இமாம் அலி சுடப்பட்ட நாள் சிந்தனை.


சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்னாள் இதே தினத்தில். 29.09.2002 ஞாயிறு அன்று மதுரையில் அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பின் பொதுக் குழுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. 

அப்போது பெங்களூரில் இமாம் அலி உட்பட 4 பேர் சுடப்பட்டார்கள் என்ற தகவல் வருகிறது. உடனே பி.ஜே. அந்த பொதுக்குழுவில் எழுந்து பேசினார், அழுதார்.

இமாம் அலிக்காக நாம் செய்யாவிட்டால் யார் செய்வார்கள். அல்லாஹ் இருக்கிறான் என்று காட்ட வேண்டும் என்று பி.ஜே. பேசினார். ஜனாஸாவை நாம் வாங்கி அடக்கம் பண்ணுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். 

மாம் அலி ஜனாஸா செலவு வகைக்காக 50ஆயிரம் ரூபாய் வசூலும் செய்யப்பட்டது. இந்த விபரங்களை அப்பொழுதே தேரா மர்க்கஸுக்கு நோட்டீஸாக அனுப்பி வைத்தேன். உண்மையை மட்டும் சொல்வோம் அட்மின் மறந்திருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன்.

பி.ஜே. பொதுக்குழுவில் பேசியதால்தான் இமாம் அலி ஜனாஸாவுக்கு பெருங் கூட்டம் கூடியது என்று கூட அன்றைய கூட்டமைப்பினர் பெருமைபட்டுக் கொண்டார்கள். 

அந்தப் பொதுக் குழுவில் ஜனாஸாவை வாங்க அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்புத் தலைவர் ஹாமித் பக்ரியை அனுப்புவோம் என்று பி.ஜே. அறிவித்தார்.

உடனே ஹாமித் பக்ரி நான் போய் வாங்கினால் லீகலா ஏதும் பிரச்சனை வராதா? என்று கேட்டார். லீகலா எந்தப் பிரச்சனையும் வராது என்று பி.ஜே. கூறினார். அது எப்படி? என்று பொதுக் குழுவுக்கு வந்திருந்தவர்கள் கேட்டார்கள்.

உடனே பாக்கரை நோக்கி, ”பாக்கர் லீகலா பிரச்சனை ஏதும் வருமா? அதைப் பற்றி உங்களுக்குத்தானே தெரியும் சொல்லுங்கள் என்று பி.ஜே. சொன்னார். 

உடனே பாக்கர், இறந்த உடலை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். சொந்தக் காரர்கள், நண்பர்கள், சங்கங்கள், இயக்கம் போன்ற யார் வேண்டுமானாலும் வாங்கலாம். 

நாம இந்த உடலை வாங்கவில்லையானால் அவங்க (போலீஸ்) கண்ணிய மற்ற முறையில் அந்த உடலை அடக்கலாம். நம்ம முறைப்படி அடக்க வேண்டும் இதற்காகத்தான் நாம இந்த ஜனாஸாவை வாங்குகிறோம் அதற்காக அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்புத் தலைவர் ஹாமித் பக்ரியை நாம் அனுப்புகிறோம் என்று பாக்கர் கூறினார்.

இமாம் அலி ஜனாஸாவில் தவ்ஹீது அமைப்பினரை கலந்து கொள்ளச் செய்த பி.ஜே. த.மு.மு.க.வினர் கலந்து கொள்ளக் கூடாது என்ற கட்டளையும் இட்டிருந்தார்.

அரசாங்கத்தால் தேடப்படக் கூடிய நிலையில் இருந்த இமாம் அலியையும் அவருடன் இருந்தவர்களையும் காரைக்கால், மேட்டுப்பாளையம் என பல ஊர்களில் தங்க வைத்து வீடுகள் ஏற்பாடு செய்து கொடுத்து தேவைக்கு பணமும் கொடுத்து அனைத்து உதவிகளையும் செய்து வந்தவர் பி.ஜே.

இமாம் அலி சகோதரிக்கு களஞ்சியம் கலீல் ரசூல் உடைய நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தவர் பி.ஜே. இமாம் அலி சகோதரியின் குடும்பச் செலவுக்கு உதவியவர் வேலை ஏற்பாடு செய்து கொடுத்து இணைந்து பணி ஆற்றியவர். இமாம் அலி சகோதரியை T.V.ல் காட்டி விளம்பரம் செய்தவர் பி.ஜே.

களஞ்சியம் கலீல் ரசூல் உடைய நிறுவனத்தில் பிரச்சனையானதும் இமாம் அலி சகோதரியின் வேலை வாய்ப்புக்காக புதிய நிறுவனம் துவங்கச் செய்தவர் பி.ஜே. அந்த புதிய நிறுவனத்திற்கு உதவி செய்த ராமநாதபுரம் நிர்வாகிளுடன் நிற்கின்ற போட்டோவை உணர்வில் போட்டு விளம்பரப் படுத்தியவர் பி.ஜே.

காரைக்காலில் ஹை கிரிப் டயர் கம்பெனி தொடங்கி அதிலிருந்து வரும் வருமானத்தில் ஒரு பகுதி இமாம் அலி போன்றோர் ஆற்றும் பணிகளுக்கு உதவ வேண்டும் என்றும் முடிவு செய்தவர் பி.ஜே. இமாம் அலி உட்பட பலருக்கு இந்த மாதிரி பி.ஜே. உதவி இருக்கிறார். 

சிலர் வாங்கிப் பலி இடுவார்கள். சிலர் தாங்களே கொழுக்க வளர்த்துப் பலி கொடுப்பார்கள். இதில் பி.ஜே இரண்டாந்தரம்.

பி.ஜே.யால் பத்வா வழங்கப்பட்ட பழனி பாபா கொல்லப்பட்டதும் பி.ஜே. கண்ணீர் வடித்தார். பழனி பாபாவுக்காக பி.ஜே. அழுவது போன்ற அந்தக் காட்சி வீடியோவாக ஆக்கப்பட்டு வினியோகிக்கப் பட்டது. 

இதே மாதிரி தான் இமாம் அலிக்காகவும் பி.ஜே. அழுதுள்ளார். இதனால் பி.ஜே. பற்றி தெரிந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். இமாம் அலியும் காட்டிக் கொடுக்கும் கயவர்களால் மாட்டி விடப்பட்டுள்ளார் என்று. 

பலருக்கும் ஏற்பட்ட இந்த மாதிரி சிந்தனைக்கு வலு சேர்க்கும் வண்ணம் இமாம் அலி கொள்ளப்பட்ட செய்தி உணர்வில் வந்தது. அவர்களது நடை முறைக்கு மாற்றமாக ஏனோ தானோ என வந்தது. இதை அடுத்தடுத்த வாரங்களில் வந்த உணர்வு மூலமே அல்லாஹ் மேலும் வெளிப்பட வைத்துவிட்டான். 


அரசாங்கத்தால் தீவிரவாதி என்று வட நாட்டில் சுடப்பட்டவர் பற்றிய செய்தி உணர்வில் வந்தது. கையில் சுட்டிருக்கலாம், காலில் சுட்டிருக்கலாம், உயிரோடு பிடித்து இருக்கலாம் என்று அவர்களுக்கே உரிய இயல்புப்படி உணர்வைத் தூண்டி எழுதியிருந்தார்கள்.

பி.ஜே.யால் சோறு ஊட்டி வளர்க்கப்பட்ட இமாம் அலி சுடப்பட்ட செய்தி கேட்டதும் நூற்றுக் கணக்கணோர் கூடி இருந்த சபையில் கண்ணீர் விட்டு அழுதவர் பி.ஜே. அவரை அடக்கம் செய்ய என அந்த இடத்திலேயே 50 ஆயிரத்திற்கு மேல் வசூல் செய்தவர் பி.ஜே. இவை யாவும் உளப்பூர்வமானது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்.

இவர்களால் யார் என்று அறியப்படாத வட நாட்டில் சுடப்பட்டவருக்காக நியாயம் கேட்டு எழுதிய பி.ஜே. அதை விட கூடுதலாக இமாம் அலிக்காக எழுதி இருக்க வேண்டும். எழுதாதது ஏன்? எனவே இமாம் அலி விஷயத்தில் டிராமாக்காரர்கள் பங்கு உள்ளது என்பதை நினைவூட்டிக் கொள்கிறோம்.

இமாம் அலி போன்றோரை தலைமறைவாக தங்க வைத்த பி.ஜே. அங்கு பி.ஜே.க்கு நெருக்கமான சில பெண்களை வந்து போகச் செய்வார்.

பெண்கள் வந்து போனால்தான் இவர்கள் பேஜ்லர்கள் இல்லை. குடும்பஸ்தர்கள் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நம்புவார்கள் என்பார். இப்பொழுது அந்த பெண்கள் பற்றி என்ன எண்ணம் ஏற்படுகிறது? சப்ஜக்ட் புரிகிறதா?

இமாம் அலி போன்றோருக்கு ஆர்வமூட்டி உதவி செய்து பிரச்சனை ஏற்பட்டதும் அம்போ என விட்டு விட்டு ஒடி ஒழிந்து, இமாம் அலி போன்றோர் குடும்பத்தார்க்கு மோசம் செய்தவர் பி.ஜே.

ஜிஹாது என்ற பெயரால் துாண்டி விட்டவரும் பி.ஜே.தான் தன்னைக் காத்துக் கொள்ள காட்டிக் கொடுத்தவரும் பி.ஜே.தான். இதை இந்த நாளில் நினைவூட்டிக் கொள்கிறோம். 

மேட்டுப்பாளையத்தில் பிடிபட்டு தப்பிய இமாம் அலி சொன்னார். காட்டிக் கொடுத்தவர் பி.ஜே.தான் என்று.

இதை 15 ஆண்டுகளுக்கு முன் நாம் சொன்னபோது கோபப்பட்டவர்களில் எதிர்த்தவர்களில் உண்மையை மட்டும் சொல்வோம் அட்மினும் ஒருவர். இன்று உண்மையை உணர்ந்துள்ளார்.


செக்ஸ் ஆடியோவில் பேசியுள்ளவர் பி.ஜே. தான் என்பதற்கு பல ஆதாரங்களை த.த.ஜ.வினரே தந்து விட்டார்கள். இப்பொழுது பர்மா முஸ்லிம்களுக்காக சோதனை கால பிரார்த்தனை என்ற தலைப்பில் குனுாத்தில் பிரார்த்திக்கவும் சாபம் வேண்டவும் அறிக்கை விட்டுள்ளார்கள். 

அதே மாதிரி செக்ஸ் ஆடியோ விஷயத்தில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று  பிரார்த்தியுங்கள் என்று அறிக்கை விடுங்கள் என்று கேஸட் வெளியிட்ட தரப்பினர் பல முறை வேண்டியும் மவுனமாக உள்ளார்கள். 

ஆகவே பொதுமக்களே நாம் கேட்போம். அந்த செக்ஸ் ஆடியோ விஷயத்திலும் அப்போலோ ஹனீபா ஆடியோ விஷயத்திலும்  யார் பொய்யர்களோ அந்தப் பொய்யர்கள் மீதும் அந்தப் பொய்யர்களைச் சார்ந்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக என்று.

ஒருவர் மற்றவருக்கு செய்த தீமையை அநியாயத்தை தனிப்பட்ட அந்த ஒருவர் மறைத்தால் மன்னித்தால் அவர் அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெறுவார். 

ஒருவர் ஒரு சமுதாயத்திற்கு செய்த தீங்கை அநியாயத்தை மறைக்க மன்னிக்க எந்த ஒரு தனி நபருக்கும் உரிமை இல்லை. 

ஜிஹாது பெயரால் இளைஞர்கள் வாழ்வை சீரழித்தவனை. மார்க்கம் கேட்க வந்த மாதர்களை விலை மாதுகளாக ஆக்கியவனை யா அல்லாஹ் நீ சும்மா விட்டு விடாதே. 

அவனது இந்த அநியாயங்களுக்கு துணை நிற்கும் கூட்டத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.