பொண்ரா மருத்துவமனை பற்றி பொய்களும் உண்மையும்

ஏமாறும் முஸ்லிம்களும் ஏமாற்றும் நிறுவனங்களும்.

மேலப்பாளையம் முஸ்லிம்களுக்கு மருத்துவம் செய்யாதீர்கள்  அரசாங்க உத்தரவு என்ற பொய்யை  பரப்பியவர்கள் யார்?

முதல் லாக்டவுனான மார்ச் இறுதியின் போது  முஸ்லிம்களுக்கு பிரசவம் உட்பட எந்த மருத்துவமும்  பார்க்கக் கூடாது  கலெக்டர்  உத்தரவு. அதனால்  இன்ன இன்ன   மருத்துவ மனைகள் மறுத்து  விட்டன.  இப்படிக் கூறி  ஒவ்வொரு டாக்டரிடமாக போனில் பேசி வேகமாகப் பரப்பினார்கள். 
அதே நேரத்தில், கொரோனா நோய்க்குப் பயந்து மேலப்பாளையம் முஸ்லிம்களுக்கு பிரசவம் பார்க்க மற்ற ஆஸ்பத்திரிகள் மறுத்த நிலையில் பொண்ரா ஆஸ்பத்திரியில் முஸ்லிம் சகோதரிகளுக்கு பிரசவம் பார்க்க தயாராக உள்ளார்கள் என்ற விளம்பரம் பொண்ராவின் இருவித முகப்பு போட்டோக்கள்  மற்றும்  போன் நம்பருடன் பரப்பினார்கள். 

இதை நம்பிய நானும்  எல்லா குரூப்களுக்கும் பிரமுகர்களுக்கும் பிரசவ பிரச்சனை சம்பந்தமாக தொடர்பு கொண்ட அனைவருக்கும் 04-04-2019 அன்று அனுப்பி வைத்தேன்.  படம் இணைப்பில் உள்ளது.

[04/04, 8:41 am] Fazlulilahi: Ponra Hospital  Mobile +91 97 88 855713 Home 0462 255 1102
Home  Tamil Nadu, India Dr.Vennila.M.s. Dgo

அதைப் பார்த்த பலர் நன்றி சொன்னார்கள்.   தமுமுக காஜா தந்த பதில் (படம் இணைப்பில் உள்ளது)

[04/04, 9:01 am] Tmmkகாஜா: மாஷா அல்லாஹ்  அருமையான தகவல் பயன்படுத்தி கொள்வோம்.

நான் பேஸ்புக்கில்  கம்பு சுத்தும் கூட்டத்தைச் சார்ந்தவன் அல்ல. வெளிநாட்டில் இருந்தாலும் களத்தில் நிற்பவன். நண்பர்களை அனுப்பி கலெக்டர்  உத்தரவு என்பது  உண்மையா என்று கலெக்டர் ஆபீஸ் உட்பட ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக போய் கேட்க வைத்தேன்.  பொண்ரா பற்றி அதிர்ச்சியான தகவல் வந்தன. அதற்கு முன்னதாக நடந்தது என்ன?  

“கிட்னி பெயிலியரானவர்களுக்கு மேலப்பாளையம் முஸ்லிம் என்ற காரணத்தால் ஆஸ்பத்திரியில்   டயாலிஸிஸ் செய்ய  மறுக்கிறார்கள்” என்று  சேப்பிள்ளை மைதீன் அவர்கள் போட்ட  வீடியோ  காட்டுத்  தீயாக பரவியது.  

எந்தக் காபிரின் டயாலிஸிஸ் சென்டரில் இப்படி மறுத்தானுவோ தெரியவில்லையே. முஸ்லிம்கள் நடத்தும்  டயாலிஸிஸ் சென்டருக்கு போய் இருக்கலாமே என்று  எண்ணி விட்டு அடுத்த நடவடிக்கையில் ஈடுபட்டேன். 

சாதாரண நேரம் என்றால்  தமுமுக, மமக நண்பர்களுக்கே போன் போடுவேன். அசாதராண நிலை ஆளுங்கட்சியைத்தான் ஈடுபடுத்த வேண்டும். அதனால், 

ADMK பகுதி செயலாளர் சேப்பிள்ளை ஹயாத் அவர்களுக்கு போன் போட்டேன்.  ADMK  மாவட்ட செயலாளர், மற்றும் அமைச்சரை தொடர்பு கொள்ளுங்கள். டயாலிஸிஸ், பிரசவம்  சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கச் செய்யுங்கள்  என்று என் முஹல்லாவசி என்ற உரிமையுடன் பேசினேன்.

அவ்வப்போது  தொடர்பு கொண்டு  நிலவரத்தைக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.  டயாலிஸிஸ் பிரச்சனை சரியாகி விட்டது என்றார். யு.ஏ.இ. நேரம்  இரவு 8  மணி அளவில்  சேப்பிள்ளை மைதீன் அவர்களுக்கு போன் போட்டேன். டயாலிஸிஸ் நடக்க இருக்கிறது.  நீங்கள்   எடுத்த முயற்சிகள் பற்றி ADMK  ஹயாத் கூறினார் ரொம்ப நன்றி  என்றார்.

மறுநாள் சேப்பிள்ளை மைதீன் அவர் இயக்கம் சார்ந்த நன்றி வீடியோ வெளியிட்டார். இது இயக்கவாதிகள் இயல்பு. அதில் ADMK பகுதி செயலாளர்  சேப்பிள்ளை  ஹயாத் பெயர் இல்லை.  2வது வீடியோவில் ADMK ஹயாத்துக்கும் நன்றி தெரிவித்திருந்தார். 

கலெக்டர் உத்தரவு, அரசு உத்தரவு என்பது பொய். இந்தப் பொய்ச் செய்தி துவங்கியதே உங்கள் நண்பர்  தக்வா பள்ளி தலைவர் புலவன் இனாயதுல்லாஹ்,  MMK  தலைவர் பாளை ரபீக்  இணைந்து  நடத்தும்  நஸீஹா டயாலிஸீஸ் சென்டர் இருக்கும்  பொண்ரா ஆஸ்பத்திரியில் இருந்துதான் என்றார்கள். இதுதான் முன்தாக குறிப்பிட்ட பொண்ரா பற்றி அதிர்ச்சியான தகவல்.

இது  உண்மையா  என்று  உறுதிபடுத்த டயாலிஸிஸ் முடிந்த பிறகு  சேப்பிள்ளை (S.B) மைதீன் அவர்களுக்கு போன் போட்டு. நீங்கள் முஸ்லிம்கள் நடத்தும்  நஸீஹா டயாலிஸிஸ்  சென்டருக்கு   போய் இருக்கலாமே. தக்வா பள்ளி தலைவர் இனாயதுல்லாஹ், MMK  தலைவர் பாளை ரபீக் தானே அதன் பொறுப்புதாரிகள் என்றேன். 

நஸீஹாவில் தான் நான் டயாலிஸிஸ் செய்து வருகிறேன். பொண்ரா ஆஸ்பத்திரி டாக்டர்கள் தான்  டயாலிஸிஸ் செய்ய மறுத்து விட்டார்கள்.  பாளை ரபீக்குக்கு போன் போட்டு சொன்னேன். அவர் டாக்டர்கள் மறுத்து விட்டால் அதில் தலையிட முடியாது என்று கூறி விட்டார் என்றார். 

ஆக  மேலப்பாளையம் முஸ்லிம்கள் என்ற காரணத்துக்காக டயாலிஸிஸ் செய்ய  மறுத்த   டயாலிஸிஸ்  சென்டர் நஸீஹா என்ற முஸ்லிம்களுடையதுதான்.     பொண்ரா  ஆஸ்பத்திரி டாக்டர்கள் தான் என்பதை சேப்பிள்ளை (S.B) மைதீன்  அவர்கள் மூலம் உறுதி செய்து விட்டேன். 

நஸீஹா சென்டர் பொறுப்பாளர் இனாயதுல்லாவுக்கு போன் போட்டேன். டயாலிஸிஸ் செய்து விட்டோமே என்றார்.  முதலில் மறுத்தீர்களா? இல்லையா? என்றேன். அரசு உத்தரவு கலெக்டர் உத்தரவு என்றார்.  ஜி.ஓ. இருக்கா என்றேன்  வாய் மொழி உத்தரவுதான். அந்த ஆஸ்பத்திரி டாக்டர் பேசிய ஆடியோ கேட்டீர்களா? இந்த ஆஸ்பத்திரி டாக்டர் பேசிய ஆடியோ கேட்டீர்களா? என்றார்.  எல்லாமே பொய் என்றேன்.

நாங்கள் முயற்சி செய்து  ஆ ர்டர்  பெற்றோம் என்றார். நீங்கள் எங்கே முயற்சி செய்தீர்கள்? இதில் ஈடுபட்டவன் நான். ADMK  ஹயாத் அவர்களை தொடர்பு  கொண்டு பேசியவன்  நான். அரசு உத்தரவு கலெக்டர் உத்தரவு  என்பதெல்லாம் சுத்தப் பொய் என்றேன். கடைசியில்  டாக்டர்கள் பயந்தார்கள் என்றார். 

பொண்ரா டாக்டர்கள் பயந்தார்கள் என்றால் அதைத்தானே சொல்லி இருக்க வேண்டும், எதற்காக  அரசு உத்தரவு கலெக்டர் உத்தரவு  என்ற பொய்யை உலகம்  முழுவதும் பரப்பி  எல்லா ஆஸ்பத்திரிகளையும் கெடுக்க வேண்டும்? 

மேலப்பாளையம் முஸ்லிம்களுக்கு பிரசவம் பார்க்க  அரசு தடை உத்தரவு கலெக்டர் தடை  என்ற  பொய்யை  நம்பி என்னை தொடர்பு கொண்டவர்களுக்கும் எனது நண்பர்களுக்கும் இவர்களுடன் பேசியதை அனுப்பினேன். 


அதில், இந்த ஆடியோக்களை பரப்ப வேண்டாம். உண்மை நிலை என்ன என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.  பாளை ரபீக்குடன் ஒரே மேடையில் சிங்கமாக கர்ஜித்த  சேப்பிள்ளை மைதீன், இனானயதுல்லா ஆகியோருடன் பேசியதை கேட்டு உண்மையை தெளிவு பெறுங்கள். 

மேலப்பாளையம் முஸ்லிம்களுக்கு மருத்துவம் செய்யாதீர்கள்  அரசாங்க உத்தரவு என்ற பொய்யை  பரப்பியவர்கள் யார்?  முஸ்லிம்களிடம் வசூல் செய்து ஆஸ்பத்திரி வைத்துள்ள முஸ்லிம்கள் தான் என்பதை  தெரிந்து கொள்ளுங்கள். 

அவர்களது  டாக்டர்கள் பயந்தார்கள் என்பதால்   அரசாங்க உத்தரவு  என்று பொய் சொல்லி உள்ளார்கள்  என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். தங்கள் முயற்சியில் ஆர்டர் பெற்றதாக சொல்வதையும்.  அ.தி.முக. பகுதி செயலாளர் முயற்சியில் நடந்தது என்று நான்  சொன்னதும் ஆம் என்று ஒப்புக் கொள்வதையும் தெரிந்து கொள்ளுங்கள்.  என்று   இணைப்பில் உள்ள பைலில் உள்ளபடி  அனுப்பினேன்.

அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று எனக்கு உபதேசம் செய்து, நான் மற்றவர்களிடம் மறைத்த  மேற்கண்ட செய்திகளை வெளியில் கொண்டு வர வைத்த நபருக்கு  அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்..

CAA, NRC, NPR போராட்டமாகட்டும் கெரோனா பிரச்சனையாகட்டும். அனைத்து , ஒருங்கிணைந்த ஆகிய இரண்டு பெயரில் 2 அணிகளாக செயல்பட்டார்கள்.  ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து கொண்டார்கள். அது பெரிய விஷயமல்ல.

பாளை ரபீக் அவர்கள் இருக்கும் ஒருங்கிணைந்த என்ற அணியில் உள்ளவர்களே பாளை ரபீக்  பற்றி அவரது சகோதரரான வக்கீல் பற்றிய விமர்சனங்களை எனக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்.  அதில் ஒன்றை பாளை ரபீக் அவர்களுக்கு அனுப்பியதும் பொட்டில்  அடித்த மாதிரி இவன்தான் என்றார்.

இது மாதிரி தான், அவர்கள் மாலை அணிவிப்பதை நாம் தடுக்கமுடியாது என்ற சம்பவமும்.  அது தவறு என்ற குற்ற உணர்வு குறு குறுத்தால்தானே அந்தப் படங்களை மறைத்து விட்டு. பூ மாலை, பழம், ஊதிபத்தி  இல்லாத கூட்டமாக நிற்கும்  ஒற்றைப் படத்தை  என் போன்றவர்களுக்கு அனுப்பினார்கள். 

பூ மாலை, பழம், ஊதிபத்தி   படங்களை என் போன்றவர்களுக்கு கிடைக்க வைத்தவர்கள் ஒருங்கிணைந்த அணியில் உள்ள புண்ணியவான்களே.

அவர்கள் மாலை அணிவிப்பதை நாம் தடுக்கமுடியாது என்பதாலே தானே சுன்னத்தான திருமணங்களை புறக்கணித்தார்கள்.  



Comments