த.த.ஜ. மக்கள் அமைப்பா? டிரஸ்ட்டா? ஏன் இந்த இரட்டை வேடம்?

மதுக்கூர் அய்யூப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பி.ஜே.யின் முபாஹலா அழைப்பு ஒரு பித்தலாட்டமே. ஏன்ற தலைப்பிலான விளக்க இதழின் பிரதியை கவரில் வைத்து உங்கள் பெயரை எழுதி நீங்கள் தீவிரமாக செயல்படுவதாகக் கூறிய அமைப்பில் கொண்டுபோய் கொடுக்கச் செய்தோம் 

வாங்க மறுத்து விட்டார்கள். நீங்கள் தீவிரமாக செயல்படுவதாகக் கூறிய அமைப்பில் உங்களுக்கு இவ்வளவுதான் மதிப்பா? கைர். பிறகு நீங்கள் துபையில் தங்கி உள்ள இடத்திற்கு தேடி வந்த பின் அருகில் உள்ள கோட்டைப் பள்ளிக்கு நேரில் வந்து வாங்கினீர்கள். அதன் பிறகு உங்கள் பதிலை ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தோம் இதுவரை பதில் இல்லை.

இதோ மொட்டைக் கடித முதல் எடுபிடி குவைத் ரசூல் மைதீன் முகவரி.

பி.ஜே., லுஹா, இபுறாஹீம் ஆகிய ஏகத்துவம் ஆசிரியர் குழுவினர்களான த.த.ஜ.வினர்தான் மொட்டைக் கடிதங்கள் எழுதினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று 19-8-04 அன்று 050-4950191 என்ற நம்பரிலிருந்து பேசும்போது கேட்டீர்கள். 

பி.ஜே., லுஹா, இபுறாஹீம் ஆகியவர்தான் மொட்டைக் கடித ஆசாமிகள் என்பதற்கு ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்த ஆதாரங்கள் உங்களுக்கு திருப்தியாக இல்லை என்று கூறலாம். 

பி.ஜே, லுஹா, இபுறாஹீம் ஆகிய ஏகத்துவம் ஆசிரியர் குழுவினரின் கீழ்தரமான மொட்டைக் கடிதச் செய்திகளை வெளியிட முதன் முதலில் அவர்கள் பயன்படுத்திய மொட்டைக் கடித எடுபிடி குவைத் ரசூல் மைதீன் என்ற ஆசாமிதான். 

அந்த ஆசாமி தன்னையும் பி.ஜே, லுஹா, இபுறாஹீம் ஆகிய ஏகத்துவம் ஆசிரியர் குழுவினரையும் மொட்டைக் கடித ஆசாமிகள் என்று சாட்டிங் மூலம் மறுக்காமல் ஒப்புக் கொண்டுள்ளார். 9-12-2004 அன்று அவராகவே சாட்டிங் செய்தார். அதையும் உங்கள் பார்வைக்கு அனுப்பி விட்டோம். 

இதோ மொட்டைக் கடித முதல் எடுபிடி குவைத் ரசூல் மைதீன் முகவரி M.B. RASOOL MOHIDEEN, Post Office Box No.12628, Shamiya – 71657, State of Kuwait Cell No.00965-9578800 E-mail id: mbr1975@hotmail.com விரும்பினால் நேரில் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் அந்த அணியில் இருப்பது அல்லாஹ்வுக்காகத்தான் என்பது உண்மையானால்.

தரங்கெட்ட செயலான இந்த மொட்டைக் கடித பிரச்சனையில் சரியான தீர்வை காணுங்கள். இது உங்களிடம் மட்டும் வைக்கும் கோரிக்கை அல்ல. அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி அல்லாஹ்வுக்காகவே பி.ஜே. அணியில் இருக்கிறோம் என்று யாரெல்லாம் சொல்லிக் கொள்கிறார்களோ அவர்கள் அத்தனை பேருக்கும் இதன் மூலம் இந்தக் கோரிக்கையை வைக்கிறோம். 

நீங்கள் அந்த அணியில் இருப்பது அல்லாஹ்வுக்காகத்தான் என்பது உண்மையானால் சரியான தீர்வை காணுங்கள். இது சாதாரண விஷயமல்ல. தங்கள் சுயநலத்துக்காக மொட்டைக் கடிதங்கள் எழுதி இழிவை அடைவதுடன் பிறரையும் மொட்டைக் கடித எடுபிடிகளாக ஆக்கி அவர்களையும் அந்த இழிவை அடையச் செய்து குளிர் காய்ந்து வரும் இந்த மொட்டைக் கடித பேர்வழிகள் யார்? எவ்வளவு மோசமானவர்கள் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள்.

மதுக்கூர் அய்யூப் அவர்களே உங்களுக்கும் மொட்டைக் கடித ஆசாமிகளுக்கும் என்ன சம்பந்தம்?

இவர்கள்தான் கடந்த காலங்களில் சமுதாயத்தில் நடந்த ஒவ்வொரு பிளவுக்கும் மூலகாரணமாக இருந்தவர்கள். தங்களது சுய நலத்துக்கு பாதிப்பு வந்து விட்டால் அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என ரகசியமாக ஒருவரைப் பற்றி ஒருவரிடம் புறம் கூறித் திரிந்தார்கள். 

இந்த புறங்கூறுதலை ஹிக்மத்தான செயல் என கூறி கோஷ்டி சேர்த்து இல்லாதததையும் இட்டுக் கட்டிக் வந்தார்கள். அதன் பிரதிபலிப்புதான் இந்த மொட்டைக் கடிதங்கள். இப்பொழுது உங்களுக்கு தரப்பப்பட்ட விளக்க இதழுக்கும் பதிலாக மொட்டை கடிதம்தான் வந்துள்ளது. 

உங்களுக்கும் மொட்டைக் கடித ஆசாமிகளுக்கும் என்ன சம்பந்தம்? உங்கள் பெயரில் பதில் வராமல் மொட்டைக் கடிதம் மட்டும் வந்துள்ளது ஏன்? உங்களை இது வரை மானமுள்ள ஆண் மகனாகவே கருதுகிறோம் எனவே மற்ற பதில் சொல்லுங்கள்.

அறங்காவலர்கள் என்ற பதவி.

முன்பெல்லாம் கோயில்களுக்கு தங்கள் சொத்துகளிலிருந்து செலவு செய்யக் கூடிய செல்வந்தர்கள் இருந்தார்கள். அவர்கள் மக்களால் கோயில் தர்மகர்த்தா என்று அழைக்கப்பட்டார்கள். அந்த தர்மகர்த்தா என்ற வார்த்தைதான் அறங்காவலர் என்று ஆனது. 

மக்களால் தர்மகர்த்தா–அறங்காவலர் என அழைக்கப்பட்டவர்கள் தங்களுக்கு சொந்தமான சொத்துகளிலிருந்து பொதுக்காரியங்களுக்கு செலவு செய்தார்கள். அவர்களது செயல் மக்களை தர்மகர்த்தா - அறங்காவலர் என்று அழைக்க வைத்தது. இன்று பிச்சைக்கார அரசியல்வாதிகளுக்கும் சுரண்டி திண்பதையே பிழைப்பாக கொண்டவர்களுக்கும் ரகசிய கூலிகளுக்கும்தான் ஆட்சியாளர்கள் கோயில்கள் மூலம் அறங்காவலர்கள் என்ற பதவி கொடுத்து வருகின்றனர்.

த.த.ஜ.வில் பி.ஜே.க்கு அறங்காவலர் என்ற பதவி.

அறங்காவலர்களைக் கொண்டுதான் அறக்கட்டளைகள்-டிரஸ்ட்டுகள் உருவாகின்றன. எனவே டிரஸ்ட்டுகளில் அறங்காவலர் என்ற பொறுப்பு. தகுதியின் அடிப்படையிலானது. அது பதவி அல்ல. முஸ்லிம் ஜமாஅத்களில் (அமைப்புகளில்) அறங்காவலர் என்ற பதவிகள் கொடுப்பதில்லை. 

டிரஸ்ட்டு அல்லாதவைகளில் தகுதி இல்லாதவர்களுக்கு அறங்காவலர் என்ற பதவி புரோகிதர்கள் வேலை செய்யும் கோயில்களில்தான் இப்பொழுது கொடுத்து வருகிறார்கள். முஸ்லிம்களை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தை விட்டும் இஸ்லாமிய கலாச்சாரங்களை விட்டும் வெளியேற்றிக் கொண்டிருக்கும் பி.ஜே. இந்துக்களின் இந்த கலாச்சாரப்படி த.த.ஜ.வில் தனக்கு அறங்காவலர் என்ற பதவியை ஏற்படுத்தியுள்ளார்.

த.த.ஜ.வை பதிவு–ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவதற்கு எப்படி விண்ணப்பித்துள்ளார்கள் பாருங்கள்.

வ.எண் உறுப்பினர்களின் பெயர் தொழில் முகவரி சங்கத்தில் பதவி
1 பி.ஜைனுல் ஆபிதீன் எழுத்தாளர் 7வடமரைக்காயர் தெரு மண்ணடி சென்னை-1 அறங்காவலர்

2 ஸைபுல்லாஹ் பைஜி கல்வியாளர் 88புதுத் தெரு டையநல்லூர் 627751 தலைவர்

3 எஸ்.கலீல் ரசூல் வியாபாரம் 36,தாக்கர் தெரு புரசைவாக்கம், சென்னை-84 துணைத் தலைவர்

4 பி.அன்வர் பாஷா வியாபாரம் 20,ஊத்துக்காட்டான் தெரு, பெரிய மேடு சென்னை-3 பொருளாளர்

5 எஸ்.முஹம்மது சித்தீக் வியாபாரம் 9.முனுசாமி லோன்,புதுப்பேட்டை, சென்னை-2 செயலாளர்

6 எம்.ஜி.குத்புத்தீன் வியாபாரம் 53,தளவாய் தெரு,மதுரை-7 செயலாளர்

7 எச்.கலீல் வியாபாரம் 273ஷஷிஃபா பில்டிங் கீழ வெளிவீதி,மதுரை-1 செயலாளர்

த.த.ஜ.வை ரிஜிஸ்டர் செய்யும்போது பி.ஜே.யின் தொழில் எழுத்தாளர் என்றும் சங்கத்தில் பதவி அறங்காவலர் என்றும் எழுதி கொடுத்துள்ளார்கள். இவர் இஸ்லாத்திற்காக எழுதவில்லை.. எழுதுவதுதான் இவரது தொழில். எழுதுவதை தொழிலாகக் கொண்டுள்ளவர்தான் பி.ஜே. என்பதற்கு இது ஆதாரம். 

அது மட்டுமல்ல ஸைபுல்லாஹ்வின் கீழ் துணைத் தலைவராக இரண்டாவது இடத்தில் இருப்பதுபோல் மக்களிடம் விளம்பரம் பண்ணி ஏமாற்றித் திரியும் பி.ஜே. தனது பெயரை முதலாவது இடத்திலும் ஸைபுல்லாஹ்வின் பெயரை இரண்டாவது இடத்திலும் இடம் பெறச் செய்து சங்கத்தில் தனக்கு பதவி அறங்காவலர் என்றும் பதிய விண்ணப்பித்துள்ளார் என்பதை அடையாளம் காட்டவே குறிப்பிடுகிறோம். ஏன் இந்த இரட்டை வேடம்?

வெளிநாடுகளுக்கு வருவதும் இதனால்தானோ?

பதவி ஆசை இல்லாதவர்போல் வெளியில் காட்டிக் கொண்டிருக்கும் பி.ஜே. மக்கள் மத்தியில் ஸைபுல்லாஹ்வை தலைவர் என்று போட்டு 1 வது இடத்திலும் தன்னை துணைத்தலைவர் என்று போட்டு 2 வது இடத்திலும் உள்ளது போல் காட்டுவது ஏன்? தான்தான் ஆட்டிப் படைக்க வேண்டும் என்ற நான் எனும் அனாநிய்யத்தை நிலை நாட்ட அந்தரங்கத்தில் செய்யும் சதிகள் வெளியில் தெரியக் கூடாது என்பதற்காகவா? 

முஸ்லிம் டிரஸ்ட்டுக்கு சொத்து சேர்ந்ததும் அபகரித்த ருசியா? அது மாதிரி அபகரிக்க போட்ட தொலை நோக்கு திட்டமா? முன் எப்போதும் இல்லாத அளவுக்க த.த.ஜவின் வசூலுக்கு இவர் வரிந்து கட்டி நிற்பதும் வெளிநாடுகளுக்கு வரத் துடிப்பதும் இதனால்தானோ?

த.த.ஜ. மக்கள் அமைப்பா? டிரஸ்ட்டா?

ஒரு நேரத்தில் ஜாக் மக்கள் அமைப்பு அல்ல. கமாலுத்தீன் மதனி ஜாக்கை டிரஸ்ட்டாக ஆக்கி விட்டார். யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற பொய்களை பரப்பினார். ஜாக் டிரஸ்ட்டாக ஆகிவிட்டது என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள் என்றதும் டிரஸ்ட்டு மாதிரி ஆக்கி விட்டார் என்று சமாளித்தார். 

தான் செய்ய இருக்கும் ஒரு சதி செயலை மற்றவர்கள் செய்தது போல் பரப்பி முன்னோட்டம் பார்த்துள்ளார் போலும். அது மாதிரிதான் அவரது செயல்கள் உள்ளன. த.த.ஜ. மக்கள் அமைப்பா? பி.ஜே.யை அறங்காவலராகக் கொண்ட டிரஸ்ட்டா? அதில் ஏன் இவருக்கு சட்ட ரீதியாக அறங்காவலர் என்ற பதவி?

பி.ஜே.யை பிடித்து வந்தால்10 லட்சம் ரூபாய் பரிசு.

இவர் உண்மையான அறங்காவலர் என்றால் அரங்கத்தில் ஒன்றும் அந்தரங்கத்தில் ஒன்றுமான நாடகம் எதற்கு? நாடக மேடையே உந்தன் மறு பெயர்தான் த.த.ஜ.வோ? என்ற கேள்வி உங்கள் அமைப்பை நோக்கி வராதா? 

மதுக்கூர் அய்யூப் அவர்களே! திருந்துங்கள். அல்லது பி.ஜே. விட்ட சவால்படி 38 மவுலவிகளுடன் ஒரே மேடைக்கு அவரை பிடித்து இழுத்து வாருங்கள். நமது வெளியீடுகளில் உள்ளபடி நிரூபித்து விட்டால் உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தருவோம். 

இது பனைக்குளம் சாகுல் மாதிரியான பிராடுத்தனமான சவால் அல்ல. பி.ஜே. விட்ட சவால்படி அவரை யார் பிடித்து கொண்டு வந்தாலும் பரிசு உண்டு. யாராவது இறந்து விட்ட சகோதரனின் உடலை திண்பார்களா? 

உங்களது துபை தலைமையும் தமிழக தலைமையும் இறந்துவிட்ட சகோதரனின் பிணத்தைத் திண்ணுவதையே தொழிலாகக் கொண்டவர்கவர்கள் என்பதையும் ஒரே மேடையில் நிரூபிப்போம். இன்ஷாஅல்லாஹ். வஸ்ஸலாம்.
அன்புடன்:
                                      கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.