த.த.ஜ.வின் நவீன பைஅத்து ஈமானுக்கு ஆபத்து.

த.மு.மு.க.வுக்குரிய முஸ்லிம் டிரஸ்ட், முஸ்லிம் மீடியா டிரஸ்ட் ஆகியவைகளைக் கைப்பற்றியுள்ள பி.ஜே. பத்திரிக்கைகளையும் அபகரித்து அதில் வார இதழை மட்டும் நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். 

அந்த வார இதழில் த.த.ஜ. உறுப்பினர் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள பைஅத்கள் குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் சரிதான் என்பதுபோல் சுற்றி வளைத்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த மார்க்க விரோதமான விளக்கத்தைக் காட்டி மக்களை ஏமாற்றி வேக வேகமாக கையெழுத்து வேட்டையாடி ஆள் பிடித்து வருகிறார்கள் த.த.ஜ.வினர்.எனவே இப்பொழுது நடைபெறும் மார்க்க நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பைஅத் பற்றிய கேள்விகள்தான் அதிகம் இடம் பெறுகின்றன. 

பெரும்பாலானவர்கள் மூடி மறைத்து கேட்கும் இந்தக் கேள்வியை துபை கிஸஸ்ஸில் நடந்த கூட்டத்தில் பேசிய பெரம்பலூர் நாஸர் அலி கான் அவர்களிடம் த.த.ஜ. உறுப்பினர் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள பைஅத்கள் குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் சரியா? என்று தெளிவாகவே கேட்டார்கள். 

த.த.ஜ. உறுப்பினர் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள 2 பைஅத்களும் இஸ்லாத்திற்கு விரோதமானதுதான் என்பதை தெளிவாக விளக்கி பேசினார் பெரம்பலூர் நாஸர் அலி கான். அவர் அளித்துள்ள விளக்கமான பதில் ஆடியோ, வீடியோ, சி.டி.க்களாக உள்ளன. கண் மூடித்தனமாக யாரையும் பின்பற்றாத நடுநிலையாளர்கள் அவரது பதிலைக் கேட்டு தெளிவு பெறலாம்.

அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களாக இருந்தால் திருந்தட்டும்.

மொட்டைக் கடிதம் எழுதும் இழிவான நிலையை அடைந்து விட்டவர்களையும் மாணவ மாணவிகளிடம் மானக் கேடாய் நடந்து கொண்டவர்களையும் தலைவர்களாக, வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டுள்ளவர்களுக்கு நாம் என்னதான் விரிவாக விளக்கிக் கூறினாலும் ஏற்கமாட்டார்கள். 

த.த.ஜ. உறுப்பினர் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள 2 பைஅத்களும் இஸ்லாத்திற்கு விரோதமானதுதான் என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் நிரூபித்தாலும் அவர்களால் நம் மூலம் கிடைக்கும் விளக்கத்தை ஜீரணிக்க முடியாது. எனவே அவர்கள் தலைமை பைஅத் சம்பந்தமாக முன்னர் கூறிய விளக்கங்களையே அவர்களுக்கு நினைவு கூறுவோம். அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களாக இருந்தால் திருந்தட்டும். 

தர்கா முரீது பைஅத், இலங்கை உமர் அலியின் முஸ்லிம் ஜமாஅத் பைஅத், காதியானிகளின் பைஅத், விடியல் வெள்ளி பைஅத் இப்படி பல்வேறு பைஅத்கள் பற்றி அவ்வப்போது விளக்கிய அவர்கள் பைஅத் வாங்கும் கூட்டம் அனைத்தும் வழி கேடு என கூறி விட்டு பைஅத் வாங்குவதன் நோக்கம் என்ன என்றும் விளக்கினார்கள். அந்த விளக்கமே இன்று அவர்களுக்கும் பொருந்தும் என்பதால் முதலில் அதை நினைவுக்கு கொண்டு வருகிறோம்.

பைஅத் வாங்குவதன் நோக்கம் என்ன?

அடிப்படையே கோளாறான கொள்கையற்ற அணியில் உள்ளவர்கள் அல்லது புதிதாக அந்த அணியில் இணைபவர்கள் தங்களது தலைமையின் வண்டவாளங்களை புரிந்து கொள்ளும்போது வேகமாக வெளியேற முற்படுவார்கள். அப்படி வெளியேறி விடக் கூடாது என்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த நவீன பைஅத்கள். உண்மையை விளங்கியவர்கள் விடுபட வேண்டும் என்று எண்ணும்போது பைஅத் செய்து விட்டோமே, பைஅத்தை முறித்தால் பாவியாகி விடுவோமோ என்று பயந்து வெளியேற தயங்குவார்கள். 

பைஅத் செய்ததை மறந்து இந்த வழிகெட்ட கூட்டத்தை அடையாளம் தெரிந்து கொண்டதும் யாராவது விமர்சித்து வெளியேற முற்பட்டால் மற்றவர்கள் இந்த பைஅத்தை நினைவூட்டி விமர்சிக்காத வண்ணம் வாய் கட்டும் வெளியேறி விடாமல் கால் கட்டும் போட்டு தடுத்து நிறுத்தி விடுவார்கள். இப்படி பிரேக் போட்டு தங்களிடம் தக்க வைத்துக் கொள்ளத்தான் இந்த நவீன பைஅத்களின் நோக்கம் என்றார்கள். அந்த பிரேக் போடும் நோக்கம் கொண்ட நவீன பைஅத்தைத்தான் இன்று இவர்களும் கேட்கிறார்கள். எனவே இது ஒரு சதி திட்டம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

பி.ஜே. காணவிருக்கும் அடுத்த புதிய அமைப்பு...

தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிரான எந்த அமைப்பிலும் நான் உறுப்பினராகவோ, ஆதரவாளராகவோ இருக்கமாட்டேன் என உறுதி கூறுகிறேன் என்பதில் உள்ள எதிரான என்ற அந்த வாசகமே ஒரு பொய். ஒன்று இருக்க புதிதாக வேறு ஒன்று தோன்றுவதுதான் எதிரானது. 

எத்தனையோ ஜமாஅத்கள் (அமைப்புகள்) இருக்கவே புதிதாக தோன்றியவர்கள் இவர்கள்தான் தங்கள் செயல்கள் மூலம் மற்றவர்களுக்கு எதிரானவர்களாக உள்ளார்கள். இப்பொழுது இருக்கின்ற எந்த அமைப்பும் இவர்களுக்கு எதிராக புதிதாக தோன்றியவை அல்ல. 

பி.ஜே.யின் தபியத்(இயல்புப்)படி அவர் த.த.ஜ.விலிருந்து வெளியேறிய பின் பி.ஜே. காணவிருக்கும் அடுத்த புதிய அமைப்புதான் த.த.ஜ.வுக்கு எதிரான அமைப்பாக அமையும். எனவே இப்போதைய டம்மித் தலைவரின் முன் யோசனையில் தோன்றிய வாசமாக இருக்குமோ இது? இந்த வாசகமும் இஸ்லாத்திற்கு விரோதமானதே என்பதை நாஸர் அவர்கள் தெளிவாகவே விளக்கி உள்ளார்கள்.

பைஅத் வாங்கினால் அவன் தனி மதமாக ஆகி விட்டான்.

விடியல் வெள்ளியைச் சார்ந்தவர்களுக்கு எதிரான ஒரு செட்டப் நிகழ்ச்சியை சென்னை நேதாஜி நகர் பள்ளியில் பி.ஜே. நடத்தினார். கேள்வி பதில் நிகழ்ச்சி எனும் பெயரில் நடந்த அந்த நிகழ்ச்சியின் சி.டி.க்களை விடியல் வெள்ளியின் சுய ரூபம் என்ற தலைப்பிட்டு விற்றார். 

அந்த செட்டப் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பைஅத் சம்பந்தமாக பேசும்போது ஒருவரிடம் பைஅத் செய்ததற்காக ஒரு செயலை செய்யும்போது அவன் அந்த மனிதனுக்காகவே செய்தவனாக ஆகிறான். அல்லாவுக்காக செய்தவனாக ஆக மாட்டான். மார்க்க சம்பந்தமாக பைஅத் வாங்கினால் அவன் தனி மதமாக ஆகி விட்டான் என்று பேசியுள்ளார். 

பி.ஜே.யின் இந்த கூற்றுக்களின் அடிப்படையில்தான் அவரை புதிய மதத்தின் தலைவர் என்று முந்தைய வெளியீடுகளில் எழுதி இருந்தோம். இப்படியெல்லாம் பேசியவர் அவர் கேட்கும் பைஅத்தை நியாயப்படுத்த நிறுவனங்கள் பைஅத் பள்ளிக் கூட பைஅத் இவையெல்லாம் கூடும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறோம் என்று அவரது வாடிக்கைப்படி வேடிக்கையான விளக்கங்களை சுற்றி வளைத்து எழுதி திசை திருப்பி அவர் கேட்கும் பைஅத்தை நியாயப் படுத்தியுள்ளார்.

த.த.ஜ.வின் நவீன பைஅத்திகள் சிந்திக்க வேண்டும்.

அவர் நேதாஜி நகர் பள்டளியில் பேசியுள்ளபடி திருக்குர் ஆனும் ஆதாரப்பூர்வமான நபிவழியும் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் என்பதை உறுதியாக நான் ஏற்றுக்கொள்கிறேன். அவ்விரண்டின் அடிப்படையில் என் வாழ்க்கையையும், செயல்பாடுகளையும் இயன்றவரை அமைத்துக்கொள்வேன் என்று த.த.ஜ.வில் பைஅத் செய்து விட்ட ஒருவன் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தனது வாழ்க்கையையும், செயல்பாடுகளையும் இயன்றவரை அமைத்துக் கொண்டால் அவன் அல்லாவுக்காக செயல்பட்டவனாக ஆக மாட்டான் 

த.த.ஜ.வில் செய்த பைஅத்துக்காக செயல்பட்டவானகவே ஆகிறான். அல்லாஹ்வுக்காக செய்யப்படாத அமல்களுக்கு அல்லாஹ்விடம் கூலி கிடைக்குமா? த.த.ஜ.வின் நவீன பைஅத்திகள் சிந்திக்க வேண்டும். மார்க்க சம்பந்தமாக பைஅத் வாங்கினால் அவன் தனி மதமாக ஆகி விட்டான் என்ற பி.ஜே.யின் கூற்றுப்படி த.த.ஜ. தனி மதமா இல்லையா? இதையும் சிந்திக்க வேண்டும்.

புதிய மதத்தை விட்டு விலக வேண்டும்.

பைஅத் சம்பந்தமாக பி.ஜே. இப்பொழுது வெளியிட்டுள்ள விளக்கத்தில் உள்ள பித்தலாட்டங்களை தெளிவாக புரிய வேண்டும் என்றால் பைஅத்கள் பற்றி அவர் முன்பு பேசியவைகளை கேட்க வேண்டும். 

உமர் அலியுடன் (பைஅத் வாங்காத) பி.ஜே. காபிராகி விட்டாரா? என்ற தலைப்பில் விவாதம் செய்ய இலங்கை செல்வதாகக் கூறி இலங்கை சென்றார் பி.ஜே. (பைஅத் வாங்காத) பி.ஜே. காபிராகி விட்டாரா? என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சிக்குப் பிறகு பைஅத் பற்றிய சரியான இஸ்லாமிய கண்ணோட்டம் என்ற தலைப்பில் தனி நிகழ்ச்சியில் பேசினார். 

இதையும் மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள நேதாஜி நகர் கேள்வி பதில் நிகழ்ச்சி ஆகி இரண்டையுமாவது பைஅத் செய்த த.த.ஜ.வினர் கண்டிப்பாக மீண்டும் போட்டு கேட்க வேண்டும். முரண்பாடுகளை புரிந்து திருந்த வேண்டும். த.த.ஜ.வின் நவீன பைஅத்து ஈமானுக்கு ஆபத்து என்பதை விளங்கி புதிய மதத்தை விட்டு விலக வேண்டும்.

கேள்வி இயன்றவரை என்ற வார்த்தை பற்றியதா? பைஅத் பற்றியதா?

இப்பொழுது அவரது பைஅத்தை நியாயப்படுத்த வெளியிட்டுள்ள ஹதீஸ்களை பாருங்கள். தலையாய பாவன்னிப்பு என்ற பெயரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு ஒரு துஆவை கற்றுத் தந்துள்ளார்கள். அந்த துஆவில் 'என்னால் இயன்றவரை உன்னிடம் அளித்துள்ள வாக்கையும், உறுதிமொழியையும் பேணுவேன்' என்று இறைவனை நோக்கிக் கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கற்பித்தார்கள். (புகாரி.6323,6306.) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய கட்டளைகளை ஏற்றுக் கட்டுப்படுவதாக நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்தபோது 'உங்களால் இயன்றவரை' என்று நபிகள் நாயகம் (ஸல்) திருத்திக் கொடுத்தார்கள். (புகாரி-7202,7204) 

நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் உங்களால் இயன்றவரை அதை செயல் படுத்துங்கள் என்பதும் நபிகள் நாயகத்தின் கட்டளை. (புகாரி7288) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு தான் இயன்றவரை என்ற வாசகம் தகுந்த ஆய்வுக்குப் பின் சேர்க்கப்பட்டது. என்று எழுதி ஏமாற்றியுள்ளார். தகுந்த ஆய்வு என்பதெல்லாம் பொய் என்பது தனி விஷயம். கேள்வி இயன்றவரை என்ற வார்த்தை பற்றியதா? பைஅத் பற்றியதா? மெஸ்மரிஸம் பண்ணி ஏமாற்றியுள்ளார்.

ஆள் பிடிக்கும் கூட்டத்தாரிடம் பைஅத் செய்ய ஆதாரம் இல்லை.

அவர் ஆதாரமாக காட்டியுள்ள ஹதீஸ்கள் கூட அல்லாஹ் இடமும் அல்லாஹ்வின் தூதரிடமும்தான் .இது மாதிரியான பைஅத்கள் செய்யலாம் என்பதற்குத்தான் ஆதாரமாக உள்ளதே தவிர ஆள் பிடிக்கும் கூட்டத்தாரிடம் பைஅத் செய்வதற்கு ஆதாரமாக இல்லை. 

தங்கள் உயிரை துச்சமாக மதித்து தூய இஸ்லாத்தை நிலை நாட்ட பாடுபட்டவர்களில் ஒரு சிலரும் இந்த சதி திட்டத்தில் சிக்கி வருகின்றனர். ஈமானுக்கு பேராபத்தை ஏற்படுத்திடும் த.த.ஜ. பைஅத்களிலிருந்து மக்களை காக்க ஆங்காங்கே பைஅத் விளக்கக் கூட்டங்கள் நடத்த வேண்டும். 

குறைந்த பட்சம் பைஅத் சம்பந்தமாக பி.ஜே. த.த.ஜ. துவங்குவதற்கு முன்னால் பேசிய கேஸட்களை கேட்கச் செய்ய வேண்டும். ஈமானுக்கு ஆபத்து பற்றி எச்சரித்துள்ள இந்த வெளியீட்டையும் ஒவ்வொருவரும் பொறுப்பெடுத்து வினியோகிக்க வேண்டும். வஸ்ஸலாம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.