த।த.ஜ. மாநிலப் பேச்சாளர் மௌலவி அப்துந் நாஸிர்.

த.த.ஜ. மாநிலப் பேச்சாளர் மௌலவி அப்துந் நாசர் அவர்களிடம் விடை காணவேண்டுமே?from Abdullah Muqrin hide details 5:14 pm (1 hour ago)
date Jan 3, 2008 5:14 PM
subject அப்துந் நாசர் அவர்களிடம் விடை காணவேண்டுமே?
mailed-by gmail.com

அன்பார்ந்த சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

கடையநல்லூரில் நடந்த இரத்ததான முகாமில் அப்துந் நாசிர் என்பவர் உரையாற்றியதாகஒரு செய்தி. அவரது உரையில் "எவனுடைய நாவினாலும் கரத்தினாலும் ஏற்படும் தீங்குகளை விட்டும் பிறமக்கள் பாதுகாப்பைப் பெறுகின்றார்களோ அவன்தான் உண்மையான முஸ்லிம் என நபி (ஸல் ) அவர்கள் றியுள்ளார்கள் " என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் புகாரியில் ''பிற முஸ்லிம்கள் எவரது நாவு , கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். '' என்று தான் உள்ளது. ஆகவே மேற்கண்ட ஹதீசில் முஸ்லிம்கள் என்ற இடத்தில் பிறமக்கள் என்று அப்துந் நாசிர் பொருள் மாற்றியுள்ளாரா ? அல்லது தவறுதலாக இடம் பெற்றுள்ளதா ? அல்லது முஸ்லிமல்லாதவர்களையும் திருப்திப்படுத்த இவ்வாறு கூறப்பட்டதா ? சகோதரர் அப்துந் நாசர் அவர்களிடம் யாரேனும் இதனைத் தெரிவித்து விடை காணவேண்டுமே ? அல்லது அவரது மின்னஞ்சல் யாரிடமேனும் இருந்தால் தெரியப்படுத்துங்களேன் ? மேலும் பிறருக்கு தீங்கிழைக்கக் கூடாது என்பதற்கு ஆதாரமாக அநேக திருமறை வசனங்களும் நபிமொழிகளும் சான்றாக உள்ள நிலையில் மேற்கண்ட ஹதீஸை பொருள் மாற்றிக் கூறவேண்டிய எந்த அவசியமும் இல்லை என்பது என் கருத்து.


அன்புடன்

முக்ரின்

Comments

அன்பானவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த 03/01/2008 அன்று அப்துந் நாஸர் அவர்களிடம் விடை காணவேண்டுமே என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை நான் அனுப்பியிருந்தேன். கடையநல்லூர் இரத்த தான முகாமில் அவர் உரையாற்றிய போது ''எவனுடைய நாவினாலும் கரத்தினாலும் ஏற்படும் தீங்குகளை விட்டும் பிறமக்கள் பாதுகாப்பைப் பெறுகின்றார்களோ அவன்தான் உண்மையான முஸ்லிம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்'' என்று குறிப்பிட்டதாகவும் இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றும் எனவே அவர் பொருள் மாற்றிக் கூறியுள்ளாரா அல்லது தவறுதலாக இடப்பெற்றதா? அல்லது முஸ்லிமல்லாதவர்களையும் திருப்திப்படுத்த கூறப்பட்டதா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தேன். இதனை அவர்களிடம் தெரிவித்து விடை காணும்படியும் கேட்டிருந்தேன். மரியாதைக்குரிய அப்துந்நாஸிர் அவர்கள் இதற்கு முறையான பதிலை அனுப்பியுள்ளார்கள். ''எவருடைய நாவு மட்டும் கரத்தினால் ஏற்படும் தீங்கைவிட்டும் பிறமக்கள் பாதுகாப்பு பெறுகின்றார்களோ அவரே உண்மையான முஸ்லிம் என்று பொருள்படும் ஹதீஸ் அஹ்மது, இப்னு மாஜா, திர்மிதீ நஸாயீ போன்ற ஏடுகளில் பதிவாகியுள்ள ஹதீஸ்களை அவர்கள் தொகுத்து அனுப்பியுள்ளார்கள். அவர்கள் எனக்கு அனுப்பிய ¬ஃபலை அப்படியே அனுப்புகின்றேன். தயவு செய்து டவுன்லோஹட செய்யவும். மேலும் எனக்கு ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றேன். சகோதரர் அப்துந் நாஸர் அவர்கள் என்னை மன்னிக்கவும். இது விஷயமாக நான் ஏற்படுத்திய குழப்பத்தை தெளிவுபடுத்திவிட்டேன் என்று நம்புகின்றேன். அல்லாஹ்விடம் சரணடைகின்றேன்.


--
அன்புடன்

முக்ரின்

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.