நாம் யார் ?

வளமையான வாழ்விற்காக
இளமைகளை தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !

வறுமை என்ற சுனாமியால்
அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த நடை பிணங்கள் !

சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது
வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள் !

நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள் !

தொலைதூரத்தில் இருந்து கொண்டே
தொலைபேசியிலே குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள் !

கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய எழுத்துக்கள்!

ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள் !

நலம் நலமறிய ஆவல் என்றால்
பணம் பணமறிய ஆவல் என கேட்கும்
ஏ. டி. எம். மெஷின்கள் !

பகட்டான வாழ்க்கை வாழ
பணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !

ஏ. சி. காற்றில் இருந்துக் கொண்டே
மனைவியின் மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !

வளரும் பருவத்திலே
வாரிசுகளை வாரியணைத்து கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள் !

தனிமையிலே உறங்கும் முன்
தன்னையறியாமலே தாரை தாரையாக வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் !

அபஷி என்ற அரபி வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள் !

உழைப்பு என்ற உள்ளார்ந்த அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக உணர்ந்தவர்கள்!

முடியும் வரை உழைத்து விட்டு
முடிந்தவுடன் ஊர் செல்லும்
நோயாளிகள் !

கொளுத்தும் வெயிலிலும் குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும் இடையில்
பழகிப்போன ஜந்துகள்!

பெற்ற தாய்க்கும் வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும் பெற்றெடுத்த குழந்தைக்கும்
உற்ற குடும்பத்திற்கும்
இடைவிடாது உழைக்கும் தியாகிகள் !

from Bathusha khanMBA

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.