நச்சுக் கருத்துக்களா? அச்சுவெல்லக் கருத்துக்களா?


அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற விஷயத்தில் யார் குறுக்கிட்டாலும் அந்த சட்டத்தை பின் பற்றக் கூடாது. இன்றும் இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இஸ்லாத்தை பின் பற்றுவதற்கு நேரடியாக எந்தத் தடையும் சட்டத்தில் இல்லை. ஒரு சில இடங்களில் அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள் என்றால் அது அவர்களுடைய அறியாமை.


அவர்களுடைய இறைவனும் நம்முடைய இறைவனும் ஒன்று என்ற சிறிய அறிவு இருந்தால் அவர்கள் இந்த மாதிரி செய்ய மாட்டார்கள். இப்பொழுது ஒரு சில இந்து சகோதரர்கள் செய்து வரும் செயல்களை பார்க்கும்பொழுது. அல்லாஹ் உடைய துாதர்(ஸல்) அவர்கள் சொல்லிக் காட்டிய அறியாமை காலத்து மக்களின் அந்த சம்பவம்தான் நமக்கு நினைவுக்கு வருகின்றது. என்ன சம்பவம்?


முற்காலத்தில் வாழ்ந்த ஒரு இறைத்துாதர் ஒரு பகுதியிலே போய் அல்லாஹ் ஒருவன் என்று பிரச்சாரம் செய்தார். அந்த மக்கள் என்ன செய்தார்கள். அவரை அடித்தார்கள். எந்த அளவுக்கு அடித்தார்கள்? முகத்திலெல்லாம் ரத்தம் வடிகிற அளவுக்கு அடித்தார்கள். தர்ம அடி என்போமே அது போல. அவர் என்ன செய்தார். அந்த ரத்தத்தையெல்லாம் துடைத்து விட்டு அல்லாஹ்விடம் துஆச் செய்தார்.


இன்றைய பிரச்சாரகர்களாக இருந்தால் என்ன செய்து இருப்பார்கள்? இப்படி அடித்தவர்கள் நாசமாக போகணும். உருப்படாமல் போகணும். நல்லதுக்கு காலம் இல்லை. நல்லது சொன்னா கேட்க மாட்டேன் என்கிறான். இப்படித்தான் புலம்பி இருப்பார்கள். எதிர்க்கப்பட்ட இடம் ஒரு ஊர் என்றால். இன்னொரு ஊரிலிருந்து அடியாட்களை அனுப்பி இருப்பார்கள்.  முடிந்தால் அவர்களுக்கு எதிராக எல்லாரையும் துாண்டி விட்டு இருப்பார்கள். இருக்கவே இருக்கிறது வாட்ஸப், முகநுால் போன்ற மீடியாக்கள். அவற்றைப் பயன்படுத்தி அவர்களை உண்டு, இல்லை என ஆக்கி இருப்பார்கள். சூழலுக்கு தகுந்த அரசியல் ஆதாயமும் தேடி இருப்பார்கள்.


அவர் அல்லாஹ்வின் துாதர் அல்லவா அதனால் என்ன செய்தார்? மக்களால் அடிக்கப்பட்ட அந்த துாதர். முகத்திலிருந்தெல்லாம் வடிந்த ரத்தத்தை துடைத்து விட்டு அல்லாஹ்விடம் துஆச் செய்தார். பாருங்கள் என்ன மாதிரியான துஆஇறைவா இவர்கள் அறிவு இல்லாத மக்கள் ஆகவே அவர்களை மன்னித்து விடு. எப்படிப்பட்ட துஆ சிந்தித்துப் பார்க்க வேண்டும். தாயிபு நகரத்து வீதியிலே தாஹா நபி நடக்கையிலே நடந்த சம்பவங்களைக் கேட்ட உள்ளங்கள் உருகாமல் இருக்காது. அந்த தாயிபிலே என்ன நடந்தது?


இஸ்லாத்திற்கு அழைத்த இறுதி இறைத்துாதரை விரட்டியபடி தாம்ஃபில் (தாயிஃபில்) மக்கள் பெரும் திரளாகக் கூடி விட்டார்கள். கூடிவிட்ட அவர்கள் இரண்டு அணிகளாக நின்று நபி (ஸல்) அவர்களின் மீது கற்களை வீசி எறிந்தார்கள். அதிகமான கற்களை நபி (ஸல்) அவர்களின் குதிகால் நரம்பை நோக்கி எறிந்தார்கள்.  அவர்களது காலணிகள் இரத்தக் கறைகளாயின.


நபி (ஸல்) அவர்கள் மிகுந்த கவலையுடன் உள்ளம் உடைந்தவர்களாக மக்கா நோக்கி திரும்பினார்கள். வழியில் கர்னுல் மனாஜில்என்ற இடத்தை அடைந்த போது அல்லாஹ் அவர்களிடம் ஜிப்ரீலையும், மலக்குல் ஜிபாலை (மலைகளின் வானவரை)யும் அனுப்பினான். மலக்குல் ஜிபால் தாயிஃப்வாசிகளாகிய இம்மக்களை இரு மலைகளையும் ஒன்று சேர்த்து நசுக்கி அழித்துவிடவா”? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள். இச்சம்பவத்தின் விவரத்தைப் பற்றி நமது அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுவதைக் கேட்போமே.


நான் நபி (ஸல்) அவர்களிடம்உஹுத் போரைவிடக் கடுமையான நாள் எதுவும் உங்களது வாழ்க்கையில் வந்துள்ளதா?” என்று கேட்டேன். அதற்கு உனது கூட்டத்தாரின் மூலம் நான் பல துன்பங்களைச் சந்தித்துள்ளேன். அவற்றில் நான் சந்தித்த துன்பங்களில் மிகக் கடுமையானது யவ்முல் அகபாஎன்ற தினத்தில் எனக்கு ஏற்பட்ட வேதனையே ஆகும். நான் அப்து யாலிலின் மகனிடம் என்னை அறிமுகப்படுத்தினேன். ஆனால், அவன் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் கவலையுடன் திரும்ப மக்காவை நோக்கி பயணமாகிகர்னுல் மனாஜில்என்ற பெயருள்ள கர்னு ஸஆலிப்என்ற இடத்தில் வந்து தங்கிய போதுதான் எனக்கு முழுமையான நினைவே திரும்பியது.


நான் தலையைத் தூக்கிப் பார்த்தபோது என் தலைக்கு மேல் ஒரு மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது. அந்த மேகத்தில் ஜிப்ரீல் இருந்தார். அவர் என்னை அழைத்து நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் உங்களது கூட்டத்தாரிடம் பேசியதையும் அவர்கள் உங்களுக்குக் கூறிய பதிலையும் கேட்டுக் கொண்டான். இம்மக்கள் விஷயத்தில் நீங்கள் விரும்பியதை மலக்குல் ஜிபாலுக்கு ஏவ வேண்டும் என்பதற்காக அவரை உங்களிடம் அனுப்பி இருக்கின்றான்என்று கூறினார்.


மலக்குல் ஜிபால் என்னை அழைத்து எனக்கு ஸலாம் கூறி முஹம்மதே! ஜிப்ரீல் கூறியவாறே அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளான். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? நீங்கள் விரும்பினால் இவர்களை இரண்டு மலைகளையும் கொண்டு நசுக்கி விடுகிறேன்என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அதை ஒருக்காலும் நான் விரும்ப மாட்டேன். மாறாக, அவர்களிலிருந்து அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு இணை வைக்காதவர்களை அவன் உருவாக்குவான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


இந்த பதிலின் மூலம் நபி (ஸல்) அவர்களின் தனித்தன்மையை அறிகிறோம். அவர்கள் எத்தகைய மகாத்தான பண்புள்ளவர்கள் என்பதையும் அறிகிறோம். இப்படிப்பட்ட சாந்த நபியைத்தான் சண்டாளர்களான யூதக் கைக்கூலிகள். குர்ஆன் விளக்கங்களில் யூதர்களின் கருத்தை திணிக்க இஸ்ரேல் உளவுத்துறையிடம் கையூட்டுப் பெற்ற மாபாவிகள். எப்படி சொல்லி உள்ளார்கள் தெரியுமா?


மக்காவாசிகளை லேசில் விடக் கூடாது என்று சண்டைக்குப் போனார்கள். வலியவும் சண்டைக்குப் போனார்கள். ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என 13 வருஷம் காத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாம் கணக்கு தீர்க்க வேண்டும் என்றுதான் மக்காவில் ஸபுர் பண்ணினார்கள் என்று


இவை நச்சுக் கருத்துக்களா? நல்ல அச்சுவெல்லக் கருத்துக்களா? நிச்சயமாக நச்சுக் கருத்துக்கள்தான். இந்த நச்சுக் கருத்துக்களை நல்ல அச்சுவெல்லக் கருத்துக்கள் போல் முஸ்லிம் இளைஞர்களிடம் திணித்து உள்ளார்கள். மன்னிக்கும் மனப்பான்மை உடைய மாண்பாளரை, நல்ல பண்பாளரை, துாய குணாளரை பழிக்குப் பழி வாங்கக் கூடியவராக மக்கா காபிர்கள் கூட சொன்னது கிடையாது.


மக்களால் பேரறிஞர் பெரிய ஆய்வாளர் என்று நம்பப்பட்டு பிரபலமானவர்கள். ரகசிய போலீஸின் ரகசிய கூலிகள். இப்படி சித்தரித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் வேடமிட்டு முஸ்லிம்களிடம் ஊடுருவியுள்ள யூதக் கைக் கூலிகள் இவர்கள். இறைத் துாதரை இழிவுபடுத்தும் இந்த இரகசிய கூலிகள் பின்னாலும் செல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள். இவர்களை முஸ்லிம்கள் என்று சொல்ல முடியுமா?

தொடரும் இன்ஷாஅல்லாஹ்

 நன்றி மக்கள் உரிமை
மார்ச் 18-24, 2016
அடுத்த தலைப்பு

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.