.. JAQHல் இருந்து விலகியது ஏன்? என 38 மவுலவிகள் சாட்சியாக கூறிய உண்மை

29.1.97ல்  பழனிபாபாவை  புகழ்ந்து பேசிய  PJ 1.5.97ல்  38 மவுலவிகள் சாட்சியாக இகழ்ந்து பேசினார். ஜாக்கிலிருந்து விலகியதற்கான உண்மைக் காரணத்தையும் 38 மவுலவிகள் சாட்சியாகக் கூறினார். 

ஆதார ஆடியோவை இயர் போன் வைத்து கேட்கவும் பி.ஜே. பேச்சு எழுத்து வடிவிலும் உள்ளது.  





''அன்பிற்குரிய சகோதரர்களே, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய அமைப்பாளர் என்ற ரீதியிலே. அது சம்பந்தமான சில உண்மை விபரங்களை. உங்களில் பல பேருக்கு தெரிந்து இருக்காத உண்மைகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்..

.''(என்று துவங்கி 1992டிசம்பர் 6 ல் இருந்து நடந்து வரும் சம்பவங்களை கூறிவிட்டு.)

''இதற்கு ஒரு தீர்வு காணணும் இதற்கு பல வகையிலே முயற்சிகள் பண்ணனும் அப்படிங்க மாதிரி கருத்துகள் இருந்திச்சு... சில காரியஞ் செய்வதற்காக வேண்டி அதுக்காகத்தான் நான் ஜாக் ஷுரா விலிருந்து கூட (1994லேயே) ரிஸைன் பண்ணினேன்.

எனக்கு ஏற்படுகிற சிக்கல் வந்து ஜாக்குங்கிற அமைப்புக்கு வரக்கூடாது. என்ன காரியம்னு இதிலே இருந்தே. விளங்கிக்கிடும். அது வந்துடக் கூடாதுங்கிறதுக்கு வேண்டியே நான் ஜாக்குடைய ஷுராவில் இருக்க மாட்டேன். 

நான் சில சமுதாய பாதுகாப்புகளுக்காக வேண்டி சில ஏற்பாடுகள் பண்ணனும். அதனால இதிலே எந்த நிர்வாகப் பொறுப்பும் வேண்டாம்னு சொல்லி. அதனாலே தான் வேறு ஒரு காரணத்துக்கும் ஜாக் ஷுரா விலிருந்து ரிஸைன் பண்ணவில்லை. எல்லோருக்கும் தெரியும். காரணத்தோடுதான் நாம ரிஸைன் பண்ணினோம்.''


(எல்லோருக்கும் தெரியும் என்பதில் அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி உட்பட இன்று கூட்டமைப்பில் உள்ள பழைய மவுலவிகள் எல்லோரும் அடங்குவார்கள்.)

''சில காரியங்கள் சமூக பாதுகாப்புக்குள்ள ஏற்பாடுகளையும் இன்னைக்கும் நாளைக்கும் நாம செஞ்சிருக்கிறோம்... என்னது செய்கிறோம்ன்னுட்டு எஸ்.கே.க்கு தெரியாது. ஆனால் அதுக்காகத்தான் விலகுகிறேங்குறது சொல்லிட்டு செஞ்சிருக்கிறோம். எந்த கருத்து வேறுபாடும் இங்கு வரவே இல்லை.

'' (எந்த கருத்து வேறுபாடும் இங்கு வரவே இல்லை. என்று கூறிய நீங்களும் இப்பொழுது உங்களுடன் இருப்பவர்களும் இதே நிகழ்ச்சியில் உங்களை காத்துக் கொள்ள உருவான அணியால்தான் பிரச்சனை என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்.)

''ஏன்னா அது ஒரு ஆபத்தான வேலை நாங்க எடுத்துக் கொண்ட அந்த வேலை இருக்குதே ஆரம்ப கட்டத்துலே ஆபத்தான வேலை. இன்னைக்கு அந்த நிலை வேலை விலகிடுச்சு. அன்னைக்கு என்ன மாதிரி வேண்டும்னாலும் கவ்ர்மெண்ட் செய்யலாம். 

நான் எடுத்துக் கொண்ட அந்த துறைக்காக வேண்டி. அன்னைக்கு உசுர வெறுத்துதான் இறங்கினோம். இதை வைச்சு அழிக்கலாம்... இதை வைச்சு சுத்தமா யாரெல்லாம் பாடுபட்டாங்களோ அவ்வளவு பேரையும் புடிச்சி தடாவுலே போடலாம். அந்த மாதிரியான ஒரு இதுதான். ஆனா யாராவது செய்யலேன்னா இதாப் போயிடுங்கறதுக்குத்தான் அன்னைக்கு நாங்க இறங்கினோம்.


அப்ப அந்த மாதிரி ஒரு ஆபத்துகள் இருந்ததுனாலே நம்ம அமைப்பு தவ்ஹீது உடைய வளர்ச்சியும் சேர்த்து கெடுக்கிற மாதிரி. நமக்கு வரக் கூடிய ஆபத்து. தவ்ஹீதுக்கும் சேர்ந்து வந்துடக்கூடாதுங்கிற அக்கரை... அதாவது தெரியாம நம்ம வந்து ஜாக்குடைய கலர்லேயே அதைச் செஞ்சோம்னு சொன்னா. என்ன செய்வான் நம்மளக்கு போடக்கூடிய தடை ஜாக்குக்கும் வரும். மர்க்கஸ் மூடப்படும்... ... இந்த செய்தி யெல்லாம் நிறைய பேருக்கு தெரியாது...

இன்னும் விரிவான விபரம் அறிய  ஜிஹாத்! ஜிஹாத்!! ஜிஹாத்!!!என்ற  இந்த தலைப்பை  கிளிக் செய்து பாருங்கள் உண்மை வரலாறு தெரியும் 

இப்படி 1997ல்  உண்மை விளக்கத்தை கூறிய பி.ஜே. 2002ல் எமக்கு எதிராக வெளியிட்ட 6 மணி நேர வீடியோவில் 1994லேயே ராஜினாமா கொடுக்கிறேன் என்றால் நடவடிக்கை செயல்பாடு சரி இல்லை என்று வெறுத்து கொடுத்த மாதிரி கூறி உள்ளார்.

அந்த வீடியோவை காண இதை TNTJ(SPEACH)VS JAQHகை தெரிந்துக் கொள்ளுங்கள் PART- 04B கிளிக் செய்யுங்கள் எது அவதுாறு? எது உண்மை? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 


 قُتِلَ الْخَـرّٰصُوْنَۙ‏  

51:10. பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.