பொய்யர்கள் யாராக இருந்தாலும் அல்லாஹ்வால் அழிக்கப்பட வேண்டும்.

லுஹா பொய் சாட்சி சொன்னதை, பொய் சத்தியம் செய்ததை, முபாஹலாவிலிருந்து அவரது சகாக்களோடு பின் வாங்கி விட்டு நாம் பின் வாங்கியதாக செய்தி வெளியிட்டதை நாம் கூறிய வழியில்  நீங்கள் யாரும் மறுக்கவில்லை. 
அதன் மூலம் சாஜிதுர்றஹ்மானும். அன்சாரி முஹம்மதுவும் மர்வானும் மற்றுமுள்ள அனைத்து த.த.ஜ.வினரும் லுஹா பொய் சாட்சி சொன்னவர், பொய் சத்தியம் செய்தவர், முபாஹலாவிலிருந்து அவரது சகாக்களோடு பின் வாங்கி விட்டு நாம் பின் வாங்கியதாக பொய் செய்தி வெளியிட்டவர் என்று சமுதாயத்திற்கு அடையாளம் காட்டி விட்டீர்கள். அதே வழியில்தான் இதையும் நாம் அணுக விரும்புகிறோம். 
மேலப்பாளையத்தில் நடந்துள்ள மோசடியில் ஈடுபட்டுள்ள கபூர், சாதிக், அக்பர் உட்பட அனைவருமே த.த.ஜ.வினர்தான். இதற்கு ஆதாரமாக அவர்களது உறுப்பினர் கார்டை நம்மால் காட்ட முடியாது. அதனால்தான் சொல்கிறேன். 
மேலப்பாளையத்தில் வியாபாரம் என்ற பெயரால் நடந்துள்ள மோசடியில் ஈடுபட்டுள்ள மூல பிதாக்கள் அனைவரும் த.த.ஜ.வினர்தான் என்பது உண்மையாக இருந்தால்உண்மையை வெளியில்கொண்டு வந்த பழுலுல் இலாஹிக்கு யா அல்லாஹ் நீ அருள் புரிவாயாக. 
மோசடியாளர்களுக்கும் அவர்களுக்கு துணை நிற்பவர்களுக்கும் உனது சாபத்தை இறக்குவாயாக. பொய்யாக இருந்தால் பழுலுல் இலாஹிக்கு உனது சாபத்தை இறக்குவாயாக. என்று குழுமத்தினர் அனைவரும் ரமழான் முழுவதும் துஆச் செய்யுங்கள் என்று வேண்டுகிறேன். 
மேலப்பாளையத்தில் நடந்துள்ள மோசடிக்கும் மேலப்பாளையம் த.த.ஜ.வினருக்கும் சம்பந்தமில்லை என்பது உண்மையானால் சாஜிதுர்றஹ்மானும். அன்சாரி முஹம்மதுவும் மர்வானும் அவர்கள் போல் உள்ள அனைத்து த.த.ஜ.வினரும் என்னைப் போல் வேண்டுகோள் வைக்கட்டும். 
இதன் மூலம் பொய்யர்கள் யாராக இருந்தாலும் அல்லாஹ்வால் அழிக்கப்பட வேண்டும். 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.