வசூல் வேட்டையாட வளைகுடா வருகை தரும் வசூல் ராஜாவே வருக! வருக!!

அஸ்ஸலாமு அலைக்கும். முனாழராவானாலும் முபாஹலாவானாலும் அதில் உடன்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்த சவாலையும் எந்த ரூபத்திலும் சந்திக்க பச்சைக் குழந்தையைக் கூட தூக்கிக் கொண்டு ஓடியவன் நான். சவால் என்றால் சக்கரைப் பொங்கல் சாப்பிடுகிற மாதிரி. அதை இலங்கை சென்றும் சந்திக்க தயங்க மாட்டேன் என்று தங்களைப் பற்றி பெருமையாக வீரம் பேசி பீற்றிய பி.ஜே. அவர்களே! உங்கள் வீரம் என்ன ஆயிற்று?
முபாஹலா பண்ணலாம் என்ற கொள்கையில் உள்ள பி.ஜே, ஸைபுல்லாஹாஜா, ஷம்சுல்லுஹா, எம்.எஸ். சுலைமான், எம்.ஐ. சுலைமான், அலாவுதீன், பாக்கர், அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, காஜா பிர்தவ்ஸி உட்பட டி.டின்.டி.ஜே.யில் உள்ளவர்கள் மீது நான் கூறி உள்ள குற்றச்சாட்டுகளைக் கூறி முபாஹலா பண்ண நான் தயார். அதை மறுத்தும் என் மீது அவர்கள் கூறி உள்ள குற்றச்சாட்டுகளைக் கூறியும் முபாஹலா பண்ண அவர்கள் தயாரா? என்கிறார் பழுலுல் இலாஹி.

நான் டிசம்பர் ஆறுக்கு ஃபழுலுல் இலாஹியிடம் நிதியாகக் கொடுத்த பெருந்தொகை கிடைத்ததா? என்று நம்மிடம் ஒரு சகோதரர் கேட்ட போது அதிர்ச்சி அடைந்தோம். என்று நோட்டீஸ் போட்ட பி.ஜே. துபை வருகிறார். அதில் பி.ஜே. உண்மையாளர் என்றால் துபை வந்ததும் பெருந்தொகை கொடுத்ததாக கூறியவர் பெயரையும் தொகையையும் அறிவிக்க வேண்டும். அதற்காக பி.ஜே.யும் அந்த நபரும் முபாஹலா பண்ணத் தயார் எனவும் அறிவிக்க வேண்டும். வெளி நாட்டில் உள்ளவர்களும் கலந்து கொள்ளும் வகையில் முபாஹலாத் தேதியை 3 மாத இடைவெளி கொடுத்து 2005 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஏதாவது ஒரு தேதியை அவர்களே நிர்ணயித்து அறிவிக்கட்டும் என்று எழுதப்பட்ட முபாஹலா பூச்சாண்டி என்ற பிரசுரத்திற்கு பதில் தருமாறு கோவை கூட்டத்தில் அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி இடம் கொடுத்ததற்கு கிழித்து எறிந்துள்ளார். நீங்களோ அந்த கூட்டத்திற்கு வராமல் ஓடி ஒளிந்துள்ளீர்கள். எங்கே உங்கள் வீரம்?

எந்தக் கேள்வியாக இருந்தாலும் எப்படிப்பட்ட கேள்வியாக இருந்தாலும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கேட்டாலும் விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கில் கேட்டாலும் பதில் சொல்வோம் என்று பேசி வந்த உங்கள் கூட்டம் பழுலுல் இலாஹி என்பவர் முன் ஆடிப் போய் விட்டது ஏன்? அந்நஜாத் அபு அப்துல்லாஹ்வில் துவங்கி த.மு.மு.க, முஸ்லிம் டிரஸ்ட் வரை அனைத்து விஷயங்களிலும் நீங்கள் பொய்யர் என்பதை நிரூபித்து முபாஹலா பண்ணத் தயார் என்கிறார். அது மட்டுமா தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு பி.ஜே.தான் மூல காரணமானவர் என்று பி.ஜே.யின் ரகசிய வாக்கு மூல ஆதாரத்தைப் போட்டுக் காட்டி நிரூபித்து முபாஹலா பண்ணுவேன் என்கிறார். அதுவும் நீங்கள் கொண்டு வரும் சாட்சிகளைக் கொண்டே நிரூபிப்பேன் என்கிறார்.

முபாஹலா பண்ணக் கூடாது அது ஹராம் என்ற கொள்கையில் உள்ளவர்களை முபாஹலாவுக்கு வாருங்கள் என்பது வீரமா? முபாஹலாவுக்குத் தயார். பி.ஜே. மீதுள்ள குற்றச்சாட்டுகளை இப்பொழும் பி.ஜே.யுடன் இருப்பவர்களைக் கொண்டே நிரூபித்து முபாஹலா பண்ணுவேன். பி.ஜே. அணியில் உள்ளவர்களை அழைத்து வர பி.ஜே. தயாரா? பி.ஜே.யை அழைத்து வர பி.ஜே. அணியினர் தயாரா? என்று தயாராக உள்ளவருடன் முபாஹலா பண்ணுவது வீரமா? எனவே 2005 மார்ச் அல்லது ஏப்ரலில் ஒரு தேதியையும் எந்த ஊரில் என்ற விபரத்தையும் அறிவிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இவண்:-
பாரூக்,ரஸாக்,முஹம்மதுகாஜா

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.