நான் தயார். நீங்கள் தயாரா? பகிரங்க சவால்.

இந்த ஆண்டு (2004) டிசம்பர் 6 போராட்டத்தில் சென்னையில் தான் தலைமை தாங்குவதாக விளம்பரப்படுத்திக் கொண்டவர் பி.ஜே. அரஸ்டின் போது அரஸ்ட் ஆகாமல் அங்கிருந்து ஓடி ஒளிந்து கொண்டவர் பி.ஜே. 

அந்த மாவீரர் பி.ஜே. துபை வந்துள்ளார். பூகம்பம் ஏற்பட வேண்டுமானால் அது துபையில்தான் ஏற்பட வேண்டும் அதற்கு தகுதியான பூமி துபைதான். அங்கு பூகம்பம் ஏற்படும் முன் வந்து விடுங்கள் என்று பேசிய பி.ஜே துபை வந்துள்ளார். 

வெளிநாடுகளுக்கு போகக் கூடாது என்பதற்காக பாஸ்போர்ட் சைஸ் போட்டோவைக் கூட கிழித்து விட்டேன் என்று கூறிய பி.ஜே. துபை வந்துள்ளார். வெளிநாட்டிலோ வெளிநாட்டு நிறுவனங்களிலோ உதவி வாங்க மாட்டேன் என்று கூறிய பி.ஜே. துபை வந்துள்ளார். அவரிடம் பழுலுல் இலாஹியை நேரில் சந்திக்கத் தயாரா? என்று கேட்டதற்கு மறுத்து விட்டார்.

அவரது ஆதரவாளர்களோ வசூல் வேட்டையாட வளைகுடா வருகை தரும் வசூல் ராஜாவே வருக வருக என்று 3 பேரின் பெயரில் துபையில் வெளியான நோட்டீஸ் பழுலுல் இலாஹி போட்ட மொட்டை நோட்டீஸ் ஆகும். எனவே மொட்டை நோட்டீஸ்காரர்களை பி.ஜே. சந்திக்க மாட்டார் என பேசி வருகின்றனர். என்னை மொட்டை நோட்டீஸ் போட்டதாகக் கூறும் பி.ஜே.யின் அந்த ஆதரவாளர்களுக்கு பகிரங்க சவால்.

நான் டிசம்பர் ஆறுக்கு ஃபழுலுல் இலாஹியிடம் நிதியாகக் கொடுத்த பெருந்தொகை கிடைத்ததா? என்று நம்மிடம் ஒரு சகோதரர் கேட்ட போது அதிர்ச்சி அடைந்தோம். என்று நோட்டீஸ் போட்ட பி.ஜே. உண்மையாளர் என்றால் அந்த நபரை கொண்டு வந்து நாம் கூறியுள்ள நிபந்தகைகள்படி துபையிலேயே நிரூபிக்க வேண்டும். 

இதற்கான ஏற்பாடுகளை பி.ஜே.யை நல்லவராக நம்பிக்கொண்டுள்ளவர்கள் செய்யத் தயாரா? துபையில் இந்த ஒன்றை அவர்கள் செய்தால் போதும். அவ்வாறு செய்துவிட்டால் அவர்களிடம் வசூல் வேட்டையாட வளைகுடா வருகை தரும் வசூல் ராஜாவே வருக வருக என்ற நோட்டீஸை வெளியிட்டவர்கள் யார் என்பதை அவர்களை நேரில் கொண்டு வந்து நிரூபிப்பேன். 

பி.ஜே.யும் ஏகத்துவம் ஆசிரியர் குழுவும் வெளியிட்ட மொட்டைக் கடிதங்களை ஆதாரத்துடன் காட்டி பி.ஜே. அணிதான் மொட்டைக் கடித பேர்வழிகள் என்றும் நிரூபிப்பேன். பொய்யான தேதி போட்டு பி.ஜே. கொடுத்த கள்ளக் கடிதத்தையும் ஆதாரத்துடன் காட்டுவேன்.

அது மட்டுமல்ல பி.ஜே. ஒரு வசூல் மோசடியாளர், அமானித மோசடியாளர் என்பதற்குரிய ஆதாரங்களையும் காட்டுவேன். ஜிஹாதையும் தண்டனை சட்டங்களையும் அமுல்படுத்துவது அரசாங்கத்தின் மீதுதான் கடமை என பகிரங்கமாக மேடைகளில் பேசிவிட்டு அந்தரங்கத்தில் ரகசியமாக கொலை செய்ய தூண்டிப் பேசி வருபவர்தான் பி.ஜே. என்பதையும் தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு மூலகாரணமாக இருந்து இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்கியவர் என்பதையும் கேஸட் ஆதாரத்துடன் நிரூபிப்பேன்.

பி.ஜே. ஒரு தீவிரவாதி என்பது உட்பட இது போன்று ஏற்கனவே நான் கூறியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் துபையிலேயே நிரூபிக்க நான் தயார். முபாஹலாப் பண்ணச் சொன்னாலும் ஒப்பந்தம் செய்ய தயாராக உள்ளேன். பி.ஜே.யின் ஆதரவாளர்களே! ஏற்பாடு செய்ய நீங்கள் தயாரா?
                                   fh.m.K`k;kJ gOYy; ,yh`p>
                                         Jig.  


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.