ஸைபுத்தீன் ரஷாதி அல்லாஹ் உடைய ரசூலை புறக்கணிப்பது எப்படி நியாயமாகும்? பி.ஜே.7 ஆவது உரை


இஜ்மாஃ இல்லைன்டா . குர்ஆனே இல்லை என்று ஸைபுத்தீன் ரஷாதி ஆற்றிய 6ஆவது உரைக்கு http://mdfazlulilahi.blogspot.ae/2013/04/6_9.html மவுலவி பி.ஜே.யின் பதிலுரை.அடைப்புக்குறிக்குள் உள்ளவை நமது கருத்துக்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. அன்பிற்குரிய சகோதரர்களே!  
நீங்களெல்லாம் கூடி  முடிவு செய்றது மார்க்க ஆதாரமாகும் என்று சொல்கிறீங்களே! அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால்  நீங்கள் எழுதுனீங்களே அதுதான் ஆதாரம். 

இஜ்மாஃவுக்கு ஆதாரம் நான்தான் இப்ப. இஜ்மாஃவுக்கு என்ன ஆதாரம் என்று கேட்டால்  நீங்கள் அதிலே எழுதுனீங்க. இதிலே எழுதுனீங்க. இஜ்மாஃவுக்கு முதலில் ஆதாரத்தை வைத்து விட்டு, நிரூபித்து விட்டு நீங்க அதை ஸைடு சப்போர்ட்டுக்கு காட்டலாம். கேட்கலாம் தப்பு இல்லை. ஆதாரமே இதுதான்.

ஆதாரம் என்ன?   நீங்கள் அதிலே எழுதுனீங்க இதிலே எழுதுனீங்க. அதிலே எழுதுனீங்க என்பது. அதற்கெல்லாம் நான் ரண்டாவது வர்ரேன். அனைத்துக்கும் பதில் சொல்வோம். ஒன்னு கூட மிச்சம் இருக்காது. இன்ஷாஅல்லாஹ். ஆனால் ஒன்னு கூட உங்களிடம் (இருந்து) பதில் வராது. நாங்கள் ஒன்னு கூட மிச்சம் வராமல் பதில் சொல்லுவோம். விளக்குவதற்கு சில பதில்களுக்கு கொஞ்சம் கூடுதல் டயம் தேவைப்படுவதால் சில விடுபடுகிறது.

அடுத்து இப்ப என்ன பதில் சொல்லி இருக்கிறார்கள் என்றால், ஏற்கனவே உள்ளதற்கு  ஒன்னே ஒன்னுக்கு பதில் வந்திருக்கிறது. நாங்கதான் இஜ்மாவுக்கு ஆதாரம் வைத்து விட்டோமே. என்ன ஆதாரம் வைத்தீர்கள். ஒரு ஆள் உடைய ஆய்வே எடுத்துக் கொள்ளலாம் என்றால். நிறைய பேர் உடைய ஆய்வை எடுத்துக் கொள்ளக் கூடாதா? அப்படீங்கிறாரு. 
நிறைய பேர் உடைய ஆய்வைத்தான் எடுத்துக் கொள்ளலாமே. ஆய்வு என்றாலே என்ன அர்த்தம் கரெக்ட்டாக இருக்கும் (அதாவது குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து ஆய்வு செய்து எடுத்த முடிவு) என்று அர்த்தம். 

அதை நிறைய பேர் என்பதற்காக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று பதில் சொல்லி இருக்கிறேன். இந்தக் கேள்விக்கு பதிலை நான் சொன்ன பிறகு கேள்வியா கேட்கிறாங்க. ஒரு ஆள் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம் ஆதாரம் இருந்தால். பல பேர் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம் ஆதாரம் இருந்தால் தான்.

ஆதாரம் இல்லாவிட்டால். எல்லாரும் கூடி முடிவு எடுக்கிறதுக்கு பேசிக் இல்லை என்றால். அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? அதற்கு இது ஆதாரமாகுமா? முஆது இப்னு ஜபல் உடைய ஹதீஸு. இது ஒரு ஆளு பல ஆளு. இதைத்தான் பெரிய ஆதாரமாக காட்டுகிறார்கள்.

அடுத்து என்ன? அந்த ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒன்று சொல்லி இருக்கிறாங்க. நானே ஞாபகத்திலே சொல்லி விட்டேன். அதற்கு அப்புரம் வந்து. குர்ஆனே இஜ்மாஃலே தான் வந்தது. அது சொன்ன பதில். சொன்ன பதிலையே திருப்பி திருப்பி சொல்கிறார்கள். குர்ஆனே இஜ்மாஃலே தான் நிலை நாட்டப்பட்டிருக்கு. 

அப்ப குர்ஆன் இஜ்மாவிலா  நிலை நாட்டப்பட்டிருக்கு? குர்ஆன் என்று இவங்களெல்லாம் முடிவு செய்ததினால் தான் நாம செய்கிறோமா?  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் அதை குர்ஆன் என்று நமக்கு சொன்னார்கள்.

அவர்கள் சொன்னார்கள் என்ற தகவலைத்தான் எல்லாரும் சொல்கிறார்கள். முடிவு அவர்கள் எடுக்கவில்லை. ஸஹாபாக்களெல்லாம் மஷுரா பண்ணி இது குர்ஆனா குர்ஆன் இல்லையா என்று முடிவு பண்ணி முடிவு எடுத்தாங்களா? 

முடிவு எடுத்தது அல்லாஹ் உடைய துாதா். நமக்கு முடிவை சொன்னது அல்லாஹ் உடைய துாதா். ஒவ்வொரு ஹதீஸும் ஒவ்வொரு செய்தியும் எப்படி முன் காலத்தில் உள்ளது. மனிதர்கள் வாயிலாக கிடைக்குமோ, அந்த மாதிரி செய்தி தான் வருது.

ரசூலுல்லாஹ் இதை குர்ஆன் என்று சொன்னார்கள் என்று செய்தி வருகிறது. செய்தியை வந்து சொன்ன காரணத்தினாலே, தகவலில் நாணயமாக இருந்ததாலே சிந்தனை கரெக்ட்டாக இருக்கும் என்று அர்த்தமா?  ரொம்ப நேர்மையான ஆளு. சிந்தனையிலே தப்பு வராதா? நோ்மையான ஆளு பொய் சொல்ல மாட்டார் என்று சொல்லுங்கள். நோ்மையான ஆளு மறைக்க மாட்டார் என்று சொல்லுங்கள். நோ்மையானவர் என்ற காரணத்திற்காக அவர் செய்கிற முடிவும் சரியாக இருக்குமா?

அப்ப தகவலை கடத்துவதற்கு நோ்மை போதும். முடிவு எடுப்பதற்கு சிந்தனை வேணும். அது தான் கருத்து வேறு தகவல் வேறு என்று அப்வும் சொன்னேன். அப்ப இதை ஒரு ஆதாரமாக காட்டுகிறார்கள். குர்ஆன் வந்து அவர்கள் சொன்னதற்காக ஏற்றுக் கொள்ளவே இல்லை. அல்லாஹ் உடைய துாதர் சொன்னார்கள் என்று இரண்டே இரண்டு அறிவிப்பாளர் வழியாக எங்களுக்கு வந்திருந்தாலும் அதை குர்ஆன் என்று ஏற்றுக் கொள்வோம். ஹதீஸை ஏற்றுக் கொள்ளும் போது குர்ஆனை ஏற்றுக் கொள்ள மாட்டோமா?

அப்ப அல்லாஹ் உடைய துாதர் சொன்னார்கள் என்பதற்கு நிறைய பேர் சொல்வது வந்து அது தற்செயலாக நிறைய போ் இருந்து விட்டார்கள். நிறைய பேர் வராமல் இருந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அல்லாஹ் உடைய துாதர் சொன்னது புரூப் ஆகுதா? நுாறு ஸஹாபிகளில் அறுவதுதான் சொல்கிறார்களா? நாற்பது ஸஹாபிகளுக்கு தெரியவில்லையா பிரச்சனை இல்லை. அப்பவும் குர்ஆன் தான் அது. அப்ப குர்ஆனை அதை ( இஜ்மாஃவை) வைத்தெல்லாம் நாங்கள் தீர்மானிக்கவே கிடையாது.

குர்ஆன் என்று தீர்மானித்தது அல்லாஹ் உடைய ரசூல். அந்த தீர்மானத்தை எடுத்து எடுத்து கடத்தினார்கள். முடிவு எடுத்து கடத்தவில்லை. இந்த வித்தியாசம் முத(லில்) விளக்கி விட்டேன். திருப்பி திருப்பி அதையே சொல்றாங்க.

அதற்கு அப்புறம் என்ன என்று கேட்டால். (குர்ஆன்) தழிழாக்கத்தில் உள்ளதெல்லாம் சொல்றாங்க விரிவாக சொல்ல வேண்டிய விஷயம். அந்த உமரை முடித்து கொள்கிறேன். பழையது பெண்டிங் இருக்கிறதனாலே.

அப்ப தலாக் விஷயத்தை வரும்பொழுது உமர் ரலியல்லாஹு அன்ஹு இஜ்மாஃ செய்தார்கள் என்று சொல்கிறார்கள். அந்த ஹதீஸை வாசிக்கிறேன் பாருங்கள். கானத் தலாகு அலாஹ அஹதி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்திலே தலாக் என்பது, வ அபீபக்கரின் அபுபக்கர் அவர்களுடைய காலத்திலே தலாக் என்பது வ ஸனதைனி மின் கிலாபதி உமர் உமருடைய காலத்திலே தலாக் என்பது தலாக்கு தலாதி வாஹிதா. மூணு தலாக்குன்னு சொன்னா ஒன்னு தான். வ கால உமர் இப்னுல் கத்தாப் அப்ப உமர் இப்னுல் கத்தாப் சொன்னார்கள். இன்னன் நாஸ கத் இஸ்தஃஜலுா மக்கள் அவசரப்படுகிறார்கள்.

பீ அம்ரின் கத் கானத் லஹும் பீ அனாதுன் எதிலே நிதானம் இருக்க வேண்டுமோ. தலாக் விஷயத்திலே. அந்த நிதானமில்லாமல் அவசரப்பட்டு மூனு தலாக் என்று சொல்கிறார்கள். பலவ் அம்லைனா அலைஹிம் அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால். என்று சொல்லி விட்டு ப அம்லாஹும் அலைஹிம் சட்டமாக்கினார்கள். இதுதான் ஹதீஸு. இதே இன்னும் இரண்டு ஹதீஸ் அதுவும் முஸ்லிம்தான் இதுவும். அடுத்தடுத்து வரக் கூடிய மூனு ஹதீஸ்தான்.

அபு ஷஹ்பா என்கிற ஒரு தாபியி வந்து இப்னு அப்பாஸ்ட்டே கேட்கிறாங்க. அதஃலமு அன்னமா கானத் தலாது துஜாலு வாஹிததன் அலாஅஹ்தின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வ அபீபக்கரின் வ தலாத மின்னி இமாரத்தி உமர்.

ரசூலுல்லாஹ் காலத்திலேயும் அபுபக்கர் காலத்திலேயும் உமருடைய மூன்று ஆண்டு காலத்திலேயும் மூன்று தலாக் என்பது ஒன்றாகத்தான் ஆக்கப்பட்டதா? ப கால இப்னு அப்பாஸ் நஅம் ஆமாம் என்று சொல்கிறார்.

இன்னொரு ஹதீஸு. அதே அபு ஷஹ்பா உடைய அறிவிப்பு தான் அலம் யகுனி தலாக்கு தலாத அஹதி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வ அபீபக்கரின் வாஹிதா.

ரசூலுல்லாஹ் காலத்திலேயும் அபுபக்கர் காலத்திலேயும் மூனு தலாக் ஒரு தலாக் என்று இருந்தது இல்லையா? அப்ப இப்னு அப்பாஸ் சொல்றாங்க கத் கானத் ராலிக. ஆமாம் அப்படித்தான் இருந்தது. ப லம்மா கான பீ அஹதி உமர்.

உமர் காலம் வந்தபொழுது தலாக்கிலே மக்கள் ரொம்ப அவசரப்பட ஆரம்பித்தார்கள். எனவே சட்டமாக்கினார்கள். இதுதான் மேட்டர். இதிலே உமரெல்லாம் இஜ்மாஃ செய்து விட்டார்களாம். (ரஷாதி வாதப்படி) அபுபக்கர் செய்த இஜ்மாஃ என்ன ஆகிறது. உமர் ரலியல்லாஹு அன்ஹு இஜ்மாஃ செய்து விட்டார்கள் இல்லையா சரி. 

இந்த ஹதீஸே உமர் செய்த இஜ்மாவை மட்டுமா சொல்கிறது. உமர் ரலியல்லாஹு அன்ஹுக்கு முன்னாடி (ரஷாதி வாதப்படி) அபுபக்கர் இஜ்மாஃ செய்து வைத்திருந்தாரே அவருடைய ஆட்சி காலத்திலே. அது மூன்று என்றால் ஒன்றுதானே. அந்த இஜ்மாவே எங்கே கொண்டு போய் வைப்பது? (ரஷாதி வாதப்படி) அதுவும் இஜ்மாஃதானே. சரி அபுபக்கர் அவர்கள் செய்ததற்கு முன்னாடி அல்லாஹ் உடைய துாதா் ரசூல் சொன்னார்களே. ரசூலுல்லாஹ் காலத்திலே எல்லாரும் அந்த கருத்திலே இருந்தார்களே.

ரசூல் சொன்னது ஒரு ஆதாரம். ரசூல் காலத்தில் எல்லாரும் இருந்தது ஒரு ஆதாரம். (ரஷாதி வாதப்படி) அபுபக்கர் இஜ்மாஃ செய்தது ஒரு ஆதாரம். இந்த மூன்றுக்கும் மாற்றமாக உமருடைய சொல் இருக்கிறது என்று நான் சொல்கிறேனா? இந்த ஹதீஸ் சொல்கிறதா? அவசரப்படுகிறாய் என்று காரணம் காட்டுகிறார்கள். காரணம் அதைத்தான் காட்டுகிறார்கள். நீ அவசரப்பட்டால் நான் விட மாட்டேன் நான் சட்டமாக்கி போடுவேன்.

அது எப்படி அபுபக்கர் இஜ்மாவை நீங்கள் மீறினீர்கள் என்று அல்லவா நீங்கள் கேட்டிருக்க வேண்டும். உமர் அவர்கள் அபுபக்கர் இஜ்மாவை எப்படி மீறலாம் என்று (நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.) உமர் அவர்கள் மட்டும்தான் ஸஹாபியை பின் பற்றுவது (என்றால் உமர் மட்டும் தானா?) உங்கள் கருத்துப்படி ஸஹாபியை மதிப்பது என்றால் உமர் மட்டும் தானா?

அவர்களுக்கு மேலான இடம் அபுபக்கர் சித்தீக் அவர்களுக்கு இல்லையா? அப்ப அபுபக்கர் காலத்திலே இருந்தது. ஒன்று இருந்தது அதை உமர் மாற்றினார் என்றால் எது இஜ்மாஃ இப்ப. முரண்பட்ட ரண்டு இஜ்மாவில் எதை நீங்கள் ஏற்றுக்  கொள்வீர்கள். ஒருத்தர் இஜ்மாஃ செய்து விட்டால் பிறகு மாற்றவே கூடாது என்கிறீர்களே. அதன் படி உமர் செய்த இஜ்மாவை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாமா?

இஜ்மாஃ செய்து விட்டால் மாற்றவே கூடாது இல்லையா? அப்ப ரசூலுல்லாஹ் உடைய ஆதாரத்தையும் வைத்து, அபுபக்கர் அவர்கள் இஜ்மாவும் செய்திருக்கும்பொழுது, அதை உமர் அவர்கள் மாற்றினார் என்றால். அந்த இஜ்மாஃ செல்லாது என்று அல்லவா சொல்ல வேண்டும் உங்கள் வாதப்படி. அப்ப அவர் இஜ்மாஃ செய்வதற்கும் ஆதாரம் ஒன்றும் காட்டவில்லை அவரு. அந்த ஹதீஸிலே. என்ன காட்டுகிறார்.

அவசரப்படுகிறாய் நிதானம் காட்ட வேண்டிய விஷயத்திலே அவசரப்படுகிறாயா? இதைச் சொன்னால் உமர் மாற்றி விட்டார். சொந்தமா மாற்றினார் (என்று சொல்கிறார்கள்) அவர் சொந்தமாக மாற்றினார் என்றுதானே இருக்கிறது. நானா சொல்கிறேன். சொந்தமாக மாற்றினார் என்றுதானே அதில் இருக்கிறது. ரசூலுல்லாஹ் சொன்னதற்கு மாற்றமாக செய்தார்கள் என்று ஹதீஸிலே இருக்கிறதா? கையிலே மடியிலே போட்டு சொல்கிறேனா?

நேரடி அர்த்தம் தானே செய்திருக்கிறேன். அப்ப இதைத்தான் நாங்கள் கேட்கிறோம் கேட்டால் உமர் இஜ்மாஃவை யாராவது மீறி இருக்கிறார்களா? என்று கேட்கிறார்கள். இப்னு அப்பாஸாவது மீறி இருக்கிறாரா? என்று கேட்கிறார்கள். அதை அறிவித்த இப்னு அப்பாஸ் அதுதான் அளவு கோலா?

உமா் ரலியல்லாஹு அன்ஹு செய்தது அதற்கு முந்தைய இஜ்மாஃவுக்கு மாற்றமாக இருக்கிறது என்று ஏன் உங்களுக்கு சிந்தனை வர மாட்டேன் என்கிறது. அல்லாஹ் உடைய ரசூலுக்கு மாற்றமாக இருக்கிறது என்று ஏன் உங்களுக்கு (சிந்தனை) வர மாட்டேன் என்கிறது. ரண்டு இஜ்மாஃ பிளஸ் ஒரு ஹதீஸு. ரசூலுல்லாஹ் (சொன்ன) ஹதீஸ் ஒன்று. ரசூலுல்லாஹ் காலத்திலே இருந்த ஒரு இஜ்மாஃ, அபுபக்கர் காலத்து இஜ்மாஃ. ரண்டு இஜ்மாஃ ஒரு நஸ்ஸு. அதற்கு மாற்றமாக பின்னாடி ஒரு இஜ்மாஃ செய்தா எப்படி?

யாரும் மறுக்கவில்லை என்றால் ஷாபி இமாம் சொல்லி விட்டாரே கருத்து. மாற்று கருத்து இருந்தாலும் வாயை மூடிக் கொண்டு இருப்பார்கள் என்று. அதுதான் மேட்டர். அப்ப இதைக் கேட்டால் பயங்கரமான விஷயம் மாதிரி. (சித்தரிக்கிறார்) இஜ்மாஃவுக்கு ஆதாரமா இது? அப்படியே இதை (ஆதாரமாக) எடுத்தாலும் நீங்களெல்லாம் கூடி எடுப்பதற்கு இது எப்படி ஆதாரமாகும். நீங்கள் சொன்னீர்களே ரண்டாவது ஒரு இஜ்மாஃ ஸஹாபாக்களை விட்டு விடுவோம்.

நாமலெ்லாம் (புதுப் புது பிரச்சனைகளை சந்திக்கிறோம்) புதுப் புது விஷயங்களெல்லாம் வருகிறது. ஆறாயிரம்(6000) ஆயத்திலேயும், நாலாயிரம்(4000) ஹதீஸிலேயும் அவ்வளவும் இருக்காது. நேரடியாக இருக்காது. நம்மதான் விளங்கணும் என்கிறீர்களே. இதற்கு எப்படி இது ஆதாரமாகும். இதுதானே கேள்வி. அப்ப இதை ஒரு மேட்டராக நான் வந்து என்ன செய்கிறேன். பதிவு பண்ணுகிறேன்.

அடுத்து இதை யாராவது மாறி இருக்கிறார்களா? (என்று கேட்கிறார்) உமர் அவர்கள் செய்ததில் தப்பு இருந்தது என்று சொன்னால். அதை வந்து பிந்தி வந்தவர்கள் மாற்றி இருப்பார்கள் இல்லையா? (என்றும் கேட்கிறார்)

நீங்கள் மேடைகளிலே அடிக்கடி இப்னு தைமிய்யா றஹ்மதுல்லா றஹ்மதுல்லா என்று சொல்வீர்களே அந்த இப்னு தைமிய்யா அவர்கள் சொல்கிறார்கள் நிறைய ஸஹாபாக்கள் மாற்றி தீர்ப்பு அளித்து இருக்கிறார்கள் என்று. அதற்கு என்ன சொல்கிறீர்கள்.

(ஸைபுத்தீன் ரஷாதி அவா்களால் புகழப்படும் இப்னு தைமிய்யா) அவர்(கள்) சொல்கிறார்(கள்) வ ஹாரல் கவ்லு பலா யல்ஸமின் தல்கதின் வாஹிதா அன்னஹும் ஹராம். சொல்லக் கூடாது. ஆனால் சொன்னால் ஒரு தலாக்தான் ஏற்படும். என்று இப்னு தைமிய்யா சொல்லி விட்டு வஹாரல் கவ்லு மன் கூலுன் அன் தாயிபதி மினஸ் ஸலபி, வல் கலபி, மின் அஸ்ஹாபி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

ரசூலுல்லாஹ் உடைய தோழர்களிலே கலபு, ஸலபு எல்லார்களிடமிருந்தும் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிஸ்லு சுபைரி பின் அவாம்,

சுபைரி இப்னு அவாமும் உமர் உடைய சொல்லை மறுத்து இருக்கிறார்கள். மாற்றி பத்வா கொடுத்தார்கள். அப்துர்றஹ்மான் இப்னு அவ்பு அவர்கள் மாற்றி பத்வா கொடுத்தார்கள்.

வஇர்வ அன் அலிய்யின் வ இப்னு மஸுதின் வ இப்னு அப்பாஸின் அல் கவ்லானி நீங்கள் இப்னு அப்பாஸ் மறுத்தாரா என்று கேட்டீர்களே? இப்னு அப்பாஸ் ரண்டும் சொல்லி இருக்கிறாரு. மாற்றினார் என்று ஒரு சொல் இருக்கிறது. அதை ஒட்டி செய்தார் என்றும் ஒரு சொல் இருக்கிறது. ரண்டு கவ்ல் இருக்கிறது.

இப்னு மஸ்ஊதுக்கு ரண்டு கவ்ல் இருக்கிறது. அலி அவர்களுக்கு ரண்டு சொல் இருக்கிறது. அதற்கு அப்புறம் வஹுவ கவ்லு கதீரிம் மினத் தாபியீன வமன் பஃதஹும் தாபியீன்கள் அதற்கு பிந்தி வந்த ஆட்களுடைய அதிகமான பேர்களுடைய சொல்லும் அதுவாகத்தான் இருக்கிறது. கஸீர் அதிகமான பேரு. மிஸ்ல தாவூஸின். தாவூஸ் இந்த ஹதீஸை அறிவிக்கிறாரு.

இப்னு அப்பாஸ் இடமிருந்து அறிவிப்பவர் தாவூஸ்தான். இப்னு அப்பாஸ் இடமிருந்து அறிவிக்கிற தாவூஸ் வந்து உமர் செய்தது சரி இல்லை. அபுபக்கர் இதைத்தான் ஏற்றுக் கொள்ளணும் என்று பத்வா கொடுத்து இருக்கிறார்.

வ கல்லாஸ் இப்னு அம்ரு பத்வா கொடுத்து இருக்கிறார். வ முஹம்மது இஸ்ஹாக் வந்து பத்வா கொடுத்து இருக்கிறார். இவையெல்லாம் இப்னு தைமிய்யா உடைய வாசகம். தாவூது என்பவர் சொல்லி இருக்கிறார். வ அக்ஸரீ அஸ்ஹாபிஹி. அவா்களுடைய அதிகமான தோழர்கள் இதைச் சொல்லி இருக்கிறார்கள். அப்ப என்ன விளங்குகிறது.

உமர் ரலியல்லாஹு அன்ஹு காலத்தில் செய்யப்பட்ட அந்த முடிவு பின்னரும் மறுக்கப்பட்டு விட்டது. முன்னர் செய்த முடிவுக்கும் மாற்றமாக இருக்கிறது. என்று சொல்லி அதை நாங்கள் விமர்சித்ததற்கு இஜ்மாஃ வுக்கு ஆதாரமாக காட்டுகிறாரு.

நாங்களெல்லாம் என்ன செய்கிறோம் உமர் சொன்னதை அப்படியே இஜ்மாஃ ஏற்றுக் கொண்டிக்கிறோம். அதுதான் ஏன் ஏற்றீர்கள் என்று கேட்கிறேன். நீங்கள் ஏற்றுக் கொண்டு இருப்பது ஆதாரமா? ஏன் ஏற்றீர்கள் இந்த அபுபக்கர் இஜ்மாஃவுக்கு பதிலை சொல்லி விட்டு ஏற்றுக் கொள்ளுங்கள்.

ரசூலுல்லாஹ் உடைய ஹதீஸுக்கு பதிலை சொல்லி விட்டு ஏற்றுக் கொள்ளுங்கள். உமருடைய தீர்ப்பபை மாற்றி பத்வா கொடுத்தார்களே ஸஹாபாக்கள் அவர்களெல்லாம் யாரு? இஜ்மாவை மறுத்த வழி கேடர்களா? இஜ்மாவை மறுத்த கெட்டவா்களா? சுன்னத் ஜமாஅத்துக்கு முதல் எதிரிகளா?

அப்ப இதுதான் உங்களுடைய பாயிண்டு பாருங்கள். ஒருத்தருமே எதிர்க்கவில்லை (என்பது)  எல்லாமே தப்பு தப்பான தகவல்களையா சொல்லிக் கொண்டிருக்கிறாரு.(மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி) எல்லாமே தவறு தவறான விஷயங்களாக இருக்கிறது. அதனாலே உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய புகழுக்கெல்லாம் இது களங்கம் கிடையாது.

இதெல்லாம் இருக்கு, நிறைய நடந்து இருக்கு. கவனித்துப் பார்த்தால் ஸஹாபாக்களுக்குள் முன்னே பின்னே இருக்கும். அவர்களுடைய தியாகத்திற்காக வேண்டி அல்லாஹ் முன்னே பின்னே இருந்தாலும் மன்னிப்பான். அவர்கள் சொர்க்கவாசிகள் என்பதை இது மாற்றாது. அல்லாஹ் உடைய ரசூல் நற் செய்தி சொன்ன பிறகு மாறாது.

அவர்கள் செய்த தவறு தவறாக இருந்தாலும் அல்லாஹ் மன்னித்து அந்த அந்தஸ்த்தை கொடுப்பான் என்று புரிந்து கொள்ள வேண்டுமே தவிர. ரசூலுல்லாஹ்வுக்கு மாற்றமாக, அபுபக்கருக்கு மாற்றமாக செய்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று சொல்லி அபுபக்கரையும் அல்லாஹ் உடைய ரசூலையும் புறக்கணிப்பது எப்படி நியாயமாகும். இதை நீங்கள் என்ன செய்யணும் சிந்திக்க வேண்டும்.

அடுத்ததாக வந்து. இந்த ஸல்லல்லாஹு அலைக்க என்று எல்லாரும் சொல்லலாமா என்று கேட்கும்பொழுது ஸஹாபாக்கள் வந்து ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெயரை பயன்படுத்தும்பொழுது அப்படி சொல்லி இருக்கிறார்கள். என்று சொல்லி இருக்கிறோம். அதே நேரத்தில். ஸலவாத்து சொல்வதைப் பற்றி கேள்வி வரும்பொழுது இந்த ஸலவாத்தை சொல்லுங்கள் கைப நுஸல்லி அலைக்க யா ரசூலல்லாஹ் என்று கேட்கும்பொழுது.
(நேரம் முடிந்து விட்டது)


Comments

Unknown said…
பீஜே அவர்கள் ஹஜ் ட்ராவல்ஸ் நடத்தினாலோ ,அல்லது அவர் பெயரில் நடத்துவதற்கு அனுமதி கொடுத்தாலே போதும் வேறு எந்த வேலையும் அவர் செய்யவேண்டாம் .அவர் பெயரில் ட்ராவல்ஸ் நடத்துபவர்கள் கமிசனாக லட்சகணக்கில் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் .
பீஜே அவர்கள் தனது பெயரில் ரியல் எஸ்டேட் நடத்தினாலோ அல்லது நடத்த அனுமதி கொடுத்தாலோ கோடிகணக்கில் அவருக்கு பங்கு கொடுக்க ஆட்கள் தயாராக உள்ளனர்.
பீஜே ஜுவல்லர்ஸ் என்று சென்னையில் ஆரம்பித்தால் தமிழகம் முழுவதும் உள்ள கொள்கை சகோதரர்கள் அனைவரும் ஒருகிராம் கூட வெளியே வாங்காமல் அவரை நம்பி பணத்தை அனுப்பி வாங்குவார்கள் .அதன் மூலம் தினமும் கிலோ கணக்கில் அவரால் வியாபாரம் பண்ண முடியும் .
ஆனால் மார்க்கம் என்ற பெயரில் அவர் சமுதாயத்தில் சம்பாதித்த நற்பெயரை காசு சம்பாதிக்க அவர் தயாரில்லை .
அவருக்கு எதிராக பேசி அதிகம் சம்பாதித்தவிட்டதாகவும் நான் நல்ல செல செழிப்புடன் இருக்க பீஜெவே காரணம் என்றும் சைபுத்தின் ரசாதி திருச்சி விவாதத்தில் ஒப்புக் கொண்டார்.
இவ்வாறு இருக்க ,பல பொய்களையும் மோசடிகளையும் சொல்லி ஹஜ் ட்ராவல்ஸ் நடத்தி வரும் சம்சுதீன் காசிமி போன்றவர்கள் பீஜேயின் பெயரை கூட சொல்ல தகுதியற்றவர்.
நான் அவருக்கு செய்த ஒரு உதவிக்காக [பொருளாதார உதவி அல்ல ] அவரை பார்க்க வரும் செலவந்தர்களைவிட மதுரையில் மற்றும் நாகர்கோவிலில் எனக்கு முக்கியத்துவம் கொடுத்து மார்க்க தேடல்களுக்கு இரவு 1வரை விளக்கம் தருவார்.உணவும் அவர் செலவிலே வாங்கித் தருவார்.அதற்கு முன்பு மீலாது விழாகளுக்காகவும் மற்ற மார்க்க விசயங்களுக்ககவும் ஆலிம்களுடன் பயணித்துள்ள எனக்கு அவரின் இந்த பழக்கம் புதுமையாகவே இருந்தது

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.