சந்து பொந்துகளில் புகுந்து ஓடிய இமாம் அலி


இமாம் அலி அவர்கள் சுடப்பட்ட நாள் சிந்தனையாக இன்று காமில் அவர்கள் வெளியிட்ட அவரது நினைவலைகளின் ஆக்கம் கண்டேன். அதை ஒட்டி நமது நினைவலைகள். 1994,95களில் அயோக்கிய தவ்ஹீது ஆலிம்களின் பொறுப்பில்  காரைக்காலில் தங்கி இருந்தார் இமாம் அலி. அந்த அயோக்கிய தவ்ஹீது ஆலிம்களின் ஆலோசனைப்படியும் அவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படியும்  திருப்பூருக்கு சென்றார். அவரும் இன்னொருவரும் போலீஸில் பிடி பட்டார்கள். துப்பாக்கி ஏந்திய இரு போலீஸ்கள் அவர்களை ஆட்டோவில் கொண்டு சென்றனர்.
http://mdfazlulilahi.blogspot.com/2018/09/blog-post_29.html

கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய  இமாம் அலியும் இன்னொருவரும் திருப்பூர் சந்து பொந்துகளில் புகுந்து ஓடினார்கள். வழியில் இருந்த பாபர் ஷாபுக்குள் நுழைந்த இமாம் அலி தனக்கு தானே ஷேவ் செய்து கொண்டு நீண்ட தாடியை நீக்கினார். நிதானமாக வெளியில் வந்தார். துப்பாக்கியுடன் அவர்களை தேடிக் கொண்டிருக்கும் அந்த போலீஸ்களுக்கு முன்பாகவே நடந்து சென்றார்.

பிறகு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தங்கி இருந்தார். அவரை பிடிக்க தாயனுாரில் அமைக்கப்பட்ட செக் போஸ்ட் கட்டிடம் இன்றும் அப்படியே இருக்கிறது. அங்கு வீரப்பன் போன்றவர்களை சந்தித்தார். மேலப்பாளையம்  வந்து பள்ளிவாசலில் தங்கினார் என்று போகிறது அவரது வரலாறு.

29.09.2002 ஞாயிறு மதுரையில் தவ்ஹீது ஜமாஅத்தின் பொதுக் குழுக் நடந்து கொண்டிருந்தது.  பெங்களூரில் இமாம் அலி உட்பட 4 பேர் சுடப்பட்டார்கள் என்ற செய்தியை பொதுக்குழுவில் அறிவித்தார்கள். டாபர் மாமா லுஹா போன்ற கள்ள தவ்ஹீது மவுலவிகள் கண்ணீர் விட்டார்கள்.

ஜனாஸாவை வாங்க அன்றைய தவ்ஹீது ஜமாஅத் தலைவர் ஹாமித் பக்ரியை அனுப்புவோம் என்று முடிவு எடுத்தார்கள். இமாம் அலியுடன் ஜிஹாத் ஜிஹாத் என்று அலைந்த கள்ள தவ்ஹீது மவுலவிகள் ஜிஹாது பற்றி பேசியதே கிடையாது என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள். இந்த கள்ள தவ்ஹீது மவுலவிகள் மீதும் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் பிடி இறுகட்டுமாக.

இமாம் அலிக்காக நாம் செய்யாவிட்டால் யார் செய்வார்கள். அல்லாஹ் இருக்கிறான் என்று காட்ட வேண்டும்  என்று தவ்ஹீது ஜமாஅத் பொதுக்குழுவில் பேசினோம் அதனால்தான் இமாம் அலி ஜனாஸாவுக்கு பெருங் கூட்டம் கூடியது. இப்படி 4.10.2002. ஜும்ஆவில் பேசி பெருமைப் பட்டார் டாபர் மாமாவும் பக்ரி சார்பில் இலங்கை சென்று வந்தவர்களில் ஒருவருமான இன்றைய ததஜ தலைவர் ஷம்சுல் லுஹா.

ஜிஹாது ஜிஹாது என்று பேசி இளைஞர்கள் வாழ்க்கையை கெடுத்து விட்டு நாங்கள் சொன்னோம் உங்களுக்கு மூளை இல்லையா என்று கேட்ட கேடு கெட்ட பள்ளித் திருடன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் அந்த அயோக்கியனை ஆதரித்தும் தலைவனாக ஏற்று நிற்கும் அத்தனை பேர் குடும்பத்தினர் மீதும் யா  அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அழித்தொழிப்பாயாக!


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.