முபாஹலாப் பூச்சாண்டி என்ற தலைப்பில் 03-12-2004ல் எழுதியது பலரின் இன்றைய விமர்சனத்திற்கு இதில் பதில் உள்ளது.

ஒருவரை வழிகேடர், மோசமானவர், மட்டமானவர், கரைபடிந்த கரங்களுக்கு சொந்தக்காரர் என குறை கூறிவிட்டு அவர் பேசிய பயான் கேசட்களை காப்பி போட்டு கொடுப்பது சரியா? ஷய்த்தான் நெருங்காமலிருக்க ஷைத்தான் வழி சொன்னானா?

காஞ்சி சங்கராச்சாரியார் பற்றி எழுத தேவை இல்லாத அளவுக்கு தெளிவான செய்திகள் வந்து விட்டன. அவரை பெரியவாள் என்றும் குறிப்பிடுவார்கள். இப்பொழுது பி.ஜே.யை பெரியவாள் என குறிப்பிட்டு எழுதினால் வம்புக்கு எழுதி உள்ளதாகக் கூறுவார்கள். மதுரை மாநாட்டில் பி.ஜே. நடந்து கொண்ட முறை பற்றி லுஹா மூலம் அறிந்ததும் பி.ஜே.யை பெரியவாள் என நமது முந்தைய வெளியீடுகளிலேயே குறிப்பிட்டு எழுதிவிட்டேன். 

எனவே அப்பொழுதே பெரியவாள் என குறிப்பிட்டு எழுதி விட்டதால் இப்பொழுது புரிந்திருப்பீர்கள். ஒவ்வொரு டிசம்பர் 6 ன் போதும் கரசேவைக்கு ஆள் அனுப்பிய ஜெயலலிதா என்று தமிழக முதல்வரை கடுமையாக சாடி வந்த பி.ஜே. இந்த டிசம்பர் 6 பிரச்சார கூட்டங்களில் அடக்கி வாசிப்பதுடன் தமிழக முதல்வரை பாராட்டி அ.தி.மு.க.வினரை விஞ்சிடும் வண்ணம் புகழோ புகழ் என புகழ்ந்துப் பேசி வருகிறார் என்றால் காரணத்தை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

ஒருவரை ஞாபகம் இருக்கிறதா?

மொட்டைக் கடித பேர்வழிகளின் வரிசையில் இப்பொழுது உண்மையை உரத்துக் கூறும் உமர் என்ற பெயரால் மொட்டைக் கடிதங்களை அனுப்பி வருபவர் யார் தெரியுமா? 

நடுநிலையாளர், சமாதான விரும்பி, சமாதானத்திற்காக அதிகம் கவலைப்படுகிறவர், குர்ஆன் ஹதீஸ்களையே பதிலாக எழுதுபவர், அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவர் இப்படி சுத்த சூபியாக தன்னை காட்டிக் கொண்ட ஒருவரை ஞாபகம் இருக்கிறதா? மறந்து விட்டீர்களா? 

மக்களின் இந்த மறதியின் மீதுள்ள நம்பிக்கையில்தானே பொய்யையும் புரட்டையும் துணையாகக் கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இளையவன் பேட்டையார் என அடையாளம் காட்டி உள்ளார்களே அதைப் பார்த்தவர்கள் புரிந்திருப்பார்கள். வெப் சைட்டை பார்க்க வசதி இல்லாதவர்களுக்கு அந்த மொட்டைக் கடித பேர்வழி யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டிய கடமை நமக்கு உள்ளது.


சமாதான புறா போல் உலவி வந்து இப்பொழுது உமர் என்ற பெயரில் உலவி வருவது வேறு யாருமல்ல முத்துப்பேட்டை ஏ. ஆர் பரக்கத் அலிதான் அந்த மொட்டைக் கடித பேர்வழி. இப்பொழுது புரிந்து விட்டீர்களா? 


அவரது சமாதான முயற்சியில் இருந்த சதி திட்டங்களை. அதுபோல் அப்துர்றஹ்மான், ஆதம் என்ற பெயர்களில் மொட்டைக் கடிதங்களை உலவி வரச் செய்துள்ளவர்கள் வேறு யாருமல்ல த.த.ஜவின் ரியாத் நகர் தலைவர் இன்ஜினியர் மீரான் குழுவினர் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 


இந்த மொட்டைக் கடிதங்களே அவர்கள் அசத்தியத்திலும் வழிகேட்டிலும் இருக்கிறார்கள் என்பதற்குரிய மிகப் பெரிய ஆதாரங்களாகும். வழிகேட்டில் உள்ளவர்களை அடையாளம் காட்டும் விதமாக அவர்களை மொட்டைக் கடித பேர்வழிகளாக ஆக்கி இழிவுபடுத்தி வரும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.


தங்கள் சுய நலனுக்காக காலமெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தை பல்வேறு பெயர்களால் கூறு போட்டு சுய லாபம் கண்டவர், உண்மை முஸ்லிம்களை புத்தக வியாபாரிகளாக கேசட் வியாபாரிகளாக சித்தரித்து வருகிறாரே இது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று பலர் கேட்கிறார்கள். 


1980 முதல் அல்லது மார்க்கத்தை அறிந்த நாள் முதல் யார் இஸ்லாமிய புத்தகங்களையும் கேசட்களையும் மாத இதழ்களையும் மக்களிடம் சேர்க்கும் பணிகளை செய்து வருகிறார்களோ அவர்களெல்லாம்  கொள்கைவாதிகள்.  அவர்கள் மீது அல்லாஹ்வின் அருள் என்றென்றும் உண்டாகட்டுமாக! ஆமீன்.


கேசட்களும் புத்தகங்களும் நல்ல விற்பனையாகும் நிலை ஏற்பட்டவுடன் யாரெல்லாம் பப்ளிகேஷன்களும் மீடியா வேர்ல்டுகளும் கேசட் கடைகளும் துவங்கி உள்ளார்களோ அவர்களெல்லாம் வியாபாரிகள் என்பதுதான் உண்மை. 


வியாபார நோக்கு, இலாப நோக்கு இல்லை. கொள்கைக்காகத்தான் பப்ளிகேஷன் என்பது உண்மையானால் ஒரு தர்ஜுமாவுக்கு 100 ரூபாய் லாபம் வைத்து விற்கமாட்டார்கள். 


வியாபார நோக்கு என்பதால்தான் ஒரு தர்ஜுமாவுக்கு 100 ரூபாய்க்கு மேல் இலாபம் வைத்து விலை நிர்ணயம் செய்துள்ளார்கள். இதை விளங்கிக் கொண்டால் வியாபாரிகள் யார்? இலாப நோக்குடையவர்கள் யார்? கொள்கைவாதிகள் யார்? என்பது தெளிவாக புரிந்து விடும்.


ஒருவரை வழிகேடர், மோசமானவர், மட்டமானவர், கரைபடிந்த கரங்களுக்கு சொந்தக்காரர் என குறை கூறிவிட்டு அவர் பேசிய பயான் கேசட்களை காப்பி போட்டு கொடுப்பது சரியா? என்றும் கேட்கிறார்கள். 


நரகில் தூக்கி வீசப்படும் ஒருவன் குடல் சரிந்த நிலையில் திருகையை சுற்றி வருவதுபோல் சுற்றி வரு வான். அவனைப் பார்த்து உனக்கு ஏன் இந்த தண்டனை என கேட்பார்கள். 


அப்பொழுது அவன், நான் மக்களுக்கு உபதேசித்தேன் அதன்படி நான் நடக்கவில்லை அதனால் எனக்கு இந்த தண்டனை என்பான். 



மார்க்கத்தை பிரச்சாரம் செய்த அறிஞன் என்ற அடிப்படையில் சொர்க்கத்தைக் கேட்கும் அறிஞனிடம், நீ மக்கள் உன்னை மார்க்க அறிஞன் என புகழ வேண்டும் என்பதற்காகவே பிரச்சாரம் செய்தாய் எனவே நீ போ நரகிற்கு என கூறப்படும். 


தீயவர்களைக் கொண்டும் அல்லாஹ் தன் மார்க்கத்தை நிலை நாட்டுவான் 


இது போன்ற ஹதீஸ்களெல்லாம் வழிகேடான, மோசமான, மட்டமான, கரைபடிந்த கரங்களுக்கு சொந்தக்காரர்கள் மூலமும் மார்க்கம் கிடைக்கும் என்பதற்குரிய ஆதாரங்களாகும்.


பைத்துல்மால் பாதுகாப்பாளராக அபுஹுரைரா (ரலி) அவர்கள் இருந்தபோது ஒருவன் வந்து திருடி விடுகிறான். அபுஹுரைரா (ரலி) அவர்கள் அவனை பிடித்துவிடுகிறார்கள். இனி வர மாட்டேன் என கெஞ்சவே அபுஹுரைரா (ரலி) அவர்கள் அவனை விட்டுவிடுகிறார்கள். 


மறுநாளும் அதே மாதிரி திருடி இனி வரமாட்டேன் என கூறி விடுபட்டு விடுகிறான். 


3 ஆம் நாள் அபுஹுரைரா (ரலி) அவர்கள் கட்டியாக பிடித்துக் கொள்ளவே நான் ஒரு நல்ல விஷயத்தைக் கற்றுத் தருகிறேன் என்கிறான். என்ன என கேட்க இரவில் படுக்கும்போது ஆயத்தில் குர்ஸி ஓது உன்னை ஷய்த்தான் நெருங்க மாட்டான் என்கிறான் விட்டு விடுகிறார்கள்.



இந்த சம்பவத்தை நபி(ஸல்) அவர்கள் இடத்தில் அபுஹுரைரா (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், அவன் பொய்யன் உன்னிடம் உண்மை சொல்லி உள்ளான் என்று கூறி அவன் ஷய்த்தான் எனவும் அடையாளம் காட்டுகிறார்கள். 

சொன்னவன் ஷய்த்தான்தான் என்றாலும் சொல்லப்பட்ட விஷயம் குர்ஆன் ஹதீஸுக்கு முரண்படவில்லை என்றால் அதை ஏற்றுக் கொண்டு மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.


சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் என்று நவம்பர் 2004 ஏகத்துவம் பத்திரிக்கையில் தலையங்கம் எழுதி உள்ளார்கள். அதில் கொலை செய்வது பெரும்பாவம் என்பதற்குரிய ஆதாரங்களை எழுதி தங்கள் அணி செய்த பெரும்பாவங்களை மூடி மறைக்க முயன்றுள்ளார்கள். 


இதில் அவர்கள் உண்மையாளர்கள் என்றால் ஏகத்துவத்தில் ஆசிரியர் என போடப்பட்டுள்ள லுஹாவுக்கும் மற்றுமுள்ள ஆசிரியர் குழுவுக்கும் பகிரங்க சவால். பி.ஜே. யாருக்கெல்லாம் பத்வா கொடுத்துள்ளார் என்பதை லுஹா மூலம் அறிந்ததைக் கூறி நான் முபாஹலா பண்ணுவேன். 

முபாஹலா பற்றி பக்கம் பக்கமாக எழுதும் லுஹாவும் முபாஹலா மன்னர்களும் பி.ஜே. இதுவரை யாரையும் கொன்றுவிடும்படி பத்வா கொடுத்ததே இல்லை என்று முபாஹலா பண்ண வேண்டும் தயாரா?



டி.என்.டி.ஜே. நெல்லை மாவட்ட தலைவராக ஆக்கப்பட்டுள்ள கோட்டூர் ரபீக் அவர்கள் திருந்தி விட்டார் என்று ஜும்ஆ குத்பாக்களில் பேசி வருகிறார் லுஹா. இப்படி பேசி வரும் லுஹாவிடம் டி.என்.டி.ஜே.தலைவராக ஆன பிறகும் கோட்டூர் ரபீக் கட்ட பஞ்சாயத்து போன்ற மார்க்க விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதை சுட்டிக் காட்டி அவர் திருந்தி விட்டது உண்மையானால் இப்றாஹீம் எலக்ரிகல் விவகாரம் உட்பட அவர் கட்ட பஞ்சாயத்து பண்ணி சேர்த்த முஸ்லிம்களின் சொத்துகளை திரும்ப கொடுக்கச் சொல்லுங்கள் என்று கூறியதற்கு லுஹா கூறியுள்ள பதில் என்ன தெரியுமா? 

அவனை வைத்துதான் இப்பொழுது எங்களுக்கு நல்ல வசூல் வருகிறது. எனவே அவனை இப்பொழுது நாங்கள் நீக்க முடியாது என்று கூறி இருக்கிறார். கோட்டூர் ரபீக் திருந்தி விட்டதாக குத்பா மேடைகளில் லுஹா பேசி வருவது மக்களை ஏமாற்றத்தான் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளுங்கள். 

இல்லை என்றால் டி.என்.டி.ஜே.தலைவராக ஆன பிறகு கோட்டூர் ரபீக் கட்ட பஞ்சாயத்து போன்ற மார்க்க விரோத செயல்களில் ஈடுபடவில்லை என்று முபாஹலா எழுத்தாளர்களும் லுஹாவும் முபாஹலா பண்ணுவார்களா?


மீண்டும் கர்பலாவா என்ற தலைப்பிலான நமது வெளியீட்டை பல பள்ளிவாசல்களில் நோட்டீஸ் போர்டில் வைத்துள்ளனர். அவற்றைக் கிழித்து எறியும் பணியை  இந்த  ததஜ  தீவிரவாதக் கும்பல் செய்துள்ளது. 

இவர்கள் கொலைகாரர்கள் இல்லை, தீவிரவாதிகள் இல்லை, உண்மையாளர்கள் என்றால் ஏன் கிழிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். முபாஹலா பூச்சாண்டி காட்டித் திரியும் அவர்களது தலைமையிடம் நம்மோடு முபாஹலா பண்ணச் சொல்ல வேண்டியதுதானே. 

இப்பொழுது நான் மிகத் தெளிவாக அறிவிக்கிறேன். குண்டு வெடிப்பு வழக்குகளால் சிறையில் உள்ளவர்கள்; அப்பாவிகள். மூலகாரணமானவர் பி.ஜே.தான் என முபாஹலா பண்ணத் தயாராக உள்ளேன். அதற்கு ஆதாரமாக அவரது பேச்சையே போட்டுக் காட்டி முபாஹலா பண்ணுவேன். மறுத்து முபாஹலா  பண்ண  TNTJல் உள்ள தலைவர்கள் தயாரா?



அது மட்டுமா தேடப்படக் கூடிய நிலையில் அரசாங்கத்தால் தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு தங்க வீடு ஏற்பாடு செய்து கொடுத்து தேவைக்கு பணமும் கொடுத்து வந்தவர்தான் இன்று போலீஸ் தரப்பு சாட்சியாக உள்ள பி.ஜே. என்று முபாஹலா பண்ணத் தயார். 


இன்ன இன்னவர்களுக்கு பி.ஜே. பணம் கொடுக்கச் சொன்னார். அரசாங்கத்தால் தேடப்பட்ட இன்ன இன்னவர்கள் மஸ்ஜிதுர் றஹ்மானுக்கு வந்தார்கள் என்று லுஹா சொன்ன தகவல்களைக் கூறி முபாஹலா பண்ணத் தயார். இதை மறுத்து முபாஹலா பண்ண லுஹா தயாரா?


நான் டிசம்பர் ஆறுக்கு ஃபழுலுல் இலாஹியிடம் நிதியாகக் கொடுத்த பெருந்தொகை கிடைத்ததா? என்று நம்மிடம் ஒரு சகோதரர் கேட்ட போது அதிர்ச்சி அடைந்தோம். என்று நோட்டீஸ் போட்ட பி.ஜே. துபை வருகிறார். அதில் பி.ஜே. உண்மையாளர் என்றால் துபை வந்ததும் பெருந்தொகை கொடுத்ததாக கூறியவர் பெயரையும் தொகையையும் அறிவிக்க வேண்டும். அதற்காக பி.ஜே.யும் அந்த நபரும் முபாஹலா பண்ணத் தயார் எனவும் அறிவிக்க வேண்டும். 


வெளி நாட்டில் உள்ளவர்களும் கலந்து கொள்ளும் வகையில் முபாஹலாத் தேதியை 3 மாத இடைவெளி கொடுத்து 2005 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஏதாவது ஒரு தேதியை அவர்களே நிர்ணயித்து அறிவிக்கட்டும். உணர்விலும் ஏகத்துவத்திலும் அந்த அறிவிப்பு வரவேண்டும்.


முபாஹலா பற்றிய தேதி அறிவிப்பு முதன் முதலில் பி.ஜே. கைப்பட எழுதிய கடித பிரிண்டாகத்தான் பத்திரிக்கையில் வரவேண்டும். இல்லை என்றால் தேர்தல் பற்றி அல்முபீனில் வந்ததது தன் பார்வைக்கு வராமல் வந்து விட்டது என்று த.மு.மு.க. தலைமையினரிடம் பொய் சொன்ன மாதிரி பொய் சொல்லி ஏமாற்றி விடுவார். 

எனவே அவர் கைப்பட எழுதிய பிரிண்டாக முதலில் வரவேண்டும். முஹாபலா முகாபலா என பாட்டு பாடித் திரியாதீர்கள். 

முபாஹலா பூச்சாண்டி காட்டும் அனைவருக்கும் இந்த சவால் பொருந்தும். முழு விபரங்களுக்கு பி.ஜே.யின் சவாலை ஏற்று புதிய சவாலையும் ஏற்கிறேன் என்ற தலைப்பில் 01-12-2002ல் பி.ஜேக்கு எழுதி உள்ள கடிதத்தைப் பார்த்துக் கொள்ளவும். தர்ஜுமதுல் குர்ஆனுக்குள் வைத்து கொடுக்கப்பட்ட --- கடித விவகாரங்கள் உட்பட அனைத்திற்கும் முபாஹலா பண்ண முபாஹலா மன்னர்கள் தயாரா?

மொட்டைக் கடித பேர்வழிகளை தலைவர்களாக ஏற்றுக் கொண்டு அவர்கள் கட்டளைப்படி மொட்டைக் கடிதங்கள் எழுதியவர்களில் பலரை முன்பு அடையாளம் காட்டி இருக்கிறோம். 

அந்த வரிசையில் இன்னுமுள்ள மொட்டைக் கடித ஏஜெண்டுகளை அடையாளம் காட்ட இருந்தோம். நோன்பும் அதை ஒட்டிய பணிகளாலும்தான் நமது இந்த வெளியீடு வர கால தாமதமாகிவிட்டது. இந்த கால தாமதமதத்தை பயன்படுத்தி இனி பழுலுல் இலாஹியிடமிருந்து பிரசுரம் வராது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். அப்படி பிரச்சாரம் செய்பவர்கள் பொய்யர்களே என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள்.


பிறை பற்றி பிரம்மாண்ட சண்டை.


பெருநாள் பிறை சம்பந்தமாக டி.என்.டி.ஜே.யினருக்குள் நாகூர் பள்ளியில் பெருநாள் அன்று சண்டை நடந்துள்ளது. நீ வெளியே போ, நீ யார் என்னை வெளியே போகச் சொல்ல நீ வெளியே போ என ஒரு டி.என்.டி.ஜே.யைப் பார்த்து இன்னொரு டி.என்.டி.ஜே. சப்தம் போட பிறை பற்றி பிரம்மாண்ட சண்டையை பள்ளிக்குள் நடத்தி பெருநாள் கொண்டாடி இருக்கிறார்கள். துபையிலெல்லாம் வசூலித்த பித்ராக் காசுகளை டி.என்.டி.ஜே. முறையாக வினியோகிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் வேறு வந்த வண்ணம் உள்ளது. நாகை மாவட்டம் ஆழியூர், திருப்பூண்டி போன்ற இடங்களில் டி.என்.டி.ஜே. சார்பில் வினியோகம் செய்ததாக உணர்வில் போட்டுள்ளார்கள். அங்குள்ளவர்களிடம் கேட்டால் இல்லை என்கிறார்கள்.

மேகம் குடை பிடித்து விட்டது

திருவிழாக் கூட்டங்களில் பஸ் ஸ்டாண்டுகளில் கடை வைத்திருப்பவர்கள்தான் எங்க கடைக்கு வாங்க எங்க கடைக்கு வாங்க என கூப்பிடுவார்கள். ஒரு சின்ன ஊரில் பல பள்ளிகள் இருந்தாலும் எந்த பள்ளியிலும் எங்க பள்ளியில் தொழ வாருங்கள் என்று தனி அழைப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள். 

டி.என்.டி.ஜே. மவுலவிகளின் பிழைப்புக்காக கைப்பற்றியுள்ள பள்ளிகளில் ஒன்றான மஸ்ஜிதுர் றஹ்மானில் இந்த கூத்து நடந்துள்ளது. ஓட்டுக் கேட்டு ஆட்டோவில் மைக் வைத்து தெருத் தெருவாய்ப் போய் ஆதரவு திரட்டி விளம்பரம் செய்வார்கள். 

அதுபோல் பெருநாள் தொழுகை தொழ எங்க பள்ளிக்கு வாருங்கள் என்று ஆதரவு திரட்டி தெருத் தெருவாயும் விளம்பரம் செய்துள்ளனர். பள்ளியிலும் மைக்கைப் போட்டு எங்க பள்ளிக்கு தொழ வாருங்கள் என்று அழைத்தவாறு இருந்துள்ளனர். 

பெருநாள் தொழுகையை நபி வழியில் திறந்தவெளியில் தொழ வேண்டும் என்று கூறி வந்தவர்கள் இப்பொழுது வழி தவறி விட்டார்கள் என்பதை அடையாளம் காட்டும் வண்ணம் இந்த ஆண்டு மழையைக் காரணம் காட்டி பள்ளியில் தொழுதுள்ளனர். 

அதே ஊரில் 2 இடத்தில் திறந்தவெளியில் தொழுகை நடந்துள்ளது. அவர்களுக்கு மட்டும் மேகம் குடை பிடித்து விட்டது போலும். இது போன்ற ஏகப்பட்ட செய்திகள் நிரம்பி உள்ளன.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.