உண்மை முஸ்லிம்களே உஷாராக இருங்கள். இது என்ன பத்திஹா பாத்தியா?

ஹஜரத்தும் அவர் பின்னால் நிற்பவர் ஆகிய இருவர் மட்டும் பயபக்தியுடன் கையேந்தி நிற்கிறார்கள். ஏதோ பாத்திஹா ஓதுகிறார்கள் என்று தெரிகிறது நடுத்தெருவில் நிற்பதும் தெரிகிறது. என்ன  இது  நடுத் தெரு பாத்திஹாவா? என்ன பாத்திஹா தெரியவில்லையா?  அடுத்த படத்தைப் பாருங்கள்.
வானத்தைப்  பார்த்து நிற்கிறார்கள். வானம் பாத்தியா பாத்திஹாவா? என்ன பாத்திஹா தெரியவில்லையா?  அடுத்த படத்தைப் பாருங்கள். அதற்கு முன்

ஹஜரத்தையும் அவர் பின்னால் நிற்பவரையும் தவிர பெண் உட்பட மற்றவர்கள் கையை துாக்காமல் இரு கரம் ஏந்தாமல் பய பக்தியின்றி நிற்கிறார்கள்.  அது மட்டுமல்ல ஹஜரத்தின் துஆவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையை கட்டியும் பின் பக்கமாக கட்டியும் நிற்கிறார் என்பதா? 

போன் பேசுபவர் துஆவை இன்சல்ட் செய்கிறார் என்பதா? இருவரை தவிர மற்றவர்கள் பாத்திஹா எதிர்ப்பாளர்கள். இந்த அநியாயத்தை பாத்தியா? என வேதனையுடன் நிற்கிறார்கள் என்பதா?  சரி எதற்கு இந்த வானம் பார்த்த பாத்தியா?

ஆலீம்கள் நிறைந்த மேலப்பாளையம் நகரின் ஹாமீம்புரம் பகுதியில் புதிய டிரான்ஸ்பாமர் வைத்துள்ளார்களாம். அதைப் பார்த்துதான் இந்த பாத்தியா. கரண்டு கம்ப பாத்தியா.

இந்த போட்டோவை பார்க்கும் அடுத்த தலைமுறை கரண்டு கம்ப ஒலியுல்லா என கந்துாரி கொண்டாட வராமல் இருக்க. உண்மை முஸ்லிம்களே உஷாராக இருங்கள். 
http://mdfazlulilahi.blogspot.in/2016/06/blog-post_19.html 

வாட்ஸப்பில்  போட்டோக்களைக் காண லிங்கை கிளிக் செய்யவும்




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.