உன்னிடமே ஒப்படைக்கிறோம் யா அல்லாஹ் அவர்களை நீ சரியான பிடியாகப் பிடிப்பாயாக!

யா அல்லாஹ் துாத்துக்குடியில் அமைதியை ஏற்படுத்துவாயாக! துப்பாக்கி சூட்டுக்கு யாரெல்லாம் காரணம் என்பதை நீயே அறிந்தவனாக இருக்கிறாய்.  துப்பாக்கி சூட்டுக் காரணமான அநியாயக்காரர்களான அக்கிரமக்காரர்கள் அத்தனை பேரையும் உன்னிடமே ஒப்படைக்கிறோம் யா அல்லாஹ் அவர்களை  நீ சரியான பிடியாகப் பிடிப்பாயாக!
யா அல்லாஹ் TNTJல் இருந்து மனம்  வருந்தி திருந்தி விட்டவர்களை மன்னிப்பாயாக! அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும்  உனது பேரருளைப் பொழிவாயாக!

யா அல்லாஹ் எவர்கள் TNTJல் பதவி, வியாபாரம், கமிஷன் போன்ற வருமான  நோக்கத்துடன் இருந்து கொண்டு உண்மையை மூடி மறைக்கிறார்களோ அவர்கள் மீது நல்லடியார்கள் சாபம் உண்டாகட்டுமாக! மலக்குகளின் சாபம் உண்டாகட்டுமாக!  உனது சாபமும் உண்டாகட்டுமாக! அவர்கள் மீது ஒட்டு மொத்த சாபத்தையும் இறக்கி இம்மையிலும் மறுமையிலும் அவர்களை இழிவுபடுத்துவாயாக!

தவ்ஹீது பிரச்சாரத்தை பிழைப்பாக ஆக்கிக் கொண்டவர்கள் மீதும் TNTJ பெண்களுடனான விபச்சாரத்தை தெரிந்து கொண்டும் 28 நிமிட ஆடியோ, அப்பல்லோ ஹனீபா பஞ்சாயத்து ஆடியோ, 10 நிமிட ஆடியோ ஆகியவை உண்மை என அறிந்து கொண்டும் உலக ஆதாயத்திற்காக மூடி மறைத்தவர்கள் மீதும் துணை நின்றவர்கள் மீதும் உனது லஃனத்தை இறக்கி அழிப்பாயாக!

இந்த விஷயத்தில் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவர்கள் யாரையும் விட்டு விடாதே யா அல்லாஹ். உனது சாபத்தை இறக்கி அவர்களை கூண்டோடு அழித்தொழிப்பாயாக!

ரமழானில் நோன்பு வைத்தவர்களாக வேண்டுகிறோம். இவர்கள் மீது உனது பிடியை இறுக்குவாயாக! உண்மையைச் சொன்னதால் பாதித்தவர்கள் வேண்டுகிறோம். எங்கள் கண் முன்னால் அவர்களை அழித்தொழிப்பாயாக!

மொட்டைக் கடிதங்கள், மொட்டை மெயில்கள், மொட்டை பேஸ்புக்குகள் மூலம் எங்கள் மீது பொய்களை பரப்பியவர்களின் கைகளை அபூலஹபின் கைகளை நாசமாக்கியது போல் நாசமாக்குவாயாக!

பச்சை விபச்சாரகனை மகிழ்விப்பதற்காக பல கள்ள ஐ.டி.க்களில் குடும்ப பெண்களை விபச்சாரிகளாக சித்தரித்தவர்களின் ஐம்புலன்கள் மீதும் உனது சாபம் இறங்கட்டுமாக. 

விபச்சாரத்தில் மன்னனை தலைவனாக ஏற்றுக் கொண்டும் விபச்சார மன்னனின் விபச்சாரத்தை மூடி மறைத்து  தடவல் மன்னன் என்று தாக்கியவர்களை தாக்க துாண்டியவர்களை துணை நின்றவர்களை அத்தனை பேரையும் குடும்பத்துடன் ஹலாக்காக்குவாயாக! யா அல்லாஹ்.

பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனையை ஏற்பவனே மனம் நொந்து வேண்டுகிறோம். உனது சாபம், மலக்குமார்கள் சாபம் நல்லடியார்கள் சாபம் விபச்சாரகன் மீது அன்பு காட்டுபவர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

விபச்சாரி மீதோ விபச்சாரகன் மீதோ இரக்கம் காட்டக் கூடாது என்பது உனது கட்டளை. அதை மீறி இவர்கள் இரக்கம் மட்டும் காட்டவில்லை. விபச்சாரகன் அன்பும் காட்டுகிறார்கள். உனது கட்டளையை புறக்கணித்து செயல்படும் இவர்களை, விபச்சாரகன் மீது அன்பு காட்டும் இவர்களை  விட்டு  வைக்காதே யா அல்லாஹ் 

விபச்சாரகன் மீது அன்பு காட்டும் இவர்களை விட்டு வைத்தால்  இந்த மாதிரி அமைப்புகள் பெருகி விடும். விபச்சாரகனுக்கு ஆதரவானவர்கள் எந்த இயக்கத்தில் இருந்தாலும் அவர்களில் ஒருவனையும் விட்டு விடாதே யா அல்லாஹ்.

அபுஜஹ்ல் கூட்டத்தை எந்த ரமழான் மாதத்தில் அழித்தாயோ அந்த ரமழான் மாதத்தில், அபூஜஹ்லை விட கடுமையானவன் என்று சொன்னவனை  உன்னிடம் ஒப்படைக்கிறோம் யா அல்லாஹ்.



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.