நமக்கு முன் மாதிரி யார்? முதிர்ச்சியற்ற நடவடிக்கையால் நட்பு சக்திகளை எதிரிகளாக்கி விட்டோமா?

பழுலுல் இலாஹியை பீ.ஜே. விலைக்கு வாங்கி விட்டாரோ? பஸ்லுல் இலாஹி அண்ணே இப்ப நீங்கள் யாருக்கு எதிராக களமாடுகிறீர்கள்? இப்படி ஏராளமான கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன.

2018 ஜுலை 27ல் கோவை பாஸித் அவர்களின் பேஸ்புக் தலைப்பு.  கலைஞர் கருணாநிதி முஸ்லிம் சமுதாயத்தின் துரோகியா? என்பதுதான். அதில் அவர் எழுதியதிலும் கருத்து பதிவிட்டவர்கள் எழுதிய வரலாற்றிலும் சரியான தகவல்களும் தவறாக விளங்கிய தகவல்களும் கலந்தே இருக்கின்றன. 

(பாஷா) பாய் போன்றவர்களுக்கு கோர்ட் மூலம் ஜாமீன் பெற உடனடியாக பணம் தேவை என 1996ல் த.மு,மு.க. சார்பில் போன் போட்டு துபையில் இருந்த அல்லாஹ்வின் அருளுக்குரியவரிடம் பேசியவர் மவுலவி J.S. ரிபாஈ அவர்கள். இதில் மேலும் உள்ள செய்திகளை எழுதினால் அல்லாஹ்வின் அருளுக்குரியவரை புகழ்வது போல் ஆகி விடும். அவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் அருள் என்றென்றும் உண்டாகட்டுமாக. 
http://mdfazlulilahi.blogspot.com/2018/09/blog-post_19.html சிறையில் தடா ரஹீம் போன்றவர்கள் பாபா குரூப்பில் இருந்தார்கள். பீ.ஜே. குரூப்பில் இருந்த பாஷா பாய் போன்றவர்களும் மேலப்பாளையத்தைச் சார்ந்தவர்களும் த.மு,மு.க. சார்பில் ஜாமீன் எடுக்கப்பட்டார்கள் என்பதை மட்டும் பதிவு செய்து விட்டு விஷயத்திற்கு வருகிறேன்.

கோவை Mohamed Bashith அவர்கள் எழுதியதில் உள்ள சிந்திக்க வேண்டிய  சில வார்த்தைகளில் மிக முக்கியமானவை.

சட்டமன்றத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற பதத்தை எந்த பிரச்சனையின் போது  (கலைஞர் கருணாநிதி) பயன்படுத்தினார் என்பதை தெளிவாக சொல்லுங்கள்.

திமுக ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்ததில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பங்கில்லையா? இதில் (கோவை Mohamed Bashith ஆகிய) என்னையும் சேர்த்தே சொல்லுகிறேன். 

கலைஞரை தூக்கிப்பிடிப்பது பதிவின் நோக்கமில்லை.எங்களின் முதிர்ச்சியற்ற நடவடிக்கையால் நட்பு சக்திகளை எதிரிகளாக்கி விட்டோம் என்கிறோம். இவைதான் கோவை Mohamed Bashith அவர்கள் எழுதி உள்ளதில் சிந்திக்க வேண்டிய முக்கியமானவை. பாசித் அவர்களிடம் இருந்து இந்த மாதிரி எதிர் பார்க்கவில்லை என்று என்னிடம் பலர் சொன்னார்கள்.

உணர்ச்சியை துாண்டி எழுதியபொழுது எழுச்சி பெற்ற, ரசித்த, இனிப்பாக சுவைத்த பெரும்பாலான இள ரத்தங்களுக்கு. எங்களின் முதிர்ச்சியற்ற நடவடிக்கையால் நட்பு சக்திகளை எதிரிகளாக்கி விட்டோம் போன்ற உண்மைகளைச் சொன்னதும் கசந்தது. இதுதான் மனித நிலை. அதனால்தான் எழுதினால் உண்மையை எழுத வேண்டும். உண்மையை எழுதினால் மக்கள் ஜீரணிக்க மாட்டார்கள் என சற்று பேசாமல் இருக்கிறேன்.


கோவை கலவரம் ஏன் என்பது பற்றி பலரும் பலவிதமாக சொல்லி இருந்தாலும் பாக்கர் அவர்கள் வாக்கு மூலம் த.மு,மு.க.வின் டிசம்பர் 6 போராட்டம் நடைபெறாமல் ஆக்க போட்ட சதி திட்டம் என்பதாகும். வீடியோவில் பார்த்துக் கொள்ளவும். இரட்டை வேடதாரியாக பாக்கர் இருந்ததால்தான் த.மு,மு.க. சார்பில் சிறை சென்ற இருவரில் பாக்கரை விட்டு விட்டு ஒருவர் மட்டும் தாக்கப்பட்டார். 


பஸ்லுல் இலாஹி அண்ணே இப்ப நீங்கள் யாருக்கு எதிராக களமாடுகிறீர்கள்? என்று கேட்பவர்களே! ஆடியோவை வைத்து நான் நம்பவில்லை. ஆணித்தரமாக என்னிடம் நேரில் சொன்ன ஷம்சுல்லுஹாவின் வார்த்தைகளை வைத்தே நம்பினேன். பீ.ஜே. மட்டுமா மதரஸா பெண்களுடன் தப்பாக நடந்தார். அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி, எம்.ஐ.சுலைமான், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி என சென்னையில் தொடங்கிய விபச்சார தவ்ஹீது மவுலவிகள் பட்டியல் மேலப்பாளையம் வரை நீளுகிறது. 

28 நிமிட ஆடியோ வெளியான பின் 14-9-2017 அன்று ஆடியோ வெளியீட்டுக் குழுவில் உள்ள ஒருவரிடம் பேசினேன். ஹைகோர்ட் மூலம் சட்ட  நடவடிக்கை எடுக்க சரியான வக்கீல் இருக்கிறார் நாளை காலை அவரைப் போய் பார்த்து விட்டு தகவல் சொல்கிறேன் என்றார். மறுநாள் அவரிடம் தொடர்பு கொண்டேன். அவர் ஆடியோ வெளியீட்டுக் குழுவில் உள்ள ஒருவர் பெயரைச் சொல்லி அவரிடம் மஷுரா செய்தேன் அவர் வேண்டாம் என்று கூறி விட்டார் என்றார்.

வேலுார் இப்றாஹீம் கமிஷனர் ஆபீஸில் கம்ளைண்ட் கொடுத்தபொழுது தாருங்கள் பீ.ஜே. மீது FIR போட மாட்டோம் மேலிட உத்தரவு என்று கூறினர். இலாஹியை பீ.ஜே. விலைக்கு வாங்கி விட்டாரோ? என்று கேட்பவர்கள் விபச்சார விடுதியில் விபச்சாரம் செய்த ஒருவருக்கு எதிராக மட்டும்தான் களமாடுகிறார்கள். நான் விபச்சார விடுதிக்கே எதிராக 16 ஆண்டுகளாக களமாடிக் கொண்டிருக்கிறேன். விபச்சாரத்தின் ஒரு கிளையை மட்டும் ஒடிக்க எண்ணுகிறீர்கள்.. நான் விபச்சார மரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக் கட்ட பாடுபடுகிறேன். 

தலைப்பில் உள்ளபடி நமக்கு முன் மாதிரி யார்? முஸ்லிம்களிடம் கேள்வி கேட்டால் நமக்கு முன் மாதிரி நபி(ஸல்) அவர்கள்தான் என்ற பதிலை அனைவரும் அழகாகச் சொல்வார்கள். இப்படிச் சொல்லக் கூடியவர்களிடம் பிரச்சனைகளை ஒட்டிய தீர்வுகளுக்கு நபியின் முன்மாதிரிகளை சுட்டிக் காட்டினால் சிலவற்றில் ஏற்பார்கள். பெரும்பாலானவற்றை நிராகரிப்பார்கள்.

நமக்கு எவ்வித ஆதரவும் ஆள் பலமும் இல்லாத நபி(ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கை இருக்கிறது. ஆட்சி பலமும் ஆள்பலமுமிக்க மதீனா வாழ்க்கை இருக்கிறது. அணுமதி அளித்த அபீசீனிய வாழ்க்கை இருக்கிறது. இந்த முன் மாதிரிகளை ஏற்க மாட்டார்கள்.

இன்று கல்யாணராமன், எச். ராஜா மாதிரி பேச வேண்டும் என்பவர்களைப் போல் ஒரு காலத்தில் திருக்கோவிலுர் சுந்தரம், ஜனா கிருஷ்ணமூர்த்தி, திரு.நாராயணராவ், ராஜ கோபாலன், ராமகோபாலன் மாதிரி பேசனும் என்றார்கள் என்ன ஆயிற்று?

போக்குவரத்துக் காவலர் அந்தோணி செல்வராஜ் என்ற ஒரு கிறிஸ்துவரின் கொலையை செல்வராஜ் என்ற இந்து போலீஸ்காரரை கொன்று விட்டார்கள் என்று பரப்பினார்கள்.  கலவரத்துக்கு முதல் நாள் கோவை போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) மாசாண முத்து காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். காவல்துறையில் இருந்த முஸ்லிம்களை வெளியேற்றிளார். பிறகு நடந்த காவல்துறையினர் கூட்டத்தில் போலீஸுக்கு  வெறி ஊட்டி பேசியவர் யார்? இராமகோபாலன் அல்லவா! இதை எத்தனை பேர்கள் உணர்ந்தோம்?

கலவரத்துக்கு இந்து முன்னணி பின்னணியில் இருக்க அந்த அயோக்கியர்கள் இப்பொழுது நம்மை காவல்துறைக்கு எதிராக களமாடச் செய்ய திசை திருப்பி விடுகிறார்கள் என்பதை யாராவது உணர்ந்தோமா? 



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.