பி.ஜே.யின் முபாஹலா அழைப்பு ஒரு பித்தலாட்டமே.

கண்ணியத்திற்குரிய முஸ்லிம்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
19-8-04 அன்று இரவு 11-47க்கு 050-4950191 என்ற நம்பரிலிருந்து மதுக்கூர் ஐயூப் என்பவர் போன் செய்து என்னிடம் பேச வேண்டும் என்றார். பிஸியாக இருப்பதால் காலையில் பேசுவோம் என்றேன். 

தன்னை பி.ஜே. அணி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், தான் பி.ஜே. அணியில் தீவிரமாக செயல்படுவதாகவும் கூறிவிட்டு, “உங்கள் வெளியீடுகள் சம்பந்தமாக பேசணும். உங்கள் வெளியீடுகளை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை உங்கள் வெளியீடுகளைப் பார்த்தால் எங்களுக்கு ஆத்திரம் வருகிறது” என்று கூறினார். 

நமது வெளியீடுகளை ஒரு பொருட்டாக கருதவில்லை என்றால் ஏன் ஆத்திரம் வருகிறது உங்களுக்கு, ஏன் அது சம்பந்தமாக பேசணும் என்கிறீர்கள் என்று கேட்டோம் பதில் இல்லை.

நியாயவான் என்றால் என்ன செய்ய வேண்டும்.

பி.ஜே. மற்றும் ஏகத்துவம் பத்திரிக்கை ஆசிரியர்களெல்லாம் சேர்ந்து மொட்டைக் கடிதம் போடுகிறார்களே அதை தட்டிக் கேட்டீர்களா? என்றேன். 

மொட்டைக் கடிதம் என்கிறீர்கள் பிறகு எப்படி அவர்கள் எழுதினார்கள் என்கிறீர்கள் என்றார். 

அதற்குரிய ஆதார விளக்கத்தை வெளியிட்டு விட்டோம். அந்த மொட்டைக் கடிதங்களை பி.ஜே. மற்றும் ஏகத்துவம் பத்திரிக்கை ஆசிரியர்கள் போடவில்லை என்று உங்களால் மறுக்க முடியுமா என்று கேட்டேன். 

நாளை பேசுவோம் என போனை கட் செய்து விட்டார். நம்முடன் பேசிக் கொண்டே மற்றவர்களிடமும் அவர் பேசியதன் மூலம் ஒரு குழுவாக நின்று பேசியதை உணர்கிறோம். 

மறுநாள் காலை 050-4950191 என்ற நம்பருக்கு போன் செய்தேன் அவர் போனை எடுக்கவில்லை. இவரும் மற்றவர்களைப்போல் இல்லாமல் நியாயவான் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை இறுதியில் பார்ப்போம்.

என்ன பசாது, எதை பசாது என்கிறார்கள்.

நமது வெளியீடுகள் பற்றிய பல்வேறு விமர்சனங்களுக்கு மார்க்க ரீதியாக ஆயத்து ஹதீஸ்களுடன் விளக்கம் அளித்திருக்கிறோம். இதற்குப் பிறகும் விமர்சிக்கக் கூடியவர்கள் ஆயத்து ஹதீஸ்கள் ஆதாரத்துடன் விமர்சிக்க வேண்டும். 

பழுலுல் இலாஹி வெளியீடுகளெல்லாம் மார்க்மாக இல்லை பசாதுகளாகவே உள்ளன என்று சிலர் விமர்சிக்கிறார்கள். என்ன பசாது, எதை பசாது என்கிறார்கள்?

தவ்ஹீது பிரச்சாரகர்களாக தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு மொட்டைக் கடிதங்கள் எழுதியவர்களையும் இன்னும் இது போன்ற மகா மட்;ட ரகமான செயல்களில் ஈடுபட்டவர்களையும் அடையாளம் காட்டியது பசாதாம். வாதத்திற்காக இதை பசாது என்று வைத்துக் கொள்வோம். பி.ஜே. அபகரித்துள்ள பத்திரிக்கையில் ஜுலை30-ஆக.05, 2004 10ஆம் பக்கத்தில் உள்ளதைப் பாருங்கள். அது மட்டும் மார்க்கமா?

இவர்கள் பெண்களுக்கு முரீது வழங்கும்போது தனிமையில்தான் வழங்குவார்களாம். அழகான பெண்களிடம் சில்மிஷம் செய்வார்களாம். சில பெண்களைக் கட்டிப் பிடித்து விட்ட சமாச்சாரங்களும் உண்டாம்.

ஆசீர்வாதம் வாங்கிய கதீஜாவின் அழகு பாபாவின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியதாம். மணப்பெண் சிவப்பு நிறம், கவரக்கூடிய அழகு என்பதால் இளம் வயது பாபா தடுமாறியதில் ஆச்சரியயம் ஏதுமில்லை.

இந்து நேசனா? இறை நேசனா?

இந்த மஞ்சள் நடைச் செய்தி இந்து நேசன் எழுதியது அல்ல. இறை நேசன் என்ற புனைப் பெயரில் பெரியவாள் பீ.iஐனுல் ஆப்தீன் ஆசிரியராக இருக்கும் பத்திரிக்கையில் அவர் அபகரித்த பின் வந்ததுதான் இது. 

இதைத்தான் இனி வீரியத்துடன் வரும் என்றாரோ? தன்னுடன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களைப் போல்தான் தன் பின்னால் இருக்கும் மொட்டைக் கடிதச் செய்தி பரப்புச் செயலாளர்களான அக்பர், ஞானியார் போன்ற இளைஞர்களும் இருப்பார்கள். 

இப்படி செக்ஸ்ஸியாக கவர்ச்சிகரமாக கிளுகிளுப்பான எழுத்துக்களுடனும் கவர்ச்சிகரமான பெண்களின் போட்டோக்களுடனும் வெளியிட்டால்தான் அவர்கள் வாங்குவார்கள் என்று எண்ணி இப்படி கீழே இறங்கி விட்டாரோ? 

நாம் சுட்டிக் காட்டி உள்ளது குறைவு. புலனாய்வு பத்திரிக்கைகளை விஞ்சி உறுப்பு வாரியாக ஆபாசமாகவும் கொச்சையாகவும் எழுதி பத்திரிக்கையை அசிங்கப்படுத்தி உள்ளார். அசிங்கமாக எழுதுவதில் வல்லவர் யார்? இந்து நேசனா? இறை நேசனா? என்ற போட்டி நடக்கிறதோ!

பசாதுகளும் மார்க்கமும்.

கொலை செய்யப்பட்ட பெண் என்ற அனுதாபம் கூட இல்லாமல் அந்த பெண்ணின் போட்டோக்களில் கவர்ச்சியானதை தேடிப்பிடித்து வெளியிடுவது உலகாதாய பத்திரிக்கைகளின் செயல். அந்த வழியில் முதல் கட்டமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் முழு உருவ போட்டோவை தேடிப் பிடித்து வெளியிட்டவர். 

இனி எது மாதிரியான போட்டோக்களையெல்லாம் வெளியிட்டு வீரியத்தைக் காட்டப் போகிறாரோ. இது மாதிரி அவர் எழுதிய அசிங்கமான வார்த்தைகளுடன் கூடிய பிடித்து விட்ட சமாச்சாரங்களும் உண்டாம் என்பன போன்ற உறுதியற்ற மஞ்சள் நடை எழுத்துக்கள் மார்க்கமாம். பாக்கர் விவகாரத்தை ஏகத்துவம் பத்திரிக்கையில் ஆசிரியராக வேலை செய்யும் ஷம்சுல்லுஹாதான் சொன்னார் என்று திட்டமாக தெளிவாக உறுதியாக உள்ளதை எழுதினால் பசாதாம்.

ஏற்க மறுப்பது ஏனோ? சார்பு தன்மைதானோ.

மதத்தின் பெயரால் ஏமாற்றும் பிரேமானந்தா, சாய்பாபா போன்றவர்களையும் இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றும் சஜ்ஜாத்பாபா போன்றவர்களையும் அடையாளம் காட்டி விமர்சிப்பதை மார்கம் என்று ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள், பிரேமானந்தா மாதிரி ஜடா முடிகளை வளர்த்துக் கொண்டு உலவி தவ்ஹீது பெயரால் ஏமாற்றிடும் வேடதாரிகளை விமர்சித்து அடையாளம் காட்டும்போது மட்டும் ஏற்க மறுப்பது ஏனோ? சார்பு தன்மைதானோ.

சிப்பாயி பெண்ணின் கணவருக்கு இரண்டாம் திருமணம்.

மார்க்கத்தில் 2 ஆம் திருமணம் ஹராமானது போல் பி.ஜே. அபகரித்துள்ள பத்திரிக்கையில் ஆக 20-26,2004, 8 ஆம் பக்கம் அப்பாவிப் பெண்ணின் கணவருக்கு இரண்டாம் திருமணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர். 

சிப்பாயி பெண்ணின் கணவருக்குத்தான் இரண்டாம் திருமணம் செய்ய அனுமதி உள்ளதோ! அதிலும் அவர்களது அரிப்பை சொரிந்து கொள்ள சொன்னாராம், தனிமையில் பல தடைவ சந்தித்து வந்தனராம். இப்படி ராம் ராம் என்று ராமகோபாலன் வழியில் எழுதி உள்ளனர். அது மட்டுமா? கள்ளக் கடித பேர்வழி களவாடிவிட்ட அந்த பத்திரிக்கையில் உள்ளதைப் பாருங்கள்.

இது மஞ்சள் பத்திரிக்கையில் வந்தது அல்ல.

சில மாதங்களாக கணக்கரப்பட்டில் தனது எதிர்வீட்டு நூருல் அஜ்மா என்ற பெண்ணுடன் ஹஜ்ஜி முஹம்மதுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பல தடவை அப்பெண் கருக்கலைப்ப செய்துள்ளார். இது மஞ்சள் பத்திரிக்கையில் வந்தது அல்ல. 

மார்க்கம் சொல்லவே ஆக்கிரமித்ததாக கூறிக்கொள்ளும் பத்திரிக்கையில்தான் இந்த வார்த்தையை திரும்பத் திரும்ப இடம் பெறச் செய்துள்ளனர். இது மாதிரியான 2 ஆம் திருமணங்களையும் பெற்றோருக்கு விருப்பமில்லாத காதல் திருமணங்கள் பலவற்றையும் நடத்தியவர்கள்தான் இந்த உத்தமர்கள்.

மார்க் ரீதியான தீர்வு என்ன என்று எழுதாதது ஏன்?

ஹராமான வழியில் சின்ன வீடு என்றும் வைப்பு என்றும் ஒருத்தியை வொய்பாகவும் இன்னொருத்தியை வைப்பாகவும் வைத்துக் கொண்டிருப்பதைவிட மார்க்கம் அனுமதித்த வழியில் திருமணம் செய்து மனைவி என்ற அந்தஸ்த்து கொடுத்து விட்டுபோ என்று மேடைதோறும் வாய் கிழிய பேசிய பெரியவாள், 

யார் கொடுத்த ரகசிய கூலிக்காக 2 ஆம் திருமணம் ஹராம் மாதிரியும் பாவமான காரியம் மாதிரியும் பொருள் மயக்கம் ஏற்படும் வண்ணம் எழுதி உள்ளாரோ ரகசிய கூலிகளுக்கே வெளிச்சம். 

பெரியவாளின் நோக்கம் மார்க்கமாக இருந்தால். எதற்கெல்லாமோ தீர்வுகள்-தீர்ப்புகள் என்று பேசியும் எழுதியும் வந்த அந்த பெரியவாள் இந்த பிரச்சனைக்கும் மார்க் ரீதியான தீர்வு என்ன என்று எழுதி இருப்பார். மார்க் ரீதியான தீர்வு என்ன என்று எழுதாதது ஏன்? பெரியவாளின் நோக்கமே தனக்குப் பிடிக்காதவர்களை எப்படியெல்லாம் பிடிக்கலாம் என்பதுதானே. அந்நஜாத்தில் துவங்கி இப்பொழுது த.மு.மு.க.வில் நிற்கிறது.

இதுதான் இவர் வீரியத்துடன் எழுதும் செய்தியா?

அதனால்தானே சில மாதங்களாக -- கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஜமாஅத் தலையிட்டும் விடுபடாத நிலையில்தான் த.மு.மு.க. நிர்வாகிகளை அனுகி உள்ளனர் என்றும் எழுதி விட்டு, 

சில மாதங்களுக்கு முன்பு ஹஜ்ஜி முஹம்மதிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை லஞ்சமாக வாங்கிக் கொண்டு இவர்கள் ஹஜ்ஜி முஹம்மதுக்கு சாதகமாக பேசினார்களாம் என்றும் எழுதி உள்ளார். 

சில மாதங்களாக உள்ள தொடர்புக்க சில மாதங்களுக்கு முன்பே ஒரு லட்சம் லஞ்சமாக வாங்கினார்கள் என்பது எப்படி? முரண்பாடாக இல்லையா என்ற வாதத்தை வாதப் பெரியவாளுக்கே விட்டு விடுவோம்.. பேசினார்களாம், கேட்டார்களாம் என்று நம்பகமில்லாத வார்த்தைகளை எழுதி உள்ளார்களே! இதுதான் இவர் வீரியத்துடன் எழுதும் செய்தியா?

மறுக்க முடிந்ததா இந்த மானமுள்ளவர்களால்?

பி.ஜே. மேடைகளில் பேசிவிட்டு பத்தாயிரம் வரை பணம் வாங்கினாராம். பள்ளிவாசல் பணத்திலிருந்து கொடுக்கப்பட்ட இதை மறைத்து கள்ளக் கணக்கு எழுதினார்களாம். கள்ளக் கணக்கு எப்படி எழுத வேண்டும் என்று பி.ஜே.தான் திட்டம் வகுத்து கொடுத்தாராம். 

இப்படி பி.ஜே. மாதிரி ராம் ராம் என்று நாம் எழுதவில்லை. பி.ஜே. மேடையில் பேசிவிட்டு 10,000 பத்தாயிரம் ரூபாய் வாங்கி உள்ளார். பள்ளிவாசல் பணத்திலிருந்து கொடுக்கப்பட்ட அதை மறைத்து கள்ளக் கணக்கு எழுத பி.ஜே.யே திட்டம் வகுத்து கொடுத்தார் என்றுதான் திட்டமாக எழுதினேன். 

மறுக்க முடிந்ததா இந்த லுங்கி அணிந்தவர்களால்? பிறர் பற்றி திட்டமில்லாத செய்திகளை வெளியிட்டு தங்கள் அரிப்பை சொரிந்து வருகின்றனர். பி.ஜே. அணியில் தீவிரமாக செயல்படுதல் என்றால் என்ன அர்த்தம். இந்து நேசனின் வழியில் இறைநேசன் எழுதும் மஞ்சள் நடை எழுத்துக்களை மக்களிடம் சேர்ப்பதுதானே அதிதீவிர பணியாக இருக்கும்

உதாரண மன்னர் அபு அவ்னாக இருந்தால்.

தங்களுக்கும் தங்களது வரட்டுக் கவுரவத்திற்கும் சுயலாபத்திற்கும் ஆபத்து என்றால்தான் தங்கள் வீரியத்தைக் காட்ட வீதிக்கு வருவார்கள் சிலர். நாம் அப்படி அல்ல. 

ஏகத்துவம் பத்திரிக்கை ஆசிரியர்களான மொட்டைக் கடித பேர்வழிகள் முதன் முதலில் எழுதிய மொட்டைக் கடிதங்களில் என்னைப் பற்றித்தான் பொய்களை எழுதினார்கள். 

அதில் லுஹா என்னிடம் வந்து திண்ற உண்மையையும் எழுதி இருந்தார்கள். உதாரண மன்னர் அபு அவ்னாக இருந்தால், பன்றி திண்ண மாதிரி திண்ணவன் நீதானே என்று பதில் இருப்பார். நாம் அப்படி எதுவும் எழுதவில்லை.

இதுதான் நமது நிலை.

எதையும் நேரடியாக சந்திக்க தெம்பு இல்லாத திராணி இல்லாத மானம் ரோஷம் சூடு சுரணை இல்லாத தரங்கெட்ட ஆண்மையற்றவர்கள் என்று சமுதாயத்தால் விமர்சிக்கப்படும் மொட்டைக் கடித பேர்வழிகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம். 

நன்றி கெட்டத்தனமாக ரிபாஈ அவர்கள் பற்றி மொட்டைக் கடிதம் வெளியிட்ட பின்னர்தான் இந்த கள்ளக் கடிதக்காரர்களான மொட்டைக் கடித பேர்வழிகள் ஏகத்துவம் பத்திரிக்கை ஆசிரியர்கள்தான் என்று அடையாளம் காட்டினோம். இதுதான் நமது நிலை.

அசிங்கமான கெட்ட வார்த்தைகள் அவர்களுக்கே உரியது.

நமது வெளியீடுகளில் நாய், பன்றி என்று எழுதுவதாகக் கூறி திசை திருப்பி மக்கள் அனுதாபத்தை பெற பொய்யர்கள் முயற்சித்துக் கொண்டிருப்பதையும் அறிகிறோம். நாமாக யாரையும் அவ்வாறு விமர்சித்து எழுதவில்லை. 

யூதர்கள் ஸலாம் சொன்னால் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லாமல் அஸ்ஸாமு அலைக்கும் என்று சொல்கிறார்கள். எனவே அவர்களுக்குப் பதில் சொன்னால் (எதை நம்மீது உண்டாகட்டும் என்று சொன்னார்களோ அதுவே அவர்கள் மீது உண்டாகட்டும் என்ற பொருள்படும்) வஅலைக் உங்களுக்கும் என்று சொல்லுங்கள் என இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) சொல்லி உள்ளதை அனைவரும் அறிவோம். 

இந்த அடிப்படையில்தான் த.மு.மு.க.வுக்கும் பி.ஜே.க்கும் உள்ள விஷயத்தில் உண்மையாளர்களைப் பார்த்து பொய்யர்கள் கூறியுள்ள அசிங்கமான கெட்ட வார்த்தைகள் அவர்களுக்கே உரியது என்பதை ஆதாரத்துடன் எழுதினோம். நாம் எழுதிய ஆதாரப்படி அவர்கள் சொன்ன அந்த வார்த்தைகளும் அசிங்கங்களும் உரியவர்களுக்கே போய் சேர்ந்து விட்டது.

தார்ப் பாயில் வடிய கட்டி பொய்யர்கள்.

உதாரணமாக த.மு.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மேலப்பாளையம் காரணமா? என்ற விளக்க இதழில், எனது பிரசுரத்தில் வார்த்தை கடினம், நாகரீகம் இல்லை என்று பி.ஜே. வகையறாக்கள் விமர்சிக்கிறார்கள்.  

பி.ஜே. நேற்று வந்த நாய் என்று பேசி உள்ளாரே அதுதான் நளினமான நாகரீகமான வார்த்தையா? அது மாதிரி நான் எழுதவில்லை. அதுதான் நாகரீகமானது நளினமானது என்றால், எனது வெளியீட்டில் எங்கெல்லாம் கடினமான நாகரீகமற்ற வார்த்தைகள் உள்ளதாக பி.ஜே. வகையறாக்கள் கருதுகிறார்களோ அங்கெல்லாம் பி.ஜே. பயன்படுத்தி உள்ள வார்த்தையை பி.ஜே. வகையறாக்கள் அமைத்துக் கொள்ளட்டும் என்று எழுதி இருந்தோம். 

நேற்று வந்த நாய் என்ற வார்த்தை சொன்னவர்களுக்கே உரியது என்று ஆகிவிட்டது. எனவே இதிலும் திசை திருப்பும் வேலையை காட்டுவதால் அவர்கள் தார்ப் பாயில் வடிய கட்டி பொய்யர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

அபுஅவ்ன் கூற்றுப்படிதான் லுஹா அதுவாக ஆனார்.

மொட்டைக் கடிதச் செய்தி பரப்புச் செயலாளர்களான அக்பர், ஞானியார் பற்றி குறிப்பிடும்போது இளைஞர்கள் என்றே குறிப்பிட்டுள்ளோம். இளவாட்டங்கள் என்றோ, விடலைப்பசங்கள் என்றோ நாம் குறிப்பிடவில்லை. லுஹாவும் பி.ஜே.யுமாக இருந்தால் இளவாட்டங்கள் என்றும் விடலைப்பசங்கள் என்றும்தான் விமர்சனம் செய்திருப்பார்கள் என்பதற்கு அவர்களது கடந்த கால விமர்சனங்கள் ஆதாரங்களாக உள்ளன. 

அவன் பெண் வைத்திருந்தான் இவன் பெண் வைத்திருந்தான் என்று எழுதுவது பன்றி சேற்றில் படுத்துவிட்டு வருகிற மாதிரி என்ற உதாரணத்தை எழுதியவர் அபுஅவ்ன். 

06-04-2002ல் நான் பி.ஜே.க்கு எழுதிய கடிதத்தால் முதன் முதலில் என் மூலம்தான் அது மாதிரி செய்தி வெளி வந்ததாக அபுஅவ்ன் எண்ணி உள்ளார். எனவே நமக்குத் தெரியாத அது மாதிரி செய்திகளை கடல் கடந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தவர் லுஹாதான் என்று எழுதி இருந்தோம். எனவே அபுஅவ்ன் கூற்றுப்படிதான் லுஹா அதுவாக ஆனார்.

...உதாரண வார்த்தைக்கு சொந்தக்காரர் அபுஅவ்ன்தான்.

அது மட்டுமல்ல எனது 6.4.2002 கடிதத்திற்கு பதில் என்று பி.ஜே. இரண்டு வீடியோக்களை அனுப்பி இருந்தாரே அந்த வீடியோ எப்பொழுது தயாரிக்கப்பட்டது. 2001 ல் தயாரிக்கப்பட்டது. 

2001லேயே பி.ஜே.தான் அவன் பெண் வைத்திருந்தான் இவன் பெண் வைத்திருந்தான் என்று நாவு கூசாமல் வீடியோவுக்காக பேசினார். 

இந்து சகோதரரையும் பள்ளிவாசலுக்குள் கூட்டி வைத்து ஒரு முஸ்லிம் அடுத்த பெண்ணுடன் தங்கியதை நான் பார்த்தேன் என்று சாட்சி சொல்ல வைத்து வீடியோ பண்ணி வெளியிட்டார். 

எனவே அபுஅவ்ன் கூறி உள்ள அந்த உதாரணப்படி யாரெல்லாம் பன்றி ஆகிறார்கள் என்றுதான் எழுதி இருந்தோம். நாமாக பி.ஜே, லுஹா, அபு அவ்ன் போன்றவர்களை பன்றி என்று எழுதவில்லை. பன்றி உதாரண வார்த்தைக்கு சொந்தக்காரர் அபுஅவ்ன்தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதிரை பாரூக் யார்? எப்படிப்பட்டவர்? எந்த இனம்?

அதிரை பாரூக் என்பவரின் மெயில்களுக்கு முறையான தெளிவான ஆதாரப்பூர்வமான பதில்களை எழுதி விட்டோம். அதற்குப் பிறகும் அவர் எழுதியதையே திரும்பத் திரும்ப வெவ்வேறு வார்த்தைகளால் எழுதி தொடர்ந்து மெயில்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறார். 

அபு அவ்ன் எப்படி தான் யார் என்று எழுதி தன்னை எந்த இனம் என்று அடையாளம் காட்டி விட்டாரோ அதுபோல் அதிரை பாரூக்கும் அவர் யார் எப்படிப்பட்டவர் எந்த இனம் என்று அவரைப் பற்றி அவரே அடையாளம் காட்டி எழுதி விட்டார். எம்மைப் பார்த்து சகோதரன் என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி சகோதரன் என்று குறிப்பிட்டு எழுதிய பிறகு அனுப்பிய மெயிலில் எருமை மாட்டு முதுகின் மீது பெய்த மழை என்று எழுதி இருந்தார்.

அதிரை பாரூக்கை ... ... என்று நாம் சொல்லவில்லை.

அவர் நம்மை சகோதரன் என்று எழுதி உள்ளதால் அவரைப் போல்தான் நாமும் இருப்போம் என்று எண்ணி உள்ளார். அதனால்தான் பிறகு அனுப்பிய மெயிலில் எருமை மாட்டு முதுகின் மீது பெய்த மழை என்று எழுதி விட்டார். 

இதன் மூலம் அவர் யார் எந்த இனம் குழம்பிப் போய் உள்ள அவருக்கு என்ன விளக்கம் எழுதினாலும் தெளிவு பெற மாட்டார். அவருக்கு எழுதுவது எருமை மாட்டு முதுகின் மீது பெய்த மழை மாதிரிதான் என்று தெளிவுபடுத்தி விட்டார். 

எனவேதான் அதற்குப் பிறகு அவருக்கு நாம் பதில் எழுதுவதை நிறுத்தி விட்டோம். இப்பொழுதும் அதிரை பாரூக்கை எருமை மாடு என்று நாம் சொல்லவில்லை. 

அவர்தான் அவரை எருமை மாடாக அடையாளம் காட்டி உள்ளார் என்பதை சுட்டிக் காட்டி உள்ளோம். குழம்பிப் போய் உள்ள அவர் மென்மேலும் குழம்பிக் கொள்வதோடு பி.ஜே. அணியில் உள்ளவர்களில் தெளிவு பெற முயற்சிப்பவர்களையும் குழப்பிக் கொண்டிருப்பதால் இதை நாம் எழுதுகிறோம்.

சமாதான பேர்வழிபோல் வேடமிட்ட வேடதாரி.

வாழ்க்கையில் தனியாக நடிப்பவர்களை நடிகர்கள் என்றும் கோஷ்டியாக சேர்ந்து நடிப்பவர்களின் கூடாரத்தை நாடகக் கம்பெனி, கலைக்குழு என்றும் விமர்சிக்கப்படும். 

அதிரை பாரூக்கின் முதல் கடிதத்தில் சமாதானப் பேர்வழிபோல் எழுதி இருந்தார். அவரது எழுத்து மோசடி அடையாளம் காட்டப்பட்டு முகத்திரை கிழிக்கப்பட்டது. பி.ஜே. அணியில் இருந்து கொண்டு சமாதானப் பேர்வழிபோல் நடித்து எழுதினார் என்பதை அவரது அடுத்தடுத்த கடிதங்கள் நிரூபித்து விட்டன. 

பி.ஜே. அணியினர் எப்படியெல்லாம் நடித்து வருகிறார்கள் என்பதை பல தலைப்புகளில் விளக்கி விட்டோம். எனவே சமாதான பேர்வழிபோல் வேடமிட்ட வேடதாரி அதிரை பாரூக்கை பி.ஜே. கலைக்குழு என குறிப்பிட்டுள்ளோம். 

பி.ஜே. அணியினர் நடிகர்கள் இல்லை, பொய்யர்கள் இல்லை என்றால் என்ன செய்திருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பல முறை எழுதி விட்டோம். அவர்கள் நிலையும் அதிரை பாரூக் அடையாளம் காட்டியுள்ள மாதிரிதான் இருக்கிறது.

பி.ஜே.யுடனான லுஹாவின் பனிப் போர்.

லுஹாவுக்காக பி.ஜே. என்னதான் கள்ளக் கடிதம் கொடுத்திருந்தாலும், பி.ஜே. மீது லுஹா என்ன என்ன குற்றச்சாட்டுகளையெல்லாம் கூறினாரோ அவற்றையெல்லாம் விமர்சிக்க ஏகத்துவம் ஆசிரியர் என்ற பினாமி பொறுப்பை தனக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தி வருகிறார். 

மஸ்ஜிதுர்றஹ்மான் ஜமாஅத்தாருக்கு கடிதம் எழுதுவது போன்றும் மஸ்தான் என்பவருக்கு பதில் கடிதம் எழுதுவது போன்றும் உண்மை, வணக்கம், கொள்கை, நாணயம் லுஹாவிடம். இல்லை அன்று அன்புடன் விளக்கி லுஹாவை மக்களுக்கு அடையாளம் காட்டி வந்தார் பிஜே. 

இது கடந்த காலம். இப்பொழுது மனிதர்களிடமுள்ள குற்றங் குறைகளை விமர்சித்து எழுதுவது போல் ஏகத்துவம் பத்திரிக்கையில் பி.ஜே.யின் பல குற்றங் குறைகளை பல தலைப்புகளில் அன்பாக அம்பலப்படுத்தி வருகிறார் லுஹா. ஆம் பி.ஜேயுடன் லுஹா நடத்தும் பனிப்போர் என்று இதை குறிப்பிடலாம்.

ரகசியம் ஓர் அமானிதமே! தலைப்பிலிருந்து பி.ஜே.யை நோக்கி வரும் கேள்வி.

தொழுகையை பேணாதவன் சுபுஹு தொழாதவன் பற்றியெல்லாம் எழுதிய லுஹா குறிப்பாக ரகசியம் ஓர் அமானிதமே என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை மிகவும் சிந்திக்கத்தக்கது. 

பி.ஜேயின் வாக்கு மூலப்படி ஜுனைது அவர்கள் சித்தீக்கிடம் சத்தியம் வாங்கி விட்டு சொன்னது ரகசியம். சித்தீக்குக்கு ரகசியத்தைப் பரப்புவதும் அமானித மோசடியே என்ற விபரம் தெரியாமல் இருக்கலாம். 

அறிஞர் பி.ஜே. அவர்களின் அறிவுக்குமா இது பற்றிய ஹதீஸ்கள் நினைவுக்கு வராமல் போயிருக்கும்? பி.ஜே. ஒரு சந்தர்ப்பவாதி அவர் போட்ட சதி திட்டப்படிதான் இது நடந்தது என்பது தனி விஷயம். 

சித்தீக் வந்து ரகசியத்தைச் சொல்லப் போகிறேன் என்றதும். அறிஞர் பி.ஜே. ரகசியத்தை பரப்பக் கூடாது என்று நல்ல புத்திமதி சொல்லி இருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்குமா? இதுதான் லுஹா எழுதியுள்ள ரகசியம் ஓர் அமானிதமே! என்ற தலைப்பிலிருந்து பி.ஜே.யை நோக்கி வரும் கேள்வி.

இது லுஹாவுக்கு கிடைத்த வாய்ப்பு.

இன்னும் சில விஷயங்களை அந்தத் தலைப்பு மூலம் லுஹா உண்மைப்படுத்தி உள்ளார். உரிமை இல்லாதவர்களையெல்லாம் மஸ்ஜிதுர் ரஹ்மானின் செயலாளர், பொருளாளர், செயற்குழு-பொதுக்குழு மெம்பர் என்பன போன்ற அற்பமான பதவி பெயரால் அண்ணன் வழியில் ஆள் சேர்த்துள்ள லுஹா. அவர்களிடம் விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய உண்மைகளே பேசி உள்ளார். 

அவற்றில் ஒன்று “நான் நண்பர் என்ற முறையில் சொன்னதையெல்லாம் ஒன்று விடாமல் எழுதி விட்டார்” என்பதாகும். அப்பொழுது அப்படிச் சொன்னவர் இப்பொழுது ரகசியம் ஓர் அமானிதமே! என்ற இந்த தலைப்பு மூலம் பி.ஜே. மதுரை மாநாட்டில் நடந்து கொண்டது. பாக்கர், எம்.ஐ. சுலைமான் விவகாரங்கள் யாவும் லுஹாவாகிய நான் சொன்ன ரகசிய செய்திகள்தான். 

அவற்றை பழுலுல் இலாஹி வெளியிட்டு ரகசியம் காத்தல் என்ற அமானித மோசடி செய்துவிட்டார். என்கிற மாதிரி எழுதி அவர்களை ஆதாரத்துடன் அடையாளம் காட்டி உள்ளார் லுஹா. 

இது லுஹாவுக்கு கிடைத்த வாய்ப்பு. ஆனால் அவர் எழுதி உள்ள மாதிரி நண்பா ரகசியமாக வைத்துக் கொள் என்ற நிபந்தனையுடன் கூறவில்லை என்பது மட்டுமல்ல, என்னிடம் கூறுகிற மாதிரி பலர் அறியவும் கூறினார்.

ஒதுங்கி விடவேண்டும். போட்டி அமைப்பு நடத்தக் கூடாது.

அது மட்டுமல்ல பாடைப் புகழ் லுஹா குத்பா மேடைகளிலும் இந்தப் பனிப் போரை நடத்தி வருகிறார். தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் எல்லா அமைப்புகளிலும் நடந்து விடுகின்றன. அது அரசியல் கட்சி, உலக ஆதாயத்துக்காக உள்ள அமைப்பு எனவே தனியாக கட்சி துவங்கினார்கள். மறுமைக்காக வாழ்பவர்கள் அமைப்புகளிலிருந்து நீக்கப்பட்டால் ஒதுங்கி விடவேண்டும். போட்டி அமைப்பு நடத்தக் கூடாது என்று பேசி உள்ளார். 

பி.ஜே.யின் கூற்றுப்படி த.மு.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட அவர் ஒதுங்கி விட வேண்டும். இதைத்தான் லுஹா குத்பா மூலம் பி.ஜேக்கு உணர்த்தியுள்ளார்.
இதையும் கவனத்தில் கொண்டால் பனிப்போரை புரியலாம்.

பீ.ஜே. அவர்கள் இந்த (மஸ்ஜிதுர்றஹ்மான்) பொதுக்குழுவில் சரியான முறையில் பதில் சொல்லாமல் (லுஹா கூட்டிய) இந்த அநீதியான பொதுக் குழுவிற்கு துணை போக வைத்தது இவர் ஏதேனும் தவறு செய்திருப்பார். இதன் ஆதாரம் லுஹாவிடம் இருக்கும் இதனால் இவர் லுஹாவிடம் அடிபணிந்து இருப்பாரோ? இது மஸ்தான் பி.ஜே.க்கு எழுதிய கடிதத்தில் இடம் பெற்ற சிந்திக்கத் தூண்டும் வாசகம். இதையும் கவனத்தில் கொண்டால் பனிப்போரை புரியலாம்.

இவர் மானமுள்ளவராக இருப்பார் என்றே நம்புகிறோம்.

மதுக்கூர் ஐயூப் அவர்களுக்கு நமாக போன் போடவில்லை. அவர்தான் போன் செய்தார். மொட்டைக் கடித பேர்வழிகளின் வழியை பின் பற்றி பப்ளிக் பூத்களிலிருந்து பேசி விட்டு ஓடி ஒழியும் மற்றவர்களைப் போல் இல்லாமல் குறிப்பிட்ட நம்பரிலிருந்து அவர் பேசி உள்ளார். 

எனவே மற்றவர்களைப் போல் இருக்க மாட்டார். இவர் மானமுள்ளவராக இருப்பார் என்றே நம்புகிறோம். த.மு.மு.க. தலைமையினர் 3 பேர் தவிர அனைவரும் கையெழுத்திட்டதாக பி.ஜே. வெளிட்ட அந்த பொய்யான விளம்பரத்தின் முக்கிய அறிவிப்பில் உள்ள வாசகங்கள் பி.ஜே. முன்னதாகவே திட்டமிட்டு இப்படி எழுத வேண்டும் என்று எண்ணி வந்ததுதான். 

அவர் என்ன எழுத வேண்டும் என்று மனதில் எண்ணி வந்தாரோ அதைத்தான் அந்த இடத்தில் வந்த வார்த்தைகள் போல் எழுதியுள்ளார். இந்த உண்மை அவரை அறியாமல் அவரது வாயில் வந்ததும் மறைக்கிறார். இதை திருச்சி நிகழ்ச்சி சி.டி.யில் காணலாம் என்பதை மதுக்கூர் ஐயூப் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

அரபிகள் இடமோ அரபு நாட்டு நிறுவனங்கள் இடமோ நன்கொடை வாங்காத உத்தமர்கள்.

பிரச்சாரம் செய்ய தாஇகள் இருக்கிறார்கள் பொருளாதாரம்தான் இல்லை. வெளி நாட்டவர் இடமோ. வெளி நாட்டு இயக்கங்கள் இடமோ எந்த ஒரு பைசாவும் நன்கொடை வாங்குவதில்லை என்று பைலாவாகக் கெண்டு செயல்படுகிறோம். 

சவூதியில் இருந்து 10 கோடி ரூபாய் தந்தாலும் வாங்க மாட்டோம். ஆகவே நீங்கள் நன்கொடை தாருங்கள் என்று டி.வி. விளம்பரக் காட்சிகளிலும் ஒரிஜினல் தலைவர் பி.ஜே. தோன்றி வசூலுக்காக பேசி வருகிறார். 

இப்பொழுது பினாமித் தலைவராக இருக்கும் ஸைபுல்லா ஹாஜா தமிழகத்தில் தாஇயாகப் பணியாற்றுவதற்கு சவுதியில் இருந்து சம்பளம் வாங்கக் கூடியவர். இவரை தலைவராக ஆக்கியதன் மூலம் உங்கள் வெளிநாட்டு கொள்கை என்ன ஆயிற்று? 

வெளிநாட்டு உதவிகளை வாங்க மாட்டோம் என்று சொல்லுவது விளம்பரத்திற்காக. அந்தரங்கமாக வரும் வெளி நாட்டுப் பணங்களை வாங்காமல் இருக்கமாட்டார்கள், என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். 

ஜாக் நிகழ்ச்சிகளில் அரபியில் பேனர் வைத்ததை அரபு நாட்டு பிச்சைக் காசுக்காக வைக்கிறார்கள் என்று பேசிய மகான் பி.ஜே. த.த.ஜ. நிகழ்ச்சியில் அரபியில் பேனர் கட்ட வைத்துள்ளது எந்த அரபு நாட்டில் பிச்சை எடுக்க? மக்கள் கேட்க மாட்டார்களா?

எந்த அளவு நாக்கு சுத்தமானவர்களாகவும் கை சுத்தமானவர்களாகவும் இருப்பார்கள்?

வெளிநாட்டு உதவிகளை பெறக் கூடாது பெற மாட்டோம் என்ற கொள்கை உடைய த.த.த.ஜ.தலைவர் ஸைபுல்லா ஹாஜா சவூதி ஊதியம் இப்பொழுது வாங்கவில்லை என்பது உண்மையானால் இப்பொழுது நான் சவுதி சம்பளம் வாங்கவில்லை என்று எழுத்து மூலமாக அறிக்கை வெளியிடட்டும். அப்படி வெளியிடாவி;ட்டால் தமிழகத்தில் தாஇயாகப் பணியாற்ற இப்பொழுதும் சவுதி சம்பளம் வாங்கி; வருகிறார் என்பது உறுதி. 

அது மட்டுமல்ல வெளி நாட்டு உதவி வாங்க மாட்டோம் என்பது வசூல் விளம்பரத்திற்காகத்தான் என்பதும் உறுதி என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். இருட்டில் வாங்கிவிட்டு இல்லை என்போர் எந்த அளவு நாக்கு சுத்தமானவர்களாகவும் கை சுத்தமானவர்களாகவும் இருப்பார்கள்?

சத்திய நேசன்கள் என்ற ஷய்த்தான்கள்.

சத்திய நேசன் என்ற பெயரில் மொட்டைக் கடிதம் போட்டவர்கள் ஏகத்துவம் ஆசிரியர் குழுவில் உள்ள பி.ஜே, லுஹா, செய்யது இபுறாஹீம் ஆகியவர்கள்தான் என்று பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன் என்ற தலைப்பில் அடையாளம் காட்டி மறுத்தால் முபாஹலா பண்ணட்டும் என்று எழுதிய பின்தான் சத்திய நேசன் என்ற பெயரில் வந்த மொட்டைக் கடிதங்கள் நின்றன. 

அப்துர்றஹ்மான் ஆதம் ஆகிய புதிய பெயர்களிலான மொட்டைக் கடிதங்களும் சத்திய நேசன்கள் என்ற ஷய்த்தான்கள் யார் என்று அடையாளம் காட்டப்பட்ட பிறகே வருகின்றன. அப்துர் றஹ்மான் என்ற பெயரிலும் ஆதம் என்ற பெயரிலும் மொட்டை கடிதங்கள் அனுப்பி வருவது ஒரு நபரே என்றும் அடையாளம் காட்டப்பட்டுள்ளது என்பதையும் மதுக்கூர் ஐயூப் அவர்களின் கவனத்திற்கு தருகிறோம்.

மதுக்கூர் ஐயூப் அவர்களின் பார்வைக்கு.

பி.ஜே. அணியில் மதுக்கூர் ஐயூப் தீவிரமாக செயல்படுவது பி.ஜே.யையும் அவரைச் சார்ந்தவர்களையும் நல்லவர்கள் என்று நம்பித்தான் என்பது உண்மையானால், பி.ஜே. விடுத்துள்ள சவால்படி எம்மை ஒரே மேடையில் சந்திப்பது சம்பந்தமாக பி.ஜே.யின் ஒப்புதலை அவர் அபகரித்துள்ள பத்திரிக்கையில் வெளியிடச் செய்ய வேண்டும். இது சம்பந்தமான அனைத்து விபரங்களும் முந்தைய வெளியீடுகளில் உள்ளது. பி.ஜே.யின் சவாலை ஏற்று 1-12-2002ல் நாம் பி.ஜே.க்கு எழுதிய கடிதத்திலிருந்து ஒரு சிலவற்றை மதுக்கூர் ஐயூப் அவர்களின் பார்வைக்குத் தருகிகறோம்.

ரகசிய பொறுப்புகளிலிருந்து விலகுங்கள்.

பி.ஜே. அவர்களே! அதிகார போதையிலிருந்து விலகுங்கள். தலைவர்களுக்கெல்லாம் தலைவராக இருந்து அவர்களை அடிமைகள் போல ஆட்டிப் படைக்க வேண்டும் என்ற எண்ணத்தை விடுங்கள். மூத்தத் தலைவர் என்ற ரகசிய பொறுப்புகளிலிருந்து விலகுங்கள்.

உங்கள் அணி மவுலவிகளை உழைத்து வாழச் செய்யுங்கள்.

பி.ஜே. அவர்களே! திருந்துங்கள் உங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் கூறி உள்ள பொய்களை பொய் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளுங்கள். உங்கள் ஆதரவாளர்களின் வாழ் வாதாரத்திற்கு வகை செய்வதற்காக கைப்பற்றிய பள்ளிகளிலிருந்தும் நிறுவனங்களிலிருந்தும் வெளியேறுங்கள். மார்க்கத்தை பிழைப்பாக ஆக்காதீர்கள் என்று பிறருக்கு உபதேசிப்பதை விட்டு முதலில் உங்கள் அணி மவுலவிகளை உழைத்து வாழச் செய்யுங்கள்.

இதுதான் உண்மை.

இல்லை நீங்கள் விட்ட சவால்படி38 மவுலவிகளுடன் ஒரே மேடைக்கு வாருங்கள். நீங்கள் விட்ட சவால்படி அவர்கள் சாட்சியாகவும் நிரூபிக்கறேன். இப்பொழுது எதை மார்க்கம் இல்லை என்றும் எதை முட்டாள்தனமான செயல் என்றும் விமர்சிக்கிறீர்களோ! அதுதான் மார்க்கம் என்றும் அதுதான் தீர்வு என்றும் நீங்கள் செயல்பட்டீர்கள். அதனால் உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. உங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் ஏற்பட்ட ஆபத்தாக பிரச்சாரம் செய்தீர்கள் இதுதான் உண்மை.

அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக என்று துஆச் செய்ய வேண்டும்.

உங்கள் கூற்றுக்கு பொய் சாட்சி சொல்பவர்களும் சரி நீதியை நிலை நாட்ட எனது கூற்றை உண்மைப் படுத்துபவர்களும் சரி. இந்த விவகாரங்களிலிருந்து ஒதுங்க எண்ணி தெரியாது, மறந்து விட்டது என்று சமாளிக்க எண்ணுபவர்களும் சரி. எதைச் சொன்னாலும் எதிர் தரப்பு ஏற்றுக் கொள்ளாவிட்டால், இதில் நாங்கள் பொய்யர்கள் என்றால் அல்லாஹ்வின் சாபம் எங்கள் மீது இறங்கட்டுமாக என்று துஆச் செய்ய வேண்டும்.

லுஹாவை விலைக்கு வாங்கிய பின்னரே உங்களால் இப்படி சவால் விட முடிந்தது.

எம்.ஐ.சுலைமான், பாக்கர் பற்றிய கசமுசா செய்திகளை தக்க சாட்சியுடன் நிரூபிக்கத் தயாரா? என்று சவால் விட்டுள்ளீர்கள். ஷம்சுல் லுஹாவை விலைக்கு வாங்கிய பின்னரே உங்களால் இப்படி சவால் விட முடிந்தது. எனவே இது பற்றிய எனது சாட்சியாகிய லுஹாவை விசாரியுங்கள் என்று எழுதத் தேவையில்லை. அவர் மறுப்பதாக நீங்கள் வாதித்தால், அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுக்க வேண்டும். வல்லாஹி - அல்லாஹ்வின் ஆணையாக என்ற வார்த்தைகளால் சத்தியம் செய்யக் கூடாது. வல்லாஹி - அல்லாஹ்வின் ஆணையாக என்ற வார்த்தையால் பொய் சத்தியம் செய்து ஏமாற்றலாம் என்ற கொள்கையில்தான் உங்கள் அணியில் உள்ள மவுலவிகளெல்லாம் இருக்கிறீர்கள்.

லுஹா கைப்பட கடிதம் எழுதி எனக்கு அனுப்ப வேண்டும்.

எனவே எம்.ஐ.சுலைமான், பாக்கர் ஆகியவர்கள் பற்றி 06.04.2002. தேதிய கடிதத்தில் உள்ள செய்திகளையும் லுஹா கூறியதாக பிரசுரத்திலும் பக்ரி கடிதத்திலும் இந்த கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளவற்றையும் நான் பழுலுல் இலாஹிக்கு தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்து இருந்தால் பூலி ஷம்சுல் லுஹா மீது அல்லாஹ்வின் லஃனத்து-சாபம் இறங்கட்டுமாக ஆமீன் என்று பகிரங்க மேடையில்; துஆச் செய்யத் தயார் என்று லுஹா கைப்பட கடிதம் எழுதி எனக்கு அனுப்ப வேண்டும்.

அனைவரும் கையெழுத்திட்ட கடிதம் வர வேண்டும்.

பெருந் தொகை தந்ததாக கூறுகிறீர்களே அந்த பெருந்தகையையும் மேடைக்கு கொண்டு வர வேண்டும். அவரும் முபாஹலா பண்ண வேண்டும். இப்படி ஒரு சம்பவமே இல்லாததால் செட்டப் ஆள் ஏற்பாடு செய்வீர்கள். 

செட்டப் ஆள் கிடைக்காத நிலையில் அந்த நபர் வர மறுக்கிறார் என்று சமாளிப்பீர்கள். எப்படியானாலும் உங்களின் இந்தக் கூற்றையும் பெருந் தொகை பற்றியதையும் உண்மைப் படுத்திய அனைவரும் பெருந் தொகை பற்றி பிரச்சாரம் செய்த உங்கள் அணி நிர்வாகிகளும் இதை பிரசுரமாக முதன் முதலில் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் ஒட்டியவர்களும் இதை உண்மைப் படுத்த முன் வர வேண்டும். 

இதில் அவர்கள் பொய்யர்கள் என்றால் உங்கள் அணி நிர்வாகிகள் மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகிகள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் லஃனத்து-சாபம் இறங்கட்டுமாக ஆமீன் என்று பிரார்த்திக்கத் தயார் என்று அனைவரும் கையெழுத்திட்ட கடிதம் வர வேண்டும்.

நீங்கள் அனைவரும் பொய்யர்கள் என்பதற்கு உரிய ஆதாரமாகும்.

நான் 30,000 அனுப்பி அதை திரும்ப அனுப்பியதாக கூறுகிறீர்களே! அதற்கு கொண்டு வந்து தந்தவர் என்று கூறப்படுபவரும் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படும் நிர்வாகியும் இதை உண்மைப் படுத்திட வேண்டும். இதை ஏற்று அவர்கள் அனைவரும் இதில் நாங்கள் பொய்யர்கள் என்றால் எங்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று பிரார்த்திக்கத் தயார் என்று கடிதம் அனுப்ப வேண்டும். இதற்கு ஒப்புக் கொள்ளாமல் வாத ரீதியாக நோட்டீஸ்களோ கேஸட்களோ வெளியிட்டு திசை திருப்பினால். அதுவே நீங்கள் அனைவரும் பொய்யர்கள் என்பதற்கு உரிய ஆதாரமாகும்.

சமுதாயத்தின் சாபக் கேடானவர்களின் மீது அல்லாஹ்வின் லஃனத்து

இப்படி டிமாண்ட் வைத்துள்ளதின் நோக்கம் நீங்கள் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். அதாவது முஸ்லிம் சமுதாயத்திற்கும் தவ்ஹீது ஜமாஅத்திற்கும் நீங்கள் செய்த துரோகத்தை ஒப்புக் கொண்டு உங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்க முன் வர வேண்டும். அல்லது இந்த சமுதாயத்தின் சாபக் கேடானவர்களின் மீது அல்லாஹ்வின் லஃனத்து -சாபம் இறங்க வேண்டும்.

அனைத்துச் செலவுகளையும் செய்ய வேண்டும்.

இந்த நிகழ்ச்சி சி.டி. வீடியோ வியாபார நோக்குடன் ரூமுக்குள் வைத்து நடத்தக் கூடாது. பொது மக்கள் முன் பகிரங்க மேடையில் மேலப்பாளையத்தில் நடத்த வேண்டும். இந்நிகழ்ச்சி பற்றி சமுதாயத்தின் அனைத்து பத்திரிக்கைகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும். நீங்கள் உங்களை உண்மையாளர்களாகக் காட்ட எந்த நிதியிலிருந்து இலவச சி.டி.யும் கேஸட்களும் வெளியிட்டீர்களோ! அந்த நிதியிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் செய்ய வேண்டும்.

உங்களை அடையாளம் காட்ட அந்த 2 வீடியோக்கள் தேவை.

உங்கள் தரப்பிலிருந்து மேலே கூறி உள்ளபடி ஒப்புதல்; கடிதம் கிடைத்த உடன் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் சரியான கால அவகாசத்தடன் நிகழ்ச்சி பற்றிய தேதியை நிர்ணயிப்போம். 

முன்னதாக இந்த பிரச்சனைகளை ஒட்டி மஸ்ஜிதுர் றஹ்மானில் பதியப்பட்ட 2 வீடியோக்களின் காப்பிகளை எடிட் செய்யாமல் அப்படியே வீடியோ கேஸட்டாக அனுப்பித் தர வேண்டும். 

சி.டி. வேண்டாம். அதில் எடிட் செய்ததை கண்டு பிடிக்க முடியாது. அதிலும் நீங்கள் செய்துள்ள தில்லு முல்லுகளையும் மேடையில் போட்டுக் காட்டி உங்களை அடையாளம் காட்ட அந்த 2 வீடியோக்கள் தேவை. 15.12..2002 க்குள் இதற்குரிய பதிலை எதிர் பார்க்கிறேன்.

உங்கள் ஃபத்வாக் (தீர்ப்பு) களுக்குப் பயந்து ஓட மாட்டோம்.

எதற்கும் ஒத்து வராமல் உங்கள் வரட்டுக் கவுரவம் தொடருமானால், செய்ய வேண்டிய விமர்சனங்களையெல்லாம் செய்து விட்டு, மெஜாரிட்டி மைனாரிட்டி பார்த்து வருமானத்திற்காக மானத்தை இழந்து மன்னிப்பு கேட்டு மண்டி இட்ட ஈனப் பிறவிகளான பேடிகளைப் போல பெட்டைகளைப் போல உங்களிடம் வந்து ஒட்ட மாட்டோம். உங்கள் ஃபத்வாக் (தீர்ப்பு) களுக்குப் பயந்து ஓட மாட்டோம், ஒதுங்க மாட்டோம், ஓய மாட்டோம்.. உங்களை அடையாளம் காட்டாமல் விட மாட்டோம். அல்லாஹு அக்பர்.

மதுக்கூர் ஐயூப் அவர்களே! மேற்கண்டவாறு எழுதி 21 மாதங்கள் ஆகி விட்டன. யாரோ ஒருவர் அண்ணா சிலைக்கு மாலை போடும் போட்டோவை போட்டு பக்கத்தில் நின்ற காதர் மைதீன் மாலை அணிவித்த போது எடுத்த படம் என்று பி.ஜே. அபகரித்த இதழில் செய்தி வெளியிட்டதை பார்த்திருப்பீர்கள். 

அந்த போட்டோவின் மறுபக்கம் பதில்கள் பகுதியில், எப்போது எந்த பத்வா ஆதாயம் தருமோ அந்த பத்வாவைக் கொடுப்பது யூதர்களின் வழக்கம் என்று குர்ஆன் கூறுகிறது. அவர்களின் வழி நடப்பவர்கள் சிலர் தங்களுக்க ஆதாயம் தரும் இது போன்ற பத்வாக்களை கொடுத்து பொய்யர்களுக்கு உதவி வருகின்றனர் என்று எழுதி இருந்ததையும் படித்து இருப்பீர்கள். 

பார்க்காவிட்டால் ஜுன் 04-10 2004 இதழை வாங்கிப் பாருங்கள். எப்போது எந்த பத்வா ஆதாயம் தருமோ அந்த பத்வாவைக் கொடுப்பதில் வல்லவரான பி.ஜே. மேற்கண்ட நமது கடிதத்திற்குப் பிறகு முபாஹலா மார்க்க விஷயத்திற்குத்தான் இது மாதிரி பிரச்சனைகளுக்கு அல்ல என்று எடுபிடிகள் மூலம் கூறி சமாளித்தார்.

கொள்கைவாதிகள் எந்த கருத்தில் இருப்பார்களோ அதன்படிதான் செயல்படுவார்கள்.

மானமுள்ள நீங்கள் இனி அப்படி சமாளிக்க விடமாட்டீர்கள் என்று நம்பகிறோம். ஏகத்துவம் இதழில் பொய்யென்று தெரிந்த பின்பும் என்ற தலையங்கத்திலும் முபாஹலா என தலைப்பிட்டு கேள்வி பதில் பகுதியிலும் எழுதி விட்டார்கள். எனவே அந்த அடிப்படையில் நாம் அவர்களை சந்திக்க தயார். 

எந்த ஒரு மஸாயிலிலும் எல்லாரும் ஒரே கருத்தில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தில் இருப்பார்கள். கொள்கைவாதிகள் எந்த கருத்தில் இருப்பார்களோ அதன்படிதான் செயல்படுவார்கள். 

சந்தர்ப்பவாதிகள் பச்சோந்திகள் மாறலாம் பிதற்றலாம். ஜகாத் விஷயத்தில் பி.ஜே.யின் கருத்து சரியாகப்பட்டதால் ஏற்று செயல்படுத்தும் நாம் வெளிநாட்டில் வேலை தேடிச் சென்றவர்கள் 5 மாதம் அல்ல 5 வருஷம் தங்கினாலும் கஸர்தான் தொழ வேண்டும் என்ற கருத்தில் உடன்பாடு ஏற்படாததால் நாம் அதை செயல் படுத்தவில்லை. அது போல்தான் முபாஹலா கூடாது என்ற கொள்கையில் உள்ளவர்கள் நிலையும்.

நம் விஷயத்தில் அவர்கள் நடை பிணங்களாக இருப்பது ஏன்?

ஒருவர் துஆ கேட்க மற்றவர் ஆமீன் சொல்லும் கூட்டுத் துஆ கூடாது என்று கூறி விட்டு காயல் பட்டிண முபாஹலாவில் கூட்டுத் துஆ செய்த பி.ஜே. மாதிரி கொள்கையற்றவர்கள் வேண்டுமானால் பெருமைக்காக வரட்டு கவுரவத்திற்காக முபாஹலா பண்ணலாம். அவரை மாதிரி எல்லாரும் இருக்க மாட்டார்கள். எனவே முபாஹலா மஸாயிலில் உடன்பாடு இல்லாத மாற்று கருத்துடையவர்களைப் போய் வா வா என்றழைக்கும் பி.ஜே.யின் இந்த முபாஹலா அழைப்பு ஒரு பித்தலாட்டமே. முபாஹலா பண்ணலாம் என்ற பி.ஜே. அணியினரின் கருத்தில் உள்ள நாம் அவரது சவாலையும் ஏற்று முபாஹலா அழைப்பையும் ஏற்று விட்டோம். பின்னரும் நம் விஷயத்தில் அவர்கள் நடை பிணங்களாக இருப்பது ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

பி.ஜே. பற்றி மாணவர் குற்றம் சாட்டிய ஒழுக்கம் சம்பந்தமாக பிரச்சனையில் விசாரணை செய்யாமல் மூடி மறைத்தது ஏன்? அந்த மாணவன் விடுத்த முபாஹலா அழைப்பை ஏற்காமல் ஓடி ஒழிந்து வருவது ஏன்? அந்த மாணவர் கடிதத்தில் எழுதி உள்ளபடி பி.ஜே. பற்றி நான் கூறியதை எங்கு கூப்பிட்டு கேட்டாலும் சொல்வேன் என்று கூறிய ரஹ்மதுல்லாஹ் இம்தாதியை முபாஹலாவுக்கு அழைக்காதது ஏன்?

இது பிச்சை இல்லையா?

கடந்த காலங்களில் வசூலிக்கும் பணியை பிச்சை என்று பேசிய பி.ஜே. துபை வருவதையொட்டி பி.ஜே. வருகிறார் பி.ஜே. வருகிறார் என்று இப்பொழுதே வசூல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ரசிகர்களெல்லாம் வசூல் பணியில் மும்முரமாக உள்ளனர். எனவே இது பிச்சை இல்லையா? 

யாருக்கு பிச்சை ரகசியமாகப் போட இப்படி பகிரங்க பிச்சை எடுக்கிறீர்கள் என்று நாம் கேட்க மாட்டோம். பி.ஜே. வருகிறார் என்றால் அதற்காக என்ன வசூல்? என்றும் நாம் கேட்கவில்லை. விரைவில் துபை வரவிருக்கும் பி.ஜே. நான் துபையில் பெருந் தொகை வாங்கியதாக அவர் கூறிய குற்றச்சாட்டை துபையில் நிரூபிக்க வேண்டும். அல்லது அவரை குடும்பத்துடன் வரவழையுங்கள். நானும் எனது குடும்பத்தை வரவழைக்கிறேன் இந்த விஷயத்திற்கு துபையிலேயே முபாஹலா வைத்துக் கொள்வோம்.

பி.ஜே.யைவிட மகாமகா பொய்யன் உலகில் யாரும் இல்லை.

முனாழரா பெயரால் பல முறை இலங்கைக்கு படையெடுத்தவர். இலங்கை உமர் அலியுடன் முபாஹலா பண்ணத் தயார் என்று கூறியவர். என்னுடன் முபாஹலா செய்வதற்காக துபை வர வேண்டும் என்று நாம் கூறவில்லை. அவரது பயணத் திட்டப்படி துபை வந்த இதை நிரூபிக்காமலோ இதற்காக முபாஹலா பண்ணாமலோ போனால் பி.ஜே.யைவிட மகாமகா பொய்யன் உலகில் யாரும் இல்லை என்பது உறுதியாக ஆகிவிடும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

பி.ஜே.யை பிடித்து வர மதுக்கூர் ஐயூப் அவர்களே நீங்கள் தயாரா?

1-12-2002 கடிதத்தில் கூறியுள்ள விஷயங்களுக்கு மட்டுமன்றி பி.ஜே, லுஹா ஆகியவர்களின் புதிய பொய்கள் சம்பந்தமாகவும் முபாஹலா பண்ண நாம் தயார். 2 பேர் தவிர யாரும் கையெழுத்து போடாத நிலையில் 3 பேர் தவிர எல்லாரும் கையெழுத்திட்ட மாதிரி முக்கிய அறிவிப்பு வெளியிட்ட பொய்யர் பி.ஜே. என்று முபாஹலா பண்ணத் தயார். பி.ஜே.யை பிடித்து வர மதுக்கூர் ஐயூப் அவர்களே நீங்கள் தயாரா?

48 மணி நேரம் கழித்து எல்லாரும் கையெழுத்திட்டு தந்து விட்டார்கள் என்று போன் போட்டவர்களிடமெல்லாம் பொய் சொன்ன பொய்யர் பி.ஜே. என்று முபாஹலா பண்ணத் தயார். பி.ஜே.யை பிடித்து வர மதுக்கூர் ஐயூப் அவர்களே நீங்கள் தயாரா?

48 மணி நேரம் டயம் எடுத்து எல்லாரும் கையெழுத்திட்டு தந்து விட்டார்கள் என்று ஆலந்தூர் கூட்டத்திலும் திருச்சி கூட்டத்திலும் வெட்கமின்றி பொய் சொன்ன பொய்யர் பி.ஜே. என்று முபாஹலா பண்ணத் தயார். பி.ஜே.யை பிடித்து வர மதுக்கூர் ஐயூப் அவர்களே நீங்கள் தயாரா?

இந்த மொட்டைக் கடித பேர்வழிகளை பிடித்து வர தயாரா?

சத்திய நேசன் என்ற பெயரில் மொட்டைக் கடிதம் போட்டவர்கள் ஏகத்துவம் ஆசிரியர் குழுவில் உள்ள பி.ஜே, லுஹா, செய்யது இபுறாஹீம் ஆகியவர்களும்தான் என்று முபாஹலா பண்ணத் தயார். இந்த மொட்டைக் கடித பேர்வழிகளை பிடித்து வர மதுக்கூர் ஐயூப் அவர்களே நீங்கள் தயாரா?

சத்திய நேசன் என்ற பெயரில் முதன் முதலில் மொட்டைக் கடிதம் போட்டது குவைத் ரசூல் மைதீன்தான் என்று நாம் அடையாளம் காட்டியதும் அது தான்தான் என்று அவர் சரண் அடைந்து உண்மையை ஒப்புக் கொண்டு விட்டதால் அவரை விட்டு விடுவோம். அவரது பின்னணியில் ஏகத்துவ ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள் யாரும் இருக்கவில்லை என்று அவர் கூறினால் அவரையும் முபாஹலாவுக்கு கொண்டு வர வேண்டும். மதுக்கூர் ஐயூப் அவர்களே கொண்டு வருவீர்களா?

கள்ளக் கணக்கு எழுதச் சொன்னவர் பி.ஜே.

மஸ்ஜிதுர் றஹ்மான் கணக்கில் லுஹா காணவில்லை என்று கூறிய பணத்தில் ஒண்ணரை லட்சம் ரூபாய்க்கு சம்பளத்தின் பெயரால் கள்ளக் கணக்கு எழுதச் சொன்னவர் பி.ஜே. என்று முபாஹலா பண்ணத் தயார். பி.ஜே, லுஹா மற்றும் இப்பொழுதுள்ள மஸ்ஜிதுர் றஹ்மான் கம்பெனியினரை பிடித்து முபாஹலா மேடைக்கு இழுத்து வர மதுக்கூர் ஐயூப் அவர்களே நீங்கள் தயாரா?

முந்தைய தேதி போட்டு கள்ளக் கடிதம் கொடுத்த கள்ளக் கடித பேர்வழி பி.ஜே.
மொட்டைக் கடித மன்னர் பி.ஜே. லுஹாவைக் காப்பாற்ற 2002ல் கடிதம் எழுதி ஓராண்டுக்கு முன்பு 2001லேயே எழுதியதுபோல் ஓராண்டுக்கு முந்தைய தேதி போட்டு கள்ளக் கடிதம் கொடுத்த கள்ளக் கடித பேர்வழி பி.ஜே. என்று முபாஹலா பண்ணத் தயார். பி.ஜே.யை பிடித்து வர மதுக்கூர் ஐயூப் அவர்களே நீங்கள் தயாரா?

பி.ஜே.க்காக பொய் சாட்சி சொல்லி பொய் சத்தியம் செய்தவர்கள்தான் ஷம்சுல் லுஹாவும் எம்.எஸ். சுலைமானும் என்று முபாஹலா பண்ண நாம் தயார். அவர்களை பிடித்து வர மதுக்கூர் ஐயூப் அவர்களே நீங்கள் தயாரா?

பாடைப் புகழ் லுஹாவை பிடித்து வர மதுக்கூர் ஐயூப் அவர்களே நீங்கள் தயாரா?

களஞ்சியம் கலீல் ரசூல் பெண்கள் கல்லுாரி காதல் லீலைகள் சம்பந்தமான செய்திகளை எனக்கு வந்து சேரச் செய்தவர் லுஹாதான் என்று முபாஹலா பண்ண நான் தயார். பாடைப் புகழ் லுஹாவை பிடித்து வர மதுக்கூர் ஐயூப் அவர்களே நீங்கள் தயாரா?

நான் ரெடி நீங்கள் ரெடியா?

முஸ்லிம் டிரஸ்டு, முஸ்லிம் மீடியா டிரஸ்டுகள் யாவும் த.மு.மு.க.வுக்காகத்தான் உருவாக்கப்பட்டது என்று முபாஹலா பண்ண நான் ரெடி. இதை மறுக்கும் த.த.ஜ. தலைமையினரை முபாஹலா மேடைக்கு பிடித்து வர மதுக்கூர் ஐயூப் அவர்களே நீங்கள் ரெடியா?

மதுக்கூர் ஐயூப் அவர்களே நமாக உங்களுக்கு போன் போடவில்லை. நீங்கள்தான் போன் செய்தீர்கள் என்பதை மீண்டும் நினைபடுத்திக் கொள்கிறேன். எனவே இது சம்பந்தமாக மேலும் என்ன என்ன பேச வேண்டுமோ பேசுவோம். 

முறையாக ஒப்பந்தத்தை எழுதுவோம். உங்களுடைய லீவு நாட்களில் ஏதாவது ஒரு நாளில் நேரில் வாருங்கள். சுபுஹுக்குப் பின் பகல் 12 மணி வரை நேரம் ஒதுக்க நாம் தயார். மற்றவர்களைப் போல் இல்லாமல் ஓடி ஒழியாமல் மானமுள்ளவர் என்று நிரூபிப்பீர்கள் என்று எதிர் பார்த்து நிறைவு செய்கிறேன். இந்த அறைகூவல் மதுக்கூர் ஐயூப் அவர்களுக்கு மட்டுமல்ல த.த.ஜ. தலைமையினரை உத்தமர்களாக யோக்கியாகளாக நம்பும் பி.ஜே. வகையறாக்களில் மானமுள்ள அனைவரையும் எனது இந்த அறைகூவல் உள்ளடக்கும். வஸ்ஸலாம்.
அன்புடன்:
கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி,
07-09-2004
மேலப்பாளையம். மஸ்தான் கைப்பட பி.ஜே.க்கு எழுதிய கடிதத்தை டைப் செய்து இணைத்துள்ளோம். காப்பி மங்கலாக இருந்ததால் தெளிவில்லாத ஒரு பாராவை டைப் செய்யவில்லை
அல்லாஹ்வின் திருப் பெயரால்
அனுப்புநர்:
எஸ்.இ.எம்.முஹம்மது மஸ்தான்,
113ஏ. ஹாமீம்புரம் தெற்கு தெரு,
மேலப்பாளையம். - 5

பெறுனர்: பீ.ஜைனுல் ஆப்தீன் உலவி அவர்கள்
மேலான்மைக் குழு உறுப்பினர்,
துவ்ஹீது ஜமாஅத்.

அஸ்ஸலாமு அலைக்கும்,
எனது அன்பும் பாசமும் நிறைந்த அண்ணன் பீ.ஜே. அவர்களுக்கு தம்பி முஹம்மது உடைய துவாஸ்ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நற்பாக்கியத்தை தந்தருள்வானாக என்று பிரார்த்தித்தவனாக, இம்மடலை எழுதுகிறேன்!

கடந்த 26.0.12004 திங்கட்கள் அன்று மாலை மேலப்பாளையம் மஸ்ஜித்துரஹ்மான் பொதுக்குழு மாலை 4 மணி அளவில் ராஜ்மஹால் மண்டபத்தில்; வைத்து தங்கள் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 250 க்கும் அதிகமான தௌஹீது வாதிகள் கலந்து கொண்டனர், அவர்களிடம் தாங்கள் ஒப்புதல் கேட்டு பொதுக் குழுவை நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். கூட்டத்தில் தாங்களிடம் பல்வேறு வினாக்கள் எழுப்பப் பட்டது. அதற்கு தாங்கள் எப்பொழுதும் இல்லாத புது வகையான மலுப்பலான பதில் சொல்லி உள்ளீர்கள். இது பொருத்தமல்ல. பதில் சொல்லப்பட வைத்துள்ளார்கள் என்பதே சரி. ஓருவர் உங்களிடம் கேட்கிறார் ஒரு அமைப்பின் பொதுக்குழு நடைபெறுவதாக இருந்தால் அந்த அமைப்பின் முக்கிய பொறுப்ப வகிக்கும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியவர்களுக்கு கட்டாயம் தெரியும். ஆனால் இந்த பொதுக்குழு செயலாளருக்குத் தெரியாமல் அவசர அவசரமாக கூட்டியுள்ளனர். இது என்ன நியாயம் என்கிறார்.
அதற்கு தாங்கள் மூன்று வருடம் முடிந்ததும் கூட்டி இருக்க வேண்டும் நாலரை வருடம் ஆகிவிட்டது எனவே இது மொத்தத்தில் முறையற்றது என்று பதில் சொல்லியிருக்கிறீர்கள்? செயலாளருக்கு தெரியாமல் கூட்டிய காரணம் என்ன? அவர் ஏதேனும் ஒண்ணரை லட்சம் கையாடல் செய்துள்ளாரா? அல்லது கணக்கு சரி ஏமாற்றினாரா? என்றாவது தாங்கள் கேட்டிருக்க வேண்டும் ஆனால் தாங்கள் மொத்தத்தில் குறையாகக் கூறி முடித்துள்ளீர்கள். இது நியாயமா? தாங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக ஒரு முக்கிய பொறுப்பை தந்திருந்தனர். கூட்;டத்தின் அழைப்பிதழில் கூட முதலில் அமைந்தது தங்களுடைய தர்பியா நிகழ்ச்சி என்றும் தாங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு என்றும் தலைப்பிடப் பட்டிருந்தது. சரி என்னுடைய கேள்வியெல்லாம்

1. மேலப்பாளையம் மஸ்ஜித்துரஹ்மானில் அந்த கூட்டத்திற்கு வந்த 250 ஒரிஜினல் தௌஹீதுகள்தான் வருகின்றார்களா? அல்லது 2000க்கு மேற்பட்ட மக்கள் வருகின்றனரா?
2. அழைப்பிதழில் முதலில் தர்பியா என்றும் அதன் பின் பொதுக்குழு என்றும் அச்சிடப் பட்டுள்ளது, ஆனால் மண்டப வாயிலில் பொதுக்குழு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என்று போடப் பட்டதன் நோக்கம் என்ன?
3. தர்பியா நிகழ்ச்சி உள்ளிருந்த 250 பேருக்கு மட்டும்தானா?

4. ஜும்ஆவில் அறிவித்தால் அல் உம்மா, விடியல் சிந்தனை உள்ளவர்கள் வருவார்கள் என்று தனித் தனியே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஜும்ஆவிற்கு 2000 க்கும் மேற்பட்டோர் வருகின்றனர் 250 தவிர மீதி உள்ளவர்கள் உம்மாவும் விடியலுமா?

5. இன்னொருவர் மீண்டும் உங்களிடம் செயலாளருக்கு தெரியாமல் கூட்டியது எப்படி என்று கேட்கும்பொழுது மேடையில் ஒருவர் எழுந்து இவர் இலாஹி உடைய ஆள் என்கிறார்? இலாஹி உடைய ஆள் என்றால் அவருக்கு அழைப்பு கொடுத்தது யார்? எப்படி?

6. மஸ்ஜித் தவ்பா தனி நிர்வாகம் அவர்கள் உள்ளே வந்தால் பிரச்சனை எற்படும் என்று கூறியுள்ளனர். நாங்கள் வந்ததோ தங்களின் தர்பியாவுக்குதான் எனக்கு சந்தேகம் உங்களின் நிகழ்ச்சியை கேட்டால் பிhரச்சனை வரும் என்று தடுத்து விட்டீர்களா? இல்லை நியாயத்தைக் கேட்பார்கள் என்று பயமா?

7. மண்டபத்தின் கீழ் மாடியில் ஆர்.எஸ்.எஸ்ன் பொதுக்குழு போன்றும் மேல் மாடியில் தௌஹீதுவாதிகளின் பொதுக்குழு என்றும் கருதியோ காவல்துறையை அழைத்துள்ளனர், இறுதியில் தலைக்கு 50 ரூபாயும் கொடுத்துள்ளனர் இதற்கு காரணம்?

8. பல்வேறு மாவட்டங்களில் பல மாதங்களுக்கு முன்பே தங்கள் நிகழ்ச்சிக்கு கேட்டும் தாங்கள் நாள் இல்லை என்று கூறி உள்ளீர்கள். இந்த அலங்கோல அவசர கூட்டத்திற்கு வந்தது ஏனோ? இதற்கு மட்டும் காலம் சரி என்றதோ?

9. இந்த தர்பியா என்ற பெயரில் ரகசிய அச்சிட்டு நடத்திய பொதுக்குழு தாங்களுக்கு முன்பே தெரியுமா?

10. கூட்டத்தில் தாங்கள் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பவர்கள், ஷpர்க்க வாதிகளை அழைக்கக் கூடாது என்று கூறியதாகவும் சிலர் கூறினர் இது எந்த வகையில் நியாயம்? ஏதோ இது சம்பந்தமாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கூறியதாக கேள்விப்பட்டேன் அப்படியென்றால் த.மு.மு.க. பைலாவை திருத்திய (தற்சமயம்) திருத்தப்பட்ட இது உண்மையெனில், த.மு.மு.க. என்று பெயரிட்ட தாங்கள் இதன் பின்பும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்று வைக்கப் போகிறீர்களா? இல்லை ஏதேனும் தமிழ்நாடு ஒரிஜினல் தௌஹீதுவாதிகளின் முன்னேற்றக் கழகம் என்று வைக்கப் போகிறீர்களா?

11. பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள் 250க்கும் அதிகமானோர். ஆனால் வாக்கு விழுந்தது ஒருவருக்கு 56, இன்னொருவருக்கு 32 இது விகித அடிப்படையில் சரியா?

12. என்னைப் போன்ற இளைஞர்களை எல்லாம் இறைவனின் சத்திய கொள்கையைக் கூறி வென்றெடுத்த நீங்கள் இந்த அசத்தியத்திற்கு துணை நின்றது ஏனோ? எதற்க்கோ?

13. ஆயிரம் உலமாக்கள், ஆலிம்கள் உங்களை பேச்சளவில் எதிர்த்தாலும் உள்ளுக்குள்ளே தங்களின் கருத்தை பதிய வைக்கும் மாஸ்ட்டர் பிரைனை மக்கு பிரைனாக அன்று மட்டும் மாற்றியது ஏனோ? எதற்கு?

மேலே எழுதப்பட்டவை எல்லாம் என்னுடைய கேள்வி இன்று பரவலாக மத்தியில் கேட்கப்படும் கேள்வி யாதெனில் அநீதிக்கு துணை போக மாட்டேன் என்று கூறி வந்த அண்ணன் பீ.ஜே. அவர்கள் இந்த பொதுக்குழுவில் சரியான முறையில் பதில் சொல்லாமல் இந்த அநீதியான பொதுக் குழுவிற்கு துணை போக வைத்தது இவர் ஏதேனும் தவறு செய்திருப்பார். இதன் ஆதாரம் லுஹாவிடம் இருக்கும் இதனால் இவர் லுஹாவிடம் அடிபணிந்து இருப்பாரோ? என்று பரவலாக பேசப்படுகிறது.

ஏவனோ இந்த லட்டரை எழுதினான் இவனுக்கெல்லாம் பதில் சொல்வதா? என்று நினைத்து விடாதீர்கள். இதற்கு பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மறுமையை நம்பியுள்ள நாம் இதற்கு பதில் இங்கு தெரியாவிட்டாலும் கட்டாயம் இறைவனிடம் தெரியும். இறைவனும் நம்மை கேட்பான் என்று கூறி தாங்கள் இதற்கு பதில் தருவீர்கள் என்ற நோக்கடன் இம்மடலை நிறைவு செய்கிறேன் வஸ்ஸலாம்! . இப்படிக்கு
எஸ்.இ.எம் எஸ்.இ.எம். முஹம்மது மஸ்தான்,
31.01.04

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.