மறுமை நாள்


கோடி கேள்வி வரும்
Google விடைதராது.
வாடும் உள்ளங்கள்
Whatsup உதவாது.
ஓடி ஒழிய முடியாது
Onlineல் மலக்குமார்கள்
தேடிய பாவ புண்ணியம்
தெளிவாக play ஆகும்.
அவரவர் நன்மைகளை
அடுத்தவர்க்கு share பண்ணார்
தவறுகள் செய்தவர்கள்
தன்னைத் தானே like பண்ணார்
செட் செட்டாய் நிற்பார்கள்
ஷெல்பி எடுக்க யாருமில்லை
கூட்டாய் செய்த பாவம்
கொடும் சூட்டில் tag ஆகும்.
Fake ID உருவாக்கி
Facebookல் செய்த பாவம்
வேறார்க்கும் விளங்காதிருக்க
VPNல் செய்த பாவம்
யார் யார் போடோக்களை
இணைத்து edit செய்த பாவம்
வேரோடு வெளியே வரும்
வெட்கித்து தலை குனிவார்
சட்டிங்கில் செய்த பாவம்
செட்டிங்கில் கிளியராகும்
இஷ்டத்துக்கு பார்த்ததெல்லாம்
History கிளியராகும்
மோசப் படம் பார்த்தவற்றை
Dashboardல் அழித்திடலாம்
ஆனாலும் மறுமையிலே
சீனெல்லாம் வெளியே வரும்.
மீடியா என்ற பெயரில்
மிதிக்கப்பட்ட மானங்கள்
வீடியோ ஒழித்தெடுத்து
விளம்பரம் தேடியவை
கூடிய கூட்டங்களில்
குதறிய அவதூறுகள்
சாடயும் குறைவின்றி
சாட்சியுடன் வந்து நிற்கும்
தவறுகள் செய்தோர்
தண்டனை கிடைக்கு முன்னே
அவற்றினை விடுவோம்
அல்லாஹ்விடம் அழுவோம்
மறுமையின் மைதானத்தில்
மன்றாட்டம் பயன் தராது
இறைவனிடம் இங்கேயே
இருகரம் ஏந்திடுவோம்.
Yousuf, IQIC Doha

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.