ஆட்டை வெட்டாதே மாட்டை வெட்டாதே என்றால் சொன்னவனை என்ன செய்ய வேண்டும்?

எந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர்களின் சந்ததிகள் ஏற்றுக் கொள்ளக் கூடும் என்று இறுதித் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் சொன்னார்கள் அல்லவா. அந்த மனப் பக்குவமும் மன்னிக்கும் வியப்புக்குரிய மனப்பான்மையும் முஸ்லிம்களாகிய நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டும்.


மார்க்க விஷயத்திற்காகத்தான் நபி வழியில் கோபப்படுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, அதிகமாக இஸ்லாத்தை நேசிப்பது போல் காட்டிக் கொள்வது. அல்லாஹ்வுடைய பள்ளிவாசலை சண்டைத் தலமாக ஆக்குவது. சொந்தப் பிரச்சனையை மார்க்கப் பிரச்சனைகள் போல் ஆக்குவது. எங்கோ சண்டை செய்து விட்டு பள்ளிவாசலில் அடைக்கலம் புகுவது. தொழும் பள்ளியையும் அதைச் சூழ்ந்தும் சண்டைக் களமாக ஆக்குவது என்பது சாதாரணமாக ஆகி விட்டது. இதைத்தான் மார்க்கத்தை நிலை நிறுத்துவதற்காக எதிர்த்து போராடுதல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுவா நபி வழி? இந்த மாதிரி சம்பவங்களை நபி(ஸல்) வாழ்விலிருந்து காட்ட முடியுமா?


பள்ளிவாசலுக்குள் வந்து சிறு நீர் கழித்தவரிடம் கூட கோபப்படவில்லை. மென்மையாக சொல்லி அனுப்பினார்கள். அந்த அழகான முன் மாதிரிக்கு சொந்தக்காரர்கள் நாங்கள். இப்படி மேடை தோறும் சொல்லிக் காட்டுவார்கள். அழகான முன் மாதிரிக்கு நாங்கள்தான் சொந்தக்காரர்கள் என்று சொந்தம் கொண்டாடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள்? சொந்த விஷயத்தில் கோபப்பட்டு அதை மார்க்க பிரச்சனையாக ஆக்கி விடுகிறார்கள். அவர்களது கோபம் பத்ர் களம் வரை போய் விடுகிறது. போன வேகத்தில் திரும்பியும் விடுகிறது.


இந்த மாதிரி கோபப்படுதல் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஒன்று. இந்த மாதிரி கோபப்பட்டு இருந்தால் மதீனத்து யூதர்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்து ஒப்பந்தம் போட்டு இருப்பார்களா? முஸ்லிம்களைவிட எண்ணிக்கையிலே யூதர்கள் அதிகமாக இருந்தும். ஒப்பந்தம் செய்து இருப்பார்களா? நிச்சயமாக செய்து இருக்க மாட்டார்கள்

நபிகள் நாயகம் சொல்லிக் காட்டிய அந்த துாதர் பிரச்சாரம் செய்தபொழுது அடித்த மக்கள் விஷயத்தில் மன்னிக்க துஆச் செய்தார். அந்த துாதர் திருட அழைத்தாரா? பொய் சொல்ல சொன்னாரா? எதற்கு அழைத்தார். அல்லாஹ் ஒருவன் என்ற நேரான பாதைக்குத்தானே அழைத்தார். அடித்தவர்களின் நன்மைக்காகத்தான் அழைத்தார். நமது நன்மைக்குத்தானே அழைக்கிறார் என்ற அறிவு அவர்களுக்கு இருந்தால் அடித்திருப்பார்களா? அவர்களுடைய வெற்றிக்கான அழைப்பு அது.


இன்று இந்தியாவில் உள்ள இந்து சகோதரர்களில் சிலர் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் ஏன்? அவர்களைப் படைத்த இறைவனை வணங்க அவர்களே தடையாக இருக்கிறார்களே ஏன்? அந்த இறைவனைப் பற்றிய அறிதல் என்ற அறிவு அவர்களிடம் இல்லை. அவர்களை யார் படைத்தது என்ற அறிவு இல்லை. இதெல்லாம் மறுமையில் விசாரிக்கப்படும் என்ற உண்மை ஞானம் இல்லை. அதுவெல்லாம் இல்லாத காரணத்தால்தான் அப்படி செயல்படுகிறார்கள்.


ஒரு நாட்டிலே வாழும்பொழுது எப்படியெல்லாம் அந்த நாட்டு சட்டத்தை பின் பற்ற வேண்டும் என்று சொன்னால். அந்த நாட்டுக்கு என அமைக்கப்பட்ட சட்ட திட்டங்களில் உலகியல் சட்டத் திட்டங்களைத்தான் நாம் பின் பற்ற வேண்டும். அதை விடுத்து மார்க்கத்தில் அவர்கள் குறுக்கிட்டால் அதற்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்று நமது நாயகம்(ஸல்)  சொல்லவில்லை.


உதாரணமாக அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலான நற்காரியங்களை வலது புறத்திலிருந்து செய்யச் சொல்லி இருக்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் உள்ள வாகன சட்டப்படி வாகனங்கள் இடது புறம் உள்ள ரோட்டில்தான் செல்ல வேண்டும். நான் முஸ்லிம் வலது பக்க சாலையில்தான் போவேன் என்று சொல்லக் கூடாது. வலது பக்கமாக வாகனங்களை ஓட்டிக் கொண்டு போனால் ஒரேயடியாக போக வேண்டிய இடத்துக்கு போக வேண்டியதுதான். எனவே இப்படியெல்லாம் மாறுபடவோ முரண்படவோ கூடாது.


அதே நேரத்தில் ஹஜ்ஜுப் பெருநாளின் போது ஆட்டை வெட்டாதே மாட்டை வெட்டாதே என்றால் சொன்னவனை என்ன செய்ய வேண்டும்? எதிர்த்து நிற்க வேண்டும். சொன்னவனை முதலில் வெட்டி விட்டு பிறகு ஆட்டை வெட்ட வேண்டியதுதான். அவன்தான் முதல் குர்பானி என்று ஆகி விடக் கூடாது. 

முதல் ஹிஜ்ரத் சென்றவர்களிடம் நபி(ஸல்) உபதேசித்தபடி. நம் நாட்டு சட்டத்துக்கு கட்டுப்பட்டு அவனை சட்டத்தின் முன் நிறுத்த போலீஸிடம் ஒப்படைத்து விட வேண்டும் பிறகு. அவன் சொல்லுக்கு கட்டுப்படாமல் நமது அமலை செய்ய வேண்டும். இதுதான் மார்க்கத்தை நிலை நிறுத்துவதற்காக எதிர்த்து போராடுதல்.


மற்றவர்களைப் போல் சும்மா இருப்பவர்களை போய் அடிப்பது அல்ல நமது இஸ்லாம் மார்க்கம். தாங்கள் ஒரு பகுதியிலே மெஜாரிட்டியாக இருக்கிறோம் என்பதால் குறைவாக உள்ளவர்களை மற்ற மதத்தவர்கள் சீண்டுவார்கள். அது போல் சீண்டுவது அல்ல நமது மார்க்கம். இதுவெல்லாம் கூடாது. இதுதான் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட விஷயங்கள். எது அணுமதிக்கப்பட்டது? எது தடுக்கப்பட்டது? நமக்கு வல்லமை இருந்தாலும் நாம் எப்படி தன்னடக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நபி வழியில் நிறைய வழிகாட்டுதல்கள் உள்ளன.


யூதர்கள் மத்தியிலே இறைத்துாதர்(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட அந்த ஒப்பந்தத்தை எடுத்துக் கொள்வோம்.  முஸ்லிம்கள் அதிகமாக இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் உலகத்திலே ஒரு ஒருமைப்பாடு என்று சொன்னால் அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் அந்த ஒப்பந்தம்.


இந்திய ஒருமைப்பாடு என்று பெருமையாக பீற்றிக் கொள்கிறார்கள். எழுதி வைத்திருப்பதில் ஒரு சதவீதம் கூட கடைபிடிப்பது இல்லை. எழுதி வைத்திருப்பதை இந்த ஒப்பந்தத்தோடு ஒப்பிட்டால் ஒரு சதவீதம் கூட தேராது. எழுதி வைத்ததில் செயல்படுத்தப்படாதது, பின்பற்றப்படாததுதான் இது. ஆனால் அது இறைத் துாதர்(ஸல்) அவர்கள் எழுதிய ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டது. அவர்களது மறைவுக்குப் பிறகும் பின்பற்றப்பட்டது.

பின்பற்றப்பட்டது பெரிய விஷயமும் அல்ல. பெருமையும் அல்ல. பின்பற்ற சாத்தியமானதாகவும் இருந்தது என்பதுதான் முக்கியம். பின்பற்றத்தக்கதையே சாத்தியமானதையே உண்மைநபி(ஸல்) அவர்கள் எழுதினார்கள். 


எழுதி வைப்பது எல்லாம் மனிதனுக்கு சாத்தியமாக ஆவது இல்லை. உலகில் எழுதி வைத்திருப்பது எல்லாம் செயல்படுத்தப்பட்டதா? சாத்தியமாக ஆனதா என்றால் இல்லை. இந்தியா உட்பட இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஐ.நா.விலும் எழுதப்பட்டவைகளில் புரட்டப்படாத பக்கங்கள் நிறைய உள்ளன. எழுதியதோடு முடிந்து விட்டது. அதன் பிறகு அது தேவைப்படவுமில்லை. அதை எடுத்தால் இன்றைய சூழலுக்கு சரி வராது என்கிறார்கள்.


அதில் நிறைய ஓட்டைகள் இருக்கிறது என்கிறார்கள். அறிவு என்ற ஈயத்தைக் கொண்டு அந்த ஓட்டைகளை அடைக்கப் போனால் நாலு பக்கம் கூட தேறாது. மீண்டும் அதே இடத்திற்குத்தான் திரும்பவும் வர வேண்டும். அதுவும் அவரவர்கள் எழுதியது இல்லை. பிரிட்டிஷ்காரர்களும் பிரஞ்காரர்களும் எழுதி விட்டு விட்டு போனதைத்தான் கொஞ்சம் மாற்றி அமைத்து இன்றும் சட்ட திட்டங்களாக வைத்து உள்ளார்கள். அதே நேரத்தில் அல்லாஹ் உடைய துாதர் (ஸல்) அவர்கள் யூதர்களோடு போட்ட அந்த ஒப்பந்தத்தை பாருங்கள்.

தொடரும் இன்ஷாஅல்லாஹ்
  நன்றி மக்கள் உரிமை
மார்ச் 25-31, 2016

அடுத்த தலைப்பு

பிற கட்சிகளோடு கூட்டணி சேர மார்க்கத்தில் அணுமதி இருக்கிறதா?

                                   
முந்தைய தலைப்புகள்

20. நச்சுக் கருத்துக்களா? அச்சுவெல்லக் கருத்துக்களா?

மக்களால் பேரறிஞர் பெரிய ஆய்வாளர் என்று நம்பப்பட்டு பிரபலமானவர்கள். ரகசிய போலீஸின் ரகசிய கூலிகள்.  இப்படி   சித்தரித்தரித்துக்  கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் வேடமிட்டு முஸ்லிம்களிடம் ஊடுருவியுள்ள யூதக் கைக் கூலிகள் இவர்கள். இறைத் துாதரை இழிவுபடுத்தும் இந்த இரகசிய கூலிகள் பின்னாலும் செல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள். இவர்களைமுஸ்லிம்கள் என்று சொல்ல முடியுமா? .  மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.  

19. இதுதான் அல்லாஹ் கொடுத்த மிகப் பெரிய வெற்றி
இன்றுள்ளவர்கள் நிலை என்ன?  சொல்லக் கூடிய கொள்கை சரிதான். சொல்பவன் சரி இல்லை என்பதுதான். உடன் இருந்தவர்கள்,  இருப்பவர்கள். மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் இருப்பவர்கள்.யாராலும் சத்தியமிட்டு நற்சான்றுகள் அளிக்க முடிவதில்லை. பிரச்சாரம் செய்தவரை விட்டு பிரிந்து சென்ற நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இல்லை. இவர்கள் அரங்கம் வேறு அந்தரங்கம் வேறு என்ற நிலை உடையவர்கள். அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு அரங்கம் வேறு அந்தரங்கம் வேறு என்ற நிலை கிடையாது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.http://mdfazlulilahi.blogspot.ae/2016/03/blog-post.html

18. இஸ்லாத்தில் மிகைத்து இருப்பது எது? தண்டிப்பா? மன்னிப்பா?

சண்டை நிரந்தர பகை என்பதை அல்லாஹ் உடைய துாதர் கற்றுக் கொடுக்கவே இல்லை.  அது ஷைத்தான் கற்றுக் கொடுத்தது. இதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். நபி வழி என்று சொல்லிக் கொண்டு வம்புச் சண்டைகளை விலைக்கு வாங்கி கொண்டிருக்கிறார்கள். அதை வியாபாராமாக ஆக்கி அதையே பிழைப்பாகவும் செய்து கொண்டு இருக்கிறார்கள். போர் எப்பொழுது கடமையாக்கப்பட்டது என்பதை விட ஏன் கடமையாக்கப்பட்டது?. அதை அறிய வேண்டும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. என்ன காரணங்கள்? மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். http://mdfazlulilahi.blogspot.ae/2016/02/blog-post_28.html

 



17.  யாரைப் பற்றி நாம் விசாரிக்கப்படுவோம்?
காபிர்களால் வீட்டையும் நாட்டையும் இழந்த முஸ்லிம்கள் அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். அது அன்றைய தியாக வரலாறு. முஸ்லிம்கள் முஸ்லிம்களால் வீட்டை இழந்து, நாட்டை இழந்து நாடோடிகளாகி விட்டார்கள். அக்கம் பக்கத்து நாடுகளில் அகதிகள் முகாம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இது நாளைய வரலாறு இன்றைய செய்தி.  சோகச் செய்தி. ஜிஹாதிகளின் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உடன்பிறப்புகளுக்கும் அகதிகள் முகாம்கள்கூட அடைக்கலம் அளிக்க பயந்து மறுக்கின்றன. இது அதைவிட மோசமான துக்கச் செய்தி. நாட்டிலுள்ளவர்களை காக்க புறப்பட்டோம்என்றவர்களால் அவர்களது வீட்டிலுள்ளவர்களுக்கு ஏற்பட்ட கதி இது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். http://mdfazlulilahi.blogspot.ae/2016/02/blog-post_21.html

தமிழுக்கு ஒரு கடவுள் இங்லீஷுக்கு ஒரு கடவுள் என்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை. எல்லா மொழியினருக்கும் எல்லா நாட்டவருக்கும் மட்டும் அல்ல. அனைத்திற்கும் கடவுள் அல்லாஹ் மட்டும்தான். இதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லியே ஆக வேண்டும். அண்ணன் தம்பிகளாக பழகுகிறோம் என்பதால் சொல்லத் தயங்கக் கூடாது சொல்லாமல் தவிர்க்கவும் கூடாது. உங்களை நோக்கி ஒருவன் வரம்பு மீறி வருவேன் என பிரகடனப்படுத்தி விட்டான். அதன் பிறகு. பயந்து புறமுதுகு காட்டலாமா? கூடாது.  அவனிடம் சொல்லுங்கஜி சொல்லுங்கஜி என பணிந்து சரண் அடைந்து அடிமைத்தனமாக பேசக் கூடாது. இது முஸ்லிம்களுக்குரிய தகுதியா? இல்லை. நிச்சயமாக இல்லை. அழித்தொழிக்கும்  ஏழு பெரும்பாவங்களில் புறமுதுகு காட்டுவது ஒரு பெரும்பாவம் மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


ஒரு சாரார் ஜிஹாத் என்ற சொல்லுக்கு "புனிதப்போர்" என்ற தவறான அர்த்தத்தை இஸ்லாமிய இளைஞர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்து விட்டார்கள். இன்னொரு சாரார், ஜிஹாத் என்றாலே பயங்கரவாதம், மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல், தாக்கி அழித்தல, போர் தொடுத்தல் போன்ற பொய்யான விளக்கங்களை முஸ்லிம் அல்லாதவர்கள் மனதில் பதிந்து விட்டார்கள். இப்பொழுதும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். http://mdfazlulilahi.blogspot.ae/2016/02/blog-post.html

14
முஹம்மது நபியின்(ஸல்) அந்த வரலாறுகளை கொச்சைப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதியவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் கூட குற்றம் சாட்ட முடியவில்லை. அவர்களை அறியாமல் இந்த அறப் போர்களை பாராட்டுகிறார்கள். வியக்கிறார்கள் இப்படியுமா ஒருவர் போர் செய்ய முடியும்! என்று. கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தைச் சார்ந்த முஸ்லிம் பெயர் தாங்கிகள். யூதக் கைக் கூலிகள் கொச்சைப் படுத்தித் திரிகிறார்கள் என்பது தனி விஷயம். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். http://mdfazlulilahi.blogspot.ae/2016/01/blog-post_31.html

13.முஸ்லிம்கள் போர்க் குணம் உடையவர்கள் என்பதெல்லாம் உண்மையா?
பொருளாதாரத்தை தடை விதித்தல் என்பது இன்றும் நடக்கத்தான் செய்கிறது. தீவிரவாதத்தில் ஈடுபடும் நாடுகள். தீவிரவாதத்திற்கு உதவி செய்யும் நாடுகள். அணு ஆயுதம்  வைத்துள்ளார்கள். விஷ வாயு பதுக்கி வைத்துள்ளார்கள். போர் செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிக் கூறி உலக ஆட்சியாளர்கள்(?) ஆப்பானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளுக்கு சென்ற பொருளாதாரங்களைத் தடை செய்ததைப் பார்த்தோம். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். http://mdfazlulilahi.blogspot.ae/2016/01/blog-post_24.html

பிரிவினை மார்க்கத்திற்கு முற்றிலும் புறம்பான செயல். தொடர் பகைமை எண்ணம் கொண்ட எல்லா சாராரும் நரகத்துக்கே உரியவர்கள். இவற்றைத் தெரிந்தும் படிப்பினை பெறாதவர்கள் என்ன செய்கிறார்கள். பிரிவினைவாதிகளின் இருப்பிடத்தை தேடிச் சென்று கை குலுக்கி ஆர்வமூட்டக் கூடிய வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


11.'அலெக்ஸாண்டர் வழி நடப்போம்' என்பது சரியா?
மனிதன் ஒரு தவறு செய்ய வேண்டும் என்று எண்ணி விடுவானேயானால். மனிதன் மிருகம் ஆகி விடுவான். மிருகமாக ஆகி விட்ட மனிதன் முன்னால் எந்த ஆயுதமும் நிற்காது. ஏர்வாடி காஜா மைதீன் கொலை இதற்கு சாட்சியாக உள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
கொள்ளைக்கார ஆட்சியாளர்களையெல்லாம் உலகின் தலை சிறந்த வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் என்று புகழ்ந்துள்ளது வரலாறு. உலக வரலாற்றில் பார்த்தால் எத்தனையோ ஆட்சியாளர்கள் போர் புரிந்து இருக்கிறார்கள். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

அரசியலுக்காக என்னவெல்லாமோ என்றும் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக அரசியல் கூடும், கூடாது என்ற கூத்துக்கள். அரசியலுக்கு நாங்கள் வர மாட்டோம். இப்படி சொல்லியும் அரசியல் செய்வார்கள். ஆதாயம் தேடுவார்கள். அரசியல் ஆதாய எண்ணம் இல்லை என்று சொல்பவர்களின் உள்ளத்தில் அந்த எண்ணம் இல்லையென சொல்ல முடியாது. அல்லாஹ்வின் துாதரிடம்(ஸல்) அரசியல் ஆதாய எண்ணம் இருக்கவில்லை. இதை நம் எல்லோராலும் சத்தியமிட்டு சொல்ல முடியும். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.http://mdfazlulilahi.blogspot.ae/2015/12/blog-post_26.html


அடுத்தவர்கள் மதிக்கும் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து குளிர் காயச் சொல்லவில்லை. அப்படி வழிகாட்டும் அயோக்கியனை எல்லாம் இஸ்லாம் ஷைத்தான் என அடையாளம் காட்டி உள்ளது. முஸ்லிம் வேடமிட்டு முஸ்லிம்களிடம் ஊடுருவியுள்ள யூதக் கைக் கூலிகள். இஸ்லாமிய அறிஞர்கள் என்ற போர்வையில் தப்பாக வழி காட்டி இருக்கலாம். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

ஸல்மான் ருஷ்டி சாத்தானிக் வெர்ஸஸில் என்ன எழுதி உள்ளான். வியாபாரிகளை, பயணிகளை வழி மறித்து முஹம்மது கொள்ளை அடித்தார் என்று. அதே கருத்தை சொல்லக் கூடியவர்களை ஸல்மான் ருஷ்டி போன்றவர்கள் என்றுதான் சொல்ல முடியும். மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் தவறாக சித்தரித்தரித்துள்ளார்கள். அதையே நபிகள் நாயகம் வீர வரலாறு என்ற பெயரில் இந்த அவதுாறுகளை அறியாமையால் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

6 எதுவும் சொல்லக் கூடாது என்கிறதா? கொல்லக் கூடாது என்கிறதா இஸ்லாம்?
பத்ருப் போர் பத்ருப் போர் என்று சொல்கிறோம். இந்த வார்த்தை இன்று உலகம் முழுவதும் உள்ள சில கூட்டத்தாருக்கு பேஷனாகவும் பிழைப்பாகவும் ஆகி விட்டது. ஹிஸ்புல்லாஹ் -அல்லாஹ்வின் கூட்டத்தார் என்பது போன்ற பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள். பெயர்களை வைத்துக் கொண்டால் போதுமா? செயல்கள் வேண்டாமா?  மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.http://mdfazlulilahi.blogspot.ae/2015/12/blog-post_11.html

காபிர்கள் முஸ்லிம்களை கொல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று வாய் கிழிய பேசுவார்கள். மணிக் கணக்கில் ஆதாரங்களை பட்டியல் இட்டு உணர்ச்சிகளை கொப்பளிப்பார்கள். உணர்ச்சி கொந்தளிப்புகள் யாவும் மேடையுடன் முடிந்து விடும். அப்படிப்பட்டவர்கள்தான் இந்த முஸ்லிமை  வீழ்த்த எந்த காபிரை ஆதரிக்கலாம் என்று பொதுப் பணத்தில் ரூம்பு போட்டு யோசிப்பார்கள். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

இந்து சமுதாய மக்கள் செய்த போர்களை இந்து மதப் போர் என்று மதச் சாயம் பூசி சொல்வதில்லை. கிறிஸ்துவ சமுதாய மக்கள் செய்த போர்களை கிறிஸ்துவ போர்கள் என்று மதச் சாயம் பூசி சொல்வதில்லை.  ஆகவே ரசூல் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த போர்களுக்கு மட்டும் இஸ்லாமிய போர்கள் என்று யாராவது மதச் சாயம் பூசினால் மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

நமது சமுதாயம் கடந்த காலங்களிலிருந்தே வரலாற்று பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உதாரணமாக இஸ்லாமிய போர்கள் என்று எழுதுவார்கள் பேசுவார்கள். அது என்ன இஸ்லாமிய போர்கள்? அப்படியானால் இந்துப் போர் என இருக்க வேண்டும். கிறிஸ்துவ போர் இருக்க வேண்டும். புத்த மத போர் இருக்க வேண்டும். எந்த மதப் பெயரிலும் போர் இல்லை. அந்த மதங்களைப் பற்றி வரும்போது. அந்த போர்களுக்கெல்லாம் வேறு வேறு பெயர் சொல்வார்கள். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.http://mdfazlulilahi.blogspot.ae/2015/11/blog-post_91.html

பத்ரு போருக்கு முன்னால் எத்தனையோ போர்கள் நடக்காமல் முறியடிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அல்லாஹ்வுடைய நாட்டம்தான். எந்த ஒன்றிலிலும் நபி(ஸல்) அவர்கள் தங்களது மனோ இச்சைக்கு உட்பட்டு நடந்தார்களா? அல்லாஹ்வுடைய கட்டளைக்கு உட்பட்டு நடந்தார்களா? மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். http://mdfazlulilahi.blogspot.ae/2015/11/2.html


நாம் எந்த ஒரு நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க பாடுபட வேண்டும். இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த பாடுபட வேண்டும். அதற்காக அந்த நாட்டில் போர் புரிபவர்களாக ஜிஹாது செய்பவர்களான இருக்க வேண்டும். அல்லது போருக்கான - ஜிஹாதுக்கான ஆயத்த வேலைகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் என்றால் அவனிடத்தில் இந்த போர் குணம் ஜிஹாது எண்ணம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் முழுமையான முஸ்லிம். இப்படி ஒரு கருத்தை இஸ்லாமிய கொள்கையாக சிலர் போதித்து வருகிறார்கள். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். http://mdfazlulilahi.blogspot.ae/2015/11/1.html

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.