நாம் நிற்பது நாற்சந்தியில்.....?

from Abdul Jabbar hide details Feb 1 (3 days ago)
reply-to TAFAREG@yahoogroups.com
to tafareg@yahoogroups.com
date Feb 1, 2008 10:37 AM
நான் எழுதிய ஒரு கட்டுரையில், " இன்றைய முஸ்லிம் சமூகம் வலப்பக்கம் திரும்புவதா, இடப்பக்கம்
போவதா, நேரே செல்வதா அல்லது வந்த இடத்துக்கே திரும்புவதா என்று புரியாமல் நாற்சந்தியில் நின்று
தவித்துக்கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தேன். இதற்கு உடனடியாக ஒரு மாற்றம் வேண்டும் என்று
விரும்பினேன் - ஆதங்கப்பட்டேன். ஆனால் அது நடப்பதுபோல் தெரியவில்லை என்பது மட்டுமல்ல;
நடப்பதற்கான அறிகுறிகள் கூடத் தென்படக்காணோம்.

மகள் கட்டுமான நிறுவனத்தின் அதிபர் அமீர் ஜவஹர், தமிழன் தொலைகாட்சியில், "ஒற்றுமையை நோக்கி.."
என்கிற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நம் முஸ்லிம் பிரமுகர்கள் கலந்து கொண்டு ஒற்றுமையின்மையின் காரண காரியங்கள், அது எற்படுவதற்கான வழி
வகைகள் என்று பல தரப்பட்ட கருத்துக்களை கூறி வருகிறார்கள் இதில் என்னுடைய பேட்டியும் இரண்டு
பகுதிகளாக இடம் பெற்றுள்ளது

இந்த நிகழ்ச்சி பற்றி கருதுச் சொன்ன மவுலவி பீஜே இதை ஒரு கோமாளிக்கூத்து என்று ஆரம்பத்தில்
கூறியதாக வருத்தப் பட்ட அமீர், பிறகு பீஜே தன் கருத்தை மாற்றிக் கொண்டதாகவும் சொன்னார்.

ஆனால் சில தினங்களுக்கு முன் வின் தொலைக்காட்சியில் நடந்த அவரது 'கேள்வி-பதில்'நிகழ்ச்சியில்
"பிரிவு ஏற்படத்தான் செய்யும். ஒரே குழுவாக இருப்பது நடக்காத காரியம். நடப்பது தவறு. அதைச்சுட்டிக்
காட்டி நல்லதுகளை எடுத்துச் சொல்கிறோம். அப்போ கொஞ்சம் பேர் அங்கிருந்து பிரிந்து நம்மகிட்டே
வரத்தான் செய்வாங்க. அதைத் தடுக்க முடியாது. அப்படி பிரிஞ்சி, பிரிஞ்சி வந்து கடைசியிலே நாமெல்லாம்
ஒண்ணாயிடுவோம். ரசூலுல்லா காலத்தில் குறைஷிகள் ஒண்ணாத்தான் இருந்தாங்க, பிறகு பிரிஞ்சி, பிரிஞ்சி
வந்து கடைசியிலே ஒண்ணாயிடல்லியா" என்று ஒரு வினோதமான காரணத்தை முன் வைத்ததன் மூலம்
தன்னைப் பொறுத்தவரை ஒற்றுமைக்கான வாசற்கதவை இழுத்து மூடி விட்டார் என்றே கொள்ள வேண்டியதாக இரூக்கிறது.

இன்னொரு நிகழ்ச்சியில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலர் ஹக்கிம் சத்தார்
பாப்ரி மஸ்ஜித் இடிப்பை எதிர்த்து நடைபெற்ற பேரணியைக் குறித்துப் பேசுகையில், "உணர்ச்சி வசப்பட்டு
என்ன பிரயோஜனம் ? அறிவு பூர்வமாகச் சிந்தியுங்கள். முஸ்லிம் லீக் காரர்கள் அறிவு பூர்வமாகச் சிந்திக்கக்
கூடியவர்கள்" என்று தங்கள் கையாலாகத் தனத்துக்கு சப்பைக்கட்டு கட்டினார். பொதுவாக முஸ்லிம் லீக்
கட்சியினர் Easy-chair intellectuals - சாய்வு நாற்காலி சண்டப்பிரசங்கிகள் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது.
அதை நிரூபிப்பது போலவே ஹக்கிம் சத்தாரின் பேச்சும் அமைந்தது. அதைவிட கலிமாச் சொன்ன ஒவ்வொரூ முஸ்லிமும் முஸ்லிம் லீக் தான் என்று அவர் அடித்த ஜோக்கை நினைத்து யாரும் வாயால்(?) சிரிக்க மாட்டார்கள் என்பது என்னவோ உண்மை.

ஒரு 'இஃப்தார்' நிகழ்ச்சி. நான் தொகுத்து வழங்கினேன். அநேகமாக எல்லா முஸ்லிம் தலைவர்களும் ஆஜர்.
எல்லோருமே ஒற்றுமையை வலியுறுத்தியே பேசினார்கள். கடைசியாக தேசீய லீகைச் சேர்ந்த அப்துல் காதர்
என்கிற பெரியவர் பொட்டார் ஒரு குண்டு, "என்ன எல்லாரும் ஒத்துமை ஒத்துமைன்னு பேசிக்கிட்டு
இருக்கீக. எல்லாரும் அவங்க, அவங்க அமைப்பை கலச்சிப்புட்டு எங்க கட்சிக்கு வந்துடுங்க எல்லாம் சாரியாப் போகும் ஒத்துமை வந்துடும் என்றார்." - கனவு காண்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா ?

இப்போது அந்த தேசிய லீகுக்குள்ளேயே பிளவு. 'கோனிக்கா' பஷீர், தான் தான் இன்னமும் தலைவர் என்று
சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் கட்சியின் பெரும்பாலான முக்கியஸ்தர்கள் செய்யது இனாயத்தூல்லா
சாகிபை தலைவராக அறிவித்துள்ளார்கள். இவர் பல்வேறு இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்தும்
முகமாக எடுக்கப்பட்ட முயற்சிகளில் முனைந்து முன் நின்றவர். தன்னுடைய நோக்கம் பதவியல்ல;
ஒற்றுமைக்கான தொடர்ந்த முயற்சிதான் என்று தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார்.

ஒற்றுமை பற்றி ஒரு தலைவரிடம் நான் பேசியபோது, "நானும் ஒற்றுமையின் அவசியத்தை உணர்கிறேன். ஆனால் அபூ ஜஹில்களோடு யாருங்க சேருவா" என்று என்னை அதிர வைத்தார்.

நான் இதற்கு முன்பு 'தஃப்ரகில்' எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து வந்த பின்னூட்டங்கள் ஒற்றுமை என்கிற
விஷயத்தில் மக்கள் எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எந்த அளவுக்கு ஆசைப்படுகிறார்கள். ஆதங்கப்
படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தலைவர்கள் மத்தியிலோ அல்லது தொண்டர்கள் மத்தியிலோ இப்போதுள்ள நிலையிலிருந்து மாறுவதற்கான எந்தவிதமான அறிகுறிகளையும் காணோம்.

ஆக, We are back to square one - நாம் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி இருக்கிறோம். and we are at the cross-roads -
நம் சமூகம் நிற்பது நாற்சந்தியில்.

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

Comments

Irai Adimai said…
அஸ்ஸலாமு அலைக்கும்

உங்கள் எதிர்பார்ப்பு இன்று இந்த சமுதாயத்தின் எதிர்ப் பார்ப்பு.இன்ஷா அல்லாஹ் இந்த சமுதாயம் எதிரிகளின் பிடியில் இருந்து பாதுகாக்கப் பட்டு என்றும் ஒட்டுமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்

அன்புடன்
Imam Ali
Unknown said…
1985 க்கு முன்னாலே எல்லாம் ஒன்றாகத்தான் இருந்தது. மத்ஹபுகள் தேவையா? அல்லாஹ் ஒருவன், மார்க்கம் ஒன்று, குர்ஆன் ஒன்று மத்ஹபு மட்டும் நான்கா? என்று 1985 க்குப்பிறகு கேட்டவர்களால்தான் ஒற்றுமை சிதைந்து இருக்கிறது. இப்படி கேட்டவர்கள்தான் மார்க்கத்தில் குளறுபடி செய்து கொண்டிருக்கிறார்கள். மத்ஹபு மட்டும் நான்கா? என்று கேட்டவர்களால் ஈது பெருநாளைக்கூட ஒரே நாளில் ஒன்றுபட்டு தொழ முடியாமல் குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

மார்க்கத்தில் இப்படியென்றால் அரசியலில், ஜாக் ஜமாஅத் ஆதரவு மற்றும் அபிமானம் கொண்ட தமுமுக திமுக அணியிலும், தவ்ஹிது ஜமாஅத் அதிமுக அணியிலும் இருந்து கொண்டு சமுதாய தலைவர்களை திட்டி டி.ராஜேந்தர் புகழ் பாடவேண்டியிருக்கிறது.

இவர்கள் முஸ்லிம் லீக்கை பேசுகிறார்கள். முஸ்லிம் லீக்கார்கள் என்ன மார்க்கத்தையா பேசுகிறார்கள் இல்லை இந்த ஹதிஸ் பலமானது இந்த ஹதிஸ் பலஹீனமானது என்றா மேடை போட்டு பேசி பிரபலமானார்கள்?

ஜாக் ஜமாஅத், தமுமுக மற்றும் தவ்ஹிது ஜமாஅத்துக்காரர்கள்தானே 'இந்த ஹதிஸ் பலமானது இந்த ஹதிஸ் பலஹீனமானது' என்று மேடை போட்டு பேசி விளம்பரம் தேடிக்கொண்டவர்கள்.

முஸ்லிம் லீக்கார்கள் அரசியல்தானே பேசினார்கள். அவர்கள் பிரிந்தால் என்ன? ஒன்றாக இருந்தால் என்ன? கடந்த சட்டமன்ற தேர்தலிலே இவர்களுக்கு கிடைத்த மூன்று தொகுதியை இரண்டாக குறைத்த மாபெரும் சாதனையை புரிந்த இயக்கம்தானே தமுமுக. இதை தமிழக முஸ்லிம்கள்களால் சுலபமாக மறந்துவிட முடியாது.

ஆனால் ஜாக் ஜமாஅத், தமுமுக மற்றும் தவ்ஹிது ஜமாஅத்துக்காரர்கள் சொல்லிக்கொள்வார்கள் நாங்கள் ஒற்றுமைக்குண்டான வழியை தேட பல இயக்கங்களை அணுகும்போதெல்லாம் எங்களுக்கு கசப்பான அனுபவமே ஏற்பட்டது என்று.

'இந்த ஹதிஸ் பலமானது இந்த ஹதிஸ் பலஹீனமானது' என்று ஆய்வு செய்து மார்க்கத்தை பின்பற்றக்கூடியவர்களுக்கு சமுதாயத்திற்காக வேண்டி வெளிப்படையாக விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். நாங்கள் எங்கள் தலைமைப்பதவியைக்கூட விட்டுக்கொடுக்க தயாராகத்தான் இருந்தோம் என்றால் எந்த விகிதத்தில் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தீர்கள் என்பதை உண்மை ஈமான்தாரியாக சமுதாயத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஈது பெருநாளைக்கூட ஒரே நாளில் ஒன்றுபட்டு தொழ முடியாதவர்களின் ஒற்றுமை முயற்சி எப்படியிருக்குமென்றால் இல்லாத ஊருக்கு வழியைக்கேட்ட கதையாகத்தான் இருக்கும்

ரிபாயி
Mohamed Rifayee... அவர்களே மொட்டையாக விமர்சிக்கும் பழக்கத்தை விடுங்கள். முதலில் உங்கள் முகவரியை வெளியிடுங்கள்.
Unknown said…
பஸ்லுல் இலாஹி அவர்களே,
உங்கள் முகவரி எனக்கும்தான் தெரியாது. அதுவா முக்கியம்? சொன்ன விசயம் தவறா? சரியா? என்று பாருங்கள். தவறு என்றால் ஆதாரம் கொடுங்கள். சொன்ன விசயம் சரிதான் என்றால் அதற்கு என்ன பரிகாரமோ அதை செய்யுங்கள்

பிளாக்கில்தானே விவாதிக்கிறோம் அதற்கு ஏன் முகவரி? பாதுகாப்பு கருதிதான் முகவரி கொடுக்கவில்லை. அதற்காக வேண்டி ஊர் பெயர் தெரியாதவரே அஸ்ஸலாமு அலைக்கும் என்று தங்கள் பாணியில் சொல்ல வேண்டாம். அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தை புனிதமானது. ஊர் பெயர் தெரியாதவரே என்பது அவ்வளவு நாகரிகமான வார்த்தை அல்ல.

ஏற்கனவே 'மவுலிது ஓதுவதால் நன்மையில்லை நரகமே கிடைக்கும். நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள்.' என்ற தங்களின் கட்டூரைக்கு என்னுடைய கருத்தை பதிவு செய்யும்போது என்னுடைய மெயில் முகவரியையும் சேர்த்துத்தான் பதிவு செய்திருக்கிறேன்.

பஸ்லுல் இலாஹி அவர்களே,
எதையும் மொட்டையாக விமர்சிக்கும் பழக்கமோ, ஒரு குற்றத்தை தானே செய்து கொண்டு அதை வசதியாக மறைத்து பிறர் மீது மட்டும் குற்றம் சுமத்தி இஸ்லாத்தில் உண்டா என்று கேட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் பழக்கமும் எனக்கு கிடையாது.

இஸ்லாமியப்பணிக்கு கூலி கொடுத்தது 'ஜாக் ஜமாஅத், அந்த கூலியைப்பெற்றது தவ்ஹிது ஜமாஅத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன். கூலிக்கு நாவசைத்த கூட்டம், கூலிக்காக வேண்டி பிறர் மீது குற்றம் சுமத்திய கூட்டம், பிறர் மீது இஸ்லாமியப்பணிக்கு கூலி வாங்கலாமா? கொடுக்கலமா? என்று வீர வசனம் பேசிய கூட்டம் 'ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத்தைச் சேர்ந்த அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளக்கூடியவர்கள். இதற்கு தாங்கள்தான் ஆதாரம்.

கே.எம்.காதர் முகைதீன் தலைமையிலான முஸ்லிம் லீக்குக்கு கிடைத்த மூன்று தொகுதியை இரண்டாக குறைத்த மாபெரும் சாதனையை புரிந்த இயக்கம்தானே தமுமுக என்று சொன்னதற்கு தமுமுக வார இதழான 'மக்கள் உரிமை' ஆதாரம்.

ஜாக் ஜமாஅத், தமுமுக மற்றும் தவ்ஹிது ஜமாஅத்துக்காரர்கள்தானே 'இந்த ஹதிஸ் பலமானது இந்த ஹதிஸ் பலஹீனமானது' என்று மேடை போட்டு பேசி விளம்பரம் தேடிக்கொண்டவர்கள் என்று சொன்னதற்கு ஏகத்துவம், அல் ஜன்னத், அல் நஜாத் மற்றும் அல்ஸிராஜ் போன்ற மாத இதழ்களே ஆதாரம்.

1985 க்கு முன்னாலே எல்லாம் ஒன்றாகத்தான் இருந்தது. மத்ஹபுகள் தேவையா? அல்லாஹ் ஒருவன், மார்க்கம் ஒன்று, குர்ஆன் ஒன்று மத்ஹபு மட்டும் நான்கா? என்று 1985 க்குப்பிறகு கேட்டவர்களால்தான் ஒற்றுமை சிதைந்து இருக்கிறது. இப்படி கேட்டவர்கள்தான் மார்க்கத்தில் குளறுபடி செய்து கொண்டிருக்கிறார்கள். மத்ஹபு மட்டும் நான்கா? என்று கேட்டவர்களால் ஈது பெருநாளைக்கூட ஒரே நாளில் ஒன்றுபட்டு தொழ முடியாமல் இருக்கிறார்கள். அல்லாஹ் ஒருவன், மார்க்கம் ஒன்று, குர்ஆன் ஒன்று ஆனால் நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள்கள் மட்டும் ஜாக் ஜமாஅத்துக்கு முதல் நாளும் தவ்ஹிது ஜமாஅத்துக்கு மறு நாளா? ஒரே நாளில் பெருநாள் கிடையாதா? என்று கேட்டதற்கு ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத்தைச்சேர்ந்த ஒட்டுமொத்த தொண்டர்களே ஆதாரம்.

மீண்டும் சொல்கிறேன் ஈது பெருநாளைக்கூட ஒரே நாளில் ஒன்றுபட்டு தொழ முடியாதவர்களின் ஒற்றுமை முயற்சி எப்படியிருக்குமென்றால் இல்லாத ஊருக்கு வழியைக்கேட்ட கதையாகத்தான் இருக்கும்.

தங்களுக்காக வேண்டி என்னுடைய மெயில் முகவரியை மீண்டும் பதிவு செய்கிறேன். rifayee74@gmail.com

ரிபாயி
Unknown said…
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களே,
தாங்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர். ஏன் கேட்கிறேன் என்றால் ஒற்றுமைக்கு முயற்சி மேற்கொள்ளக்கூடியவர் நடுநிலைவாதியாக இருக்க வேண்டும். நாம் நிற்பது நாற்சந்தியில்.....?
என்ற தங்களின் கட்டூரை அப்படியில்லை. நான் சொல்வது பொய் என்றால் அதை நீங்கள் இன்னொரு முறை படித்துப்பாருங்கள் விளங்கும்.

ஒற்றுமைக்கு முயற்சி மேற்கொள்பவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலர் ஹக்கிம் சத்தார் பேச்சை மட்டும் வெளிப்படுத்த வேண்டும். அதை விடுத்துவிட்டு 'வாயால்(?) சிரிக்க மாட்டார்கள் என்பது என்னவோ உண்மை' என்று வாய்ஜாலமிடுபவர் ஒற்றுமைக்கு முயற்சி மேற்கொள்பவரா?

ஒற்றுமைக்கு முயற்சி மேற்கொள்பவர் தேசிய லீக் மற்றும் தவ்ஹிது ஜமாஅத்தை சொன்ன திருவாளரே! அவைகளை விமர்சித்த பெரியவரே!

'ஒற்றுமை பற்றி ஒரு தலைவரிடம் நான் பேசியபோது, 'நானும் ஒற்றுமையின் அவசியத்தை உணர்கிறேன். ஆனால் அபூ ஜஹில்களோடு யாருங்க சேருவா' என்று என்னை அதிர வைத்தார்'

என்று சொன்ன கண்ணியவானே! அந்தத் தலைவரின் பெயரை வெளிப்படுத்தவில்லையே ஏன்? இதுதான் ஒற்றுமைக்கு முயற்சி மேற்கொள்பரின் நடுநிலைமையான செயலா?

உண்மையிலேயே ஒற்றுமைக்கு முயற்சி மேற்கொள்பவராக நீங்கள் இருந்நிருந்தால் எந்த இயக்கத்தின் தலைவர் பெயரோடு வெளியிட்டிருப்பீர்கள். இல்லையென்றால் மற்ற இயக்கத்தின் தலைவர், இயக்கத்தின் பெயரையும் மறைத்துயிருப்பீர்கள். நீங்கள் அப்படியில்லையே.

'ஒற்றுமை பற்றி ஒரு தலைவரிடம் நான் பேசியபோது, 'நானும் ஒற்றுமையின் அவசியத்தை உணர்கிறேன். ஆனால் அபூ ஜஹில்களோடு யாருங்க சேருவா' என்று என்னை அதிர வைத்தார்' என்று சொன்ன அந்தத் தலைவர், எந்த இயக்கம் என்பதை யாருக்கும் அஞ்சாமல் அல்லாஹ் ஒருவனை பயந்து இந்த பஸ்லுல் இலாஹி பிளாக்கிலேயே வெளியிடுங்கள்.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு முஸ்லிம் லீக் ஒன்றுதான் இருந்தது. அதுதான் இடஒதுக்கீட்டிற்காக போராடிய கட்சியும் அதுதான். இதற்கு ஆதாரம் வேண்டுமென்போர் தமிழக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்த தமிழக முதலமைச்சர் கருணாநிதியைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தமுமுக, தவ்ஹிது ஜமாஅத்தால் தான் இடஒதுக்கீடு கிடைத்தது என்று சொல்லக்கூடியவர்களும் தமிழக முதலமைச்சர் கருணாநிதியைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தமுமுக, தவ்ஹிது ஜமாஅத்தால் தான் இடஒதுக்கீடு கிடைத்தது என்றால் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் சொல்வது போல யாரும் வாயால்(?) சிரிக்க மாட்டார்கள் என்பது என்னவோ உண்மை.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு முஸ்லிம் லீக் ஒன்றுதான் இருந்தது. அதற்கு பிறகு அமைப்பு ஆரம்பித்தவர்களெல்லாம் சுய ஆதாயத்திற்காக அமைப்பு ஆரம்பித்தவர்களேயல்லாமல் சமுதாயத்திற்காக அல்ல. அவர்கள் உண்மையிலேயே ஒற்றுமை விரும்பிகளாக இருந்திருந்தால் முஸ்லிம் லீக்கிலேயே இருந்திருப்பார்களே தவிர மற்ற இயக்கத்தை ஆரம்பித்து ஒற்றுமையை சிதைத்திருக்கமாட்டார்கள்.

ஒற்றுமையை சிதைத்தது-இயக்கங்களை ஆரம்பித்து அதன் தலைவர்களாக இருக்கக்கூடியவர்கள்தான். முதலில் அந்த இயக்கங்களை கலைக்கட்டும். பிறகு பேசட்டும் ஒற்றுமையைப்பற்றி.

நான் தலைவராகத்தான் இருப்பேன் எங்கள் இயக்கத்தின் கீழ்தான் மற்ற இயக்கம் வரவேண்டுமென்றால் அது நடக்காதகாரியம்.

ஒற்றுமையை சிதைத்தது, இயக்கங்களை ஆரம்பித்து அதன் தலைவர்களாக இருக்கக்கூடியவர்கள் அல்லாஹ்வுக்காவது பயப்படட்டும்

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.