தர்காவாதிகளோடு தியாகத்திருநாள் தொழுகையா?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கடையநல்லூரில் உள்ள காயிதே மில்லத் திடலில் பெருநாள் தொழுகை நடத்துவதில் ஒவ்வொரு பெருநாளின் போதும் போட்டி நிலவுகிறது. அதிலும் சைபுல்லாஹ் ஹாஜா, 
அண்ணன் ஜமாத்திலிருந்து பிரிந்த பின்னால் போட்டி வலுவாக உள்ளது. இந்நிலையில் நாளை[7 .11 .2011 ] நடைபெறவுள்ள தியாகத்திருநாள் தொழுகையை இந்த திடலில் நடத்துவதில் போட்டி ஏற்பட்டு, 04.11.2011 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 4.30 மணியளவில் தென்காசி கோட்டாட்சித் தலைவர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் முடிவாக, காலை
6 .45 முதல் 7 .45  வரை அண்ணன் ஜமாஅத்தும் மக்தூம் ஞானியார் பள்ளிவாசல் அமைப்பினரும் சேர்ந்து தொழுகை நடத்திக் கொள்வது என்றும், இதற்கு பின்னால் ஏனைய அமைப்பினர் தொழுகை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கோட்டாட்சியர் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவு பற்றிய கடிதம்;

இந்த தீர்மானத்தில் அண்ணன் ஜமாஅத்தின் மாவட்ட பொருளாளர் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் நாங்கள், மக்தூம் ஞானியார் எனும்  கூட்டத்தாருடன் இணைந்து பெருநாள் தொழுகை நடத்திக் கொள்கிறோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். இதில் நமக்கு என்ன சந்தேகம் என்றால்,
இதே திடலில் தனித்துத்தான் தொழுகை நடத்துவோம் என்று இவ்வளவுகாலம் அடம்பிடித்து செயல்படுத்தி வந்த அண்ணன் ஜமாஅத் இன்று இன்னொரு பிரிவினருடன் அதுவும் தவ்ஹீத் கொள்கைக்கு மாற்றமான  பிரிவுடன் இணைந்து தொழுகை நடத்தும் நிலைக்கு சென்றது ஏன்?
மக்தும் ஞானியார் பள்ளிவாசல் நிர்வாகம் தவ்ஹீத் கொள்கைக்கு உட்பட்டதா? 
மக்தூம்ஞானியார் பள்ளிவாசலோடு ஒத்துப்போக  அனுமதிக்கும் ததஜ தலைமை, தவ்ஹீத் கொள்கையுடைய சைபுல்லாஹ்வுடன் சேர்ந்து தொழுகை நடத்தமாட்டோம் என முரண்டு பிடிப்பது தான் குர்ஆன், ஹதீஸ் வழிமுறையா?
இந்த தொழுகையில் குத்பா நடத்தவிருப்பது மக்தூம் ஞானியார் பள்ளிவாசல் இமாமா? அல்லது அண்ணன் ஜமாத் இமாமா?
இந்த தொழுகையில் இமாமத் செய்வது அண்ணன் ஜமாஅத் இமாமா? அல்லது மக்தூம் ஞானியார் பள்ளிவாசல் இமாமா? 
தக்பீர் 7 +5  அல்லது 4 +3  ..?
நபிவழிப்படி தொழுகைக்கு பின்னால் உரையா?  அல்லது மத்ஹப் படி உரைக்குப் பின்னால் தொழுகையா?
இந்த சந்தேகங்களுக்கு அண்ணன் ஜமாஅத் பதில் சொல்லுமா? இல்லை என்றால் வழக்கம் போல மக்தூம் ஞானியார் பள்ளிவாசல் கூட்டத்தாரை உலகக் கணக்கில் முஸ்லிம்கள் என்று உதார்விடுமா? ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. எங்களுக்கு தேவை என்றால் தர்காவாதிகளையும் மேடை ஏற்றுவோம். அவர்களோடு சேர்ந்தும் தொழுவோம். ஆனால் மறந்தும் கூட எங்கள் ஜமாஅத்தில் இல்லாத ஏகத்துவ வாதிகளை ஏறெடுத்தும் பார்க்கமாட்டோம் என்பதுதான் அண்ணன் ஜமாத்தின் ஏகோபித்த கொள்கை என்பதுதான் அது.
நன்றி http://iyakkangal.blogspot.ae/2011/11/blog-post_996.html

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.