திருமண நிகழ்ச்சி



மேலப்பாளையம்  சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெருவில் 05-01-2014 ஞாயிறு அன்று காலை 11 மணியளவில் த.மு.மு.க. முன்னாள் வளைகுடா அமைப்பாளர் கா.. முஹம்மது பஸ்லுல் இலாஹி அவர்களின் இல்லத் திருமணம் நடைபெற்றது. 



எல்லா திருமணங்களிலும் மதக்குருக்களே திருமணங்களை நடத்தி வைப்பார்கள். இத்திருமணத்தில் மணமகன் நாரங்கி  இஸ்மாயில் (குவைத்) அவர்களுக்கு மணமகள் காயங்கட்டி செய்னபு பி.காம். அவர்களின் தந்தையே திருமணம் நடத்தி வைத்தார். அது மட்டுமன்றி வரதட்சணை இல்லாமல் மணமகன் மணப் பெண்ணுக்கு ரூ37500/- மதிப்புள்ள 12 கிராம் தங்க ஜெயினை மணக் கொடையாக வழங்கினார்.  நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற தலைவர் பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.

மவுலவி எல்.கே.எம். காஜா மைதீன் ரியாஜி துவக்க உரையாற்றினார். நேரம் குறைவாகவும் வாழ்த்தி பேச வந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் கூடுதலாகவும இருந்தது. அதனால் த.மு.மு.க. மாநில தலைவர்  மவுலவி J. S. ரிபாயீ ஆலிம்,  துணைத் தலைவர் குணங்குடி R.M. ஹனீபா ஆகிய இருவரும் அனைத்து கட்சிகளின் சார்பில் மணமக்களை வாழ்த்தி பேசினர்.

இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க. ஷார்ஜா மண்டல முன்னாள் தலைவா் அதிரை ஜமீல்காகா, த.மு.மு.க முன்னாள் நெல்லை மாவட்ட தலைவா்களான மில்லத் இஸ்மாயில், பாளை பாரூக், ரசூல், காசிம் பிர்தவ்ஸி, நகர தலைவர் காஜா, கனி, சுல்தான், பெஸ்ட் ரசூல், அஜீஸ், ராஹத், செய்யது. மற்றும் முன்னாள் நிர்வாகிகள். கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பழனி. தி.மு.க. சார்பில் முன்னாள் நகரச் செயலாளர் ஆ.மு.பக்கர், கே.எஸ். கலாம் ரசூல், கே.எஸ். செய்யது மைதீன், V.S.T. ஷாகுல் ஹமீது. 

அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாமன்ற உறுப்பினர் ஹயாத், அப்துல்ரஸாக், ஷாஜஹான், கூலி ஷம்சுத்தீன், முஹம்மது மைதீன்,  காங்கிரஸ் கட்சி சார்பில் லியாவுதீன், எம்.ஏ.எஸ். அப்துல் காதா், இ.எம்.ஓ. அலி, மவுலவி எம்ஏ.எஸ். முஹம்மது அலி.

இ.யூ.மு.லீக் சார்பில் எல்.கே.எஸ். மீரான் மைதீன், பாட்டபத்து முஹம்மது அலி, நாகூர்கனி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஹாபீஸ் முகைதீன் அப்துல் காதர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மணியாச்சி காஜா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சேனாதிபதி மைதீன் பிச்சை.

எஸ்.டி.பி. ஷாகுல்ஹமீது உஸ்மானி, நல்லாசிரியர் விருது பெற்ற அ.மீ. செய்யது முஹம்மது, முன்னாள் வக்பு வாரிய கண்காணிப்பாளர் நைனா முஹம்மது, இ.பி. செய்யது அலி, நாம் தமிழர் கட்சியினர் நெய்னா முஹம்மது மூப்பன் ஜும்ஆ பள்ளி, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் பள்ளி, தவ்பா,தக்வா பள்ளி ஜமாஅத்தார்கள், மற்றும் த.மு.மு.க, ம.ம.க. நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும்  கலந்து கொண்டனர்.

பாளை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டி.பி.எம். மைதீன் கான் அவர்களுக்கு சென்னையில் நிகழ்ச்சிகள் இருப்பதால் 04-01-2013 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் மணமகன் மணமகள் இல்லங்களுக்குச் சென்று நேரில் மணமக்களை வாழ்த்திச் சென்றார்.
இப்படிக்கு 
அப்துல் வாஹித்
ம.ம.க. கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர்.
8056983440

                                    

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.