சண்டாளர்களின் சாபம் சன்மார்க்கத்தை காக்கவா? சமுதாயத்தை ஏமாற்றவா? ஜாக் போராடவில்லையா?

குமரி அனந்தனையும் அவருடன் வந்தவர்களையும் ஜாக் வழி மறித்தது ஏன்? பீ.ஜே.யிடமிருந்த ஜமாஅத் பணம் ஆறு கோடியை முழுமையாக வாங்காமல் வாங்கி விட்டதாக பொதுக்குழுவில் பொய் சொன்னவர்கள் எப்படி உண்மையாளர்களாக ஆவார்கள்? ஆகவே அவர்கள் மீதும் அவர்களைச் சார்ந்தவர்கள் மீதும். ஜமாஅத் பணம் கோடிக் கணக்கில் தன்னிடமிருந்ததை மறைத்து வந்த பீ.ஜே. மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!

அல்லாஹ்வின் சாபத்தை ததஜ மாநில நிர்வாகிகள் பெற்றுக் கொண்டார்கள் என்பது சமுதாயத்தை ஏமாற்றத்தான். பீ.ஜே.யின் விபச்சாரத்துக்கு கடைசி வரை துணை நின்றவர்கள் பெரும்பாலான ததஜவினர். 

அவர்களது இன்றைய நிலையாவது உண்மையானதா என்றால் இல்லை. உண்மையானது என்றால் அவர்களிடமுள்ள அத்தனை ஆதாரங்களையும் காவல் துறையில் கொடுத்திருக்க வேண்டும். TNTJ பெண்களுடன் விபச்சாரம் செய்த பீ.ஜே. மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி போராட்டங்கள் நடத்தி இருக்க வேண்டும். செய்தார்களா? இல்லை.

வாங்காத சொத்தை வாங்கியதாக காட்டிய ததஜவை அடையாளம் காட்டிய பீ.ஜே. நல்லவர் உண்மையாளர் என்றால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? 

ஆதாரங்களை காவல் துறையில் கொடுத்திருக்க வேண்டும். ததஜ மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி இருக்க வேண்டும். அவரது போலீஸ் தொடர்புகளையும் காவிகளுடனான ரகசிய தொடர்புகளையும் பவரையும் பயன்படுத்தி மண்ணடி அப்துல்லாஹ், தடா ரஹீம் போன்றவர்களை உள்ளே தள்ளிய மாதிரி, கோடிகளை மறைத்து மோசடி செய்ய இருந்த கேடிகளை உள்ளே தள்ளி இருக்க வேண்டும்.

இரண்டு பேருமே கூட்டுக் கள்ளர்கள் என்பதால். இரண்டு அணியுமே போலீஸுக்கு போக மாட்டார்கள். அவர்கள் போலீஸுக்கு போனால் 2 தரப்பையும்  போலீஸ் நோண்டி நொங்கு எடுத்து விடும் ஆதாரங்களை நாம் கொடுத்து விடுவோம். எனவே லைவு போட்டு காலத்தை கடத்தி மக்களை ஏமாற்றுவார்கள். 

ஆகவே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் முயற்சிகள் வெற்றி பெற  அல்லாஹ் அருள்புரிவானாக என்று பிரார்த்திக்கிறோம். நீங்களும் பிரார்த்தியுங்கள்.

அமானித பணத்தை ததஜவினர் எடுத்து இருந்தால் ததஜவினர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று ததஜ தலைமை வேண்டி விட்டதாக வேகமாக பரப்பி வருகிறார்கள். சாபம் வேண்டிய சண்டாளர்கள் யார்? அவர்கள் கொள்கை என்ன

மனதில் வேறு ஒன்றை நினைத்துக் கொண்டு வார்த்தை விளையாட்டால் பொய் சொல்லலாம், பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்லலாம், பொய்யாக முபாஹலா செய்யலாம்.  இடது கையால் திருடி விட்டு வலது கையைக் காட்டி இந்தக் கையால் திருடி இருந்தால் அல்லாஹ் நாசமாக்கட்டும் என்று சொல்லலாம். மோசடி செய்வதற்கு முன் மோசடி செய்யவில்லை என்று சத்தியம் செய்து விட்டு பிறகு மோசடி செய்யலாம். 

துதான் அவர்கள் கொள்கை. இதை 16 வருடத்திற்கு முன்பே அடையாளம் காட்டி இருக்கிறோம். ஆகவே பொது மக்களே அவர்களுக்கு எதிராக துஆச் செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைக்கத் தயாரா? என்று பல முறை பல விஷயங்களில் சவால் விட்டு இருக்கிறோம். இதுவரை அந்த மாதிரி வேண்டுகோள் வைக்க அவர்கள் தயாராக இல்லை. அல்தாபிக்கு எதிராக திருச்சி முபாஹலாவுக்கு ததஜவினர் திரண்டு வந்ததும் இந்த அடிப்படையில்தான்

மனசார கேட்டால்தானே லஃனத்து வரும். நானே பொய்யன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். பொய்யன் என்று வரும்போது நானே உள்ளுக்குள்ளே யா அல்லாஹ் தெரியாத்தனமா வந்து விட்டேன். மன்னித்துக் கொள். நிர்ப்பந்தத்தில் வந்து விட்டேன் என்று சொல்லி விட்டு செய்தால் அது வந்து பிரார்த்தனை ஆகுமா? அப்படி எத்தனை பேர் முபாஹலா பண்ணினார்கள் என்று யார்? கண்டு பிடிப்பது. என்று ததஜவின் அன்றைய தலைவர் பீ.ஜே. பேசி இருக்கிறார். இந்த வீடியோ ஆதாரத்தை https://www.youtube.com/watch?v=wYP92fMXgYY  திருச்சி முபாஹலாவின் போது  வெளியிட்டோம்.

அந்த அடிப்படையில்தான் அவர்கள் யா அல்லாஹ் மன்னித்துக் கொள். நிர்ப்பந்தத்தில் மோசடி செய்வதற்கு முன் பிரார்த்தனை செய்கிறேன் என்று மனதுக்குள் சொல்லி விட்டு வெளிரங்கமாக வேஷம் போட்டு இருப்பார்கள். அந்த நிமிடம் வரை தாஇகளுக்கு பங்கு வைக்கப்படாததால் சாபத்தை வேண்டி விட்டால். இதன் பிறகு அமானித்தை மோசடி செய்தால் சாபம் இறங்காது என்ற நினைப்பு. இவர்கள் எப்படிப்பட்ட பொய்யர்கள்?

2000ல் நான் கொடுத்து விட்டு வந்த ஜமாஅத் பணம் இரண்டு லட்சத்தி அறுபத்தி இரண்டாயிரத்தை தாஇகளுக்கு என்று எடுத்துக் கொண்டு பங்கு போட்ட கூட்டத்தைச் சார்ந்தவரும். அபுதாவூது மொழி பெயர்த்து தருவதாகக் கூறி அட்வான்ஸ் வாங்கி விட்டு கடைசி வரை ஏமாற்றியவருமான லுஹாதான் இன்று ததஜ தலைவராக உள்ளார். உருப்படுமா?

அபூதாவூது மொழி பெயர்க்க அட்வான்ஸ் வாங்கி விட்டு மொழி பெயா்த்து கொடுக்காத லுஹா மீதும் அவரை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அபூதாவூது ஏமாற்று விஷயத்தில் லுஹாவுக்கு  துணை நின்ற பீ.ஜே. மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக.

ஜாக் சமுதாயப் பணி செய்ய முன் வராதால் அதிலிருந்து விலகியதாக புருடா மன்னன் லுஹா மைசூர் தர்பியா வரை பல நிகழ்ச்சிகளில் சொல்லி உள்ளதை அனைவரும் அறிவீர்கள். 

ஜாக் சமுதாய விரோத சக்திகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக பல எதிர்ப்புகளை காட்டி உள்ளது. பாபரி மஸ்ஜி்த் பிரச்சனையில் அது இடிக்கப்படும் முன் ஜனாதிபதிக்கு போஸ்ட் கார்டுகள் மூலமும் தந்திகள் மூலமும் ஜனநாயக ரீதியான எதிர்ப்புகளை தெரிவிக்கும் போராட்டங்களை செய்தது ஜாக்

பாபரி மஸ்ஜி்த் இடிக்கப்பட்டப் பிறகு தமிழக காங்ரஸ் தலைவரான குமரி அனந்தன் ஒவ்வொரு மதத்தின் வழிபாட்டுத்தலங்களுக்கும் சென்றார்அந்த வரிசையில் கன்னியாகுரி முஸ்லிம் தெருவில் உள்ள ஜாக்கின் நிர்வாகத்தின் கீழ் இருந்த முகைதீன் பள்ளிக்கும் தலையில் கைக்குட்டையை கட்டிக் கொண்டு வந்தார் குமரி அனந்தன்

ஜாக் பள்ளி நிர்வாகிகளும் அப்பொழுது அந்தப் பள்ளியில் இமாமாக இருந்த காயல்பட்டிணம் மைதீன் பக்ரி அவர்களும் குமரி அனந்தன் அவர்களையும் அவருடன் வந்தவர்களையும் வழி மறித்தார்கள். பாபரி மஸ்ஜி்த்  இடிக்கப்பட கையாளாகாத காங்ரஸ் ஆட்சியே காரணம் என்று தடுத்தார்கள். ஜனநாயக ரீதியான எதிர்ப்புகளை தெரிவிக்கும் இந்த மாதிரி போராட்டங்களை ஜாக் செய்யத்தான் செய்தது.


ஜாக் செய்ய மறுத்தது  கொலைகளும் குண்டு வெடிப்புகளும்தான். இதை ததஜவினர் பொய் என கருதினால் எனக்கு எதிராக எப்படி வேண்டுமானாலும் துஆச்  செய்யட்டும்.

இந்த உண்மைகளை மறைத்து மைசூர் தர்பியா வரை லுஹா சொல்லி வந்தது பொய் என்பதால். யா அல்லாஹ் இந்த விஷயத்தில் பெரும் பொய்யரான ஷம்சுல் லுஹா மீதும் அவரது குடும்பத்தார் மீதும் அவரை தலைவராக ஏற்றுள்ள அனைத்து ததஜ தொண்டர்கள் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் பீ.ஜே. மீதும் லஃனத் எனும் உனது சாபத்தை இறக்குவாயாக என்று நான் உளமாற துஆச் செய்கிறேன். பொது மக்களும் இந்த பொய்யர்களுக்கு எதிராகத் துஆச் செய்ய வேண்டுகிறேன்.

ததஜ மேலாண்மைக்குழு தலைவராக உள்ள தென்காசி M.S. சுலைமான் தனது தங்கையின் கல்யாணத்திற்கு ஜாக் அமீர் கமாலுத்தீன் மதனியிடம் கடன் கேட்டார். இவரை மாதிரியான சில தவ்ஹீது மவுலவிகள்? கடன் வாங்கி விட்டு திரும்ப கொடுக்கவில்லை என்பதாலும் அது வரதட்சணை கல்யாணம் என்பதாலும் கமாலுத்தீன் மதனி கடன் கொடுக்க மறுத்து விட்டார்.

அதனால் கமாலுத்தீன் மதனியிடம் கோபித்துக் கொண்டு வெளி வந்தவர்தான் M.S. சுலைமான். ஆனால் கொள்கைப் பிரச்சனை என்று மக்களை ஏமாற்றி வருகிறார்.

விபச்சாரத்துக்கு நான்கு சாட்சிகள் சாத்தியமா என குர்ஆன் ஹதீஸுக்கு எதிராக பீ.ஜே. பேசியபொழுது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அருகில் இருந்து ரசித்தவர்கள்தான் இவர்கள். 

அவர் போன பின் கூட அதை கடுமையாக எதிர்க்காமல். அது  அவரது கருத்து என்று தடவிக் கொடுத்தார்கள். இப்படிப்பட்ட பண்டாரங்கள்தான் கொள்கைக்காக அங்கிருந்து பிரிந்தோம் இங்கிருந்து பிரிந்தோம் என மக்களை ஏமாற்றி வருகிறார்கள். 

ஆகவே யா அல்லாஹ் இவர்கள் மீதும் இவர்களது குடும்பத்தார் மீதும். இவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும். இந்த மாதிரி இவர்களை ஆக்கிய பீ.ஜே. மீதும் லஃனத் எனும் உனது சாபத்தை இறக்குவாயாக என்று நான் உளமாற துஆச் செய்கிறேன். பொது மக்களும் இந்த பொய்யர்களுக்கு எதிராகத் துஆச் செய்ய வேண்டுகிறேன்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.