த.மு.மு.க.விலிருந்து விலகியது ஏன்? புதுக் காரணம் கூறியுள்ள பி.ஜே.

உண்மையான மனம் திறந்த மடல் 3.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இப்பொழுது டி.என்.டிஜே. என்ற அமைப்பில் இருக்கும் பீ.ஜைனுல்ஆப்தீன் உலவி அவர்களே! தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால் த.மு.மு.க.விலிருந்து விலக்கப்பட்டதுபோல் மக்களை நம்ப வைக்க அதற்குரிய வாசகங்களை உங்கள் விருப்பப்படி அமைத்து உங்கள் கைப்பட எழுதிய முக்கிய அறிவிப்பை பத்திரிக்கையில் வெளியிட்டீர்கள். தங்களது அந்த முக்கிய அறிவிப்பு வெளியானதும் முக்கிய அறிவிப்பில் உள்ள முக்கிய வாசகம் எனும் பெயரில் விளக்க இதழ் வெளியிட்டோம். அதில் கடந்த காலங்களில் நீங்கள் ஒவ்வொரு நிறுவனங்களிலிருந்தும் வெளியேறும்போதெல்லாம் முதலில் கூறிய காரணத்தையும் பிறகு அது அல்ல என்று வேறு ஒரு காரணத்தையும் கூறி வந்துள்ளதை நினைவூட்டி இருந்தோம்.

மேலும் நீங்கள் தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால் த.மு.மு.க.விலிருந்து விலகவில்லை என்பதையும் திட்டமாக எழுதியதுடன் த.மு.மு.க.வுக்கு சொந்தமான முஸ்லிம் டிரஸ்டின் சொத்துப் பிரச்சனைதான் காரணம் என்பதையும் விளக்கி எழுதி இருந்தோம். அந்த இதழ் வெளியானதும் உங்களைப் பற்றி தெரியாத உங்கள் பின்னால் உள்ளவர்களில் உங்கள் வார்த்தைப்படி 18, 20 வயது பாலகர்களெல்லாம் எம்மை கடுமையாக விமர்சித்தார்கள். அவர்களில் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்கள் இருந்தால் உணர்ந்து திருந்தக் கூடிய ஒரு வாய்ப்பு அவர்களுக்கு அளித்து எனது விளக்க இதழ்களை உண்மை படுத்தி உள்ளீர்கள். அதற்காக முதலில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
த,மு.மு.க.விலிருந்து விலகிய காரணம்.
ஏற்கனவே பொய்ச் செய்திகளை பரப்பி ஆதாயம் கண்டுவிட்ட நீங்கள் 28-09-2004 அன்று உணர்வு அலுவலகம் தாக்கப்பட்டது, அலாவுதீன் தாக்கப்பட்டார் போன்ற பொய்ச் செய்திகளை பரப்பி ஆதாயம் அடைய முற்பட்டீர்கள். அதை பிரபலப்படுத்த மறு நாள் 29-09-2004 அன்று சென்னையில் உள்ள பிரஸ் கிளப்பில் நிருபர்களை சந்தித்து அறிக்கை அளித்து பேட்டி கொடுத்தீர்கள். அந்த நிகழ்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை 1995 ல் துவங்கினோம். தூய்மையான இயக்கமாக செயல்பட்டு வந்த இந்த இயக்கம் நன்கு வளர்ச்சியடைந்ததும் அதன் நிர்வாகிகள் பெரும்பான்மையோர் தடம் புரண்டனர், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டனர். அரசியல் வாதிகளுக்கு பாராட்டு விழா நடத்துவது போன்ற காரணங்களால் அவர்களை விட்டு; எங்கள் ஜமாஅத்தினர் முழுமையாக பிரிந்து விட்டோம் என்று புதுக் காரணம் கூறியுள்ளீர்கள்.
அறியாமல் கூறி விட்ட உண்மை.
தவ்ஹீது பிரச்சனையால் விலக்கப்பட்டதாகக் கூறி மக்களிடம் ஆதாயம் தேடி வந்த நீங்கள் அதிலிருந்து மாறுபட்டு இப்பொழுது வேறு ஒரு பொய்க் காரணத்தைக் பத்திரிக்கையாளர்களிடம் கூறி உள்ளீர்கள். யார் யாரிடம் என்ன என்ன காரணங்கள் கூறினால் ஆதாயம் கிடைக்கும். எந்த எந்த நேரத்தில் எப்படி எப்படி காரணங்கள் கூறினால் அனுதாபம் கிடைக்கும் என்று யோசித்து அவ்வப்போது ஒவ்வொரு காரணங்கள் கூறுவீர்கள். அதற்கு இந்தப் பேட்டியும் ஒரு ஆதாரமாகும். இந்த பேட்டியில் உங்களை அறியாமல் ஒரு உண்மையை கூறி உள்ளீர்கள். இதுவரை உங்களை த.மு.மு.க.விலிருந்து நீக்கி விட்டதாக கூறி மக்களின் அனுதாபத்தை பெற்று வந்த நீங்கள் அவர்களை விட்டு; பிரிந்து விட்டோம் என்ற உண்மையை நிருபர்கள் கூட்டத்தில் கூறி உள்ளீர்கள். அல்ஹம்துலில்லாஹ். இவ்வளவு குறுகிய காலத்தில் உங்கள் மூலம் இந்த உண்மையை வரச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
சற்று எட்டிப்பார்த்துள்ள இன்னொரு உண்மை.
1980 முதல் தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்பட்டு வந்தோம் என்றும் அந்த பிரஸ் மீட்டிங்கில் கூறி உள்ளீர்கள். தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு 1980 ல் எந்த ஊரில் யார் தலைமையில் இருந்தது என்று சொல்லி இருந்தால் இது பற்றிய உண்மைகளையும்? மக்கள் அறிய வாய்ப்பாக இருந்திருக்கும். இன்னொரு உண்மையும் நிருபர்கள் கூட்டத்தில் சற்று எட்டிப்பார்த்துள்ளது. என்ன எட்டிப் பார்த்துள்ளது. நீங்கள் த.மு.மு.க.விலிருந்து வெளியேறிய காரணம் என்ன என்பதை 20-04-2004ல் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் உள்ள முக்கிய வாசகம் என்ற விளக்க இதழிலேயே குறிப்பிட்டு விட்டோம். அதில் 4 மாதங்களுக்கு முன்பே சொன்னது என்ற உட்தலைப்பில் எழுதியதை மீண்டும் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன்.
சொத்துக்கு ஆசைப்பட்டவர் நடத்திய கேன்வாசிங்.
த.மு.மு.க.வுக்காக உருவாக்கப்பட்டதுதான் முஸ்லிம் டிரஸ்ட்டும் முஸ்லிம் மீடியா டிரஸ்ட்டும்;. நீங்கள் த.மு.மு.க.வின் தலைமையில் எந்த பொறுப்பிலும் இல்லை. எந்த செயல்பாடும் செய்வது இல்லை. எனவே டிரஸ்ட்டுகளின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுங்கள். டிரஸ்ட்டை த.மு.மு.க. தலைமை நிர்வாகிகளிடம் ஒப்படையுங்கள் என்பதுதான் பி.ஜேயை நோக்கி தலைமையை உணர்ந்தவர்கள் வைத்த கோரிக்கை. 4 மாதங்களுக்கு முன்பே நண்பர்களிடம் குறிப்பாக மேலப்பாளையவாசிகளிடம் சொன்னேன். டிரஸ்ட்டுகளை கைப்பற்ற (டிரஸ்ட் உறுப்பினர்களிடம்) கேன்வாஸ் நடக்கிறது. டிரஸ்டுகள் பி.ஜேக்கு என்று ஆனதும் த.மு.மு.கவிலிருந்து பி.ஜே. பாக்கர் வெளியேறுவார்கள் என்று. வஹியா வந்தது என்று கேட்காதீர்கள். அந்த அளவுக்கு சொத்துக்கு ஆசைப்பட்டவர் நடத்திய கேன்வாசிங் கடல் கடந்து மணந்தது என்று குறிப்பிட்டிருந்தேன்.
அபகரிக்கும் நோக்கமே.
முதலில் ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு வெளி வராமல் இருந்த இந்த உண்மை hவவி:ஃஃறறற.pதஎளவஅஅம.உழஅ என்ற வெப் சைட்டில் வேஷம் கலைந்தது என்ற தலைப்பில் த.மு.மு.க. துணைப் பொதுச் செயலாளர் அமீருத்தீன் அவர்கள் தனிப்பட்ட முறையில் வெளியிட்டுள்ள விளக்க இதழில் சற்று கசிந்துள்ளது. அதிலிருந்து சிலற்றைப் பார்ப்போம் :
பி.ஜே. தடுத்துவிட்டார்..
..சென்ற ஆண்டு த.மு.மு.க. பெயரிலேயே ஒரு டிரஸ்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டு, முன்னாலிருந்த (முஸ்லிம் டிரஸ்ட்டும் முஸ்லிம் மீடியா) டிரஸ்டு சொத்துக்களை அதன் பெயருக்கு (அதாவது த.மு.மு.க. பெயருக்கு) மாற்றுவதற்கு எடுத்த முயற்சிகளை பி.ஜே. தடுத்துவிட்டார்..
டிரஸ்டு சொத்துக்களை அபகரிக்கும் நோக்கமே.
..த.மு.மு.க. அறக்கட்டளைக்கு முந்தைய சொத்துக்கள் மாற்றப்பட்டு இருந்தால் அல்லது அந்த டிரஸ்டுக்கு பி.ஜே. தலைவராக இல்லாது இருந்திருந்தால் அவர் ஒருபோதும் த.மு.மு.க.வை விட்டு விலகிப்போயிருக்க மாட்டார். டிரஸ்டு சொத்துக்களை அபகரிக்கும் நோக்கமே அவர் த.மு.மு.க.வை விட்டு விலகுவதற்கு காரணம் ...
அபகரிக்கும் கெட்ட நோக்கத்துடன்தான்.
..பி.ஜே. த.மு.மு.க.விற்கு சொந்தமான முஸ்லிம் மீடியா டிரஸ்ட் மற்றும் முஸ்லிம் டிரஸ்டு சொத்துக்களை அபகரிக்கும் கெட்ட நோக்கத்துடன்தான் த.மு.மு.க.வை விட்டு விலகிக் கொண்டார்...
பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்..
..த.மு.மு.க. தொண்டர்களுக்கும், ஆதரவு தந்த பொதுமக்களுக்கும் இந்த டிரஸ்டு சொத்துக்களின் விபரம் தெரியாது இருப்பதை இப்போது பி.ஜே. தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்..

..அவர் சொன்னதுபோல் அவருக்குரிய விலை அச்சொத்துக்களில் அவருக்கு கிடைத்துவிட்டது...

..நாடகம் நடித்து, நம்பிக்கைத் துரோகமும் செய்துவிட்டார்...

..ஆரம்பத்தில் தொண்டியில் கேட்பாரற்று கிடந்தவரை சென்னைக்கு கொண்டு வந்தோம். வாழ்க்கை வசதிகளை செய்து கொடுத்தோம். புரசைவாக்கம் அடுக்குத் தட்டு வீடு ஒன்றில் குடும்பத்துடன் குடியமர்த்தினோம்..
..டாட்டா சுமோவை அவருக்காக காத்திருக்க வைத்தோம்...

வேஷம் கலைந்தது என்ற விளக்க இதழில் அமீருத்தீன் அவர்கள் இப்பொழுது 2004ல் குறிப்பிட்டுள்ளவற்றை இரண்டாயிரத்திலேயே (2000) நாம் நேரில் அறிந்து விட்டோம். அதன் வெளிப்பாடுதான் 2 ஆண்டுகளுக்கு முன் மேலப்பாளையம் ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான் ஆகியவர்களின் பொய் சத்தியம் பற்றி எழுதிய விளக்க இதழில்;, த.மு.மு.க அமைப்பாளர் பதவியை விட்ட நீங்கள் அதற்கு சொந்தமான முஸ்லிம் டிரஸ்டு தலைவர் பதவியை கட்டியாக பிடித்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். சொத்துக்கு ஆசைப்பட்டவர் நடத்திய கேன்வாசிங் கடல் கடந்து மணந்தது. என்று குறிப்பிட்டிருந்தேனே எப்படி மணந்தது?
அப்பொழுதே டிரஸ்ட்டு பிரச்சனை என எப்படி எழுத முடிந்தது.
எங்குமே நேரடி பேச்சில் ஈடுபடாமல் வேறு ஆட்கள் மூலம் பதம் பார்க்கும் நீங்கள். முஸ்லிம் டிரஸ்ட் விஷயத்தில் நமது நாடித் துடிப்பைப் பார்த்தீர்கள். என்ன இருந்தாலும் டிரஸ்ட் பி.ஜே. இடம் இருந்தால் தவ்ஹீது பிரச்சாரத்திற்குதானே பயன்படும். ஜவாஹிருல்லாஹ் ஹைதர்அலியெல்லாம் தவ்ஹீது பிரச்சாரம் செய்வார்களா? என்று ஆள் வைத்து பதம் பார்த்தீர்கள்.

அப்பொழுது, தவ்ஹீது பிரச்சாரத்திற்காக த.மு.மு.க. சொத்தை அபகரிக்கலாம் என்ற வாதம் வைக்கும் நீங்கள், உங்கள் சொத்தை அபகரித்து இது உங்களிடமிருந்தால் தவ்ஹீதுக்கு பயன்படாது அதனால் அபகரித்தேன் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேட்டேன். அதனால்தான் அப்பொழுதே இது டிரஸ்ட்டு பிரச்சனை என என்னால் எழுத முடிந்தது. உங்களுக்காக கேன்வாஸ் செய்தவர் அரபு நாட்டில் சிறு தொழில் தொடங்க இப்போதைக்கு உங்கள் ஆதரவாளராக உள்ளவர் பொருளாதார உதவி செய்துள்ளது கூட கேன்வாசின் நன்றிக் கடனோ? என்னவோ?
ஆயுள் கால சேர்மனாக நான் இருந்து வருகிறேன்.
உங்கள் பேட்டியில் எட்டிப் பார்த்துள்ள உண்மைக்கு வருவோம். த.மு.மு.க. தலைமை அலுவலகம் இருந்து வரும் வட மரைக்காயர் தெருவில் உள்ள 7 ஆம் நம்பர் கட்டிடம் பற்றியும் அந்த பேட்டியில் கூறியுள்ளீர்கள். எப்படி கூறி உள்ளீர்கள். 7, வட மரைக்காயர் தெருவில் உணர்வு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முஸ்லிம் டிரஸ்டுக்கு சொந்தமானது. முஸ்லிம் டிரஸ்டின் ஆயுள் கால சேர்மனாக நான் இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளீர்கள்.
என்றைக்காவது மக்களுக்கு தெரிவித்தீர்களா?
த.மு.மு.க.விலிருந்து வெளியேறிய பின் எங்கு போனாலும் என்ன பேசினாலும் முஸ்லிம் டிரஸ்ட், முஸ்லிம் மீடியா டிரஸ்ட், டிரஸ்ட்டுகளின் சேர்மண், முஸ்லிம் டிரஸ்டுக்கு சொந்தமான என வார்த்தைக்கு வார்த்தை வரிக்கு வரி கூறி வரும் பி.ஜே. அவர்களே! த.மு.மு.க.விலிருந்து வெளியேறும் வரை அதை முஸ்லிம் டிரஸ்ட் இடம் என்று என்றைக்காவது சொன்னீர்களா? நீங்கள்தான் அதன் ஆயுட்கால சேர்மண்னாக தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள் என்பதை என்றைக்காவது மக்களுக்கு தெரிவித்தீர்களா?
விரைவிலேயே மிகத் தெளிவாக அம்பலமாகும்.
த.மு.மு.க.விலிருந்து வெளியேறிய பின் வந்த உணர்வில்தான் முதன் முறையாக முஸ்லிம் டிரஸ்டின் சேர்மண் பீ.ஜெயினுல் ஆப்தீன் என அறிக்கை வெளியிட்டீர்கள். ஆக உங்களின் இந்த பேட்டி மூலம் த.மு.மு.க.வுக்கு உரிய சொத்தை நீங்கள் கொடுக்காததுதான் காரணம் என்ற உண்மை எட்டிப் பார்த்துள்ளது. ஜே.டி. பேட்டியிலும் டிரஸ்ட்டை விட்டு வெளியேத்தலை. என்று டிரஸ்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறீர்கள். எனவே டிரஸ்ட்டு மோசடிதான் உங்கள் விலகலுக்கான உண்மைக் காரணம் என்பது வெகு விரைவிலேயே மிகத் தெளிவாக அம்பலமாகும் இன்ஷh அல்லாஹ்.
பி.ஜே.யின் முரண்பாடுகளை ஏன் சுட்டிக் காட்டவில்லை.?
உணர்வு அலுவலகம் தாக்கப்பட்டது என்பதை முதல் எழுத்தாக இடம் பெறச் செய்து இயன்ற வரை பொய்ச் செய்திகளை வெளியிட முயற்சித்துள்ளீர்கள் என்பதை அடையாளம் காட்டி விட்டீர்கள். விண் டி.வி.யில் சொல்லப்பட்ட பொய்ச் செய்தியையும் ஸைபுல்லா, சித்தீக், அலாவுதீன் ஆகியோர் கூறி இருந்த பொய்ச் செய்திகளையும் முந்தைய வெளியீட்டில் சுட்டிக் காட்டி இருந்தீர்கள். அதே மாதிரி பி.ஜே. கூறியுள்ள பொய்களை நேரடியாக சுட்டிக் காட்டவில்லையே ஏன்? என பலர் கேட்டார்கள். ஸைபுல்லா, சித்தீக், அலாவுதீன், பாக்கர் என யார் கூறி இருந்தாலும் அதன் மூலப்பிதா பி.ஜே.தான் என்பதால் பி.ஜே. நேரடியாக கூறியுள்ள பொய்களுக்குரிய முரண்பாடுகளை சுட்டிக் காட்டவில்லை என்று கூறினோம். இப்பொழுது அதையும் அடையாளம் காட்ட வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது.
இவர்களல்லவோ பொறுப்பாளர்கள்!
முதலில் முந்தைய இதழின் தொடருக்கு வருவோம். எஸ்.ஐ. ஆட்டோ புடுச்சி போட்டுக்கிட்டு நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் அவனே கேஸ் எழுதி அவனே ஆஸ்பத்திரியில் சேர்த்தான் என்கிறார் சித்தீக். பிறகு எப்.ஐ.ஆர். இன்னும் போடவில்லை என்றும் அதே சித்தீக் அந்த பேட்டியிலேயே முரண்படுகிறார். சித்தீக்குக்கு சித்தீக்கே முரண் என்றால் பேட்டி காணும் அதிரை ஜமாலும் எப்ஐ.ஆர். போடச் சொல்ல வேண்டியதுதானே அண்ணே என்கிறார். ஆகா இவர்களல்லவோ பொறுப்பாளர்கள்! எப்.ஐ.ஆர். என்றால் என்னவென்று தெரியாதவர்களெல்லாம் மாநில நிர்வாகிகளாம்? மண்டல பொறுப்பாளர்களாம்?
உங்களிடையே உள்ள முரண்பாடுகளுக்கு என்ன பதில்?
எஸ்.ஐ. ஆட்டோ புடுச்சி போட்டுக்கிட்டு கொண்டு போனார் என்கிறார் சித்தீக். கோட்டூர் ரபீக்கின் காரில் ஏற்றி கொண்டு சென்றார் என்கிறார் அலாவுதீன். வௌ;வேறு நிர்வாகங்களின் கீழ் உள்ள வௌ;வேறு பத்திரிக்கைகளில் வந்த இரவு, 8.30, 9.00 போன்ற வார்த்தைகளைக் கொண்டு முரண்பாடுகள் என்று வாதித்து பொய்க்கு ஆதாரம் என்று கூறிய அறிஞர் பெருந்தகையே! ஒரே தலைமையின் கீழ் இயங்கும் உங்களிடையே உள்ள இந்த முரண்பாடுகளுக்கு என்ன பதில்?
கோட்டூர் ரபீக் மட்டும் மேலே இருந்தது ஏன்?
கோட்டூர் ரபீக் த.மு.மு.க. தலைமை அலுவலகம் இருக்கும் கட்டிடத்திற்கு வந்தது எதார்த்தம் என்று வாதிக்கிறீர்கள். கோட்டூர் ரபீக் எதார்த்தவாதி என்றால், ஷஷகோட்டூர் ரபீக் இரண்டாம் தளத்தில்தான் இருந்தார். நான் நினைத்திருந்தால் அவரை துணைக்கு அழைத்திருக்க முடியும். ஆனால் அதை நான் செய்யவில்லை|| என அலாவுதீன் கூறி உள்ளது ஏன்?; கீழே தகராறு என்றதும் மாநில பொறுப்பில் உள்ள அலாவுதீன் உட்பட எல்லாhரும் கீழே போய் இருக்கும்போது மாவட்ட பொறுப்பில் உள்ள கோட்டூர் ரபீக் மட்டும் கீழே போகாமல் தயங்கி மேலேயே இருந்தது ஏன்? கீழே காவல்துறை குவிக்கப்பட்டிருக்காவிட்டால் அசம்பாவிதம் நடந்திருக்கும் என்பதற்கு இது ஆதாரமாக உள்ளதா? இல்லையா?
உங்களை கவனித்து வருபவர்கள் புரிந்து விட்டார்கள்.
அல்குர்ஆன் 49:9 வது வசனப்படி த.மு.மு.க.வினரை எதிர்த்து போர் புரிய வேண்டும் என்று வெறி உணர்வைத் தூண்டி 1.10.04 அன்று பேசினீர்கள். சட்டத்திலிருந்து தப்பிக்க குறைந்த பட்சம் குரல் கொடுக்க வாருங்கள் என்றீர்கள். அதை டி.வி.யில் தொடர்ந்து ஒளி பரப்பவும் செய்தீர்கள். மேலோட்டமாக பார்ப்பவர்களும் உங்களைப் பற்றி தெரியாதவர்களும் ஜனநாயக போராட்டத்துக்கு அழைக்கிறீர்கள் என்றே எண்ணுவார்கள். அந்த பேச்சு மூலம் உங்களுடைய அந்த மாதிரியான ஆட்களுக்கு அந்தரங்க ஆட்களுக்கு பத்வா கொடுக்கிறீர்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். உங்கள் உரை மூலம் நீங்கள் அளித்துள்ள பத்வாவின் வெளிப்பாடுதான் பாளையங்கோட்டை சம்பவம் என்பதை சேத்துப்பட்டிலிருந்து உங்களை கவனித்து வருபவர்கள் புரியாமலா இருப்பார்கள்?
பொய்களுக்குரிய முரண்பாடுகள் உங்கள் தரப்பில்தான் உள்ளது.
நீங்கள் செய்த கிரிமினல் செயல்களை மறைப்பதற்காக வௌ;வேறு பத்திரிக்கைகளில் வந்த நேரம் சம்பந்தமான வித்தியாசங்களை முரண்பாடுகளாக்கி முரண்பாடுகள் என்ற அடிப்படையில் அந்தச் செய்திகளை பொய் என வாதித்தீர்கள். எனவே 2 வது மனம் திறந்த மடலான அலாவுதீனும் அற்புத விளக்கமும் என்ற வெளியீட்டில் எது முரண்பாடு எந்த முரண்பாடுகளெல்லாம் பொய்கள் என்பதை அடையாளம் காட்டி அந்த பொய்களுக்குரிய முரண்பாடுகள் உங்கள் தரப்பில்தான் உள்ளது என்பதை ஆதாரத்துடன் விளக்கி இருந்தோம். அதற்கு பதில் கூற முடியாத நீங்கள் புளுகு 1,2 என 7 புளுகுகளை எழுதி உள்ளீர்கள். நீங்கள் எழுதி மற்றவர்கள் பெயரால் வெளியிட்டு வந்துள்ளதுபோல்; அலாவுத்தீன் பெயராலும் பேட்டியும் கட்டுரையும் வெளியிட்டுள்ளீர்கள். அதுபோல்தான் பாஷh பேட்டியும் இருக்கும் என்று நீங்கள் எண்ணியுள்ளீர்கள்.
பதினாறடி பாய்ந்துள்ள குட்டிகள்.
எத்தனையோ பொய்ச் செய்திகளை பரப்பி ஆதாயம் தேடி வந்திருக்கிறீர்கள். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பதை நிரூபித்து உங்கள் கொள்கைச் சகோதரர்கள் செயல்பட்டு வருகிறார்கள். துபை ஜே.டி. தொகுத்து வழங்கி உள்ள பொய்ச் செய்தி சி.டி. பற்றி முந்தைய இதழிலும் இதிலும் அடையாளம் காட்டி உள்ளோம். அந்த வரிசையில் மற்றொன்று ரியாத்-ஒரு நாள் மாநாடு பற்றிய விளம்பரம். அதாவது அதை நடத்தியது சவூதி அரசின் நேரடி கட்டுபாட்டின் கீழ் உள்ள இஸ்லாமிய விவாகர அமைச்சகம் சார்பாக செயல் படும், ஜாலியாத் என்று அழைக்கப்படக் கூடிய அல் மக்தப அத்தஆவுனிய்யா லித்தஃவதி வல்இர்ஷhத் வத்தவ்ஈயதில் ஜாலியாத் பிஸ்ஸனாஇய்யா அல் ஜதீத் என்ற தாஃவா நிலையம். இதில் திரளாக கலந்து கொண்டவர்கள் ஜாக், த.மு.மு.க, விடியல் வெள்ளி, ஜமாத்தே இஸ்லாமி உட்பட பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களும் இன்னும் எந்த இயக்கத்தையும் சாரதவர்களும் உண்டு.
ததஜ-வினருக்கு ஆள் கிடைக்காமல்.
ஆனால் அக்டோபர் 1-7, 2004 வாசகர் கடிதம் என்ற போர்வையில், பிரிவினைக்குப் பிறகு நடந்த மாநாடு, த.த.ஜ.வினரின் எழுச்சி மாநாடாக அமைந்தது. த.த.ஜ.காரர்களுக்கு இறைவனின் வெற்றியை பறைசாற்றும் வகையில் திரண்ட மக்கள். என் போன்ற தடுமாற்றத்தில் இருந்தவர்களுக்கும் சத்தியமும் தெளிவும் கிடைத்தது. இது போன்ற வார்த்தைகளால் ஏதோ த.த.ஜ. நடத்திய மாநாடு போல் மாயையை ஏற்படுத்தி எழுதியுள்ளனர். அதுமட்டுமல்ல பல அச்சுறுத்தலுக்கிடையில்; இது தம்மாமிலிருந்த சென்றவர் கருத்தாக எழுதியுள்ளார். என்ன அச்சுறுத்தல் என்று தெரியவில்லை. தமாமில் இருந்து 60 ரியால் கொடுத்தால் சுமார் 5 மணிநேரத்தில் ரியாத் சென்றடைய முடியும். ஒரு வேளை 3 பஸ்களில் செல்ல திட்டமிட்ட ததஜ-வினருக்கு ஆள் கிடைக்காமல் சுமார் 38 நபர்கள் மட்டுமே சென்றதை சொல்கின்றாரோ என்னவோ தெரியவில்லை. இது மொத்த கிழக்கு மாகாணத்திலிருந்து சென்றவர்களின் எண்ணிக்கை என்பது குறிபிட்டதக்கது.
அதிரை அமீன்.
பொய்களை பரப்பவதில்தான் தலைமையுடன் போட்டி என்றால் மிரட்டுவதிலும் இழிவான கீழ் தரமான வார்த்தைகளை பேசுவதிலும் தலைமையை விஞ்சி நிற்கின்றனர் உங்கள் அணியினர். நீங்களோ என்னை ஏர்போர்ட்டை தாண்டி வர முடியாது என்றீர்கள். துபை ஜே.டி.யில் உள்ள அதிரை அமீன் என்பவரோ பேட்மாநகரம் பாரூக் அவர்களிடம் ஷஷஇலாஹி ஊருக்கு போய் விட்டு திரும்பி வந்து விடுவாரா? போய்விட்டு வரட்டும் பார்ப்போம்|| என்று மிரட்டி இருக்கிறார். துபை ஜே.டி.யில் உள்ள ஜக்கரிய்யா என்பவர் த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ்வை சம்பந்தப்படுத்தி சில பொய்களை கூறி இருக்கிறார். அதற்கு பாரூக் நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் நான் கேட்பேன். நீங்கள் உங்கள் குற்றச்சாட்டை எழுத்து மூலம் எழுதி தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். எழுதியெல்லாம் தர மாட்டேன் என்று அவதூறுகளை அள்ளி வீசுவதில் குறியாக இருந்த ஜக்கரிய்யாவிடம் பேசும்போதுதான் சம்பந்தமில்லாமல் தலையிட்ட உங்கள் சிஷ;யர் அதிரை அமீன் கொலை மிரட்டலுடன் எழுத முடியாத கொச்சையான வார்த்தைகளை பாக்கர் அலாவுதீன் வழியில் சகட்டுமேனிக்கு பேசி இருக்கிறார்.
டெலிபோன் ரிங்கார்டிங்.
20-10-2004 அன்று 0091-9842682476 என்ற நம்பரிலிருந்து பிளீஸ் கால் மீ என மெஸேஜ் வந்தது. போன் செய்தேன். பாக்கர், அலாவுதீன் ஆகியோர் உதிர்த்த அந்த கொச்சையான அசிங்கமான வார்த்தைகளை உதிர்த்து உங்கள் பாணியில் மிரட்டினர். எனது பக்கத்தில் இருந்த நண்பர்கள் ரூமுக்கு வாருங்கள் அவர்கள் பேச்சை ரிக்கார்டு செய்யுங்கள் என்றனர். 2000ல் தாயகம் சென்றிருந்தபோது ஏ.ஸி.யில் வாழ்ந்து கொண்டு இல்லாதவன்போல் வெளியில் காட்டிக் கொண்டிருக்கும் பி.ஜே.யின் சுய ரூபத்தை தெளிவாக நேரில் தெரிந்து கொண்டேன். அதற்குப் பின் இவரே இப்படி என்றால் மற்றவர்களின் பேச்சை ரிக்கார்டு செய்தது தப்பு என டெலிபோன் ரிங்கார்டிங் வேலைகளை 2000 செப்டம்பர் 17க்குப் பிறகு நிறுத்தி விட்டேன். இன்ஸ்ட்மென்டுகளையும் கொடுத்து விட்டேன் என்றேன்.
பாக்கர்,அலாவுதீன் சுன்னத்களையும் உங்கள் சுன்னத்தையும் பேனினர்.
அடுத்து 0091-4373240997 என்ற நம்பரிலிருந்து மிஸ் கால் வந்து கொண்டே இருந்தது. என்னதான் பேசுவார்கள் பார்ப்போம் என பேசினோம். அதிரை ஹாஜா, அதிரை அப்துல்லாஹ் ஆகிய பெயர்கள் சொன்னார்கள். 1986ல் இருந்து நீ த.மு.மு.க.வில்தானே இருக்கிறாய் என்றனர். 86 ல் த.மு.மு.க. குணங்குடி ஹனீபா வீட்டில் இருந்தது. 95 ல்தான் ரோட்டுக்கு வந்தது என்றேன். 10 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவித்திருக்கிறாயே என்றனர். நல்ல பாருங்கள் 10 லட்சம் என்றேன். திரும்பவும் பாக்கர்,அலாவுதீன் சுன்னத்களையும் உங்கள் சுன்னத்தையும் பேனினர். நான் இது மாதிரி கெட்ட வார்த்தைகள் பேச மாட்டேன். நான் ஒழுங்காக பேசுகிறேன். அது மாதிரி அசிங்கமில்லாமல் அழகாக பேசுவதாக இருந்தால் பேசுங்கள். அசிங்கமான கெட்ட வார்த்தைகள் நான் பேச மாட்டேன் என்றேன்.
பி.ஜே.யை பிடித்து வாருங்கள்.
உங்களுக்கு மானம், ரோஷம், சூடு சுரணை இருந்தால் பி.ஜே. விட்ட சவால்படி அவர் குறிப்பிட்டுள்ள 38 சாட்சிகளுடன் அவர் கூறியுள்ள ஆடியோ, வீடியோ, சி.டி.க்கள் ஆதாரங்களுடன் பி.ஜே.யை பிடித்து வாருங்கள். இன்று முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக சிறையில் வாட மூலகாரணமானவர் பி.ஜே.தான் 1993க்குப் பிறகு தமிழகத்தில் நடந்த அசம்பாவிதங்களுக்கும் மூலகாரணமானவர் பி.ஜே.தான் என்பதை அவரைக் கொண்டே நிரூபிக்கிறேன் என்றேன். இதற்கும் பதில் கூறாமல் பாக்கர்,அலாவுதீன் வழியிலும் உங்கள் வழியிலும் பேசுவதில்தான் குறியாக இருந்தார்கள். கைர் உங்கள் விஷயத்திற்கு வருவோம்.
அனுதாப அலை.
எப்பொழுதுமே அனுதாபத்துக்கு ஒரு வலிமை உண்டு. அதனால்தான் அதிகமான தேர்தல்களை அனுதாப அலைகள் முடிவு செய்கின்றன. அனுதாப அலைகளால் ஏற்படும் தேர்தல் வெற்றிகள் யாவும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கின்றன. இந்த அனுதாப அலைகளின் வல்லமை பற்றி பண்டாரநாயகா, பெனாசிர், Nஷக் ஹஸீனா என உலக அளவில் ஆய்வுரை வழங்கிய அறிஞர் நீங்கள். அதனால்தான் என்ன சொன்னால் எப்படிச் சொன்னால் அனுதாபம் பெறலாம் என ஆய்வு செய்து அதைச் சொல்லி அனுதாபத்தைப் பெற முயன்று வருகிறீர்கள். முஸ்லிம் டிரஸ்ட்டு பிரச்சனையால் த.மு.மு.க.வை விட்டு வெளியேற முடிவு செய்த நீங்கள் த.மு.மு.க. தலைமை உங்களை நீக்கியது போன்ற மாயையை ஏற்படுத்தி அனுதாப அலை வீசாதா என எதிர் பார்த்தீர்கள். அதைச் சொல்லி அனுதாபம் பெற முயன்றீர்கள். போஸ்ட்டர் கிழிக்கும் கலாச்சாரத்துக்கு சொந்தக்காரரான நீங்களே உங்கள் போஸ்ட்டர்களை கிழித்து விட்டு அதைப் படம் பிடித்துக் காட்டி அனுதாபம் பெற முயன்றீர்கள்.
மொட்டைக் கடிதங்களில் மனைவி மக்கள்.
அலி, புலி, எலி உட்பட பல்வேறு தலைப்புகளில் மொட்டைக் கடிதங்கள் எழுதினீர்கள். அவற்றில் ஜவாஹிருல்லாஹ், ஹைதர்அலி, வலியுர்றஹ்மான், ரிபாஈ, அமீருத்தீன் என த.மு.மு.க. தலைமையினர் பற்றி தரக்குiவாக எழுதினீர்கள் பதிலுக்கு அவர்கள் ஏதாவது எழுத மாட்டார்களா? அதை மக்களிடம் கூறி அனுதாபம் பெறலாமே என திட்டமிட்டீர்கள். அவர்கள் பதில் எழுதவில்லை. பிறகு அவர்களது மனைவி மக்களையும் மொட்டைக் கடிதங்களில் வம்புக்கு இழுத்தீர்கள். அப்பொழுதும் அவர்கள் பதில் சொல்லவில்லை. உங்களிடம் சிக்கியுள்ள த.மு.மு.க. சொத்துக்களை சட்ட ரீதியாக மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். உங்களுக்கு சொகுசு வாழ்வு தந்து கொண்டிருக்கும் சொத்து சட்டப்படி கையை விட்டு போய் விடும் நிலை உருவானது. வம்புக்கு இழுத்தாலும் பதிலுக்கு வம்பு செய்ய வரமாட்டேன் என்கிறார்களே, டிரஸ்ட்டிகளின் கவனத்தைத் திசை திருப்பி அனுதாபத்தைப் பெற என்ன செய்யலாம் என யோசித்துள்ளீர்கள். எனவே திட்டமிட்ட சதியின்படிதான் 28-09-2004 அன்று உங்கள் ஊழியரைக் கொண்டு உணர்வை ரோட்டில் வீசி வம்பு செய்துள்ளீர்கள்.
அலுவலகத்தில் இருந்த போது - வீதியில்.
29-09-2004 தேதிய நிருபர்கள் கூட்டத்தில், ஷஷஉணர்வு வார இதழின் துணை ஆசிரியரான ஏ.எஸ். அலாவுதீன் அவர்கள் உணர்வு அலுவலகத்தில் இருந்த போது இந்த வார உணர்வு இதழ் அச்சாகி வந்தது. அப்போது த.மு.மு.க பொதுச்செயலாளர் ஹைதர்அலி தலைமையில் சுமார் 40 பேர் கொண்ட கும்பல் வந்து இவ்வார உணர்வு இதழைப் பறித்து சூறையாடி வீதியில் வீசினார்கள்|| என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதில் சம்பவம் அலுவலகத்தில் நடந்த மாதிரியும் வீதியில் நடந்த மாதிரியும் எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்வதற்கு வசதியாக இரு பொருள்பட செய்தி கொடுத்து உங்கள் திறமையை காட்டி உள்ளீர்கள்.
யாருடைய கூற்றை உண்மை என கூறுவார்கள்.?
துணை ஆசிரியர் இதைப் புகைப்படம் எடுக்க முயன்ற போது ஷஷஇவனைக் கொல்லுங்கடா' என்று ஹைதர்அலி கூறியவுடன் அலாவுதீன் கையில் இருந்த கேமராவைப் பிடுங்கி உடைத்து எறிந்தனர் என்று பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் நீங்கள் கூறி உள்ளீர்கள். கேமராவை புடுங்கு அடி உதை என்று கூறியதாக டி.என்.டி.ஜே. மாநில துணைச் செயலாளர் சித்தீக் துபை ஜே.டி.க்கு அளித்துள்ள டெலிபோன் பேட்டியில் கூறி உள்ளார் என்பதை முந்தைய வெளியீட்டிலேயே குறிப்பிட்டிருக்கிறோம். ஒரு அமைப்பின் தலைமையில் உள்ள இரண்டு பேருமே இரண்டு விதமாகக் கூறி உள்ளதால் இந்த முரண்பாடே உங்கள் கூற்றுப்படியும் உங்கள் தரப்பு பொய்களை விரும்பியவாறெல்லாம் பரப்புகிறது என்பதற்குரிய ஆதாரமாகும். உங்கள் தரப்பினர் கூறியுள்ள அனைத்தும் பொய்தான் என்றாலும் உங்கள் அமைப்பில் உள்ளவர்கள் உங்கள் இருவர் கூற்றில் யாருடைய கூற்றை உண்மை என கூறுவார்கள். உங்கள் கூற்றதை;தானே உண்மை என கூறுவார்கள். அதையாவது அவர்களால் உறுதியாக கூற முடியுமா?
அந்த பொய்யைக் கூறிய பொய்யராக ஆவது யார்?
உங்களது டெலிபோன் பேட்டியையும் ஜே.டி. வெளியிட்டுள்ளது. ஜே.டி.க்கு கொடுத்துள்ள அந்த பேட்டியில் அடி உதை என்று கூறியதாகவே நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் இருவருக்குள் முரண்பாடு என்பது மட்டுமல்ல பி.ஜே.யின் கூற்றுக்கு பி.ஜே.யின் கூற்றே முரண்பாடு என ஆகிவிட்டது. உங்கள் இருவரில் யார் பொய்யர் என்ற நிலை மாறி உங்கள் கூற்றில் எது பொய் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்பொழுது உங்கள் அமைப்பில் உள்ளவர்கள் எதை பொய் என்று கூறினாலும் அந்த பொய்யைக் கூறிய பொய்யராக ஆவது யார்? நீங்கள்தானே. எந்த மாதிரி பொய்களையெல்லாம் சொன்னால் அனுதாபம் பெற முடியுமோ அந்த மாதிரி பொய்களையெல்லாம் இயன்றவரை பரப்ப வேண்டும் என்ற உறுதியில் உள்ளீர்கள் என்பது இப்பொழுது மிகத் தெளிவாகி விட்டது.
அடிப்படை விபரங்கள் தெரியாதவர்கள் ஏமறலாம்.
நோயில்லாமல் சிகிச்சை அளிப்பார்களா? என வினவி உள்ளீர்கள். நோயில்லாத ஒருவர் டாக்டரிடம் போய் வயிறு வலி, கால் வலி என்று சொன்னால் அப்படியே பார்த்து விட்டு நோயில்லை என கூற மாட்டார். வலிக்கு மருந்து கொடுப்பார். இதற்கு பெயர்தான் சிகிச்சை. போலீஸில் போய் அடிதடி தகராறு என பொய்யாகக் கூறி கம்ளைண்ட் எழுதி கொடுத்தாலும் அது பொய் என அதிகாரிகளுக்கு விளங்கினாலும் சட்டப் பிரச்சனைகளுக்கு மருத்துவ சான்றிதழ் தேவை என்பதால் மருத்துவமனைக்கு அழைத்துதான் செல்வார்கள். ஏனெனில் இந்த பொய் கம்ளைண்ட பேர்வழிகள் நாளை கோர்ட்டில் நம்மீது பழி சுமத்தி விடக்கூடும் என அஞ்சித்தான் மருத்துவமனையில் சேர்ப்பார்கள். இந்த அடிப்படை விபரங்கள் கூட தெரியாதவர்கள் உங்கள் வாதத்தால் ஏமறலாம்.
பொய்யைத்தான் திட்டமிட்டு பரப்பினீர்கள்.
28,29,30 ஆகிய மூன்று தினங்கள்தான் எமர்ஜென்ஸி பிரிவில் இருந்ததாக அலாவுதீன் பெயரால் வெளியிட்டுள்ளதில் எழுதி உள்ளீர்கள். 01-10-2004 வெள்ளியன்று த.த.ஜ. அலுவலகத்தில் நடந்த ஜும்ஆ உரையில் அலாவுதீன் இப்பொழுதும் எமர்ஜென்ஸி பிரிவில்தான் இருக்கிறார் என்று பேசி உள்ளீர்கள். இந்த முரண்பாடு உங்கள் வாதப்படி உங்கள் தரப்பு பொய்யானது என நிரூபிக்கிறது. இந்த ஜும்ஆ உரையையே ஆர்ப்பாட்ட விளம்பரமாக டி.வி.யில் ஒளிபரப்பி வந்தீர்கள். எப்பொழுது பார்த்தாலும் இப்பொழுதும் எமர்ஜென்ஸி பிரிவில் இருப்பதாக விளங்கும் வகையில் செய்தீர்கள். இதுவெல்லாம்; பொய்யைத்தான் நீங்கள திட்டமிட்டு பரப்பினீர்கள் என்பதற்குரிய ஆதாரமாகும்.
இது எவ்வளவு நாட்களுக்குத்தான் நீடிக்கும்.
எமர்ஜென்ஸி வார்டில் இருக்கிறார் அவருக்காக போராட்டம் என்று அறிவிக்கும் அந்த நாள் நிகழ்ச்சியிலேயே 8 ஆம் தேதி அதிராம்பட்டிணத்தில் பேசுகிறார் என்றும் டி.வி.யில் விளம்பரம் செய்தீர்கள். உங்களுக்கென்ன நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பதற்கும் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை கேட்காமலே சொல்லி முடிப்பதற்குள் ஆமாம் போடுவதற்கும் ஒரு கூட்டம் உள்ளது. இந்த தைரியத்தில் எதைப் பற்றியும் சட்டை செய்யாமல் பொய்யான வாதங்கள் மூலம் உங்களை தூய்மையானவராக சித்தரித்து வருகிறீர்கள். இது எவ்வளவு நாட்களுக்குத்தான் நீடிக்கும்.
விமர்சனங்கள் அனைத்திற்கும் உரிமையாளர்.
வயிறு, மர்ம ஸ்தானம் மற்றும் கழுத்து ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன என எழுதி இருந்தீர்கள். உடல் நிலை பாதிப்பை சம்பந்தப்பட்டவர் வட்டாரச் செய்தியாக எழுதக் கூடாது. மருத்துவ சான்றிதழைத்தான் வெளியிட வேண்டும். இதிலாவது நீங்கள் உண்மையாளர் என்றால் அடுத்த இதழில் மருத்துவ சான்றிதழை அப்படியே பிரசுரிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தோம். உண்மையிலேயே அவர் பாதிக்கப்படடிருந்தால் ஆதாரத்தை வெளியிட்டிருப்பீர்கள். ஆதாரம் இல்லாததால் உண்மையை வெளியிட்ட பாஷh அவர்களை கீழ்ப்பாக்கம் அனுப்பப்பட வேண்டியவர் என இழிவுபடுத்தியதோடு திரும்பவும் வாதத்தின் மூலமே அலாவுதீனை நோயாளியாக சித்தரித்துள்ளீர்கள். எனவே வேலிக்கு சாட்சி சொல்லும் ஓணான் என்ற தலைப்பில் உள்ள விமர்சனங்கள் அனைத்திற்கும் உரிமையாளராக நீங்கள் ஆகி விட்டீர்கள்.
வாதம் வைத்து அப்போதைக்கு தப்பி இருக்கிறீர்கள்.
பெங்களூர் ஸைபுத்தீன் ரஷhதிக்கு மஸ்ஜிதுர்றஹ்மான் இடத்தில் வைத்து ஏர்வாடி காசிமிடம் பத்வா கொடுத்தீர்கள். பிறகு பரணி லாட்ஜில் போய் தொடரை பேசினீர்கள். இது சம்பந்தமாக வாக்கு மூலம் கொடுத்த ஏர்வாடி காசிம் மஸ்ஜிதுர்றஹ்மான் இடத்தில் வைத்து என்பதற்குப் பதிலாக மஸ்ஜிதுர்றஹ்மானில் வைத்து என்று கூறி விடுகிறார். இந்த வார்த்தை பிசகை பயன்படுத்தி 1995ல் மஸ்ஜிதுர்றஹ்மான் கட்டிடம் கட்டப்படவில்லை என்ற வாதம் வைத்து அப்போதைக்கு தப்பி இருக்கிறீர்கள். த.மு.மு.க. தலைமையினரும் போலீஸும் உங்களை அப்பாவி என அப்பொழுது நம்பி விட்டார்கள். அதுபோல் திங்கட்கிழமை என்ற வார்த்தையை வைத்து வாதம் செய்து பாஷhவை பொய்ப்படுத்தி உங்கள் தரப்பை உண்மைப்படுத்த முயற்சித்துள்ளீர்கள்.
எந்தக் கிழமையையும் குறிப்பிடவில்லை.
உங்கள் பின்னால் உள்ளவர்களை சிந்திக்கக் கூடிய அறிவு உள்ளவர்களாக, இறை அச்சம் உடையவர்களாக, சுயநலமும், பதவி நோக்கமும், பணம் திரட்டும் குறிக்கோளும் சம்பள நோக்கும் இல்லாதவர்களாக, மறுமைக்கான பணியை இவ்வுலக ஆதாயத்துக்காக ஆக்கி விடாதவர்களாக கருதி இருந்தால் இந்த வாதம் வைத்திருக்க மாட்டீர்கள். பாஷh திங்கள்கிழமை அலாவுதீனை பார்க்ப் போனேன். என்று கூறி இருந்தால், சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டரை சந்தித்தேன் என்று சொல்லி இருந்தால் உங்கள் வாதத்திற்கு கொஞ்சமாவது வலு சேர்ந்து இருக்கும். சிகிச்சை அளித்த தலைமை மருத்துவர் குணசேகரனை சந்திக்க முயன்றேன் அவர் விடுமுறையில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை என்ற கூற்றில் அவர் எந்தக் கிழமையையும் குறிப்பிடவில்லை. பின்னர் (அதாவது இன்னொரு நாளில்) அவரை சந்தித்தேன் என்று கூறும்போதுதான் அந்த நாளை திங்கட்கிழமை என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்களது 7 வகை புளுகுகளை படித்த பின் செய்து வரும் ஆய்வு என்ன தெரியுமா?
நீங்களோ, எனவே திங்கட்கிழமை டிஸ்சார்ச் ஆகிறேன், நான் டிஸ்சார்ச் ஆன பிறகு எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது(?) அந்த சிகிச்சை அளித்த மருத்துவரை(?) அவர் சந்தித்திருக்கிறார் போலும். என்னே பேதமை! எனவாத ரீதியாக பொய்ப்படுத்த முயன்றுள்ளீர்கள். எனவே நீங்கள் அவரை இழிவுபடுத்த அதில் கூறியுள்ள வார்த்தைகளுக்கு உரியவராக ஆகி விட்டீர்கள். ஹதீஸ் கலையில் ஸஹீஹ், ளயீப், முர்ஸல் என துவங்கி மவ்கூப், மக்தூவு வரையிலான ஆய்வுக்கு சென்று விட்டவர்கள், உங்களது 7 வகை புளுகுகளை படித்த பின் செய்து வரும் ஆய்வு என்ன தெரியுமா? மர்ம ஸ்தானம் என்றால் என்ன? எதுவெல்லாம் மர்ம ஸ்தானம் என்பதுதான்.
என்ன அருமையான விளக்கம்?
மர்மஸ்தானத்தில் காலால் மிதித்து கீழே தள்ளினார்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கூட்டத்திலும், ஜும்ஆவிலும் பேசினீர்கள். ஜே.டி. வெளியிட்டுள்ள சி.டி.யிலும் மர்ம ஸ்தானத்தில் பாதிப்பு என்று கூறி உள்ளீர்கள். வயிறு, மர்ம ஸ்தானம் மற்றும் கழுத்து ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன என அக் 8-14, 2004 உணர்விலும் எழுதி இருந்தீர்கள். அக் 15-21,2004 உணர்வில் அலாவுதீன் சொல்வது போல் உங்களது புளுகு 4ல், ஷஷஎனது ஆணுறுப்பு பாதிக்கப்படவுமில்லை. எனது ஆணுறுப்பு பாதிக்கப்பட்டதாக யாரும் சொல்லவும் இல்லை|| என்ற ஒரு பொய்யை எழுதி உள்ளீர்கள்.

உங்களுக்கு நீங்களே முரண்பட்டுள்ள இதிலிருந்து உங்களை காக்க உங்கள் ஆதரவாளர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டார்கள். ஆய்வு செய்து அவர்கள் கூறி வரும் விளக்கம் என்ன? தெரியுமா? மர்ம ஸ்தானம் என்றால் ஆண் பெண் உறுப்புகளுடன் விரையும் அடங்கும். எனவே மர்ம ஸ்தானத்தில் பாதிப்பு என கூறியது விரையைத்தான் என விளக்கி? வருகிறார்கள். என்ன அருமையான விளக்கம்?
அலாவுதீன்தான் இனி உஷhராக இருக்க வேண்டும்.
விரையும் மர்ம ஸ்தானம்தான், ஆனால் அதில் ஏதாவது வலி, வீக்கம் என்றால் விரை வீக்கம் என்றுதான் சொல்வார்களே தவிர மர்ம ஸ்தானத்தில் வீக்கம் என யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படிச் சொன்னால் அர்த்தமே மாறுபட்டு விடும் என்றால், விரையும் மர்ம ஸ்தானம்தானே அதனால் உணர்வில் எழுதியதும் பி.ஜே. சொல்லியதும் விரையைத்தான் என்கின்றனர். 95ல் மஸ்ஜிதுர் றஹ்மானே இல்லை என வாதிட்டு ஏர்வாடி காசிமிடம் கூறியதை பொய்ப்படுத்தினீர்கள். அதுபோல் போகிற போக்கில் அலாவுதீனுக்கு; ஆணுறுப்பே இல்லை. இருந்தால்தானே பாதிக்கப்படுவதற்கு என்று நீங்கள் வாதிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த வாதத்தை உண்மையாக்க வேறு ஏதாவது செய்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அலாவுதீன்தான் இனி உஷhராக இருக்க வேண்டும்.
இப்படி நீங்கள் வாதிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அலாவுதீன் சிறுநீரில் ரத்தம் வெளியேறியதாக பல த.த.ஜ.க்கள் கூறி உள்ளார்கள் என்பது உண்மை இருந்தாலும் மறுக்கிறீர்கள். 01-10-2004 அன்று மேலப்பாளையம் மஸ்ஜிதுர் றஹ்மான் ஜும்ஆ உரையில் தென்காசி சுலைமான் தெளிவாகவும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தும் பேசி உள்ளார். ஷஷஇன்றுவரை அலாவுதீனுக்கு மூத்திரம் போகவில்லை. மர்ம ஸ்தானத்தில் இருந்து ரத்தம் வருகிறது. சந்தேகம் இருந்தால் அலாவுதீனுக்கு போன் போட்டு கேட்டுக் கொள்ளவும்|| என்று பேசியுள்ளார். இந்த பேச்சை பொய்ப்படுத்த முடியாவிட்டால் அலாவுதீனுக்கு விரையில் இருந்துதான் மூத்திரம் போகும். அதைத்தான் சுலைமான் மர்ம ஸ்தானம் என்று கூறினார். இப்படி நீங்கள் வாதிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எப்படிப்பட்ட மஸ்ஜிதுர் றஹ்மான்.
அலாவுதீன் ஆணுறுப்பு சம்பந்தமான விளக்கத்துடன் வந்த உணர்வு நமக்கு திங்கள் அன்றுதான் கிடைத்தது. வியாழன் அன்றே மேலப்பாளையத்தில் பார்த்து விட்டவர்கள் தகவல் சொன்னார்கள் குறிப்பாக மஸ்ஜிதுர் றஹ்மானில் தென்காசி சுலைமான் பேசியதை சுட்டிக் காட்டினார்கள் கொதித்துப் போனோம். எப்படிப்பட்ட மஸ்ஜிதுர் றஹ்மான். 1993ல் ஒரு இலட்சத்தி இருபதாயிரம் (1,20,000) ரூபாய் இருக்கும் நிலையில் அதை அப்படியே அட்வான்ஸாக கொடுத்து 3 மாத தவணையில் 3 லட்டசத்துக்கு இடத்தை பேசி முடித்தார் கே.எப். நிஜாமுத்தீன் மஹ்ழரி. 1-20ஐயே 2 வருஷமாக கஷ;டப்பட்டு சேர்த்துள்ளோம். 3 மாத தவணையில் 1-80க்கு எங்கே போக என கேட்டோம். கஷ;டப்பட்டு முயற்சிப்போம் கிடைக்கவில்லை என்றால் நான் என் வீட்டில் உள்ள நகைகளை விற்று தருகிறேன். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள நகைகளை விற்று தாருங்கள் என்று உரிமையுடன் கூறினார். இஸ்லாம் இப்படி கஷ;டப்பட்டு பள்ளி கட்டச் சொல்லவில்லை என்பது தனி விஷயம். அந்த அளவுக்கு கொள்கைப் பற்றால் உருவானது அந்தப் பள்ளி.
யாராலும் காப்பாற்ற முடியாது.
அந்தப் பள்ளியில் கூடி அமர்ந்து அவர்கள் விரும்பாதவர்களுக்கு எதிராக பொய் சொன்னார்கள், பொய் சாட்சி சொன்னார்கள், பொய் சத்தியம் செய்தார்கள். இப்பொழுது பொய் சத்தியங்களையே ஜும்ஆ உரையாக ஆக்கி விட்டார்கள். ஷஷயா அல்லாஹ் மஸ்ஜிதுர் றஹ்மானில் வைத்து பொய் சாட்சி சொல்லி, அதை உண்மைபடுத்த பொய் சத்தியம் செய்தவர்களில் ஒருவரான தென்காசி சுலைமான் இப்பொழுது பொய் சத்தியங்களையே ஜும்ஆ உரையாக ஆற்றி இருக்கிறார் யா அல்லாஹ். அவரை உன்னிடம் ஒப்படைத்து விட்டோம்|| என்று ரமழான் முதல் நாள் நோன்பு திறக்கும்போது துஆச் செய்தோம். எனவே பொய்யர்களை அவன் பிடிப்பான். பொய்யர்களுக்கு ஆதரவாக உள்வர்களையும் பிடிப்பான். மனிதர்களின் பிடி குறிப்பிட்ட எல்கைக்கு உட்பட்டது, மிகச் சாதாரணமானது. அல்லாஹ்வின் பிடி மகாத்தானது, சூழ்ந்து கொள்ளக் கூடியது. அது பொய்யர்களையும் பொய்யர்களின் ஆதரவாளர்களையும் சூழ்ந்து கொள்ளும்போது யாராலும் காப்பாற்ற முடியாது.
எந்த அண்ணன்களாலும் இவர்களை காப்பாற்ற முடியாது.
அண்ணனின் திருப்திக்காக அல்லாஹ்வின் பள்ளியில் பொய் சொல்லி, பொய் சாட்சி சொல்லி, பொய் சத்தியம் செய்தவர்கள் அவர்களுக்கு துணை நின்றவர்கள், அல்லாஹ்வின் திருப் பொறுத்தத்தை விரும்பினால் திருந்தி உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் பொய்யர்களும் பொய்யர்களின் ஆதரவாளர்களும் இப்பொழுது எதிர்த்து நிற்பது அல்லாஹ்வைத்தான். அவனது பள்ளி வாசல்களிலும் ஜும்ஆ மேடைகளிலும் பொய் சொன்னவர்களை, என் வீட்டில் இருந்தா பொய் சொன்னாய், என் வீட்டில் நின்றா பொய்களை பரப்பினாய் என்றும் அதற்கு துணை நின்றாயா என்றும் அவன் பிடிப்பான். அதுபோல் சி.டி.யாகவும் மற்றுமுள்ள வழிகளிலும் பொய்களை பரப்பிய அமைப்பினரையும் அதற்கு நன்கொடை அளித்தவர்களையும் அல்லாஹ் பிடிப்பான். அப்பொழுது எந்த அண்ணன்களாலும் இவர்களை காப்பாற்ற முடியாது. அந்த அண்ணன்களையும் இவர்களால் காப்பாற்ற முடியாது எனவே திருந்துங்கள். வஸ்ஸலாம்.
அன்புடன்:
கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி,
துபை
23-10-2004
.நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்த நாளில், ஷஷஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!|| என்று கூறுவார்கள். .ஷஷஎங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்|| என்றும் அவர்கள் கூறுவார்கள். .''எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக'' (என்பர்). அல் குர்ஆன் 33:66-68

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.