ஜே.டி.க்கு நன்கொடை கொடுப்பவர்களே சிந்தியுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும். த.மு.மு.க.விலிருந்து விலகிச் சென்ற பி.ஜே. த.மு.மு.க.வுக்குச் சொந்தமான கீழ் தளத்தில் மார்க்க பயான் செய்வதையும் நிறுத்தி விட்டார். அவர் மார்க்க பயான் செய்ய மாட்டேன் என நிறுத்தி விட்ட த.மு.மு.க. இடத்தில் உணர்வு பண்டல்களை போட்டு கட்டுவோம் என்று வம்பு இழுக்க வைத்துள்ளார். ரவுடிகளை கொண்டு வந்து வம்பு பண்ண திட்டமிட்டுள்ளதை அறிந்த த.மு.மு.க. தலைமை போலீஸில் புகார் செய்துள்ளது. எனவே போலீஸாரும் முன்னதாகவே பாதுகாப்புக்கு வந்து விட்டனர். போலீஸார் நிற்கும்போதுதான் உணர்வு ஊழியர் தவ்பீக் என்பவர் உணர்வு பண்டல்களை ரோட்டில் வீசினார். ஏ.எஸ் அலாவுதீன் கேமரா பண்ணினார். சம்பவ இடத்திலேயே போலீஸார் அலாவுதீனை கண்டித்தனர். செட்டப் செய்தபடி படம் பிடிக்கும் அலாவுதீனின் செயலை த.மு.மு.க.வினர் தடுத்தனர். அவரது கையிலிருந்த கேமரா கீழே விழுகிறது. திட்டமிட்டபடி கீழே படுத்து கொண்டு அலாவுதீன் நடித்தார். போலீஸார் எழுந்து உட்கார் என்றதும் உட்காருகிறார். நன்றாக உட்கார்ந்து இருந்த அலாவுதீனுக்கு பி.ஜே. இடமிருந்து போன் வந்ததும் ஆஸ்பத்திரியில் போய் அட்மிட் ஆகி விடுகிறார். செக்கப் செய்த டாக்டர்கள் உடலில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி டிஸ்சார்ச் செய்ய சொல்லி விட்டனர். அமைச்சர் ஜெயக்குமார் தயவில் டிஸ்சார்ச் ஆகாமல் ஆஸ்பத்திரியில் தங்கி உள்ளார்.

மார்க்கப் பிரச்சார சி.டி.களை இலவசமாக வெளியிடாத ஜே.டி. இந்த நாடகம் பற்றிய இலவச சி.டி. வெளியிட்டுள்ளது. ஜே.டி.க்கு ஒவ்வொரு கூட்டத்திலும் வசூல் செய்து கொண்டே இருக்கிறார்கள். சந்தாக்களும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜே.டிக்கு நன்கொடை கொடுப்பவர்களே சிந்தியுங்கள். நீங்கள் ஜே.டி.க்கு கொடுக்கும் நன்கொடைகள் இது மாதிரி பொய் பிரச்சாரங்கள் செய்யவும் சமுதாயத்தை பிளவுபடுத்தவுமே பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் வெளியிட்டுள்ள சி.டி.யில் அலாவுதீன் சொல்லாத 40 பேர் ஆண் குறியில் மிதித்தார்கள் என்பன போன்ற பொய்களைக் கூறி உள்ளனர். பொய்ப் பிரச்சாரங்களுக்கு உங்கள் பணம் பயன்பட வேண்டுமா? ஜே.டி.க்கு நன்கொடை கொடுப்பவர்களே சிந்தியுங்கள்.
இவண்:
முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
துபை மண்டலம்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.