10 லட்சம் ரூபாய் பரிசு.

பி.ஜே.யை பிடித்து வந்து அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வைத்து விட்டால்
10 லட்சம் ரூபாய் பரிசு


கண்ணியத்திற்குரிய சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலப்பாளையம் கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹியாகிய நான் 1986ல் இருந்து பல ஆண்டுகளாக மவுலவி பி.ஜெய்னுல் ஆப்தீன் உலவி அவர்களை ஒரே மேடையில் சந்திக்க ஸைபுத்தீன் ரஷhதியை அழைத்து வந்தால் 5 ஆயிரம் ரூபாய் பரிசு. கலீல் அஹ்மது கீரனூரியை அழைத்து வந்தால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு என்று இது மாதிரி பல்வேறு விளம்பரங்கள் செய்திருக்கிறேன்.

அதே மேலப்பாளையம் கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹியாகிய நான் இப்பொழுது செய்யும் விளம்பரம், பி.ஜே. விட்ட சவால்படி அவரை பிடித்து வந்து அவர் கூறிய குற்றச்சாட்டுகளை அவர் கூறிய சாட்சிகளுடனும் ஆதாரங்களுடனும் வந்து மக்கள் மத்தியில் பகிரங்கமாக நேருக்கு நேர் நிரூபித்து நமது குற்றச்சாட்டுகளையும் பொய்ப்படுத்தி விட்டால் அல்லது அவரது கூற்றை உண்மைப் படுத்தி அவர்களது கொள்கைப்படி அவரும் அவரது சாட்சிகளும் முபாஹலா செய்து விட்டால் பி.ஜே.யை பிடித்து வந்தவர்கள் தனி நபராக இருந்தாலும் ஜமாஅத்தாக இருந்தாலும் 10 லட்சம் ரூபாய் பரிசு என அறிவிக்கிறேன்.
அந்த வகையில் அவர்கள் நியாயவான்கள்.
நாம் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை நன்கு கவனிக்க வேண்டும். ஸைபுத்தீன் ரஷhதி, கலீல் அஹ்மது கீரனூரி போன்றவர்களை விவாதத்திற்கு அழைத்தபோது பி.ஜெய்னுல் ஆப்தீன் அவர்களை ஒரே மேடையில் சந்திக்க அழைத்து வந்தால் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். இந்த வாசக அமைப்பின்படி ஒரே மேடைக்கு வந்து பி.ஜே.யை சந்தித்து ஸலாம் சொல்லி விட்டு ஒரே மேடையில் சந்திக்க வைத்து விட்டோம் ஆகவே பரிசை தாருங்கள் என்று வாத ரீதியாக அவர்கள் பணம் கேட்கவில்லை. அந்த வகையில் அவர்கள் நியாயவான்கள்.
ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா?
விவாத மன்னர் பி.ஜே. வார்த்தை விளையாட்டை பயன்படுத்தி அதற்கு என்று ஆட்களை செட் பண்ணி ரகசிய பேரம் பேசி 10 லட்சம் கேட்க தயங்க மாட்டார் என்பதால் வார்த்தைகளை முழுமையாக அமைத்து உள்ளோம். இங்கே நாம் விவாதத்திற்கு அழைக்கவில்லை. அவர் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவே அழைக்கிறோம். தனது சுய நலத்திற்காக ஒருவர் மீதோ ஒரு ஜமாஅத்தினர் - அமைப்பினர் மீதோ அநியாயமாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதும். அது சம்பந்தமாக ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என சவடால் விட்டு ரசிகர்களை குஷpப்படுத்துவதும் அவரது வாடிக்கை.
பி.ஜே. விவாதத்தில் மன்னர் என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை.
விவாதம் எதற்கு? ஒரு மஸாயில் பிரச்சனையில் இரண்டுவித கருத்து ஏற்பட்டால் விவாதத்திக்கலாம். ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறிவிட்டு ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என்றால் என்ன அர்த்தம்? தனது வாதத் திறமையையும் மற்றவர்களின் மறதியையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி விடலாம் என்ற நம்பிக்கைதானே. பி.ஜே. விவாதத்தில் மன்னர் என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. நாம் அவரை விவாதத்திற்கு அழைக்கவில்லை. குற்றச்சாட்டுகள் பற்றி விவாதம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்கத்;தான் வேண்டும். அவர் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவும் அவர் மீது நாம் கூறி உள்ள குற்றச்சாட்டுகளை பொய்ப்படுத்தவுமே அழைக்கிறோம் என்பதை மிகத்தெளிவாகக் கூறிக்கொள்கிறோம்.
அபுஜஹ்லைவிட மோசமான ஆள்.
இதற்கான முயற்சியில் ஈடுபடுபவர்கள் பி.ஜே.யின் ஒப்புதலை கடிதமாக எழுதி வாங்கி ஏமாறக் கூடாது. இவர் சாதாரண ஆள் அல்ல. வரலாற்றில் யாருமே சொல்லாத வார்த்தையை, ராமகோபலான், அத்வானி, முரளிமனோகர்ஜோஷp, பால்தாக்ரே போன்ற இந்து முன்னணி, பி.ஜே.பி, ஆர்எஸ்.எஸ், பஜ்ரங்தள், சிவசேனாக்காரர்கள் கூட சொல்லத் துணியாத வார்த்தையை, அவர்களே சொல்ல வெட்பட்டுள்ளார்கள் போலும். அப்படிப்பட்ட வார்த்தையை கூறியுள்ள ஆள் பி.ஜே. ஆம் அபுஜஹ்லைவிட மோசமான ஆள் என தன்னைப் பற்றி பிரகடனப்படுத்தி விட்ட ஆள் பி.ஜே.
மக்களையும் நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்.
அபுஅப்துல்லாஹ்வை முத்துப் பேட்டைக்கு வரச் சொல்லி விட்டு, மனிதனை கிறுக்கனாக்குவதிலும் காரியங்களை கெடுப்பதிலும் வல்லவர் என்று பி.ஜே.யால் சர்ட்பிகேட் கொடுக்கப்பட்ட கலீல் ரசூலையும், உனது தப்புகளுக்கு நான் வக்காலத்து வாங்கி விட்டேன். எனது தப்புகளுக்கு நீ போய் வக்காலத்து வாங்கு என்று ராயல்டி சுலைமானையும் அனுப்பி வைத்து ஏமாற்றிய ஆள்தான் பி.ஜே. அதுபோல் ஏமாற்றி விட்டு அவரது மீடியா பலத்தின் மூலம் நாம் வரவில்லை என மக்களையும் நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்.
மீடியாக்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.
எனவே, அவரது சவடால்களை ஏற்று புதிய சவாலையும் ஏற்கிறேன் என்ற தலைப்பில் ஹாமித் பக்ரி கைது ஆவதற்கு 2 நாளுக்கு முன்பாகவே ஒரிஜினல் தலைவர் பி.ஜே.தான் ஹாமித்பக்ரி பினாமிதான் என்பதை விளக்கி கடிதம் எழுதி இருந்தேன். அதில் உள்ள நிபந்தனைகள்படி உரிய அவகாசத்துடன் மீடியாக்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.

பி.ஜே. தரப்பு முக்கியமாக நிரூபிக்க வேண்டிய குற்றச் சாட்டுக்கள்:
1. பி.ஜே. அந்நஜாத்தில் இருந்து விலக காரணமாக அபுஅப்துல்லாஹ் மேசாசடி செய்து வாங்கியதாகக் கூறிய நிலம் எங்கு உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.
2. கணக்கு கேட்டதற்கு கணக்குகளெல்லாம் என் மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னார் என்று கூறியதை அவர் சொன்ன சாட்சிகளுடன் நிரூபிக்க வேண்டும்.
3. பழ்லுல் இலாஹி பெருந்தொகை வாங்கினார் என்று கூறியதை நிரூபிக்க வேண்டும்.
4. தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால்தான் த.மு.மு.க.விலிருந்து விலகினேன் என்று கூறியதற்கு நேரடியான ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்க வேண்டும்.
5. முஸ்லிம் டிரஸ்ட்டுக்கு நன்கொடைகள் பி.ஜே.க்காகவே வழங்கப்பட்டது. த.மு.மு.க.வுக்காக வழங்கப்படவில்லை என்று கூறியதை நிரூபிக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக ஆடியோ, வீடியோ, சி.டி.க்கள் மூலம் வண்டி வண்டியாக குற்றச்சாட்டுகளை பி.ஜே. கூறி இருக்கிறார். அதற்கு முன்னதாக பிரசுரங்களாகவும் பத்திரிக்கைகள் மூலம் பக்கம் பக்கமாகவும் அவதூறுகளை எழுதி இருக்கிறார். அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும். எனவே மேற்கண்ட ஐந்தை மட்டும் அவர் நிரூபித்தால் போதும்.
இனி நான் தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று கூறியவர் பி.ஜே.
மேடையில் பேசிவிட்டு காசு வாங்கியதே இல்லை என சத்தியம் செய்து வரும் புரோகிதர் பி.ஜே. 500 முதல் 10,000 பத்தாயிரம் வரை மேடையில் பேசிவிட்டு பணம் வாங்கி உள்ளார். ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான் ஆகிய புரோகிதர்கள் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி கூறி உள்ளார்கள். மஸ்ஜிதுர் றஹ்மான் கணக்கில் லுஹா காணவில்லை என்று கூறிய ஒண்ணரை லட்சம் ரூபாய்க்கு சம்பளத்தின் பெயரால் கள்ளக் கணக்கு எழுத வேண்டும் என்ற யோசனையைக் கூறியவர் பி.ஜே. அதற்காக பொய்யான தேதியிட்டு கள்ளக் கடிதம் கொடுத்தவர் பி.ஜே. பொது வாழ்க்கையில் பி.ஜே. ஒரு பொய்யர். 1994 லேயே இனி நான் தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று கூறியவர் பி.ஜே.
பி.ஜே. லீலைகள் உட்பட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிரூபிப்போம்.
தீனுக்காக அவர் எழுதவில்லை. அவர் வயிற்று தீனிக்காகவே எழுதினார். 27.11.1994 ல் ஜாக்கிலிருந்து பி.ஜே. ராஜினாமா செய்தது ஜாக்கை குறை கூறி அல்ல. வழி கெட்டு போய்விட்ட பி.ஜே.யால் தவ்ஹீது அமைப்பான ஜாக்குக்கு ஆபத்து வரக் கூடாது என்றே விலகினார். பி.ஜே. அணியினர் ஊர் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள் என்பது மட்டுமல்ல பி.ஜே. தரப்பினர் மீது நாம் கூறியுள்ள பாக்கர், சுலைமான் ஸைபுல்லாஹ், பி.ஜே. ஆகியோர் லீலைகள் உட்பட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் கொண்டு வரும் சாட்சிகளைக் கொண்டே நிரூபிப்போம் இன்ஷhஅல்லாஹ். பி.ஜே.யை பிடித்து வருவோர் யாரும் உண்டோ?
இப்படிக்கு:
கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி

துபை, யு.ஏ.இ.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.