே.யும் அவரது கூட்டமும் பழுலுல் இலாஹி என்ற எனது பெயரைக் கேட்டாலே தலை தெரிக்க ஓடி ஒளிந்து விடுவார்கள் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். மானத்தோடு முபாஹலாவுக்கு ஒப்பந்தம் செய்ய வந்தால், என்ன என்ன விஷயங்களுக்கு முபாஹலா என்பது பற்றிய விபரங்கள் முந்தைய வெளியீடுகளில்; உள்ளது. அவற்றின் காப்பிகளை முடிந்தவரை அனுப்பித் தருகிறேன். சி.டி. ஒன்றும் அனுப்புகிறேன். அதில் நமது எல்லா வெளியீடுகளும் இருக்கும். அவற்றின் அடிப்படையில் முபாஹலாவுக்கு நான் தயார். இருந்தாலும் முபாஹலா பற்றிய சுருக்கமும் தருகிறேன் பார்த்துக் கொள்ளவும். இந்த அடிப்படையில் எனது சார்பாக நீங்கள் செய்யும் ஒப்பந்தம் என்னை கட்டுப்படுத்தும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
1. அந்நஜாத்திலிருந்து விலக பொய்க் காரணம் கூறிய பொய்யர் பி.ஜே. 2. இன்று தவ்ஹீது, தவ்ஹீது கொள்கைப் பிரச்சனை என்ற பெயரால் புது அமைப்பு கண்டுள்ள பி.ஜே. 1994 லேயே இனி நான் தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று கூறி தவ்ஹீது பிரச்சாரங்களுக்கு வர மறுத்தவர் பி.ஜே. 3. தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால்தான் த.மு.மு.க.விலிருந்து விலகினேன் என்று பொய்க் காரணம் கூறிய பொய்யர் பி.ஜே. 4. த.மு.மு.க.வுக்காக உருவாக்கப்பட்ட த.மு.மு.க.வுக்கு சொந்தமான முஸ்லிம் டிரஸ்ட்டை தவ்ஹீதின் பெயரால் அபகரித்து விட்ட அமானித மோசடியாளர் பி.ஜே. 5. மேடையில் பேசிவிட்டு காசு வாங்கியதே இல்லை என பொய் சத்தியம் செய்த பொய்யர் பி.ஜே. 6. எல்லாரும் கையெழுத்திடாமலேயே எல்லாரும் கையெழுத்திட்டுள்ளது போல் பொய்யான அறிவிப்பை வெளியிட்ட பொய்யர் பி.ஜே. 7. 48 மணி நேரம் கால அவகாசம் எடுத்து எல்லாரும் கையெழுத்திட்டு தந்துள்ளார்கள் என்று பொய் சொன்ன பொய்யர் பி.ஜே.

8. ஜாக்குடைய கணக்கு கேட்டதற்கு கணக்குகளெல்லாம் என் மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னார் என்று பொய் சொன்ன பொய்யர் பி.ஜே. 9. பொய்யர் பி.ஜே.யின் இந்த பொய்க்கு பொய் சாட்சிகள் கூறி பொய் சத்தியம் செய்த பொய்யர்கள் மேலப்பாளையம் ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான் ஆகியவர்கள். 10. ஒருவரிடம் பழ்லுல் இலாஹி பெருந்தொகை வாங்கினார் என்ற பொய்யைச் சொன்ன பொய்யர் பி.ஜே. 11. இந்த பொய்க் குற்றச்சாட்டை காரணமாகக் காட்டி மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானை அபகரித்த அமானித மோசடியாளர்கள் ஷம்சுல்லுஹாவும் அவருடனுள்ள மஸ்ஜிதுர்றஹ்மான் நிர்வாகிகளும். 12. பி.ஜே. கையெழுத்துப் போட்டு வெளிநாட்டுக்கு பேக்ஸ்ஸும் அனுப்பிய இந்த நோட்டீஸை பி.ஜே. வெளியிடவில்லை என்று பொய் சொன்ன பொய்யர் தொண்டியப்பா.
13. ஜவாஹிருல்லாஹ் அவர்களை முபாஹலாவுக்கு அழைத்து கோவை அப்துர் றஹீம் மூலம் கடிதம் கொடுத்து சி.டி.களிலும் வாக்கு மூலம் கொடுத்தார்கள். பிறகு ஜவாஹிருல்லாஹ்தான் தென் சென்னையிலும் கோவையிலும் முதன்முதலில் முபாஹலாவுக்கு அழைத்தார் என்ற பொய்யை 2004 நவம்பர் ஏகத்துவம் இதழ் 30 ஆம் பக்கத்தில் எழுதிய பொய்யர்கள் த.த.ஜ.வினர். என்பது உட்பட பி.ஜே. பாக்கர், எம்.ஐ. சுலைமான்கள் பற்றி ஷம்சுல்லுஹா கூறியவைகள் அனைத்தையும் முந்தைய வெளியீடுகளில் குறிப்பிட்டுள்ளவற்றையும் கூறி முபாஹலா பண்ணத் தயார். வெளி நாட்டில் உள்ளவர்களும் கலந்து கொள்ளும் வகையில் முபாஹலாத் தேதியை 3 மாத இடைவெளி கொடுத்து 2005 ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் ஏதாவது ஒரு தேதியை அவர்களே நிர்ணயித்து இப்பொழுதே அறிவிக்கட்டும். உணர்விலும் ஏகத்துவத்திலும் அந்த அறிவிப்பு தொடராக வரவேண்டும். வஸ்ஸலாம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.