மவுலிது ஓதுவதால் நன்மையில்லை நரகமே கிடைக்கும். நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள்.

கண்ணியத்திற்குரிய சஹதுல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். 1.8.08 அன்று தாங்கள் எனக்கு அனுப்பிய மெயிலில் ' சுபுஹான மௌலிதில் தவறில்லை!' என்ற கட்டூரைக்கு தாங்களுக்குரிய மரியாதையோடு எனக்கு பதில் அனுப்பியதால் மேற்கொண்டு தங்களுக்கு பதில் அனுப்ப மனமில்லாமல் இருந்தேன். தாங்கள் எனக்கு ' பெருமானாரின் ஹிஜ்ரத் தரும் பாடங்கள்' என்பதை அனுப்பிவைத்தமைக்கு நன்றி. விடாது கருப்புவில் பதிவு செய்த " வெளிச்சத்திற்கு வந்த உண்மை! " இவற்றிற்கு பதில் என்மெயிலுக்கு அனுப்ப முடிந்தால் அனுப்பலாம். என்று மெயில் அனுப்பி இருந்தீர்கள்.

நான் ஷh ர்ஜா மதாம் என்ற ஒமான் பார்டர் பகுதிக்கு வந்துள்ளேன் அங்கு நெட் வசதி இல்லை. துபை வந்த இடத்தில் அவசரமாக எழுதியதுதான் ஹிஜிரி முடிந்தால் எனது டு நம்பருக்கு போன் போடவும் என 8.1.08 அன்று பதில் மெயில் அனுப்பி இருந்தேன்.

பஸ்லுல் இலாஹி எனக்கு அனுப்பிய மெயிலிலிருந்து சில வரிகள்:-

என்ற தலைப்பில் நீங்கள் எழுதியுள்ளதில்

அவர்கள் எனக்கு சொன்ன அனைத்து ஸலாம்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டேன்.

33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று ஃபள்லுல் இலாகி சொல்ல வருகிறார். புரிந்துதான் சொன்னாரா என்பது எனக்கு தெரியவில்லை.

ஆனால்,

யார் ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வார்களோ அவர்கள் மீது 10 முறை அல்லாஹ் ஸலவாத்து சொல்வதாக வருகிறது.

அப்படியானால், அஸ்தஃபிருல்லாஹ், அல்லாஹ் பைத்தியக்காரனா?

இந்த ஸலாம் பைத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு 33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று ஃபள்லுல் இலாகி சொல்ல வருகிறாரே?

அப்படியானால், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவை சொல்கிறோம் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என்று 1 தடவை சொன்னால் போதாது! அதில் என்ன சந்தேகம் நமக்கு வந்தது! திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும். அது போல அல்லாஹூ அக்பர், சுபுஹானல்லாஹ் இன்னும் இது போல உள்ள வாசகங்களை திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும்?

இதையெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்றா சொல்ல முடியும்?

லாயிலாஹா இல்லல்லாஹூ என்று சொன்னால் மட்டும் போதாது, ( இதை சொல்லித்தந்தவரையும் ஏற்கிறேன் என்று) முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்பதையும் சேர்த்து சொல்வதுதான் கலிமத்து தவ்ஹீதாகும்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனை தடவை ஸலாம் சொல்கிறோமோ அவைகளெல்லாம் நமக்கு 10 மடங்காக அல்லாஹ்வால் சொல்லப்படுகிறது என்பதை அறிய வேண்டும். இப்போது நம்முடைய செய்தி இதுவல்ல.


இந்த மெயிலில் வெளிச்சத்திற்கு வந்த உண்மைத்தான் இப்போது ஆராய வேண்டியவை.

உங்களது இந்த வாதத்திற்கு பதில் எழுதிய நான், கம்யூட்டர் சென்டருக்கு வந்துதான் டைப் செய்ய வேண்டி இருக்கிறது.

ஸலவாத்து என்பது இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகும். இறைவனிடம் ஒரு கோரிக்கையை வேண்டுதலை எத்தனை முறையும் வலியுறுத்தலாம். ஸலாம் என்பது முகமன் ஆகும். சுபுஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் இவை துதித்தல் ஆகும்.

இவ்வாறு துதிக்க கற்றுக் கொடுத்த இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் யா அல்லாஹ் யாஅல்லாஹ் என 33 முறை அழைக்க கற்றுத் தரவில்லை. துதித்தல் அழைத்தல் இவற்றிலேயே வித்தியாசம் இருக்கிறது. பொருள் உணர்ந்து செயல்பட்டால் பிரச்சனைகள் வராது இன்னும் விரிவாக எழுத நேரம் இல்லை
என 16.1.08 அன்று மெயில் அனுப்பி இருந்தேன். அறிவுடையவர்களுக்கு இந்த விளக்கம் போதுமானதாகும்.

இதற்கு,நான் கேட்டது இதுவல்ல. கூலியைப்பற்றித்தான். அதற்கு உங்கள் பதில் என்ன?
" வெளிச்சத்திற்கு வந்த உண்மை! " இவற்றிற்கு பதில் என்மெயிலுக்கு அனுப்ப முடிந்தால் அனுப்பலாம். என்று 20.1.08 அன்று பதில் அனுப்பி உள்ளீர்கள் எனவே சற்று விரிவாகவே எழுதுகிறேன்.

களியக்காவிளை விவாதத்தின்போது! என்ற ஒரு கட்டுரையை பதிப்பித்தேன். அட அதற்கு பல சகோதரர்கள் கருத்தும் பதிவு செய்திருக்கிறார்கள். சகோதரர் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி என்பவருக்கும் மெயில் அனுப்பியிருந்தேன். அதற்கு கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி எனக்கு பல ஸலாம்கள் சொல்லி பதில் மெயில் அனுப்பி, அதை அவருடைய பிளாக்கிலும் பதிவு செய்திருக்கிறார். என்னுடைய கட்டூரையை பதிவு செய்தால் உண்மை விளங்கிவிடும் என்று அஞ்சி அவருடைய பதிலை மட்டும் பதிவு செய்திருக்கிறார். ஆனால் நான் திரும்ப மெயில் அனுப்பவில்லை. என்ற பீடிகையுடன் உங்கள் கட்டுரையை ஆரம்பித்து உள்ளீர்கள்.

அக்டோபர் 25இல் எழுதியதற்கு டிசம்பர் 13இல் பதில் எழுதி உள்ளீர்கள். நியாயவானாக இருந்தால் அப்பொழுதே எனக்கு காப்பி அனுப்பி இருக்க வேண்டும். நான் எனது விமர்சனத்தை உங்கள் பார்வைக்கு உடனே அனுப்பி இருந்தேன்.

நீங்கள் எனக்கு அனுப்பியது போலவே பலருக்கும் மெயில் அனுப்பி உள்ளீர்கள். இந்த அடிப்படையில் தான் பதிலை பலருக்கும் அனுப்பினேன். பலர் அறிய பிளாக்கரில் வெளியிட்டேன். மேலும் இது தனி நபர் செய்தி அல்ல. மார்க்க விஷயம். எனவே பலருக்கும் அனுப்பியதில் எந்த தவறும் இல்லை. இந்த முறை தங்களுக்கு மட்டுமே அனுப்பக் கூறியதால் சுருக்கமான பதிலை தங்களுக்கு அனுப்பினேன். விடாது கருப்பில் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ள தாங்கள் எனது பதிலை இதுவரை வெளியிடவில்லை.

எனவே இதையும் பலர் அறிய வெளியிடுகிறேன். இதுவரை கட்டுரைகளை பிளாக்கரில் வெளியிடுவதுடன் கட்டுரையை வேர்டு பைலாகவும் அனுப்பி வைப்பேன். இப்பொழுது உங்கள் பாணியில் பிளாக் முகவரி மட்டும் அனுப்பி உள்ளேன்.

தாங்களுக்குரிய மரியாதையோடு எனக்கு பதில் அனுப்பியதால் மேற்கொண்டு தங்களுக்கு பதில் அனுப்ப மனமில்லாமல் இருந்தேன் என எழுதி உள்ளீர்களே உங்களுக்கு பல முறை ஸலாம் சொன்னதால் மனது பாதித்து விட்டீர்களா? பல முறை ஸலாம் சொன்னது உங்களுக்கு மரியாதைக் குறைவாக ஆகி விட்டதா?

நீங்கள் வெளியிட்டுள்ள பிளாக் பற்றி மறுநாள் பின்னூட்டம் இட்டு விட்டேன். அதன் பிறகும் வெத்து வேட்டு வாதம் வைத்து உள்ளீர்கள். உங்கள் வாதம் பலமானதாக இருந்திருந்தால் நீங்கள் அப்பொழுதே பின்னூட்டம் இட்டு இருப்பீர்கள். உங்கள் கட்டுரையில் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் இருந்தது போலவும் அதை நான் மறைத்து விட்டது போலவும் ஒரு மாயையை மீண்டும் மீண்டும் ஏற்படுத்திட முயன்று வருகிறீர்கள்.

சுபுஹான மௌலிதில் தவறில்லை! பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான (ததஜ) அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது! என்ற ஒரு வாதத்தைத் தவிர குர்ஆன் ஹதீஸுகளிலிருந்து என்ன ஆதாரம் வைத்திருந்தீர்கள் வெளியிடுங்கள் பார்க்கலாம்.

பி.ஜெ. தரப்பை கூலிக்கு வேலை செய்பவர்கள் என்பதை எனது எழுத்தில் இருந்து மீண்டும் பதிவு செய்து உள்ளீர்கள். பி.ஜெ. அன்று வாதித்தது ஹக்கின் தரப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சுபுஹான மவுலீதில் தவறு இல்லை என ஒப்புக் கொண்டார் என்று எழுதியதற்குத்தான் அது உண்மையாக இருந்தால் சேக்அப்துல்லா ஜமாலியிடம் பி.ஜெ. ரகசிய கூலி வாங்கி இருப்பார் என எழுதி இருந்தேன். அதே நேரத்தில் பி.ஜெ.யின் எதிர் தரப்பாக இருந்த சேக்அப்துல்லா ஜமாலி கூட்டமும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்பதுதான் எமது நிலை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.

உழைத்து வாழாமல் மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் கூட்டம். கூலிக்கு மாரடிக்கும் கூட்டம். இப்படி சேக்அப்துல்லா ஜமாலி கூட்டத்தை பி.ஜெ. பலமுறை கூறி இருக்கிறார். இதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதே நிலைக்கு பி.ஜெ. அணியும் வந்து விட்டது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. கூலிக்கு மாரடிப்பதோடு மட்டுமல்லாமல் பள்ளிவாசல்களை திருடுவது. அமானிதமான பொது டிரஸ்டுகளை கொள்ளை அடிப்பது என மிகவும் கீழான நிலைக்கு போய் விட்டது பி.ஜெ. அணி.

எதற்கெடுத்தாலும் விவாதத்துக்கு தயாரா என்று அழைப்பவர்கள் பெருகி விட்டார்கள். அவர்களுக்கு அவர்கள் சொல்லும் கொள்கை மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அவர்களது வாதத் திறமையின் மீதும் பேச்சுத் திறமையின் மீதும் அளவற்ற நம்பிக்கை உண்டு. இதனால் வாதத்தின் மூலம் கொள்கையை நிலை நாட்டுவதைவிட நம்ம ஆளு நல்ல பேசினார். நல்ல வாதம் வைத்தார். அவருக்கு ஈடு அவர்தான் என ரசிகர்களை பேச வைத்து விடுகிறார்கள். தங்களுக்கு என ஒரு இமேஜ் ஏற்பட புகழை நிலை நாட்டி விடுகின்றனர். இதுதான் களியக்காவிளையில் இரு தரப்பும் கண்ட பலன்.

மவுலீது என்ற பாட்டு புத்தகத்தில் தவறு இருக்கிறதா என்ற வாதமே தேவை இல்லாத ஒன்று. குல்லு பித்அத் ளலாலா குல்லு ளலால பின்னார் என நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள்.

இந்த ஹதீஸ் ஆதார அடிப்படையில் மவுலிது என்ற பாட்டு புத்தகத்தில் உள்ள பாடலை பாடுவதால் நன்மையில்லை நரகமே கிடைக்கும். நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தராத அனைத்துமே பித்அத்கள் தான். பித்அத்கள் அனைத்தும் வழி கேடுகளே. வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டுதான் சேர்க்கும்.

ஸலவாத்துக்கும் அதாவது இறைத்தூதருக்காக இறைவனிடம் கேட்கப்படும் துஆவுக்கும் ஸலாமுக்கும் வித்தியாசம் தெரியாமல் வைக்கப்படும் வாதம்தான் உங்களுடையது.

ஸலவாத் சம்பந்தமாக சொல்லப்பட்ட ஹதீஸை ஸலாம் பைத்துக்கு - பாட்டுக்கு ஆதாரமாக காட்டி உள்ளீர்கள். உங்கள் ஆதாரப்படி இறைத்தூதரை தினமும் நேரில் கண்ட லட்சத்துக்கும் மேற்பட்ட ஸஹாபாக்களில் யாராவது ஒருவர் ஒரு முறையாவது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸலாம் கூறி இருக்கிறார்களா? ஆதாரம் காட்ட முடியுமா?

Shahadullah2006 அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்,

Shahadullah2006 Basirudeen அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்,

shahadullah2006@gmail.com என்ற ஐ.டி. உடையவரே அஸ்ஸலாமு அலைக்கும்,

துபையில் பணி புரிபவரே அஸ்ஸலாமு அலைக்கும்,

யு.ஏ.இ.யில் இருப்பவரே அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்தியாவைச் சார்ந்தவரே அஸ்ஸலாமு அலைக்கும்,

மதராஸியே அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாட்டுக்காரரே அஸ்ஸலாமு அலைக்கும்,

சகதுல்லாஹ் என்பவரே அஸ்ஸலாமு அலைக்கும். இந்த மாதிரி உங்கள் மேல் அதிகாரிக்கு நீங்கள் ஸலாம் சொல்வீர்களா? சொல்லி இருக்கிறீர்களா?

நீங்கள் கூறும் சுபுஹான மவுலிது பாடல்களை யார் எழுதினார்கள் அது பற்றி அந்த பாட்டு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதை அப்படியே ஜெராக்ஸ் செய்து வெளியிடுங்கள். அரபு தமிழில் எழுதப்பட்டுள்ளதை அப்படியே டைப் செய்து வெளியிடுங்கள். பாமரனும் புரிந்து விடுவான் சோத்துக்காக அழைந்துள்ள சோத்து பட்டாளம் எழுதிய பாடல் என்று. வெளியிட தயாரா

Comments

Unknown said…
தமிழக முஸ்லிம்களே,

சகதுல்லாஹ் என்பவர் கேட்டது இது தான்

http://karuppupaiyan.blogspot.com/2007/12/blog-post_13.html

'எங்களிடம் ரகசியமாக சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்த வேலைக்காரர்தான் பி.ஜெ. எனவே ரகசிய கூலி பி.ஜெ. பதில் சொல்லவில்லை என்பதைப் பற்றி ஆச்சரியப்படவில்லை என்று ஃபள்லுல் இலாகி சொல்கிறார்.


ஜாக் ஜமாஅத்தும் தவ்ஹீது ஜமாஅத்தும் பித்தலாட்டம், நயவஞ்சகம், போக்கிரித்தனம் மற்றும் பொருக்கித்தனம் மிகுந்த ஜமாஅத் என்பதை அவருடைய மெயிலைப்பார்த்த பின்புதான் தெரிந்துக்கொண்டேன். ஜாக் ஜமாஅத்தில் பீ.ஜே இருக்கும்போதுதான் சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சம்பளம் பேசுகிறார்கள், இஸ்லாமியப்பணி செய்வதற்கு காசு வாங்குகிறார்கள் என்று கூட்டாக பிரச்சாரம் செய்த இந்த கூட்டம், அதைக்கொண்டு யோக்கியவான்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இந்த கூட்டத்தின் மோசடித்தனம் என்ன தெரியுமா? சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சம்பளம் பேசுகிறார்கள் என்று வீர வசனம் பேசிய இந்த கபோதிகளின் அயோக்கியத்தனம் என்ன தெரியுமா? இஸ்லாமியப்பணி செய்வதற்கு காசு வாங்குகிறார்கள் என்று கூட்டாக பிரச்சாரம் செய்த இந்த கூட்டத்தின் பின்பக்க செயல், பொம்பலைத்தனம் என்னவென்று தெரியுமா?


ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தும் சம்பளம் பேசி இஸ்லாமியப்பணி செய்வதுதான். பைசா இல்லையென்றால் இஸ்லாமியப்பணி கிடையாது. எதையும் நேரடியாக பெறமாட்டார்கள். பின்பக்கமாகத்தான். மார்க்கப்பணி செய்வதற்கு காசு வாங்கலாமா? கூலி பேசலாமா? என்று ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தினர் மேடைகளிலே வீரத்தோடு பயான் செய்வார்கள், மற்றவர்கள் மீது குறைகளை அள்ளிவீசுவார்கள் ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் அனைவரும் அடிமைப்போல வாய் பிளந்து கேட்பார்கள். இதையெல்லாம் பேச இவர்களுக்கு ஏது பணம், இவர்களின் குடும்பம் எப்படி நடக்கிறது சிந்திக்க மாட்டார்கள். மற்றவர்கள் செய்தால் தவறு ஏன் ஷிர்க் என்றுகூட சொல்வார்கள். பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும் இல்லையென்றால் மிருகத்திற்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

சரி விஷயத்திற்கு வருவோம்.

ஜாக் ஜமாஅத்தில் அந்நஜாத் பத்திரிக்கையில் பணி புரிய பி.ஜைனுல் ஆபிதீன் சம்பளம் பேசி பணிபுரிந்தார் என்று ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த பஸ்லுல் இலாஹி சொல்கிறார். என்னங்கடா இது?... ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தும் கூலி பெற்று இஸ்லாமியப்பணி செய்வது மார்க்கமா? மற்றவர்கள் செய்வதுதான் தவறா? திருடாதே என்று சொல்லும் தகுதி திருடனுக்கு கிடையாது. இது தவறு என்று ஜாக்கில் பி.ஜைனுல் ஆபிதீன் இருக்கும்போது பஸ்லுல் இலாஹிக்கு தெரியவில்லையா? இல்லை இஸ்லாமியப்பணி செய்வதற்கு கூலி கொடுக்கும் உயர்ந்த நிலையில் இருப்பதாக நினைத்துக்கொண்டாரா? சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் பற்றி பேச, கூலி பெற்று இஸ்லாமியப்பணி செய்த ததஜ வைச்சேர்ந்த பி.ஜைனுல் ஆபிதீனுக்கும், கூலி கொடுத்த ஜாக் ஜமாஅத்திற்கும் என்ன தகுதி இருக்கிறது? மற்றவர்களை இப்படி பேசி பிழைப்பு நடத்துவதைவிட ததஜ அறிஞர்களும் ஜாக் ஜமாஅத் அறிஞர்களும் திருவோட்டை கையில் எடுத்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தியிருந்தால் அது எவ்வளவோ மேலானதாக இருந்திருக்கும். இஸ்லாமியப்பணிக்கு கூலி கொடுத்தது தவறா? இல்லை கூலியைப்பெற்றது தவறா? ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் இதற்கு பதில் சொல்லட்டும். இல்லையென்றால் அறியாமையில் மூழ்கியிருந்த முட்டாள்களின் வாரிசு என்று சொல்லிக்கொள்ளட்டும். இனிமேலாவது சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் பற்றி பேசும் முன்பு ததஜ அறிஞர்கள் பற்றியும் ஜாக் ஜமாஅத் அறிஞர்கள்பற்றியும் அவர்களின் யோக்கியதைப்பற்றியும் தறுதலைவாதிகள் அறிய முற்பட வேண்டும். சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் ததஜ அறிஞர்களும் ஜாக் ஜமாஅத் அறிஞர்களும் உண்மை முஸ்லிமாக இருப்பார்களானால் மன்னிப்பு கேட்பார்கள்.'

இதற்குத்தான் பதிலும் கேட்டிருக்கிறார்.

இதற்கு பஸ்லுல் இலாஹிக்கோ அவர் கார்ந்திருக்கும் இயக்கங்களுக்கோ மற்றும் தவ்ஹிது ஜமாஅத்தினருக்கோ பதில் சொல்ல யோக்கியதையோ தகுதியோ துணிவோ இல்லை போலும்.

கூலி கொடுத்தது தவறா? இல்லை கூலியைப்பெற்றது தவறா? ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் இதற்கு பதில் சொல்லட்டும். இல்லையென்றால் அறியாமையில் மூழ்கியிருந்த முட்டாள்களின் வாரிசு என்று சொல்லிக்கொள்ளட்டும்.

முகம்மது சாதிக்
Unknown said…
அவர் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள் பஸ்லுல் இலாஹிஅவர்களே, எதற்கு கேட்டதை விட்டுவிட்டு வெத்துவாதத்தை வைத்து புலம்புகிறீர்?

கூலி கொடுத்தது தவறா? இல்லை கூலியைப்பெற்றது தவறா? ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் இதற்கு பதில் சொல்லட்டும். இல்லையென்றால் அறியாமையில் மூழ்கியிருந்த முட்டாள்களின் வாரிசு என்று சொல்லிக்கொள்ளட்டும்.

முகம்மது சாதிக்
Unknown said…
பள்லுல் இலாஹி அவர்களே, நீங்கள் தான் ஆதாரத்தை கொடுத்தீர்கள். ஜாக் ஜமாஅத் இஸ்லாமியப்பணிக்கு கூலி கொடுத்ததையும், தவ்ஹிது ஜமஅத் தலைவர் பி.ஜே கூலி பெற்றதையும் வெளிப்படுத்தியது மூன்றாம் நபர் அல்ல. ஜாக் ஜமாஅத்தைச் சேர்ந்த நீங்கள்தான். ஆதாரத்தையும் காட்டிவிட்டீர்கள். இந்த அளவுக்கு கீழ்தரமான முறையில் நடந்து, இஸ்லாமியப்பணிக்கு கூலி பேசி கொடுத்து இதையெல்லாம் ஜாக் மற்றும் தவ்ஹிது ஜமஅத்துக்கள் செய்ததோடு மட்டுமல்லாமல் யோக்கியவான் போல பிரச்சாரம் செய்து உங்கள் தொண்டர்களையே ஏமாற்றிவிட்டீர்களே. இது மார்க்கத்தில் உண்டா? இல்லையா? மார்க்கத்திற்கு புறம்பான முறையில் நடந்து கொண்டீர்களா? பதிலை சொல்லிவிட்டு போவதைவிட்டுவிட்டு ஏன் வெத்து வாதத்தை வைக்கிறீர்கள்?
Unknown said…
சகதுல்லாஹ் கேட்டது என்ன? பள்லுள் இலாஹி என்ன பதில் கொடுக்கிறார்? பள்லுள் இலாஹி பாணிக்கே வருவோம். மேடைதோறும், முச்சந்திக்கு முச்சந்தி 'சுபுஹான மௌலிதில் தவறு இருக்கிறது' என்று கூக்குரலிட்ட கும்பல் தவ்ஹிது ஜமாஅத்வாதிகள் மற்றும் அதன் தலைவர்கள்தானே! தவ்ஹிது ஜமாஅத் தலைவர் மற்றும் களியக்காவிலையில் நடைப்பெற்ற விவாதத்திற்கும் தலைமை தாங்கிய பீ.ஜே ஏன் மௌனம் சாதித்தார்? பேசவேண்டிய இடத்தில் பேசாமல் பொத்திக்கொண்டு இருந்தது ஏன்? இதை கேட்டால் சேக் அப்துல்லாஹ் ஜமாலியிடம் காசு வாங்கியிருப்பார் என்று பதில் சொன்னால் இஸ்லாமியப்பணிக்கு கூலி கொடுத்து, கூலிக்கு நாவசைக்ககூடியவனுக்கு அந்த புத்தித்தான் வரும். சுன்னத் ஜமாஅத் மௌலவிகள் விவாதத்தில் 'சுபுஹான மௌலிதை' எடுத்து வைத்தார்களா? இல்லையா? சொல்லுங்கள். உங்களுக்கு குர்ஆனிலே மௌலிதுக்கு ஆதாரம் இல்லை என்கிறீரா? குர்ஆனிலே ஆதாரம் வேண்டுமா? உங்களுக்கு தெரியாமல், உங்களுக்கு புரியாமல், உங்கள் அறிவுக்கு எட்டாமல் இருந்தால் மார்க்கத்தில் இல்லை என்று அர்த்தமா? சுன்னத் ஜமஅத் அறிஞர்கள் பங்கேற்ற விவாதத்தில் சுபுஹான மௌலிதைப்பற்றி வாய்திறக்க துப்பில்லை. வெளியே வீராப்பா? இஸ்லாமியப்பணிக்கு 'கூலி' ததஜ, இஸ்லாமியப்பணிக்கு 'முதலாளி' ஜாக் ஜமாஅத்தும் நீங்களுமா? உங்களிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

rifayee74@gmail.com

ரிபாயி
Unknown said…
பொய், பித்தலாட்டம், பொம்பளை விசயத்திற்கு பெயர்போன ஜமாஅத் தவ்ஹிது ஜமாஅத்தாகும். இதை மறுப்பதற்கு ஜாக் ஜமாஅத்தாலும் முடியாத விசயமாகும். கூலிக்கு இஸ்லாமியப்பணி செய்யலாமா? கூலிக்கு மாரடிக்கலாமா என்று சுன்னத் ஜமாஅத்தினரை கேட்டுக்கொண்டே, இது மார்க்கத்தில் உண்டா என்று வீரவசனம் பேசிக்கொண்டே தவ்ஹிது ஜமாஅத் தலைவர் பீ.ஜே வுக்கு கூலி கொடுத்த ஜமாஅத் ஜாக் ஜமாஅத்தாகும். அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? சொந்தப்பணம், பாட்டன் பூட்டன் முப்பாட்டன் தேடி வைத்த சொத்தையா விற்றுக்கொடுத்தார்கள்? பாட்டன் பூட்டன் முப்பாட்டன் தேடி வைத்த சொத்தை பயன்படுத்த ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத்தின் தொண்டர்களுக்கு உரிமை கிடையாது. ஏன் என்றால் அவர்களின் தந்தை, பாட்டன், பூட்டன், முப்பாட்டெனெல்லாம் {ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத் பாணியில் முன்னோர்கள் அறிவீனர்கள்} அறியாமையில் மூழ்கியவர்கள். 'ஷிர்க்' செய்தவர்கள். சொத்து மட்டும் இனிக்குமா? என்று கேட்கும் சுன்னத் ஜமாஅத் இமாம்கள் பெயரை கேட்டாலே ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத்தின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கசப்பது மட்டுமல்ல கதி கலங்குகிறது. அறியாமையில் மூழ்கியிருந்தவர்கள் எப்படி நேர்மையாக சம்பாதித்து இருக்க முடியும் என்று கேட்கும் 'சுன்னத் ஜமாஅத் இமாம்கள் பெயர்களை' கேட்டாலே ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத்தின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தொடை நடுங்குகிறது. சாதாரணமாக 'சுன்னத் ஜமாஅத் இமாம்கள் பெயர்களை' கேட்கும்போதே இப்படியென்றால் 'மத்ஹபுகளான நான்கு இமாம்கள் பெயரை கேட்கும் போது சொல்லவா வேண்டும்.

ரிபாயி
Unknown said…
பஸ்லுல் இலாஹி அவர்களே,

மௌலிதில் தவறு இருக்கா? இல்லையா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். குர்ஆனிலே ஆதாரம் இருக்கிறது. இல்லாமல் இருந்தால் நீங்கள் வக்காலத்து வாங்கும் பீ.ஜே ஏன் மௌனம் சாதித்தார்? தவ்ஹிது ஜமாஅத்தில் இருந்து ஒருவர் சுன்னத் ஜமாஅத்காரரைப்போல பேசி, ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த எஸ்.கமாலுதீன் மதனி என்பவரிடம் நாங்கள் தவ்ஹிது ஜமாஅத்தோடு விவாதம் செய்ய இருக்கிறோம் ஆதாரம் உங்களிடம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்க, அதற்கு எஸ்.கமாலுதீன் மதனி பாக்கியாத்தில் கேளுங்கள், ஜமாலியாவில் கேளுங்கள் என்று சொன்னதாக தவ்ஹிது ஜமாஅத் ஏடான 'ஏகத்துவம்' மாத இதழிலேயே போட்டுள்ளார்கள். சுன்னத் ஜமாஅத்துக்கு தவ்ஹிது ஜமாஅத் செய்த மோசடி என்பது ஒருபுறம் இருக்கட்டும். தவ்ஹிது ஜமாஅத்துக்கு ஆதாரம் கிடைக்காமல் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த எஸ்.கமாலுதீன் மதனி என்பவரிடம் கேட்டால் அவரும் கொடுக்காத காரணத்தால் அவர்கள் திக்குமுக்காடியதைத்தான் களியக்காவிளை விவாதத்தில்தான் பார்க்க முடிந்ததே.

சேக்அப்துல்லா ஜமாலி கூட்டமும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்பதுதான் எமது நிலை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன் என்று சொல்லும் பஸ்லுல் இலாஹியிடம் நான் கேட்பது, உங்களின் நிலைமை என்ன? கூலி பேசிய பீ.ஜே வை இஸ்லாமி பணிக்கு ஜாக் ஜமாஅத் சேர்த்துக்கொண்டது ஏன்? கூலி கொடுத்தது ஏன்? கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்று சுன்னத் ஜமாஅத்தினரை பார்த்து கொக்கரிக்கும் உங்களின் யோக்கியதையைத்தான் கேட்கிறேன். கூலி கொடுத்ததை, பெற்றதை ஒப்புக்கொண்டீர்கள். நீங்கள் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? குர்ஆன் மற்றும் ஹதிஸ் அடிப்படையில் ஆதாரத்தை கொடுங்கள். மற்றவர்களின் குறைகளுக்கு பிறகு வருவோம். ஒரு குற்றத்தை நீங்கள் (ஜாக் மற்றும் தவ்ஹிது ஜமாஅத்) செய்து கொண்டே மற்றவர்களை பேசுவதுதான் குர்ஆன் மற்றும் ஹதிஸ் அடிப்படையில் நடக்கும் உங்கள் தவ்ஹிதோ?

கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் எஸ்.கமாலுதீன் மதனி தலைமையிலான ஜாக் ஜமாஅத்தும், பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தவ்ஹிது ஜமாஅத்தும் தான் என்பதையும் அதற்கு ஆதாரம் பஸ்லுல் இலாஹி என்பவராகிய நீங்கள் தான் என்பதையும் திட்டவட்டமாக பதிவு செய்கிறேன்.

சகதுல்லாஹ்
துபை
//"மவுலிது ஓதுவதால் நன்மையில்லை நரகமே கிடைக்கும். நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள்."//.

நரகம் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என வெறுமென பதித்துள்ளீர்கள் அதற்கு ஆதாரம் எங்கே?
//"மவுலிது ஓதுவதால் நன்மையில்லை நரகமே கிடைக்கும். நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள்."//

நரகம் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என வெறுமென பதித்துள்ளீர்கள் அதற்கு ஆதாரம் எங்கே?

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.