அபு அப்துல்லாஹ்வுக்கு பயந்த சவடால் மன்னர்.

அன்புள்ள 'அந்நஜாத்' ஆசிரியர் கே.எம்.ஹெச். அபுஅப்துல்லாஹ் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
26-06-2004 அன்று பி.ஜைனுல் ஆபிதீன் தங்களை ஒரே மேடையில் சந்திப்பதாக ஒப்புக் கொண்டு விட்டு அந்த தேதியில் புறமுதுகிட்டு ஓடி விட்டார் என்றும் அவரது எடுபிடிகளில் இருவரை அனுப்பி வீண் விவாதம் செய்ய வைத்தார் என்றும் அறிந்தோம்.

உங்கள் மீது குற்றச்சாட்டுக் கூறிய பி.ஜே. அதை ஒரே மேடையில் நிரூபிக்கிறேன் என்று கூறிவிட்டு 17 வருடங்களாக காலம் கடத்தி வந்தார். 26-06-2004 அன்று தான் வராமல் பயந்து எடுபிடிகளை அனுப்பியதன் மூலம் அவர் தன்னை பொய்யர் என்று மீண்டும் அடையாளம் காட்டி விட்டார். இது சம்பந்தமான விரிவான விளக்கம் வரக்கூடிய ஜுலை மாத ஷஅந்நஜாத்|தில் வெளியிடுயிட்டு அவரது முகத்திரையை கிழிப்பீர்கள்.

இருந்தாலும் பி.ஜே.யின் சுய ரூபத்தை முதன் முதலில் தெரிந்த அனுபவமிக்க நீங்கள் அவரிடம் இப்பொழுது தோற்று விட்டீர்கள் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டேயாகவேண்டும். ஒரே மேடை என்பதும் ஆதாரங்களை தவர விட்டவர்கள் என்றால் விரட்டி பிடிப்பதும். ஆதாரத்துடன் உள்ளவர்களைக் கண்டு அரண்டு ஓடுவதுமாக உள்ள அவரை அடையாளம் காட்ட வேண்டிய வாய்ப்பை நழுவ விட்டு விட்டீர்கள்.

முனாழராவானாலும் முபாஹலாவானாலும் அதில் உடன்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்த சவாலையும் எந்த ரூபத்திலும் சந்திக்க பச்சைக் குழந்தையைக் கூட தூக்கிக் கொண்டு ஓடியவன் நான். சவால் என்றால் சக்கரைப் பொங்கல் சாப்பிடுகிற மாதிரி. அதை இலங்கை சென்றும் சந்திக்க தயங்க மாட்டேன் என்று தன்னைப் பற்றி பெருமையாகப் பேசி பீற்றியவர்தான் பி.ஜே. அவர் உங்களை ஒரே மேடையில் சந்திப்பது சம்பந்தமாக ஒப்புதல் தர 17 ஆண்டுகள் ஆகி உள்ளது.

எனவே சரியான கால அவகாசத்தடன் நிகழ்ச்சியின் தேதியை நிர்ணயித்திருக்க வேண்டும். ஒப்புதலை அவரது கைப்பட எழுதி வாங்கி இருக்க வேண்டும். இந்நிகழ்ச்சி பற்றி சமுதாயத்தின் அனைத்து பத்திரிக்கைகளிலும் முதலில் விளம்பரம் செய்திருக்க வேண்டும். பி.ஜே. தன்னை உண்மையாளர்களாகக் காட்ட எந்த நிதியிலிருந்து இலவச சி.டி.யும் கேஸட்களும் வெளியிட்டாரோ! அந்த நிதியிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் செய்ய வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். ஒப்பந்த நகலை 2 தரப்பு பத்திரிக்கைகளிலும் வெளியிட்டிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யத் தவறியதால் நீங்கள் பின் வாங்கி விட்டீர்கள் என்று அவர்கள் பரப்பும் பொய்ச் செய்திதான் மக்களை சென்றடையும். உண்மை வீட்டை விட்டு வெளியேறும் முன் பொய் உலகம் சுற்றி வந்து விடும். வஸ்ஸலாம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.