வக்காலத்து வாங்குபவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் இரண்டு வேலையாட்கள் பற்றி மோசடி குற்றச்சாட்டு வருகிறது. அதில் ஒருவரைப் பற்றி மட்டும் சம்பந்தமில்லை என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அப்படியானால் என்ன அர்த்தம். மோசடி குற்றஞ்சாட்டப்பட்ட இருவரில் ஒருவருக்கு சம்பந்தம் உள்ளது என்று உறுதியாக கூறுகிறார்கள் என்றே அர்த்தம். 

*குறிப்பாக சாஜிதுர்றஹ்மான் தெளிவுபடுத்த வேண்டும்

மஸ்ஜிதுர்றஹ்மானில் வேலை செய்யும் லுஹா, மசூது ஆகிய இரண்டு த.த.ஜ. மவுலவிகள் மீது குற்றச்சாட்டுக் கூறியுள்ளோம். த.த.ஜ.விலுள்ளவர்களோ லுஹாவுக்கு மட்டும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்பாடியானால் த.த.ஜ.வின் மவுலவிகளில் ஒருவரான மசூது ஆலீமை மோசடி கும்பலைச் சார்ந்தவர் என்று ஒப்புக் கொள்கிறார்களா? லுஹாவுக்கு மட்டும் வக்காலத்து வாங்குபவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக சாஜிதுர்றஹ்மான் தெளிவுபடுத்த வேண்டும். 

இரண்டு முறை கொட்டுப் படமாட்டான்

பொய் சாட்சி சொல்லக் கூடியவன். பொய் சத்தியம் செய்யக் கூடியவன். பொய்யாக முபாஹலா செய்யக் கூடியவன். முபாஹலாவிலிருந்து பின் வாங்கி விட்டு எதிர் தரப்பு வரவில்லை என வஞ்சகம் இல்லாமல் பொய்யை பரப்பக் கூடியவன். இப்படி ஒருவனைப் பற்றி தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது. அதன் பின் யாராவது அவனை சாட்சி சொல்ல சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். சத்தியம் செய்ய சொல்லுங்கள். முபாஹலா செய்யச் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன் என்பார்களா? ஒரு முஃமின் ஒரு இடத்தில் இரண்டு முறை கொட்டுப் பட மாட்டான். 

சாஜிதுர்றஹ்மானாகிய எனக்கு அருள் புரியட்டும்

லுஹாவுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் குறிப்பாக சாஜிதுர்றஹ்மான் என்ன செய்ய வேண்டும்.  பழுலுல் இலாஹி சுட்டிக் காட்டியுள்ளது போல் லுஹாவும் அவரைச் சார்ந்தவர்களும் பொய் சாட்சி சொல்லியவர்களுமில்லை. பொய் சத்தியம் செய்தவர்களுமில்லை.   முபாஹலாவிலிருந்து பின் வாங்கி  விட்டு பழுலுல் இலாஹி வரவில்லை என்று பத்திரிக்கை மூலம் பொய்யை பரப்பவுமில்லை. இது உண்மையாக இருந்தால் அல்லாஹ் சாஜிதுர்றஹ்மானாகிய எனக்கு அருள் புரியட்டும். 

வேண்டுகோள் வைக்க வேண்டும்
இது பொய்யாக இருந்தால் சாஜிதுர்றஹ்மானாகிய என்னை அல்லாஹ் நாசமாக்குவானாக ஆமீன். இதில் பழுலுல் இலாஹி உண்மையாளர் என்றால் பழுலுல் இலாஹி மீது அல்லாஹ் அருள் புரியட்டும். பொய்யர் என்றால் அவர் மீது அல்லாஹ்வின் நாசம் உண்டாகட்டும். என்று சாஜிதுர்றஹ்மானாகிய நான் துஆச் செய்கிறேன். குழுமத்தவர்களும் துஆச் செய்யுங்கள். உம்ரா செல்பவர்களும் நோன்பாளிகளும் துஆச் செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைக்க வேண்டும். 
சாஜிதுர்றஹ்மானும் அவரைப் போல் லுஹாவுக்கு வக்காலத்து வாங்குபவர்களும் தங்கள் பெயரைக் குறிப்பிட்டுக் கூறி ஒப்புதுல் தரட்டும். 

நன்றி TMB

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.