சுய நலனுக்காக சமுதாயத்தின் பெயரால் வாங்கப்பட்ட சீட்டு.

கேள்வியும் நீயே பதிலும் நீயே
குடிசை, தராசு, சிங்கம், ஏணி போன்ற தனிச் சின்னத்தில் நின்றபோதுதான் மு.லீக் ஒரே நேரத்தில் 24 எம்.எல்.ஏ.க்கள் லோக்சா, ராஜ்யசபாவிலுமாக 5 எம்பிக்கள் இருந்துள்ளனர். என்றைக்கு பிற கட்சிகளிக் அடிமைச் சின்னத்தில் மு.லீக் நிற்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்துதான் அழிவு கண்டது மு.லீக்.

தி.மு.க.வின் உதய சூரியன் சின்னத்திலோ, அ. தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலோ நின்றால் இதுதான் கதி. சுயமாக பேச முடியாது. சின்னம் தந்த கட்சிகளின் அடிமைகளாகவேதான் இருக்க முடியும். கொறடா சொல்லும் புருடாக்களைத்தான் பேச வேண்டும். அடுத்த கட்சிகளின் கொறடா சொல்லும் புருடாக்களை பேச சமுதாயத்தின் பெயரால் ஏன் சீட்டு வாங்க வேண்டும். அதனால்தான் த.மு.மு.க.வின் ம.ம.க. சமுதாயத்தின் தன் மான அரசியல் காண தனித்து நிற்கிறது.

2004இல் துபை வந்த காதர் மைதீனிடம் முஸ்லிம் சிறைவாசிகளுக்காக பாராளுமன்றத்தில் பேசுங்கள் என்றபொழுது. நான் தி.மு.க. உறுப்பினர் பேச முடியாது என்றார். சீட்டு வாங்கியவுடன் காதர் மைதீன் அளித்த பேட்டியே qmfuae@gmail.com,noordeen@hotmail.com அவர்களுக்கு பதிலாக உள்ளது.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=12508&Itemid=107

அதிகாலைக்கு காதர் மைதீன் அளித்த பேட்டி இது.

அதிகாலை: (காதர் மைதீன் அவர்களே) பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகள் குறித்து எத்தனை முறை உரையாற்றியிருக்கிறீர்கள்?

பேராசிரியர் : பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்காக ஒதுக்கப்படும் நேரங்களில் கொறடா அனுமதியளிக்கும்போதுதான் நான் பேச முடியும்.

இப்பொழுது சொல்லுங்கள் உதசூரியன் சின்னத்தில் போட்டி இடுவது சிறுபிள்ளை தனமானதா சின்னத்தனமனதா?

தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்காக ஒதுக்கப்படும் நேரங்களில் தி.மு.க. கொறடா அனுமதியளிக்கும்போதுதான் பேச முடியும் என்ற நிலையில் சீட்டு வாங்கினால் அது சமுதாயததுக்காக வாங்கப்பட்டது அல்ல. சுய லாபத்துக்காக சுய நலனுக்காக சமுதாயத்தின் பெயரால் வாங்கப்பட்ட சீட்டு.



--ஆடுதுறையான் .fromThopputhurai 100 முஸ்லிம் லீக் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்

இன்றைய அரசியல் பிரிவுகளுக்கிடைய லீக் ஏணி சின்னத்தில் போட்டி போட்டால் நிச்சியம் எதிர்மறையாக போய்விடும். காரணம் அடிமட்ட மக்கள் ஏணி சின்னம் அவ்வளவு தெரியாது எனவே கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டி போடுவது தான் வெற்றிக்கு வழி வகுக்கும்.
லீக் போட்டி போடும் தொகுதில் 15 முதல் 20 சதவீதம் தான் முஸ்லிம்கள் உள்ளனர், 60 சதவீதம் சகோதர சமுதாய இந்து மக்களும், 20 சதவீதம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். தன்மானம் பேசி திரிபவர்களiன் விமர்சனத்திற்காக நாம் நமது வெற்றி வாய்ப்பை இழக்க கூடாது. இவர்கள் அரசியலில் இப்போது தான் குழந்தை பருவத்தில் உள்ளார்கள். அதனால் தான் சிறுபிள்ளை தனமாகவே அறிக்கைகளும், பேட்டியும் கொடுத்து 60 வருட கட்சி நடத்தும் முஸ்லிம் லீக் தனிசின்னத்தில் போட்டி போடவில்லை என்று ஒப்பாரி வைக்கிறார்கள். இவர்களiன் வாதம் எந்த அளவிற்கு தவறானது என்பது நாம் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் புரியும் இன்றைய கால கட்டத்திற்கு சரியாக வாரது. தொகுதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களும் உள்ளனர் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் ஆனால் பெரிய அளவில் இல்லை.

நம்மிடம் உள்ள கயவர்கள் போட்ட வழக்கும் எந்த எதிர்ப்பும் கொடுக்கவில்லை, நீதிமன்ற தீர்ப்பும் லீக் கட்சிக்கு சார்பாகவே தான் வந்தது. எனவே இந்த தனிசின்னம் என்ற பேச்சு பிறகு சட்டசபை தேர்தல் போது வெள்ளோட்டம் பார்க்கலாம். பல பரிட்சை பார்க்க இதுவல்ல நேரம். ஏணிசின்னம் வேண்டுமானல் கேரளாவில் நன்றாக தெரியும் இங்கு தமிழகத்தில் அப்படி அல்ல. எனவே ஏணி சின்னம் என்று போட்டி போட்டால் அது சுயேச்சை வேட்பாளர் என மக்களுக்கு தோன்றும், இதை பிரபலப்படுத்துவது என்பது வெகு சிரமம். எனவே உதய சூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்பது ஒவ்வொரு சமுதாய கவலை கொண்ட தொண்டர்களiன் கவலை.

Comments

rizwan997 said…
its rightly said sir,its unfortunate that we have such leaders who take the advantage and win by muslim votes for their own favours.we used to say few years ago ''a time will come when muslims will command their rights'' i would say this is that time when we have show our solidarity and support the TMMK canditates and achieve a massive win.insha allah we will win.

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.