தகுதியுள்ள தலைமை உலமாக்களுக்கு வேண்டாமா?

அப்பல்லோ அனிபா விபச்சாரப் பஞ்சாயத்து விசாரணைக் கூட்டத்தில்  ஜமாஅத்துல் உலமா  மாநில தலைவர் மவுனம்  ஏன்?

அப்பல்லோ அனிபா –பிஜே இடையிலான ஜரினா விபச்சாரத்திற்கு  அனிபா  செய்த பணப் பஞ்சாயத்து தொடர்பான 7.24  நிமிட  ஆடியோ  வெளியான பின்பு அனைத்து இஸ்லாமிய இயக்கக்கங்கள்  கூட்டமைப்புக்கூட்டம் ஜமாஅத்துல்  உலமா சபை அலுவலகத்தில் 22.09.17 அன்று நடந்தது.

கூட்டத்தில்  ஆரம்பத்தில்  அவ்வாறு இல்லை என்று  மறுத்த புரோக்கர்  அனிபா, மு.குலாம் முஹம்மது, பேராசிரியர்  ஜவாஹிருல்லாஹ்,  பாக்கர்  ஆகியோரின்  கிடுக்கிப் பிடி கேள்விகளுக்குப் பின்பு  பஞ்சாயத்து  செய்ததை ஒப்புக்கொண்டார். 

ஆனால், கூட்டத்தில்  இ.வி.க. சார்பில் கலந்து கொண்ட கான்  பாகவி அவர்கள்  ,  தன் மீது உலமாக்கள், பொதுமக்கள், கூட்டமைப்பு தலைவர்கள்  வைத்துள்ள  மரியாதையையும் தாண்டி, விபச்சாரப் புரோக்கர் அனிபாவுக்கு வக்காலத்து வாங்கினார்.

பஞ்சாயத்து செய்யக்கூடாது என்று கூட்டமைப்பு பைளாவில் உள்ளதா?, என்று கேட்டாரே பார்க்கலாம்.

அதற்கு  கூட்டத்தில்  இருந்த  தலைவர்கள்  இவ்வாறு பதிலளித்தனர். விபச்சாரம் செய்யக்கூடாது, திருடக்கூடாது என்று கூட  இல்லை தான். அப்படியென்றால் அதையெல்லாம் செய்வாரா? என்றனர்.

மேலும் அவர் என்னென்ன பாவங்கள் செய்வார் என்று  லிஸ்ட் தரச்சொல்லுங்கள். அவற்றை பைளாவில் கொண்டு வருவோம் என்றனர்.

மறுப்பு சொல்ல இயலாம் கோபத்தில் கொப்பளித்த கான் பாகவீ, பின்னர் பத்து நிமிடத்தில் கூட்டத்தை விட்டு வெளியேறினார். பாருங்கள் மரியாதைக்குரிய ஆலிம் விபச்சாரப் புரோக்கருக்கு வக்காலத்து வாங்கியதை.

அவர் அனிபாவின் செல்வத்துக்காக வக்காலத்து வாங்கினாரா? அல்லது தன்னுடைய பால்ய கால சிநேகிதன்  பி.ஜே. வுக்காக வக்காலத்து வாங்கினாரா? அல்லாஹ் அறிவான். அனிபாவின்  பஞ்சாயத்து உண்மையானால் பி.ஜே.வின் விபச்சாரமும் உண்மையாகிவிடுமே அதனால் தானா?  கான்  பாகவியின் பாய்ச்சல் அவ்வளவு இருக்க காரணம்!

கூட்டத்தில் அனிபாவுக்கு  ஆதரவாக வரிந்து கட்டி இறங்கியவர் சென்னை  மக்கா மசூதி  இமாமாக தற்போது  இருக்கும்  மன்சூர்  காஷஃபி.

ஏற்கனவே சம்சுத்தின்  காசிமி விவகாரத்தில் ஜமாஅத்துல் உலமாவுக்கு எதிராக  காசிமி அணியில் நின்ற இவர், பி.ஜே விவகாரத்தில் அனிபாவை கூட்டமைப்பு  ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து  நீக்கிட  இவர் காட்டிய  எதிர்ப்பை  பாருங்களேன்.

அதற்குக் காரணம் ஏற்கனவே உள்ள காஷிஃபுல் ஹுதா – பி.ஜே. இடையிலான  கள்ள உறவு காரணமா?  
(பி.ஜே  யை  ஹதீசை மறுக்கும்  காஃபிர்  என  அறிவிக்க  சென்னை  மாவட்ட ஜமாஅத்துல்  உலமா முடிவெடுத்த  பொழுது அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது காஷிஃபுல்  ஹுதா தான்.)

அல்லது  அனிபாவின் ஹதீயாக்கள் தான் காரணமா?  இக்கூட்டத்தில்  கலந்து  கொள்ள  ஹஜ்ஜில் இருந்து ஹாஜிகளுக்குரிய சேவையை முழுமையாக்காமல்  சென்னைக்கு ஓடிவந்து  அனிபாவைக்  காப்பாற்ற வேண்டிய  அவசியம்  என்ன?

புரோக்கர்  அனிபாவைக் காப்பாற்றிட  ஹாஜிகளை  நட்டாற்றில் விட்டதால்,  ஹாஜிகளின் குடும்பத்தார்கள் சென்னை மக்காப் பள்ளிக்கு படையெடுத்து வருகிறார்கள்.

மீண்டும்  தலைவலி தொடங்கிவிட்டதே!! என்று மக்கா  பள்ளி தலைவர் புலம்பத்  தொடங்கி  விட்டார்.

கூடிய  விரைவில் இவர். மக்காப் பள்ளியை விட்டு வீட்டுக்கு  விரட்டப்படுவார்.

அனிபாவுக்கு  வக்காலத்து வாங்கிய இன்னொருவர் தெஹ்லான்   பாகவி

அரசியலில்  விபச்சாரமும், விபச்சாரப் புரொக்கர் வேலையும் சகஜம் என்று  கருதியா  இவ்வளவு வக்காலத்து வாங்கினார் தெஹ்லான்.

அல்லது புரசைவாக்கம் அலுவலகம் அனிபாவின்  கட்டிடத்தில் வாடகையின்றி  இன்றி செயல்படுவதற்கு நன்றிக் கடனா?

புரோக்கருக்கு  வக்கலாத்து வாங்கி விபச்சாரனை மீண்டும் இயக்கத் தலைவனாக்கி விட்டார்  அவர்.

இரண்டு பாகவிகளும், ஒரு காஷிஃபியும் சேர்ந்து அனிபாவை காப்பாற்ற ஆடிய  ஆட்டம் இருக்கின்றதே இது ஆலிம் சமுதாயத்திற்கே அவமானம்.

இவர்களெல்லாம் கூட  ஜமாஅத்துல் உலமா பொறுப்பாளர்கள் அல்ல..

கூட்டத்தில், மாநிலத் தலைவர் அப்துர் ரஹ்மான்  ஹள்ரத்தின்  மவுனம் சகிக்க  இயலாததாகும்.
மாநிலத்  தலைவர்  பதவியை  ஏதோ கௌரவப்  பதவியென்று  நினைத்து அதில்  நான்காவது  முறையாக  வீ்ற்றிருக்கும் அவர்,  இப்பிரச்சினையில் வாய்  திறக்காமல் இருந்ததை அல்லாஹ் நன்கறிவான்.

ஜமாஅத்துல்  உலமாவில் அங்கம் ஆலிம்கள் ஒவ்வொருவருக்கும்,   அவர்கள்  பணியாற்றும் தமிழகத்தின்  ஒவ்வொரு கடைக்கோடி கிராமத்திலும் தொல்லை தருபவர்கள் இந்த விபச்சார  பி.ஜே.  ஜமாஅத்தினர்.

பிரச்சினை  முற்றி, காவல்துறை  அளவுக்குச் சென்றால், அவர்கள் சார்பில் மாநிலத்தில் இருந்தெல்லாம் காவல்நிலையத்திற்கு போன்  வரும். 

ஆனால், நம்முடைய  தலைமை  அப்படியா?  அதனையெல்லாம்  கூட உலமாக்கள்  பெரிதாக  எடுப்பதில்லை.

தமிழகத்தில் எந்த ஊரில் பிரச்சினை என்றாலும் நாங்களும் எங்களின் மாநிலத் தலைவரை தொடர்பு கொள்வோம் என்று  உலமாக்கள்  கூறினால், நீங்கள் உங்களின் மாநிலத் தலைவரின்  கைக்குள்.  உங்களின்  மாநிலத் தலைவர் அப்பல்லோ அனிபாவின் கைக்குள். அனிபா ‘எங்களின்  அண்ணனின்  சட்டைப் பைக்குள்’  என்று  குஞ்சுகள்  கூறுவது உண்மையாகி  விட்டதே..

அல்லாஹ்வால் அளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மாநிலத் தலைவர் இது குறித்து  கருத்து  ஏதும் கூறாமல்  இருந்தது மட்டுமல்ல..  அவ்வாறு இருந்து அனிபாவுக்கு ஆதரவாக செயல்பட்டதை அறிந்து தமிழகம் முழுவதும்  மூத்த,  இளம் உலமாக்கள் பலர் கொந்தளிப்பில் உள்ளனர்.
இது 3.10.17  மாநில ஜமாஅத்துல் உலமா தேர்தலில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

தமிழகம்  முழுவதும்  பி.ஜே  யை எதிர்த்து உலமாக்கள் மாநாடு  நடத்துவார்கள். கூட்டம்  நடத்துவார்கள்.  பிட் நோட்டிஸ்,  புத்தகங்கள்  வெளியிடுவார்கள்.  

மாநில தலைவர்  பி.ஜே.யின் எடுபிடி அனிபாவைக் காப்பாற்ற மவுனமாக இருப்பார்.

7.24 நிமிடத்தில்  மட்டும் 40  தடவை பி.ஜே வை அண்ணே  - அண்ணே என்று நெளிவார் அனிபா.

அப்படிப்பட்ட அனிபாவைக் காப்பாற்றத் தான் இந்த நான்கு ஆலிம்களும் வரிந்து கட்டி நின்றார்கள்.

ஆலிம்களே! உங்களின்  தலைவிதியை நினைத்துப் பாருங்கள்.

செல்வந்தர்களுக்கும் – ஆட்சியாளர்களுக்கும் அடிமைப்படாத சங்கைமிக்க  நபித்தோழர்கள், இமாம்கள்  எங்கே..

விபச்சாரனைக் காப்பாற்ற விபச்சார புரோக்கருக்கு  வக்காலத்து வாங்கும் இவர்கள்  எங்கே?

மு.குலாம்  முஹம்மது, பாக்கர், பேராசிரியர்  ஜவாஹிருல்லா விடம் இருந்த விபச்சாரப் எதிர்ப்புணர்வு கூடவா ஆலிம்களிடம், ஜமாஅத்துல்  உலமா தலைவரிடம்  இல்லை..??

தகுதியுள்ள தலைமை உலமாக்களுக்கு  வேண்டாமா?

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.