லுஹாவும் முபாஹலாவும்.

...வை சார்ந்த பலர் கடுமையாக சாபமிட்டுக் கொண்டிருக்கின்றனர். வரவேட்கிறேன் 
அந்த காபத்துக்கு உரியவன் நான் என்றால் அது என்னை வந்து சேரட்டும். இல்லை எனில் 
அவர்களுக்கே திரும்ப செல்லட்டுமாக ஆமீன். வார்த்தை விளையாட்டால் பொய் சத்தியம் 
செய்யலாம் பொய்யாக முபாஹலா செய்யலாம் என்ற கொள்கை உடையவர்களில் லுஹாவும் 
ஒருவர். இதை இன்று எழுதவில்லை 9 ஆண்டுகளுக்கு முன்பே ஆதாரத்துடன் எழுதி 
அடையாளம் காட்டி உள்ளோம். அதை மீண்டும் உண்மைப்படுத்தியுள்ளார் லுஹா. 
ஒரே பள்ளிவாசலில் வேலை செய்பவர்கள்தான். 

நாம் மஸ்ஜிதுர்றஹ்மானில் கதீபாக வேலை செய்யும் லுஹா இமாமாக வேலை செய்யும் 
மசூது யூசுபி ஆகிய இருவர்களின் பெயர்களை குறிப்பிட்டே எழுதி இருந்தோம். இரண்டு 
பேருமே தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் என்ற ஒரே அமைப்பில் இருப்பவர்கள்தான். ஒரே 
பள்ளிவாசலில்தான் வேலை செய்கிறார்கள். இரண்டு உத்தமர்களின் பெயரால் அல்லவா 
முபாஹலா அழைப்பு வந்திருக்க வேண்டும். இரண்டு பேரின் பெயரால் அல்லவா மறுப்பு 
அறிக்கை வந்திருக்க வேண்டும். 
பொய்யாக முபாஹலா செய்யலாம். 
மசூது யூசுபியை கழட்டி விட்டு விட்டு தன்னை மட்டுமே சுத்த சூபியாக சித்தரித்து 
மெயில் வெளியிட்டுள்ளார். பொய் சத்தியம் செய்யலாம் பொய்யாக முபாஹலா செய்யலாம் 
என்ற கொள்கை உடைய லுஹா. அதனால்தான் மஸ்ஜிதுர்றஹ்மான் கள்ளக் கணக்கு உட்பட 
பல்வேறு சம்பந்தமான முபாஹலாவுக்கு மற்ற நிர்வாகிகளையும் அழைத்து வர வேண்டும் 
என்றோம். முதலில் மற்ற நிர்வாகிகளை அழைத்து வர மறுத்தார். பிறகு அவர்களுக்கே 
உரிய செட்டப்களை செய்து முபாஹலா நாடகத்தை அரங்கேற்றி நடிக்க தயார் ஆனார்கள். 
14.9.2005
இல் ராஜ்மஹாலில் முபாஹலா என அறிவித்தார்கள். 

முபாஹலா நாடகத்தை முடித்துக் கொண்டார்கள். 

போலீஸில் போய் நாங்கள் ரமழான் நிகழ்ச்சி நடத்துகிறோம். இலாஹி என்பவர் முபாஹலா 
என்ற பெயரால் கலாட்டா செய்ய வருகிறார் என்று கூறினார்கள். என்னிடம் 
மண்டபத்துக்கு வரக் கூடாது என்று எழுதி வாங்க வைத்தார்கள். 14ஆம் தேதியன்று 
நான் வீட்டை விட்டு வெளியே வந்து விடக் கூடாது என்பதற்காக என் வீட்டு வாசலில் 
போலீஸை கொண்டு வந்து நிற்க வைத்தார்கள். பகிரங்க அழைப்பும் பின் வாங்கிய 
பொய்யர்களும் என்று பத்திரிக்கையில் எழுதி மக்களை ஏமாற்றினார்கள். அத்துடன் 
முபாஹலா நாடகத்தை முடித்துக் கொண்டார்கள். 
இரண்டு முறை கொட்டு பட மாட்டான். 

அதுபோல்தான்  மஸ்ஜிதுர் றஹ்மானை மையமாக வைத்து கோடிக் கணக்கில் மோசடி செய்துள்ள  தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தினரை காப்பாற்றவே மீண்டுமு; முபாஹலா என்ற நாடகத்தை அறிவித்துள்ளார் நடிகர் திலகம் லுஹா. ஒரு முஃமின் ஒரு பொந்தில் இரண்டு முறை கொட்டு பட மாட்டான். இதை ஏற்றால் பழைய நாடகமே நடக்கும். முபாஹலா முபாஹலா என்று  மக்கள் கவனத்தை திருப்பி மோசடியை மறக்க வைத்து விடுவார்கள். கடைசியில் முபாஹலாவும் நடக்காது. 

வீடு கட்ட எங்கிருந்து பணம் எங்கிருந்து வந்தது. 

25ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தன்னை தூய்மையானவர்போல் காட்டும் லுஹா இப்பொழுது 
தனது தூய்மையை நிரூபிக்க என்ன செய்திருக்க வேண்டும். தனது மனைவியுடன் பேசிக் 
கொண்டிருந்த இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். ஸஹாபி கேட்காத நிலையிலேயே 
இது என் மனைவி என்று தானாக முன் வந்து தெளிவு படுத்தினார்கள். பல கோடி மோசடி 
செய்துள்ள நபரின் பெயரை வெளியிடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கும் லுஹா 
இப்பொழுது பல லட்சத்தில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். தான் வீடு கட்ட 
எங்கிருந்து பணம் எங்கிருந்து வந்தது. எத்தனை லட்சத்தில் கட்டுகிறேன் 
என்பதையும் வெளியிட்டு அவரது தூய்மையை தானாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும். 
கண்ணீர் விட்டு அழுதார் லுஹா. 

நானாக .மு.மு..வுக்கு எதிராக ஆனது போலவும். உலகமகா வீரர் என் பின்னால் 
வராததால் அந்த வீரருக்கு நான் எதிராக ஆகி விட்டது போலவும் சித்தரித்துள்ளார். 
2002
இல் துபை வந்த லுஹா கலவரத்தில் பாதிக்கப்படவர்களுக்கு உதவிட என வசூலித்த 
பணத்திலிருந்து 2 லட்சத்தை ஒரு செல்வந்தருக்கு .மு.மு.. தலைமையினர் கடனாக 
கொடுத்துள்ளார்கள். பிறகு தள்ளுபடி செய்து விட்டார்கள். கள்ளக் கணக்கு எழுதி 
வருகிறார்கள். இப்படி பல குறைகளைக் கூறினார். பி.ஜெ. பற்றியும் அவருடன் 
உள்ளவர்கள் பற்றியும் பல அசிங்கமான குற்றச்hட்டுக்களை கூறினார். இந்த பி.ஜெ. 
என்னை கேவலப்படுத்தி விட்டார் என்று கண்ணீர் விட்டு அழுதார் லுஹா. இதனால் 
ஆத்திரம் அடைந்த நான் எனக்கே உரிய தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும் என்ற 
வீரியத்தில் செயல்பட்டேன். 

மோசடி விஷயத்திலும் கொதித்து போய் எழுதியுள்ளேன். 

...வை சிலாகித்து சாஜிதுர்றஹ்மான் எழுதியுள்ளார்கள். 13-3-2011 அன்று என் 
வீட்டுக்கு வந்திருந்த மவுலவி கே.எஸ்.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி மற்றும் 
நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது தவ்ஹீது பிரச்சாரத்தை நல்ல 
முனைப்போடும் வீரியத்தோடும் ...வினர்தான் செய்கிறார்கள் என்று இம்தாதி 
கூறினார். நானும் அதே கருத்தைதான் கூறினேன். ... மற்றும் லுஹா மீதான 
வெறுப்பில் மோசடி பிரச்சனையை எழுதவில்லை. 2002இல் லுஹா என்னிடம் வந்து 
அழுதபொழுது எப்படி கொதித்துப் போனேனோ அது போல்தான். மோசடி விஷயத்திலும் 
கொதித்து போய் எழுதியுள்ளேன். 

துஆச் செய்து மறுக்கட்டும். 

இதுதான் உண்மை இது பொய்யாக இருக்குமானால் ...வினர் எழுத்துப்படி அல்லாஹ் 
என்னை நாசமாக்கட்டும். உண்மை என்றால் லுஹாவின் மீதும் அவரைச் சார்ந்து நிற்கும் 
அனைவரையும் அல்லாஹ் நாசமாக்கட்டும் என்று அனைவரும் துஆச் செய்யுங்கள். இன்னும் 
அவரது பொய்களை பட்டியலிடுவோம். ஆதை உண்மைப்படுத்தக் கூடியவர்கள் நாம் 
கூறியுள்ளபடி துஆச் செய்து மறுக்கட்டும். 

*வெளிநாடு சென்று ஒரு மாத ஆன நிலையில் பழுல் இலாஹி வர மாட்டார். அதை வைத்தே 
காலத்தை ஓட்டிலாம் என்ற திட்டம் லுஹாவிடம் இல்லை என்றால். முபாஹலா நாடகதாரர் 
இல்லை என்றால். தாயகத்தால் உள்ள ஏர்வாடி சிராஜுடன் முபாஹலா நடத்திக் 
காட்டட்டும்.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.