காற்றும் ஒரு வலி நிவாரணிதான்! - வலி நீக்கும் ஓஸோன் ஊசி

வலி என்பது நோயல்ல; நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்று. நோயின் வருகையை அறிவிக்கும் அலாரம்தான் வலி. நாம் வலியை உடனடியாக நிறுத்தித் தப்பித்துக் கொள்கிறோம் தற்காலிகமாய். ஆனால், வலிக்கான அடிப்படை அப்படியே மறைந்து பதுங்கித்தான் இருக்கும். அந்த ஆணிவேரை அகற்றுவதுதான் அவசியமான சிகிச்சை.
வலியையும் நிறுத்தி, காரணத்தையும் கண்டறிந்து அகற்று இப்போது வந்திருக்கும் புதிய வழிமுறைதான் ஓஸோன் ஊசி. ஓஸோன் என்றால் பரிசுத்தமான ஆக்ஸிஜன்தான். காற்று மருந்தாகும் அந்த மகத்துவம் பற்றி, டாக்டர் பிரபு திலக்கிடம் கேட்டபோது...

மருந்து, மாத்திரை, ஆயின்மென்ட், அறுவைச் சிகிச்சை இல்லாமல் வலி எப்படிச் சரியாகும்?
"இது ஒன்றும் மாயமந்திரம் கிடையாது. எங்களது வலி நிர்வாகத் துறை, வலி எதனால் வருகிறது? என்ன சிகிச்சை தர வேண்டும்? நோய் எப்பொழுது முழுமையாகக் குணமடையும் என்பதை முதலில் அதிக செலவு, அலைச்சல்படுத்தாமல் கண்டுபிடித்த விடுவார்கள்.
இது ஏற்கெனவே புழக்கத்தில் இருந்து வரும் அல்ஜியாட்ரி என்னும் ஒருவித அலோபதி மருத்துவம்தான். இதனால் சுலபமாக வலி குறைகிறது.'

ஓஸோன் ஊசி என்றால் என்ன?
"விசேஷக் கருவி மூலமாக ஆக்ஸிஜனை ஓஸோனாக மாற்றி, அதனை ஊசி வழியே செலுத்தவதுதான் இந்தச் சிகிச்சை முறை. இதுபற்றியான ஃபெல்லோஷிப் சிறப்புப் படிப்பை தில்லி பெயின் மானேஸ்மெண்ட் சென்டரில் படித்து முடித்தேன். எனக்கு ஜி.பி. துரோஜா என்ற துறையின் பிரபல மருத்துவர் பயிற்சி கொடுத்தார்.'

ஓஸோன் ஊசி எப்படி வேலை செய்கிறது?
"மிக அதிகமாக வலியால் பாதிக்கப்பட்ட அந்தந்தப் பகுதிகளுக்கு, பிரச்னைகளுக்குத் தகுந்த மாதிரி தன் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளும் சிறப்பம்சம் வாய்ந்தது இந்த ஓஸோன் ஊசி. தண்டுவடப் பிரச்னை என்றால் (ஸ்லிப் ஸ்டிக்) இதில் பிதுங்கி இருக்கும் சவ்வைச் சுருங்க வைக்கும். இதே ஊசி மூட்டுவலிப் பிரச்னையில் தேய்ந்த சவ்வை வளர வைக்கிறது. ட்ரை ஜெமினல் நியூரானியா என்ற முகவலி ஏற்படும் பொழுது மின்னலடித்த மாதிரி கடுமையாக வலிக்கும். இதை ரேடியோ பிரிக்கொண்ஸி ஆபரேஷன் மூலமாகக் குணப்படுத்துகிறது.'

பக்கவிளைவுகள் ஏற்படுமா?
"கொஞ்சமும் ஏற்படாது. வியாதியின் காரணம், தாக்கம் புரியாமலும், சில சமயம் அதிக வீரியமான மாத்திரைகளைச் சாப்பிடுவதாலும் சிறுநீரகப் பாதிப்புகள் போன்ற அபாயகரமான பக்கவிளைவுகள் வரை ஏற்படும். அத்துடன் மாத்திரைகளால் நமக்குக் கிடைப்பது தற்காலிக நிவாரணம்தான்.
ஆனால் ஓஸோன் ஊசி மூலம் நம் உடலில் செலுத்தப்படுவது சுத்தமான காற்று. வலி ஏற்படுவதற்கான பிரச்னையைச் சரி செய்யும். அறுவைச் சிகிச்சையை அவசியம் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்துகிறது. பெரும் அளவிலான செலவு ஏதும் கிடையாது.'

என்ன செலவாகும்?
"வெறும் ஆறாயிரம் ரூபாய் மட்டும் தான்.
அதிகமான கை கால் குடைச்சல், மாத விடாய் மற்றும் மெனோபாஸ் கால வலிகள் ஆகியவற்றையும் ஓஸோன் ஊசி குணப்படுத்திவிடும். நோயாளியை வலியிலிருந்தும் அதன் ஆதார நோயிலிருந்தும் முற்றிலும் விடுபட வைக்கிறோம். மனிதர்களை தற்கொலைக்குக் கூட அழைத்துச் செல்லும் கடுமையான வலிகளைக் குறைத்து ஒரு கட்டத்தில் அது இல்லாமலேயே போக ஓஸோன் ஊசி சிகிச்சை வரம் தருகிறது என்றே சொல்லலாம்.'
நன்றி


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.